http://i48.tinypic.com/abkli.jpg
Printable View
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.
சிவாஜி! இந்தியாவில் பிறக்காமல் எங்கு பிறந்திருந்தாலும் உலகம் போற்றக்கூடிய விருதுகளை அள்ளிக் குவித்திருப்பார் என்று பல அறிஞர்களால் போற்றப்பட்ட பிறவி நடிகர். நடிகர் திலகம் என்று தமிழ் பெருமக்களால் ஆராதிக்கப்படும் அற்புத கலைஞன். அவ்வப்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தாலும், தன் ஒவ்வொரு வினாடிகளையும் சினிமாவுக்காக அற்பணித்தவர். நூற்றாண்டு கடந்து வாழும் புகழுக்கு உரித்தானவர்.
courtesy- varalatrin varalaaru
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
thazham poo - song
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
பாடல் :வாலி
இசை :எஸ்.எம்.சுப்பையா நாயுடு
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அவர் மொரீஷியஸ் தீவு நாட்டுக்குச் செல்வதென்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்.
மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.
அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு
ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அடை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடித்த்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.
எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.
புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச்மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.
மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!
குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித் தலைவர் கலந்துகொண்டார்.
courtesy; puratchithalaivar.com
Courtesy - tamilkadhalan- net
http://i46.tinypic.com/30tgg9x.png
'வறுமையில்' பிறந்து....
"வள்ளலாய்" வாழ்ந்து....
"செம்மலாய்" செழித்து...
'சமூகம் சமைத்த'
"அன்பின் அழகே"...!!
பிஞ்சுகளின் பசிப்பிணி நீக்க
பள்ளிகளில் சத்துணவு சமைத்த
"சமதர்மமே".....!
"காலணிகள்" தந்து
"காலணி"களை கரையேற்றிய
"தமிழ் படகே"....!
புத்தகம் தந்து புதிய
பரிணாமம் கண்ட
"புரட்சியே"...!
வறுமை விரட்ட
பதிமூன்று ஆண்டுகளாய்
அத்தியாவசியப் பொருட்களின்
அவசியம் உணர்ந்து
விலையில் கை வைக்காமல்
'கை'யோடு கைக்கோர்த்து
கை வீசி நடந்த
"கர்ம வீரரே"...!
நினைவிலும்...
கனவிலும்
ஏழைகளைத் தாங்கிய
"ஏந்தலே"....!
ஏர்முனையின்
கூர் மழுங்காது காத்த
"விவசாயி" நீ...!
தேசம் பெரிதென
நேசம் வைத்த
நெஞ்சமே...!
காலங்கள் சென்றாலும்
"காலம் வென்ற
காவியம்" நீ....!!
நீயும் காமராசரும்
இல்லாத தமிழகம்
நினைக்க பயம் தரும்
உணர்வுகள்...!
இன்றைய எங்களின்
வாழ்வாதாரத்தை அன்றே
விதைத்து சென்ற வள்ளல்கள்
வாழ்க... வாழ்க...!
நீங்கள் மறையவில்லை....
எங்களின் இதயங்களில்....
எங்களின் நினைவுகளில்...
நீங்காமல் .....
ஒளியாய் ஒளிர்கிறீர்கள்.
உங்களின் பெருந்தன்மை
எப்போது வரும் இன்றைய
சிறுமை படைத்த
அரசியலுக்கு......!
ஏக்கங்களுடன்....
-தமிழ்க்காதலன்.