மய்யம் உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...14&oe=5E6928C6
Printable View
மய்யம் உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...14&oe=5E6928C6
1/01/1969 ல் வெளிவந்த அன்பளிப்பு
1/01/ 2020 இன்று 51 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...7c&oe=5E6F2B10
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...60&oe=5EAE6C5A
நன்றி Vcg Thiruppathi H O S
ஐயா, தாங்கள் செய்த உதவிக்கு என் #பரம்பரையே தங்களுக்கு கடமைப்பட்டுள்ளது என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த #அன்னைஇல்லத்தின் #பரம்பரைவாரிசுகள்.............
தனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த பொன்னுச்சாமி பிள்ளை அவர்களை தன் குருவாக ஏற்றுக் கொண்ட நடிகர் திலகத்திற்கு இரண்டாவதாக கிடைத்த குரு நேஷனல் பிக்சர்ஸ் அய்யா பி.ஏ.பெருமாள் முதலியார் அவர்கள்......
எவ்வளவோ எதிர்ப்பு வந்த போதிலும் நான் பராசக்தி படத்தை தயாரித்தால் கணேசனை வைத்துத்தான் தயாரிப்பேன்......
இல்லையேல் இந்தக் கதையை படமாக தயாரிக்க மாட்டேன் என்று கே.ஆர்.ராமசாமி அவர்களுக்காக வாதாடியவர்களிடமும், படத்தை தயாரிக்க பண உதவி செய்ய முன் வந்த ஏ.வி.எம்.மெய்யப்பச் செட்டியார் அவர்களிடமும் தைரியமாக சொன்னதோடு மட்டுமல்லாமல், மிகவும் ஒல்லியாக இருந்த நடிகர் திலகத்தை ஆறு மாதங்கள் சத்தான உணவுகளை அளித்து அவரை உருமாற்றி தன் படத்தின் கதாநாயகனாக நடிக்க வைத்தார்...........
படமும் தமிழ் திரையுலகில் மாபெரும் சுனாமியை உருவாக்கி வெற்றி பெற்றது.........
இப்படி தனக்காக வாதாடி தன் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தன் இரண்டாம் குருவுக்கு ஆண்டு தோறும் பொங்கலன்று குடும்பத்தோடு அவருடைய இல்லம் சென்று காலில் விழுந்து வணங்கி சீர் வழங்கி தன் நன்றிக் கடனை செலுத்தினார் நடிகர் திலகம் அவர்கள்....பெருமாள் முதலியார் அவர்களின் மறைவுக்கு பிறகும் இது தொடர்ந்தது......நடிகர் திலகத்தின் மறைவுக்கு பிறகும் இன்று வரை இது தொடர்கிறது..............
பெருமாள் முதலியார் அவர்கள் தன் கடன் வகைகளை அடைப்பதற்காக நடிகர் திலகத்திடம் சில லட்சங்கள் கடன் வாங்கியிருந்தார்.......
இதற்காக நடிகர் திலகம் எவ்வளவோ மறுத்தும் தன் நேஷனல் தியேட்டரின் பத்திரத்தை கொடுத்தார்........... காலங்கள் மாறின....
பெருமாள் முதலியார் அவர்களும் நடிகர் திலகமும் இவ்வுலகை விட்டு மறைந்தனர்.....................
பெருமாள் முதலியார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு நாள் அன்னை இல்லம் வருகிறார்கள்........
அன்னை இல்லமே ஒன்று கூடி அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்கள்..........
உபசரிப்பில் தங்களை மறந்தவர்கள் வந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தயங்குகிறார்கள்...........
நிலைமையை புரிந்து கொண்ட ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று விஷயத்தை கேட்கிறார்கள்........
தங்களுக்கு உள்ள கடன்களை அடைக்க பணம் தேவைப்படுவதாகவும், ஏற்கனவே அய்யாவிடம் வாங்கிய கடனையே இது வரை கொடுக்க முடியவில்லை......
அதனால் எங்கள் தியேட்டரை ஒரு விலை போட்டு ,பழைய கடனை எடுத்துக் கொண்டு ஏதாவது ஒரு தொகையை தாருங்கள் என்றார்கள்......
அன்னை இல்ல இளவல்கள் அவர்களை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு, தீவிர ஆலோசனைக்கு பிறகு காரில் வெளியே சென்று திரும்புகிறார்கள்.................
நம்மை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு இரண்டு பேரும் எங்கே சென்றார்கள் என்ற பதைபதைப்புடன் பெருமாள் முதலியார் அவர்களின் குடும்பத்தார் காத்திருக்க............
அன்னை இல்ல உறுப்பினர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் படம் முன்பு கூடி நிற்க அவர்களை அழைத்து ராம்குமார் அவர்கள் இந்தாங்க உங்களுக்கு இருக்கும் கடனை அடைப்பதற்கான பணம்.........என்று கொடுக்க பிரபு அவர்கள் நேஷனல் தியேட்டரின் பத்திரத்தை அவர்களிடம் கொடுக்கிறார்....அவர்களோ பத்திரத்தை வாங்க மறுக்க, எங்க அப்பா எங்களிடம் எப்ப வந்து முதலியார் ஐயா குடும்பத்தினர் கேட்டாலும் பணம் எதுவும் வாங்காமல் இதனை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது உங்க பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார்.....
இதனை நீங்கள் பெற்றுக் கொண்டால் அப்பா ரொம்ப மகிழ்ச்சியடைவார் என்று சொல்ல கண்களில் நீர் தழும்ப அதனை பெற்றுக் கொள்கிறார்கள்.............
.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவரின் குறள் வழி வாழ்ந்த அன்னை இல்ல ஆண்டவனின் புகழ் வாழ்க.....வாழ்க.......அவர் கற்றுத் தந்த வழி வாழும் அன்னை இல்லத்தின் அன்புள்ளங்கள் அனைவரும் வாழ்க
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...03&oe=5EB31597
நன்றி Luxmanan Luxmanan