-
மதுரையின் திரையுலகச் சரித்திரம் தெரியுமா உங்களுக்கு?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கநிகர் கலைஞன் சிங்கத்தமிழன் சிவாஜியின் தன்னிகரற்ற சாதனையை அறிவீர்.
அங்கு நடிகர்திலகத்துக்கு 100+ நாள்களுக்கும்மேல் ஓடிய திரைப்படங்களின் எண்ணிக்கை 60. இதில், நாற்பதுக்கும் கீழ்தான் மற்றவர்களின் எண்ணிக்கை என்பது வரலாற்றுப் பதிவு.
இதோ, வசூலுடன் கூடிய ஒரு செய்திப்பதிவு உங்களுக்கு...
#பராசக்தி #முதல்வெளியீடு
திரையிட்ட நாள் : 17:10:1952
திரையரங்கம் : தங்கம்
மொத்த இருக்கைகள் : 2593
ஓடிய நாள் : 112 நாள்
மொத்த வசூல் : ரூ.1,63,423.9 - 9
வரி நீக்கிய வசூல் : ரூ.1,30,719.4 - 0
விநியோகஸ்தர் பங்கு : ரூ.68,227.10 - 2
#மறுவெளியீடு ( SHIFTING)
திரையிட்ட நாள் : 06:02:1953
திரையரங்கம் : சிட்டி சினிமா
மொத்த இருக்கைகள் : 1186
ஓடிய நாள் : 126
மொத்த வசூல் : ரூ.74,628.7 - 8
வரி நீக்கிய வசூல் : ரூ.59,419.6 - 9
விநியோகஸ்தர் பங்கு : ரூ. 35,272.10 - 5
( தொடரும்)
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத் பாபு, மதுரை
தொகுப்பு :வான்நிலா விஜயகுமாரன்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a4&oe=5F089F24
வான்நிலா விஜயகுமாரன்
-
மதுரை மாநகரில் நடிகர்திலகத்தின் வெற்றிப்பட்டியல்...
1952- 53 ஆம் ஆண்டுகளில் பராசக்தி திரைப்படமே இருவேறு அரங்குகளில் நூறுநாள் ஓடிய சாதனையைக் குறிப்பிட்டிருந்தேன். அதே ஆண்டில் வெளியாகியிருந்த பணம் திரைப்படம் ஸ்ரீதேவி அரங்கில் 84 நாள் ஓடி சாதனை படைத்தது.
1953ல் வெளியான ஐந்து நேரடித் தமிழ்ப் படங்களில் #பூங்கோதை #செண்ட்ரல் அரங்கில் மூன்று வாரங்களும், #திரும்பிப்பார் திரைப்படம் #தங்கம் அரங்கில் 56 நாள்களும் ஓடின.
மேலும், #அன்பு திரைப்படம் #சந்திரா அரங்கில் 84 நாள்களும், #கண்கள் திரைப்படம் #சிந்தாமணி யில் 36 நாள்களும், #மனிதனும்மிருகமும் திரைப்படம் #ஸ்ரீலட்சுமி அரங்கில் 35 நாள்களும் ஓடின.
1954ல் வெளியான திலகத்தின் முதல்படமான #மனோகரா திரைப்படம் வெள்ளிவிழா ஓட்டத்தை நூலிழையில் தவறவிட்ட மாபெரும் வெற்றிப்படமாகும்.
அதன் அசாத்திய சாதனைக் கண்ணோட்டம் உங்களின் பார்வைக்கு...
#மனோகரா
வெளியான நாள் : 03 மார்ச் 1954
திரையிட்ட அரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 156
மொத்த வசூல் : ரூ.1,51,690.5-0
வரி நீக்கிய வசூல் : ரூ.1,20,387.1-5
வி.பங்குத்தொகை : ரூ.67,644.5-6
இதே ஆண்டில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற படங்களின் சாதனை விவரம் அடுத்தப் பகுதியில்...
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத்பாபு,மதுரை
பதிவு : வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...51&oe=5F07FD7E
Thanks வான்நிலா விஜயகுமாரன்
-
13-06-2020
சந்திப்பு - பகல் 12 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
முதல் மரியாதை- பகல் 1 மணிக்கு ஜெயா மூவியில்
சந்திப்பு - இரவு 7 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
-
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!
திருவருட்செல்வர் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவனடியாரான திருநாவுக்கரசர் வேடத்தில் நடித்தார். இதில் காஞ்சி மகாசுவாமிகளின் முக பாவனைகளை அப்படியே உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும்.
இது குறித்து ரசிகர்கள் சிவாஜி கணேசனிடம் கேட்ட போது மகாசுவாமிகளின் ஞாபகம் வந்தவராக ''பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நேரில் வந்து சந்திக்கும்படி சுவாமிகள், சொல்லியனுப்பினார். அப்போது சென்னை மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார் சுவாமிகள். மனைவி, குழந்தைகளோடு தரிசிக்கச் சென்றேன். பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். பேச்சு முடிந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த வெளிச்சத்தில் எங்களை நோக்கி சுவாமிகள் நடந்து வந்தார். நாங்கள் அவரது திருவடியில் சாஷ்டாங்கமாக வணங்கினோம்.
''யாரு சிவாஜி கணேசனா?'' என்றார் சுவாமிகள். ''ஆமாம்... சுவாமி'' என்றேன் பவ்வியமாக.
'நெறைய தான தர்மமெல்லாம் பண்றியே? அதுவும் வித்தியாசமா பண்றே. திருப்பதிக்குப் போனேன். ஒரு யானை வந்து என் கழுத்தில் மாலை போட்டது. எங்கிருந்து வந்தது இந்த யானை என்று கேட்டேன். சிவாஜி கணேசன் கொடுத்தது என்றார்கள்.
திருச்சியில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு போயிருந்தேன். யானை மாலை போட்டது. அதுவும் நீ கொடுத்தது தான் என்றார்கள். புன்னை வனநல்லுார் மாரியம்மன் கோயிலுள்ள யானையும் நீ கொடுத்தது என்றார்கள். சுண்டைக் காயளவு ஏதாவது கொடுத்துட்டு அதை யானையளவு விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். நீ யானையையே கொடுத்துவிட்டு விளம்பரம் செய்துக்காம இருக்கியே?
இப்படி ஒரு நல்ல பிள்ளையைப் பெற்ற உன் பெற்றோர் பாக்கியசாலிகள். உன் குடும்ப ஷேமத்திற்காக அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்' என்று சொல்லி ஆசியளித்தார்.
அப்போது சுவாமிகளை நெருக்கமாக தரிசித்ததில் அவரது முகபாவனை என் மனதில் ஆழமாக பதிந்திருக்கலாம். அதுவே திருவருட் செல்வர் திரைப் படத்தில் வெளிப் பட்டுள்ளது. எப்பேர்ப் பட்ட மகான் அவர்'' என்று சொல்லி சிவாஜி கண்களைத் துடைத்துக் கொண்டார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...03&oe=5F09E379
Thanks Vasudevan Srirangarajan
-
-
-
-
-
-