கலக்குறீங்க வினோத் சார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றிய தகவல் தந்த கார்த்திக் சாருக்கு ந்ன்றி.
Printable View
கலக்குறீங்க வினோத் சார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றிய தகவல் தந்த கார்த்திக் சாருக்கு ந்ன்றி.
எப்படி உரிமைக்குரல் போட்டோமைக்குரல் ஆனது?Quote:
Originally Posted by esvee
:confused2:
Unlike Sivaji's overnight stardom, MGR's career progress was not a bed of roses but a path of thorns. Before achieving the status of a Hero, he had done more than a dozen movies as a side actor in insignificant roles including Sathileelavathy and Ashok Kumar. Even in Alibabavum 40 thirudarhalum, Banumathi dominated over MGR and he played almost subtle even as his brother Chakrabani and Thangavelu could take significant screen space. Of course MGR retired off screen as a Hero only, as ageing and political entry warranted
சின்னப்ப தேவருடன் மீண்டும் நட்புறவு ஏற்பட்டதும், அவர் படங்களில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடிக்கலானார். ஒரு படத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எம்.ஜி.ஆருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது தேவரின் வழக்கம். அத்துடன், அடுத்த படத்துக்கும் "அட்வான்ஸ்" கொடுத்து விடுவார்! இதனால், தேவர் பிலிம்ஸ் எடுக்கும் படம் ஒன்றில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பார். தேவர், இடையிடையே வேறு நடிகர்_ நடிகைகளை வைத்து பக்திப் படங்களும் எடுப்பார்.
இதற்கு முன்பெல்லாம், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., 1962 முதல் ஐந்து அல்லது ஆறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!
மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான்.
"பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை.
இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.
"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.
"ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன்.
ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.
ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின.
ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!
//இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின.
ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!//
ஜோடி மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
ஏனென்றால், அதே பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஜோடியாக நடித்த மதுரை வீரன், மன்னாதி மன்னன் படங்கள் வெற்றியடைந்துள்ளன.
அதுபோல மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சிறந்த ஜோடியான சரோஜாதேவி, அதே காலகட்டத்தில் நடிகர்திலகத்துடன் நடித்த நடித்த பாகப்பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும், விடிவெள்ளி, ஆலயமணி, இருவர் உள்ளம், புதிய பறவை ஆகியவை பெருவெற்றி கண்டுள்ளன.
//"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.//
After he re-joined with MGR again, Devar made a record that he is the only producer giving two movies per year with MGR.....
1962
thAyaikAththa thanayan
kudumba thalaivan
1963
dharmam thalaikAkkum
needhikkuppin pAsam
1964
vEttaikkAran
thozhilALi
1965
kanni thAi
1966
thanipiravi
mugarAsi
1967
thAikku thalai magan
vivasAyi
1968
thEr thiruvizhA
kAdhal vAganam
(after this, Devar made films with other actors like Jaishankar, Muthuraman, A.V.M.Rajan)
1972
nalla nEram (last one with MGR)
1958-ல்
முதல் பாட்டை எழுதினேன்.
‘கோபி’ என்று கோடம்பாக்கத்தாரால் அறியப் பெற்ற திரு. வி. கோபால கிருஷ்ணன்தான் –
என்னுள் இருந்த என்னை எனக்கே காட்டியவர்; நாளும் பொழுதும் என் நெஞ்சுக்கு நம்பிக்கைச் சோறு ஊட்டியவர்.
திருவரங்கத்திலிருந்து நான் திருவல்லிக்கேணிக்கு இடம் பெயரக் காரணம் –
திரு. கோபி!
ஒரு வைகறைக்கான வாய்ப்பே இல்லையென்று – என் நீல இரவு, சீனத்துச் சுவர் போல் நீள இரவாகக் கிடந்தபோது –
இந்த கோபிதான், ஒரு கொண்டைச் சேவலாகி, என் கும்மிருட்டு விடியக் கூவியவன்!
‘மிஸ். மாலினி’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவோடு நடித்த கோபியை;
‘ஏழை படும் பாடு’ படத்தில் பத்மினியோடு அவரது முதல் கதாநாயகனாக நடித்த கோபியை;
‘நானே ராஜா’ படத்தில் சிவாஜி கணேசன் வில்லனாக வர – ஒரு He-Man Hero - வாக வந்து, கதாநாயகியோடு டூயட் பாடிய கோபியை;
‘பாசவலை’யில், பட்டுக்கோட்டை பாடல்களோடு என்னைப் பரவசப் படுத்திய கோபியை;
திருச்சி ரெட்டை மால் தெரு, வக்கீல் திரு. நடேசய்யர், வீட்டில்தான் முதன் முதலில் சந்தித்தேன். திரு. நடேசய்யர் அவர்களின் மகன், திரு. N. சீதாராமன் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் வீட்டுக் கல்யாணம் ஒன்றில்தான், சீதாராமன் எனக்கு கோபியை அறிமுகப்படுத்தினார்.
இந்த சீதாராமன்தான் புகழ் வாய்ந்த திரு. ஜாவர் சீதாராமன்.
சீதாராமன் மூலமாக கோபியும்; கோபியின் மூலமாக திரு. எம்.ஜி.ஆரும் எனக்கு அறிமுகமாக வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை!
இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்ல வேண்டும்; தள்ளிப் போட்டால், மறந்து விடக்கூடும்! அது –ஆண்டவன் கட்டளை பற்றியது!
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படம் ஒன்று. திரு. எம்.ஜி. சக்ரபாணி அவர்களின் மேற்பார்வையில் –
திரு. கே. சங்கர் இயக்கத்தில் தொடங்கி –
பிறகு, எம்.ஜி.ஆர். குண்டடி பட்ட காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய் –
திரு. எம்.ஜி.ஆர். உடல் நலம் தேறிய பின் மீண்டும் தொடங்கியது.
ஆரம்பத்தில் –
அந்தப் படத்தின் இசையமைப்பாளர் திரு. எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.
நான் எழுதி – அவரது இசையில் ஓரிரு பாட்டுகளும் பதிவாயின.
படம் – மீண்டும் தொடங்கப் பெற்றபோது – திரு. கே.வி. மகா தேவன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப் பெற்றார்.
‘புத்தம் புதிய புத்தகமே – உனைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்!’
– என்கிற பாடலை நான் எழுதி முடித்தேன்.
இது, திருமதி. சரோஜா தேவியும் எம்.ஜி.ஆரும் பாடுகிற டூயட்.
மறுநாள் –
எம்.ஜி.ஆர். என்னை அழைத்து ஜெயலலிதா பாட வேண்டிய ஒரு Solo song எழுதச் சொன்னார்.
‘அதை எழுதிக் கொடுத்தால் மட்டும் போதாது; இன்னும் ஒரு பாட்டு – நான் Solo-வாகப் பாடுவது; அதையும், நாளைக்கு வந்து எழுதிக் கொடுத்து விட்டுத்தான், சிவாஜி படத்துக்கு நீங்க போகணும்!’ என்று எம்.ஜி.ஆர். அன்பாக எச்சரித்தார்.
“நான் – சிவாஜி நடிக்கும் ‘இரு மலர்கள்’ படத்திற்கு, நாளை போயாக வேண்டும்; இனிமேயும் அதை நான் தள்ள முடியாது” என்று –
முதல் நாள் Production Manager திரு. பத்மநாபனிடம் நான் உறுதி படச் சொல்லியிருந்தது, அவர் காதுக்கு எட்டியிருந்ததால்தான் – எம்.ஜி.ஆர். என்னை, அவர் வேலைக்குத்தான் நான் First preference கொடுக்க வேண்டுமென்பதை ஓர் எச்சரிக்கையாகவே சொன்னார்.
நான், சிரித்துக் கொண்டே –
‘அண்ணே! உங்க வார்த்தையை நான் எப்படீண்ணே மீறுவேன்? இன்னிக்கு நான் நிறையப் படங்கள்ளே பாட்டு எழுதறேன்னா – அது நீங்க போட்ட பிச்சை! என் மனசுல, உங்களப் பத்தி நான் என்ன நெனச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா?’ என்று நிறுத்தினேன்.
‘என்னைப் பத்தி, என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? சொல்லுங்களேன், கேப்போம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.
“எனக்கு நீங்க யாருன்னு – ரெண்டே வரீல, ஒரு கவிதை சொல்றேன் –
‘என்னைப்
பாட வைத்தவன் ஒருவன்;
என் –
பாட்டுக்கு அவன்தான் தலைவன்!’
– இதுதாண்ணே, எனக்கு நானே காலையிலே தினம் கண் முழிச்சு எழுந்ததும் – நன்றியோட சொல்லிக்கிற பாட்டு!”
– இப்படி நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். மகிழ்ந்து, நெகிழ்ந்து என்னைப் பக்கத்தில் இழுத்து உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார்.
உடனே – டைரக்டர் சங்கர்,
‘கவிஞரே! இப்ப சொன்னதையே பல்லவியா வெச்சு – ஒரு முழுப் பாட்டு எழுதிக் கொடும்’ என்று துரிதப்படுத்தி, பேப்பர் Pad-ஐ என் பக்கம் நீட்டிப் பேனாவையும் கொடுத்தார்.
நான் சரணங்களை கிடுகிடுவென்று எழுதினேன். அதற்கு முன், பல்லவியில் இன்னும் இரண்டு வரிகள் சேர்த்தேன்.
‘என்னைப்
பாட வைத்தவன் ஒருவன்! – என்
பாட்டுக்கு அவன்தான் தலைவன்!
ஒரு –
குற்றமில்லாத மனிதன்! அவன்
கோயில் இல்லாத இறைவன்!
அவன் –
தோட்டத்தில் பறவைகள் கூட்டம்;
அவன்
சபைகளில் எத்தனை ஆட்டம்!;
அவன்
கலைகளுக்கெல்லாம் மன்னன்;
நல்ல
கலைஞருக் கெல்லாம் வள்ளல்!
– அவன்
வீட்டுக்குக் கதவுகள் இல்லை! – அந்த
வாசலில் காவல்கள் இல்லை! அவன்
கொடுத்தது எத்தனை கோடி? –
அந்தக்
கோமகன் திருமுகம் வாழி!’
பாட்டை நான் எழுதி முடித்து எம்.ஜி.ஆரிடம் படித்துக் காட்டியவுடன் –
‘சரி... இதுதான் அம்மு பாட வேண்டிய solo song...! இதை நான், மாமா கிட்டே மெட்டுப் போட்டு வாங்கிக்கறேன்... நீங்க, என் solo song ஒரு பல்லவி சொல்லுங்க!’ என்று பாட்டை வாங்கித் தன் சில்க் ஜிப்பாவின் பைக்குள் செருகிக் கொண்டார்.
‘அம்மு’ என்று அவர் குறிப்பிட்டது – செல்வி. ஜெயலலிதாவை!
டைரக்டர் கே. சங்கர், என்னிடம் எம்.ஜி.ஆர். பாட்டுக்கான காட்சியை விளக்கினார்.
‘நாட்டில் –
ஒரு சர்வாதிகாரி மன்னனாக இருந்து ஆட்சி நடத்துகிறான். மக்களைக் கொத்தடிமையாக்கி – அவர்களை அரசன் தன் விருப்பத்திற்கேற்ப இயங்க வைக்கிறான்.
ஒரு நடன மாது; அவள் தன் குழுவினருடன் ஆடித் தெருமக்களை மகிழ்விப்பவள்; அவளால்,
மக்கள் மான உணர்வு பெறுகிறார்கள் என்று அறிந்த மன்னன் –
அவளை ஆடக் கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரிகள் மூலம் தாக்கீது அனுப்புகிறான்.
அந்த நடனமாது, மன்னன் கட்டளையை எப்படி மீறுவது என்று அஞ்சித் தன் குழுவினரோடு புறப்பட எத்தனிக்கையில் –
கதாநாயகன், அவள் அச்சத்தைப் போக்கும் விதமாக ஓர் எழுச்சிப் பாடலைப் பாடி ஊர்ச்சனங்களையும் கூட்டி, அவர்களுக்குள் விடுதலை வேட்கையை விதைக்கிறான்!’
– இப்படி சங்கர் அவர்கள் சொன்னவுடன் நான், ‘உலகத்தில் இறைவன் கட்டளைதான் செல்லும்; வேறு எவன் கட்டளையும் எடுபடாது’ எனும் பொருள்படும்படி –
‘ஆண்டவன் கட்டளை முன்னாலே – உன்
அரச கட்டளை என்னாகும்?’
– என்று பல்லவியைத் தொடங்கி எழுதலானேன்.
இயக்குநர் சங்கரின் முகம், திடீரென்று இறுகியது; சுற்றியிருந்த உதவி இயக்குநர்கள் முகங்களும் ஒருவகை அச்சத்தில் வெளிறின!
எம்.ஜி.ஆர். ஒரு வினாடி, என்னை உற்று நோக்கினார்.
சற்று முன், என்னுடைய முந்தைய பாடலைக் கேட்டு நெகிழ்ந்த அவர் –
சகல சந்தோஷங்களையும் தொலைத்து விட்டு – என்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.
எம்.ஜி.ஆர். உள்பட – இப்படி என்னைச் சுற்றியிருந்த எல்லோருடைய முகங்களிலும் ஏன் எதற்காக எது குறித்து, இத்தகு மாற்றம் என்பது எனக்குப் புலப்படாது போனதால் –
நான், குழப்பம் என் விழிகளில் குமிழியிட்டடிக்க, சற்று அசௌகரியமான சூழ்நிலைக்கு ஆட்பட்டேன்.
எப்பாதும் என்னை ‘ஆண்டவனே!’ என்று விளிக்கும் எம்.ஜி.ஆர். –
‘என்னங்க வாலி!’ என்று அழைத்து மேலும் தொடர்ந்தார்.
‘உங்களுக்கு – என்னை அவமானப்படுத்தணும்னு எண்ணம் இருந்தா, அதை நேர்லயே செய்யலாமே! ஏன் – இப்படி ஒரு பாட்டு எழுதி என்னை ஏளனம் செய்யுறீங்க?’
– எம்.ஜி.ஆர். இப்படிக் கேட்டதும், நான் வேர்த்து வெலவெலத்துப் போனேன்; ஒரு விநாடி என் மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது நாக்கு!
பிறகு –
அச்சத்திலிருந்து விடுவித்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு –
‘என்னண்ணே, இப்படிப் பேசுறீங்க? நான் எங்கே உங்களை அவமானப்படுத்தினேன்? அதுவும் இந்தப் பாட்டுலே உங்களை ஏளனம் பண்ணதாச் சொல்றீங்க! எனக்கு ஒண்ணுமே புரியல்லியே அண்ணே!’
என்று, தலையும் வாலும் புரியாத ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறதே எனும் வியப்பு என்னை ஒருபுறம் விரட்ட, வினவினேன்.
‘நீங்க – என்ன பல்லவி எழுதியிருக்கீங்க? அதை நீங்களே படிச்சுப் பாருங்க... நான் சொல்றது, உங்களுக்குப் புரியும்!’ என்று எம்.ஜி.ஆர். சினம் குறையாமல் என்னைச் சீண்டினார்.
நான் – பல்லவியைப் படித்தேன்.
‘ஆண்டவன் கட்டளை முன்னாலே – உன்
அரச கட்டளை என்னாகும்?’
– என்று படித்துப் பின், மேற்கொண்டு எம்.ஜி.ஆரிடம் கேட்டேன், ‘இதுல என்னண்ணே தப்பு?’ என்று,
‘இந்தப் படத்துக்கு நான் என்ன பெயர் வெச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘தெரியுமண்ணே! அரச கட்டளை-ன்னு வெச்சிருக்கீங்கன்னு தெரியுமே!’ என்று விடையிறுத்தேன் நான்.
இறுதியாக –
எம்.ஜி.ஆர். தன் கோபத்திற்கான காரணத்தை விளக்கலானார்.
“ ‘அரசகட்டளை’ நான் நடிக்கிற படம்; ‘ஆண்டவன் கட்டளை’ சிவாஜி நடிச்ச படம். நீங்க என்ன எழுதியிருக்கீங்க? ‘ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும்?’னு எழுதினா, சிவாஜி படத்துக்கு முன்னாடி உன் படம் என்னாகும்னுதானே கேக்கறதா அர்த்தம்!” என்று படபடவென்று பொரிந்து தள்ளினார் எம்.ஜி.ஆர்..
அப்போதுதான் அந்தப் பாடல், இப்படி ஒரு அர்த்தம் கொடுக்கிறது என்பதை நான் அறிந்தேன்.
‘அண்ணே! கடவுள் சத்தியமா – இப்படி ஒரு அர்த்தத்தை மனசுல வெச்சு நான் எழுதலே!
கதைக்குத் தகுந்த மாதிரி, நாடாளும் மன்னனைப் பார்த்து, ‘கடவுளை விட உன் ஆணை பெரிதா என்று நீங்க கேக்கற மாதிரி எழுதினேனே தவிர – இதுலே, வடிவேலறிய வஞ்சனை இல்லை’ என்று நான் –
ஊரில் உள்ள தெய்வங்களின் மேலெல்லாம் சத்தியம் பண்ணியும், எம்.ஜி.ஆர். ஏதோ ஒப்புக்கு சமாதானமானாரே தவிர, முழுக்க convince ஆகவில்லை!
மறுநாள் –
அந்தப் பாட்டை திரு. முத்துக்கூத்தனை எழுத வைத்து, recording செய்து விட்டார்!
அந்தப் பாடல்தான் :
‘ஆடிவா! ஆடிவா! ஆடப் பிறந்தவளே! ஆடி வா!’
– என்பது!
சரி; விட்ட இடத்திற்கு மீண்டும் வருகிறேன்; இந்நிகழ்வுக்கு ஏறத்தாழப் பத்தாண்டுகள் முன்னம் –
திரு. கோபி மூலமாக நான் எம்.ஜி.ஆரை சந்தித்த – அந்த முதல் சந்திப்பைச் சொல்லுகிறேன்!
(தொடரும்)
[
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது. சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.
பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.
கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.
கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.
நாடோடி மன்னன் கதை எவ்வாறு திருப்பங்களோடும், விறுவிறுப்பான சம்பவங்களோடும் உருவாக்கப்பட்டதோ, அதுபோல் "ஆயிரத்தில் ஒருவன்" கதையும் நவரசங்களுடன் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டது.
ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து மணிமாறன் என்ற இளைஞன் நடத்தும் போராட்டமே கதையின் மையக்கரு. கடல், கப்பல், அடிமைகள் என்று, மேல்நாட்டுப் படங்களைப் போன்ற பிரமாண்டமான பின்னணியில் கதை உருவாகியது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார்.
கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்தனர். பந்துலு டைரக்ட் செய்தார். படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை, ஏராளமான பொருட்செலவில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.
9_7_1965_ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது.
கருத்தாழம் மிக்க இனிய பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கண்ணதாசன் எழுதிய அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்", "நாணமோ", "ஓடும் மேகங்களே" ஆகிய பாடல்களும், வாலி இயற்றிய "பருவம் எனது பாடல்", "உன்னை நான் சந்தித்தேன்", "ஆடாமல் ஆடுகிறேன்", "ஏன் என்ற கேள்வி" ஆகிய பாடல்களும் திக்கெட்டும் எதிரொலித்தன.
பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார். 1965_ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.
"கலங்கரை விளக்கம்" ஜி.என்.வேலுமணி தயாரித்த படம். வசனத்தை சொர்ணம் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். "காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்" என்ற புகழ் பெற்ற வாலியின் பாடல் இடம் பெற்ற படம் இது.
"கன்னித்தாய்" _ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். இதற்கு வசனம் எழுதியவர் ஆர்.கே.சண்முகம். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம.ëஏ.திருமுகம் டைரக்ட் செய்தார். பத்மா பிலிம்ஸ் தயாரித்த படம் "தாழம்பூ". இதில் எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார். எஸ்.ராமதாஸ் டைரக்ட் செய்தார்.
மலையாள எழுத்தாளர் கொட்டாரக்கரா எழுதிய கதை. "சஸ்பென்ஸ்" நிறைந்த படம். "ஆசை முகம்", மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எல்.மோகன்ராம் தயாரித்த படம். எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.
தொடக்கத்தில், துறைïர் மூர்த்தி வசனம் எழுதினார். எம்.ஜி.ஆருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். எனவே, ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தார். பி.புல்லையா டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அத்துடன் எம்.ஜி.ஆர். போல முகத்தை மாற்றிக்கொண்டு வில்லன் குழப்பங்கள் செய்வான். எனவே, எம்.ஜி.ஆர். மூன்று வேடங்களில் தோன்றினார்.
Correction Karnan was a one of the super hit and run 100 days in 4 theaters and made huge collections and but agreed that KT did not run well. Where as AO run 100 days only in 3 theaters. So if logic of 100 days in 4 theaters has not collected big money then don't know how can AO considered as BO hit by running 100days only in 3 theaters.
This is just for correction, nothing else.
Cheers,
Sathish