kalangarai vilakkam 1965
http://i49.tinypic.com/24ky646.png
http://i48.tinypic.com/1rw9pz.jpg
http://i45.tinypic.com/17tqhc.png
Printable View
kalangarai vilakkam 1965
http://i49.tinypic.com/24ky646.png
http://i48.tinypic.com/1rw9pz.jpg
http://i45.tinypic.com/17tqhc.png
article from net
MGR 20 ஆம் நூற்றாண்டு கண்ட உத்தம தலைவன்
கைபட்ட இடத்தைக் கழுவ மனமில்லை…
பொன்மனச் செம்மலால் சாப விமோசனம் பெற்றது மதுரை மாவட்டம். அன்று வள்ளல் மட்டும் அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடாதிருந்திருப்பாரே யானால், ‘அத்திப்பட்டி கிராமம் மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் தண்ணீர் என்பது உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும். அன்று மட்டும் வெற்றி சூடாதிருந்திருப்பாரேயானால் நெல்லுச்சோறு என்பது தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் சாப்பிடப்படும். அதிசய உணவாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும். முப்பிறவி கண்ட நாயகன் மட்டும் முதல்வராக முடி சூட்டப்படாமல் இருந்திருந்தால், அந்தப் பாமர மக்களின் பிள்ளைகள் சத்துணவு கிடைக்காமல் மழைக்காக கூட, பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டார்கள். அதுவரை வறட்சி, நிவாரணப் பணி வேலைகள் மட்டுமே நடந்து வந்த தமிழகத்தில் வள்ளல் முதல்வராக வாகை சூடியவுடன் தான் வெள்ள நிவாரணப் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி தெற்குத் திசையையே மாற்றியமைத்த வள்ளல், அந்தக் கரிசல் பூமிக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்தச் செய்தி தென்மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவி, அரசு விடுமுறை போல், அத்தனை பாட்டாளி விவசாயப் பெருங்குடி மக்களும், அவரவர் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு, வள்ளல் எந்த வழியில் வருவார் என்று திக்கு நோக்கி, கண்கள் பூக்க காத்துக் கிடக்கிறார்கள்.
அன்று வீரபாண்டித் திருவிழா வேறு, வள்ளலின் வருகைக்காக வானம் கூட , மழை தூவி வரவேற்கிறது. வள்ளலின் கார் தேனியில் இருந்து கிளம்பி, முத்துத் தேவன்பட்டியைத் தாண்டி வீரபாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, என்கிற விபரம் திருவிழாக்கூட்டத்திற்குத் தெரிந்து விடுகிறது,. வீரபாண்டி தேர், வீதி உலாவர புறப்படத் தயாராகிறது. ஆனால் அந்தக் கண நேரத்தில், ஆடு வெட்டி பொங்கல் வைக்க வந்த லட்சத்தற்கும் மேற்பட்ட அத்தனை பக்தர்களும், அந்த இடத்தில் இல்லை, கோயில் வளாகமே வெறிச்சோடிக் கிடக்கிறது. குழம்பிப்போன தர்மகர்த்தாக்கள், கோயில் வளாகத்திறகு வெளியே வந்து பார்க்கிறார்கள். வீரபாண்டித் தேரைச் சுற்றி நிற்க வேண்டிய பக்தர்களெல்லாம் ரோட்டில், வள்ளலின் காரைச் சுற்றி வணங்கி நின்ற காட்சியைப் பார்க்கிறார்கள். வீரபாண்டிக் கோயிலே இடம்பெயர்ந்து போன அதிசயம், அங்கே நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால் வள்ளல் மட்டும், தான் தவறிழைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் ,தான் வேறு வழியாக வந்திருக்கலாம் என்று திரும்பத் திரும்ப விசனப்படுகிறார். அந்தப் பாசமிகு பக்தர்களிடம் இருந்து எப்படி விடைபெறுவது? காவல்துறை தன் முழு பலத்தையும் பிரயோகித்து, வள்ளல் செல்ல வழியமைக்கப் பார்க்கிறார்கள். முடியவில்லை. அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வள்ளல் ஒரு முடிவுக்கு வந்து, தான் வந்த வேன் மீது ஏறி, “வீரபாண்டித் திருவிழா என்னால் பாதிக்கப்பட்டு விட்டது, என்ற பழி என் மீது வராதிருக்க வேண்டுமானால், நீங்கள் எல்லோரும் கலைந்து, கோயிலுக்குச் செல்லுங்கள்” என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
இப்பொழுது சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களைப் போலத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஏக்கத்துடன் சத்தமில்லாமல் செல்லும் பக்தர்களைப் பார்த்து, கையசைத்து விடைபெறுகிறார், வள்ளல்.
வள்ளலின் கார் வயல்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை அதிசயங்களும் அற்புதங்களும் இங்கே நடப்பதை கொஞ்சமும் அறியாத பஞ்சவர்ணம் என்ற பத்து வயதுப் பெண், வயலில் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் பருத்தி எடுத்தக் கொண்டிருந்த பெரியாத்தா என்ற தோழி, எலே பஞ்சு “உனக்கு விஷயம் தெரியுமாழ” எம்.ஜி.ஆர் தேனிக்கு வந்திருக்கிறாராம். இப்பத்தான் எங்க அப்பன் எங்கிட்ட சொன்னாரு” என்று பஞ்சவர்ணத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வயலை ஒட்டிய வண்டிப்பாதையில், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க! பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்க’ என்ற கோஷங்களுடன் கார்கள் வரிசையாகப் பறந்து கொண்டிருக்கிறது.
அவ்வளவுதான், மடியில் பறித்து வைத்திருந்த பருத்தியை ஆகாயத்தில் வீசி விட்டு, இருவரும் கார்கள் செல்லும் திசை நோக்கி, அந்தக் கரம்பைக் காட்டில், கால்கள் பின்னக்கு இழுக்க கஷ்டப்ப்ட்டு ஓடி வருகிறார்கள். தன் மீது அம்பு வீசினாலும் சரி, அன்பு வீசினாலும் சரி, நேரடியாகச் சந்திக்கிற சரித்திர நாயகன், நம சந்தனக் தலைவன். இந்த இரண்டு பெண்களும் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு காரை, நிறுத்தச் சொல்கிறார். அதனை கார்களும், ஒன்றன் பின் ஒன்றாக ரெயில் பெட்டியைப் போல் வளைந்து நிற்கிறது.
வள்ளல் காரைவிட்டு இறங்கி, அந்தக் கரிசல் பூமியில் கால் பதித்து நிற்கிறார். மூச்சிறைக்க ஓடி வந்த பெண்களுக்கு, முதலில் தான் வைத்திருந்த பழச் சாற்றைக் கொடுத்து, மூச்சு வாங்கச் செய்கிறார்.
“நீங்க வர்றது இந்த ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கு. இந்த ரெண்டு கூமுட்டைகளுக்கு மட்டும்தான் தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா, இந்த அஞ்சு ரூபா காசுக்காக வேலை செஞ்சுட்டு இருப்போமா?” என்று படபடவென்று; பேசுகிறாள் பஞ்சவர்ணம். நிதானத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வள்ளல், இருவர் கைகளிலும் ஆளுக்கு நூறு ரூபாய் நோட்டைத் திணிக்கிறார். “நாங்களென்ன காசுக்காகவா உங்களைப்பார்க்க, பரக்க பரக்க ஓடி வந்தோம். கருணை தெய்வத்தைக் கண்குளிரப் பார்த்தாலே போதும், என்றுதான் ஓடி வந்தோம்” என்கிற தோரணையில் அவர்களின் பார்வை இருந்தது. அந்தப் பரங்கிமலை மன்னனுக்கு புரிந்தது. “ஒரு அண்ணன், தங்கைக்குத் திருவிழாச் செலவுக்கு கொடுத்தது போல், நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி புறப்படுகிறார்.
அதோடு பஞ்சவர்ணம் பருத்தி எடுக்கவில்லை. வீட்டுக்குச் சென்று விடுகிறாள். சோறும் கறியும் தட்டில் போட்டு வைக்கிறார் உடன் பிறந்த அக்காள். பஞ்சவர்ணம் “பசியில்லை” என்கிறாள். பொங்கல் வைக்கத்தான் வீரபாண்டி கோயிலுக்கு வரலை சட்டுபுட்டுன்னு சாப்பிட்டியினா, பொழுது சாய திருவிழா பார்க்கவாவது போகலாம்ல்ல. வரவை கோறும் கோயிலுக்கும் வேண்டாம். இரவும் அதே பதில். மறுநாள் காலையில் கண்மாய்க்குக் குளிக்கச் செல்லவில்லையா? என்று பாட்டி கேட்கிறாள். “உடம்புக்குச் சரியில்லை” என்று பஞ்சவர்ணம் சொல்கிறாள். கும்பாவில் கூழும், கும்பாவின் வெளிப்புற விளிம்பில் துவையலையும் ஒட்ட வைத்துக் கொண்டு, “போவட்டும் கையையாவது கழுவிட்டு கரைத்துக்குடி” என்று மீண்டும் அக்கா வலியுறுத்துகிறார்.
“ஊட்டி விடு, இல்லாட்டி கரைத்து லோட்டா சொம்பில் கொடு. கடகடவென்று குடித்து விடுகிறேன்” என்கிறாள் பஞ்சவர்ணம். இப்படிப் பஞ்சவர்ணம் பிரமை பிடித்தவள் போல் பேசியதால், அக்கா பயந்து போய்,
“ஏலே உனக்கு என்னாச்சுடி பணம் கொடுக்கிறபோது, அவரின் தங்கக்கரம் தன் கையில் பட்டுவிட்டது என்றும், இந்தச சாதாரண பக்தைக்குத் தெய்வம் கரம் தொட்ட இடம் தண்ணீர் பட்டால் அழிந்துவிடும் என்று பயந்துதான் குளிக்காமல், சாப்பிடாமல் இருந்தேன்” என்கிறாள். இப்பொழுதுதான் நிம்மதி அடைந்தனர் பெற்றோர்கள்.
இப்படி ஆறு வயதில் இருந்து அறுபது வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பொன்மச் செம்மல் மீது வைத்திருந்த அன்பை, மூட நம்பிக்கையென்றும், சினிமாக் கவர்ச்சியென்றும் கேலி செய்தனர். சிலர் உலக அரங்கில் சர்வாதிகாரி என்றும், கொடுங்கோலன் என்றும் வர்ணிக்கபட்ட அடால்ப் ஹிட்லர், ஒருமுறை வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஏழை பெண்மணிகள் தோள்களில் கைபோட்டு நடந்து சென்றிருக்கிறார். அந்த நிமிடத்தில் இருந்து, அந்த சக்கரவர்த்தியின் கைகள் பட்ட தோள்களில் தண்ணீர்பட்டால், அவனின் கைத்தடம் அழிந்துவிடும் என்று, தன் வாழ்நாள் முழுவதும், குளிக்காமலேயே இருதிருக்கிறார்கள்.
கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்டவனின் கரங்களுக்குகே அவ்வளவு மவுசு என்றால், கொடுத்துச் சிவந்த நம் கொற்றவன் கரங்களுக்கு எவ்வளவு மவுசு இருந்திருக்கும். சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள். சில பேர் பொன்னுக்கு அடிமையாவார்கள். சிலர் பெண்ணுக்கு அடிமையாவார்கள். ஆனால் கொடுப்பதற்கு அடிமையான ஒரே கருணை வள்ளல், கண் முன் கண்ட கலங்கரை விளக்கம் நம் காவிய நாயகன் ராமாவரத் தோட்டத்தில் கொலு வீற்றிருந்த பொன்மனச் செம்மல் ஒருவர்தான்.. அப்படிப்பட்ட புண்ணியவானை புழுதி வாரித் தூற்றியவர்கள், பொல்லாங்கு பேசியவர்கள் பலரை, மக்கள் தண்டித்து விட்டார்கள். சிலரை சட்டம் தண்டித்துவிட்டது.
மற்ற சினிமாக்காரர்கள் மீது இல்லாத பக்தி, இவர் மீது மட்டும் ஏன் எப்படி வந்தது? அவர்கள் எல்லோரும் தன்னுடைய நடிப்பு என்கிற வித்தைக்குக் கைத்தட்டினாலே போதும், நாலு காசு சம்பாதித்தால் போதும் தன் சந்ததிகள் வாழ்ந்தால் போதும். என்கிற அளவில் மட்டும் இருந்து விட்டார்கள். ஆனால் வள்ளல் ஒருவர்தான், உங்களால் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். என் அளவுக்கு உடலை உறுதியாக வைத்திருங்கள். உழைத்து வாழுங்கள். உண்மையாக இருங்கள். சத்தியத்தை நம்புங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இப்படி நடிப்பில் மட்டுமல்ல; நடப்பிலும் செய்து காட்டியவர். அதனால்தான் அந்தத் தலைவன் மீது அதிசயத் தக்க அதீத பக்தி செலுத்தினார்கள் என்று, அன்று கொச்சைப்படுத்தியவர்களெல்லாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
A request from mgr fan ilangao from net
http://i46.tinypic.com/2hwdv9z.png
எம்ஜிஆருக்கு ஒரு ஹீரோவைப் போல் சிலை வையுங்கள் !
தி.தமிழ் இளங்கோ
எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த எல்லோருமே வயதானவர்கள்தான். எல்லோருமே கதாநாயகனாக, கல்லூரி மாணவனாக, இளைஞனாக நடித்தனர். அவர்களில் அவர்களை விட இவர், அதாவது எம்ஜிஆர் கொஞ்சம் மூத்தவர் அவ்வளவுதான். ஆனாலும் அவரை எதிர் முகாமில் வயதான நடிகர் என்று கிண்டலடித்தனர்.
எனவே தனது தோற்றத்தை காட்டிக் கொள்வதில் தனி கவனம் செலுத்தினார். அதற்குத் தகுந்தாற் போல காட்சிகள் அமைக்கச் சொன்னார். உடைகள் அணிந்தார். மேக்கப் போடச் சொன்னார். பெரும்பாலும் அவரது பாடல்களில் அவர் அணியும் அரைக் கை சட்டை என்பது கைகளில் உள்ள முண்டாவைக் காட்டும். அவரது எந்த தனிப் பாடலை பார்த்தாலும் அவர் கைகளை வீசிக் கொண்டும், உயர்த்தி கொண்டும் வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். (அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன் ; உலகம் பிறந்தது எனக்காக – பாசம் ; புதிய வானம் புதிய பூமி – அன்பே வா ; அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் & ஏன் என்ற கேள்வி – ஆயிரத்தில் ஒருவன் ) அதே போல திடீரென்று ஏதேனும் ஒரு கனமான பொருளை தூக்குவார் அல்லது நகர்த்தி வைப்பார். துள்ளி குதிப்பார். அவரது காதல் பாடல்களும் இதற்கு தப்பாது ( காற்று வாங்கப் போனேன் – கலங்கரை விளக்கம் ; நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் –அன்பே வா )
எம்ஜிஆர் கதாநாயகிகளை மாற்றிக் கொண்டே இருந்தார். அவர்கள் இவரைவிட வயது குறைந்தவர்கள். கதாநாயகிகள் மாறிக் கொண்டே இருந்தாலும் இவர் என்றும் ஹீரோவாகத்தான் ( ever green hero ) இருந்தார்.அதுதான் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு சிலை வைக்கும் அன்பர்கள் அவர் விரும்பிய ஹீரோ தோற்றத்தில் சிலை வைப்பது கிடையாது. அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொப்பியோடு இருந்த அவரது முதுமை தோற்றத்தையே வடிவமைக்கின்றனர். இது சரியா? எம்ஜிஆர் என்றால் இளமை – கம்பீரம் – புன்னகை என்று சிலை வடிவமையுங்கள்.
INDEPENDENCE DAY - - NICE SONG FROM
NADODI.
திரைப்படம்: நாடோடி
பாடல்: நாடு அதை நாடு
பாடகர்கள்: P.சுசீலா, TM. சௌந்தரராஜன்
இசை: பழையது
பாடல் ஆசிரியர்: Kannadasan
English
================================================== ==============================
நாடு (நாடு)
அதை நாடு (அதை நாடு)
அதை நாடவிட்டால் ஏது வீடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பன்பாடு
மானம் பெரிதென்று வாழும் பன்பாடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பாலைவனம் என்ற பொரும் நம் நாடு
பாரை மலை கூட நம் எல்லை கொடு
ஆரு நிலம் பாய்ந்து விளயாடும் தோட்டம்
வீர சமுதயமே எங்கள் கூடம்
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
வானும் குலமாதர் முகம் பார்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்ததில்லை
வெற்றி திரு மாது நடை பொடும் எல்லை
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பசி என்று வருவூர்க்கு விருந்தாக மாரும்
பகைவரின் முகம் பார்து புலியாக சீரும்
நிலதில் உயிர் வைது உரிமை கொண்டாடும்
எதிர்து வருவொரை உரமாக பொடும்
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பன்பாடு
நாடு அதை நாடு
அதை நாடவிட்டால் ஏது வீடு
=
//இவர் என்றும் ஹீரோவாகத்தான் ( ever green hero ) இருந்தார்.அதுதான் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு சிலை வைக்கும் அன்பர்கள் அவர் விரும்பிய ஹீரோ தோற்றத்தில் சிலை வைப்பது கிடையாது. அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொப்பியோடு இருந்த அவரது முதுமை தோற்றத்தையே வடிவமைக்கின்றனர். இது சரியா? எம்ஜிஆர் என்றால் இளமை – கம்பீரம் – புன்னகை என்று சிலை வடிவமையுங்கள்.//
இந்த ஆதங்கம் நடிகர்திலகத்தின் ரசிகனான எனக்கும் உண்டு.
நடிகர்திலகத்துக்கு சென்னை, புதுவை, மதுரை, தஞ்சை, நாகர்கோயில் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் அமைக்கப்படுள்ளன. அனைத்தும் அவர் இறுதிக்காலத்தில் இருந்த, தாடியுடன் கூடிய தோற்றத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. 'படங்களில் கதாநாயகனாக நடித்த தோற்றங்களில் வைக்கக்கூடாது, ஒரிஜினல் தோற்றத்தில்தான் வைக்க வேண்டும்' என்று வாதிட்டாலும் அட்லீஸ்ட் அவர் இளமைக்காலத்தில் இருந்த தோற்றத்திலாவது வைக்கலாம் அல்லவா?.
article from tamil cinema
எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.
தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.
தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.
ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.
சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!
'ஒருதாய் மக்கள் நாமென்போம்...'
http://www.youtube.com/watch?v=nhVztpWRldY
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்
விடுதலை நாளினையொட்டி ஒரு தாய் மக்கள் நாமென்போம் பாடலைப் பதித்து ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்பித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
எம் ஜி ஆர் படத்திலிருந்து சில நிழற்படங்கள்
http://i1146.photobucket.com/albums/...BSDFlyBird.jpg
http://i1146.photobucket.com/albums/...O/mgrevp01.jpg
http://i1146.photobucket.com/albums/...O/bsdevp02.jpg
http://i1146.photobucket.com/albums/...O/bsdevp01.jpg
http://i1146.photobucket.com/albums/...enkadamai2.jpg
http://i1146.photobucket.com/albums/...enkadamai1.jpg