நன்றி சிவமாலா..புதுக் க(வி)தை இட்டு விட்டு சற்றே பயந்திருந்தேன்.. என்ன்வோ தெரியவில்லை..கற்பனைக் குதிரை கொஞ்சம் நொண்டியடிக்கிறது..ம்ம் மரபில் எழுதணும் இன்னும்..
*
கல்லிலே குதிரை செய்து கலையுடன் மன்னர் வீரம்
சொல்லிலே எழுத ஒண்ணா சித்திரம் படைத்த நாளும்
தள்ளியே சென்றிடாமல் தரமுடன் இருந்தே அவையும்
துல்லிய உணர்வாய் நெஞ்சில் தங்கியே நிற்குமன்றோ
குதிரைகள் பாட்டைக் கேட்டீர் கொஞ்சமாய் நெஞ்சில் வந்தே
ப்திந்தநல் கற்பனைகள் பாங்குடன் இட்டு விட்டேன்
புதியதாய் எழுதச் சொல்ல பூவையே உமையே கேட்பேன்
சதிருடன் மரபில் தோய்த்து சுகமுடன் படைக்க லாமே..