Quote:
உறவுகள்... கொண்டாடிய உறவுகள்..!
சன் டிவியில் 800 எபிசோடுகளை கடந்த `உறவுகள்' தொடரை தயாரித்த சேன்மீடியா நிறுவனம், அதற்காக சென்னையில் விழா எடுத்தார்கள். தொடரில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமின்றி நட்பு முறையிலான நட்சத்திரங்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் சேன் மீடியா ஏற்கனவே தயாரித்த அகல்யா, பந்தம் தொடர்களில் நடித்த கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். மஞ்சரி, ரூபஸ்ரீ, ராஜசேகர், சஞ்சீவ், நளினி, பிரீத்தி, தீபக், கன்யா, பூவிலங்கு மோகன், மனோகரன், அகிலா, வெங்கட், பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், தீபக், அமரசிகாமணி, பிலிசிவம், சாந்தி வில்லியம்ஸ் என எங்கெங்கு திரும்பினாலும் நட்சத்திர முகங்கள்.
வழக்கமான விழா என்றால் தொடங்கியதும் ஒவ்வொருவராக பேசுவார்கள். அப்பறமாய் விருது கொடுப்பார்கள். அத்தோடு விழா முடிந்து விடை பெற்றுக் கொள்வார்கள்..
இந்த விழாவில் எல்லாமே மாறுபட்டிருந்தது. நட்சத்திரங்களுக்கு மிïசிகல் சேர் போட்டி நடத்தினார்கள். நாற்காலியை பிடிக்க பெரிய நடிகைகளும் ரவுண்ட் வந்தது கலகலப்பு ஏற்படுத்தியது.
விழாவுக்கு வந்த நட்சத்திரங்களில் யாருடைய காஸ்ட்ïம் சிறப்பு, என்று ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு உடனடி நடுவராக நளினியை நியமித்தார்கள். நளினி தேர்ந்தெடுத்தது கவிதா பாரதியை.
விழா நடந்த தினம் தான் நடிகர் ராஜ்காந்துக்கும் பிறந்த நாள். அதற்காக திடீர் சஸ்பென்சாய் ஒரு பெரிய கேக்கை மேடைக்கு வரச்செய்து, ராஜ்காந்தையும் அழைத்து கேக் வெட்டச் செய்தார்கள். இந்த திடீர் உபசரணையில் மனிதர் சட்டென கண் கலங்கி, அப்புறமாய் இயல்பானார். அவருக்கு கேக் ஊட்டிய பல நட்சத்திரங்கள் அப்படியே முகத்திலும் கொஞ்சம் பூசி கலாட்டா செய்து விட்டுப்போனார்கள்.
சேன் மீடியா நிறுவனத்தின் முதல் தொடரான `அகல்யா' தொடரில் நடித்த மஞ்சரி சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இப்போது முத்தாரம் தொடரில் நடித்து வரும் தகவலை சொன்ன மஞ்சரி, `இது குடும்ப உறவுகள். அதனால் தான் முதல் சீரியலில் நடித்த என்னையும் மறக்காமல் அழைத்திருக்கிறார்கள்' என்று நெகிழ்ந்தார்.
மேடையில் சில குத்தாட்டப் பாடல்களை ஒலிபரப்பி அதற்கு நட்சத்திரங்களை ஆடச் சொன்னார்கள். பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த் உள்ளிட்ட சிலர் ஆடினார்கள். ஏற்கனவே `மானாட மயிலாட' என இவர்கள் ஆடியிருந்ததால் ஸ்டெப்களிலும் அசத்தினார்கள்.
சேன் மீடியாவின் முன்று தொடர்களிலும் நடித்த ஸ்ரீகுமார் இது `என் தாய் வீடு' என்றார். `பந்தம் சீரியல் தான் எனக்கு நட்சத்திர அந்தஸ்தை முதன்முதலில் கொடுத்தது' என்று உருகினார் தீபக். தொடரில் அப்பாவாக நடித்ததில் இன்று அத்தனை இளைய கலைஞர்களும் என்னை அப்பா என்றே அழைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்' என்று உருகினார் அமரசிகாமணி. `பாதியில் வந்ததால் எங்கே என் கேரக்டர் எப்படி பேசப்படுமோ என பயந்தேன். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது என் பாக்கியம்' நெகிழ்ந்தார் பாவனா.
மேடையில் உறவுகள் டைட்டில் பாடல் காட்சியை திரையிட்டு, பாடலை மட்டும் மைக் பிடித்து அட்சர சுத்தமாய் பாடிய பாடகி சுதா, இன்னொரு ஆச்சரியம்.
சேன் மீடியாவின் தொடர்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர்கள் சிவா, ஹரி, பாலாஜியாதவ் மூவரையும் ஒரேநேரத்தில் மேடையேற்றி விருது கொடுத்தது விழாக்கொண்டாட்டத்தின் உச்சம். ஆஸ்தான கதாசிரியர் குமரேசன் விருதுக்காக மேடையேறியபோது அரங்கு அதிர கரகோஷம். படைப்பாளிக்கு மரியாதை!