https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a1&oe=5E4570BD
Printable View
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e6&oe=5E750E9C
நன்றி Gururo Vmurugesa
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b0&oe=5E7276EB
நன்றி Gururo Vmurugesan
29/11/2019 வெள்ளி முதல் திண்டுக்கல் N V G B தியேட்டரில்
வீரபாண்டிய கட்டபொம்மன்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5E3F5970
நன்றி நிலா
மதிப்பிற் சிறந்த மகோன்னத மனிதர்.. சினிமா.. அரசியல்.. இந்த இரண்டு உலகிலுமே நடிகர் திலகத்திற்கு வேண்டாத மனிதரில்லை.. இதற்கும் இந்த இரண்டு துறைகளிலுமே போட்டிகளும் பொறாமைகளும் மிக்கது.. சினிமாவை தள்ளி வைத்த இரு பெரும் மனிதர்கள்.. பெருந்தலைவர்.. தந்தை பெரியார்.. ஆகிய இருவரும் கூட கலைஞன் என்கிற நிலையில் சிவாஜியை நேசித்தார்கள்.. ஒருபுறம் தேசிய சினிமாக்களில் சிவாஜியின் பங்கு நிறைய இருப்பதினால் பெருந்தலைவரும்.. ஒரு காலத்தில் நாடகத்துறையில் நடிப்பால் தன்னை கவர்ந்ததற்காக தந்தை பெரியாரிட...மும் பாராட்டுகளை பெற்றவர் இந்த மதிப்பிற்குரிய மகோன்னத கலைஞர்.. மேற்கண்ட இருபெரும் மனிதர்களுமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மனதில் தோன்றிய கருத்துகளை பட்டென கூறிவிடும் குணமுள்ளவர்கள்.. அப்படிப்பட்ட இருவர்கூட ஒருவரை பாராட்டி இருப்பார்களென்றால் அவர் நடிகர் தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? திரையுலகிலும் அரசியலிலும் இரு துருவம்.. நடிகர் திலகமும் மக்கள் திலகமும் ஆவர்.. திரைப்பட சந்தையில் இவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.. அரசியலில் இவர் தேர்வு செய்த தலைவருக்கும் அவர் தேர்வு செய்த தலைவருக்கும்கூட நிறைய வித்தியாசம் உண்டு.. சினிமாவில் மோதிக் கொண்ட ரசிகர்களுக்கும் அரசியலில் மோதிக் கொண்ட தொண்டர்களுக்கும் அப்பாற்பட்ட நெருக்கமும் பரிவும் இருவரிடத்திலும் காணப்பட்டது.. ஒருசில சம்பவங்களை தவிர்ப்போம்.. திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் உள்மனதிலும் உயர்ந்த மனிதர் சிவாஜிதான்..
பேரறிஞர் அண்ணா.. மாற்றான் தோட்டத்து மல்லிகை எனவும்.. எங்கிருந்தாலும் வாழ்க.. என்றும் உளமாற வாழ்த்தியவர்.. எந்த சூழ்நிலையிலும் சிவாஜி என்கிற ஸ்வொர்ணத்தை அவர் உரசிப் பார்த்ததே இல்லை.. கலைஞர் என்றொரு கதாசிரியர்.... சிவாஜிக்காக குணசேகரன்.. மனோகரன்.. என்று பல கதாபாத்திரங்களை
உருவாக்கி நடிகர் திலகத்தை அதற்குள் நுழைத்து விட்டவர்.. அரசியலில் எதிரும் புதிருமான நிலையிலும் ஒரே பாதையில் பயணம் செய்த போதும் சரி.. பெரும்பாலும் மதிப்பு குறையாமல் போற்றி வந்தனர்.. ஆன்மிகம்.. சிவாஜி வேறு ஆன்மிகப் பாதை வேறல்ல.. தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை அப்பழுக்கற்ற ஆன்மிகவாதியாக திகழ்ந்தவர்.. திருப்பதியில் மலர்ந்தவர்.. வாரியார் சுவாமிகள் முதற்கொண்டு சாய்பாபா.. சங்கராச்சாரியார்.. மற்றும் அனைத்து மதத்தலைவர்களிடமும் நம்பிக்கையை பெற்றவர்.. தேசபக்தி.. தெய்வபக்தி.. இரண்டையும் ஒருங்கே பெற்ற பசும்பொன்னார் முதற்கொண்டு.. தேசியத்தலைவர்கள் ஜவஹர்லால் நேரு.. லால் பஹதூர் சாஸ்திரி.. இந்திரா காந்தி.. என்று வரிசையாக அத்தனை தலைவர்களிடமும் ஒருசேர நன்மதிப்பை பெற்றவர் இங்கே யாருண்டு அண்ணல் சிவாஜியைத்தவிர..
சினிமா துறையில் எத்தனை எத்தனை நடிகர்கள்.. எத்தனையோ தயாரிப்பாளர்கள்.. இயக்குநர் யாவரும் போற்றிப் புகழ்ந்த ஒற்றை நடிகர் யாரெனில் அவர் ஒருவரே.. கடல் கடந்த நாடுகளின் நடிகர்கள்.. நாட்டின் தலைவர்கள்.. யாவருக்கும் மணிவிளக்காய் திகழ்ந்தவர்.. நாட்டு மக்களும்.. ரசிகர்களும்.. தாய்மார்களும்.. பிள்ளை குட்டிகள் அனைவரிடமும் ஒருசேர நன்மதிப்பைப் பெற்ற தலைவர் அவர்தான்.. அதனால்தான் முத்தாய்ப்பாக சொல்கிறேன்.. "மதிப்பிற் சிறந்த மகோன்னத மனிதர்" சிவாஜியென்று.... தலைவர்கள் மதித்த மனிதர்களில் அதிக மதிப்பெண் வாங்கிய மனிதர் இவரே..
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...73&oe=5E3E3487
நன்றி Jahir Hussain
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5E84015C
Thanks friends f b
1994 ல் மறு வெளியீடு கண்ட எங்கிருந்தோ வந்தாள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...dc&oe=5E458312
நன்றி நிலா
மறு வெளியீடு கண்ட நீலவானம்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b3&oe=5E7C7D0D