-
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை....
கலையுலகில் நடிகர்திலகத்தின்...
பல அரிய வரலாற்று சாதனைகளை மறைப்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருந்துள்ளனர்.
... ஆம்,சிவாஜி அவர்கள் நடிக்க வந்தது.... 1952...
கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இமாலய சாதனையை புரிந்தவர் நடிகர்திலகம்.
சிவாஜி அவர்கள் நடித்த கடைசி கருப்பு வெள்ளை படம் 1974ல் வெளிவந்த தாய்.
இது நடிகர்திலத்தின் 169வது படம்.
22 வருடங்களில் நடிகர்திலகம் நடித்து வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 173.
இதில் கருப்பு வெள்ளை படங்கள் மட்டும் 136.
உலகில் எந்த நடிகரும் இச்சாதனையை செய்யவில்லை.. இனியும் இச்சாதனையை முறியடிக்க வாய்ப்பே இல்லை.
136ல் 40 100 நாள் படங்கள்....7 வெள்ளிவிழா படங்கள்..எதிரிகள் மற்றும் துரோகிகளின் கூட்டத்தால்.... சொற்ப நாட்களில் 100வது நாளை எட்டாத படங்கள் 25க்கும் மேலே...
சாதரண நிகழ்வினை சாதனை என்று, திரித்து எழுதும் ஊடகங்களே...தெரிந்து கொள்ளுங்கள்.....
கலையுலகில் என்றும் அசைக்க முடியாத.... இமாலய சாதனைகளை புரிந்த கல்துாண் நடிகர்திலகம் என்று....
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...33&oe=5E4A4862
நன்றி Sundar Rajan
-
அரசியலில் பொய்யைச் சொல்லி உண்மையான தகவல்களை மறக்க செய்ய முடியுமா??
1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் சிவாஜி திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்,
அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார், ...
அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,
மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,
இதை சொல்லவேண்டிய காரணம் அன்றிலிருந்து இன்று வரையிலும் "சிவாஜி தோற்றுவிட்டார்" என அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சொல்லிக்கொள்ளவில்லை,
மாறாக
நடிகர் திலகத்தை விடவும் 11992 வாக்குகள் குறைவாக பெற்ற மூப்பனார் கோஷ்டிக் காங்கிரஸ் சிவாஜி தோற்றுவிட்டார் என அன்றைய நாட்களில் அதிக சிரமெடுத்து பிரச்சாரம் செய்தனர். தற்போது இல்லை,
இன்னமும் இன்றைய நாட்களில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் வரை உண்மை விவரங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல்
நடிகர் திலகத்தை விடவும் 12903 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்ற விவரம் தெரியாமல் ஏதேதோ உளரிக் கொண்டு வருகின்றனர்,
நன்றி Sekar Parasuram
-
மிகவும் குறுகிய நாட்களில் இரு மாநிலத்தின் முதல்வர்களால் சிலை திறப்பு விழா கொண்டாடப்பட்டது என்றால் அது எங்கள் நடிகர் திலகத்திற்கு மட்டுமே,
11-02-2006 புதுவை மாநில அரசு
21-07-2006 தமிழ் நாடு மாநில அரசு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...df&oe=5E7DCAC3https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...05&oe=5E48E8ED
நன்றி Sekar Parasuram
-
1991 வரையிலும் முதலமைச்சர் பதவியென்பதை மிகவும் அதிகாரம் கொண்டதாகவோ முதல்வராக இருப்பதால் மட்டுமே செல்வாக்கு மிக்கவர்கள் என நடிகர் திலகம் கருதவில்லை என்பது தான் உண்மை,
காரணம்
நடிகர் திலகத்தோடு அதுவரை முதல்வர் பதவிகளை வகித்தவர்களாகவும் நெருக்கமாகவும் இருந்தவர்களான கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் அணுகுமுறைகள் மிகவும் சாதாரணமாகவே அமைந்து இருந்தது, அவர்களோடு அரசியல் செய்ததில் நடிகர் திலகத்திற்கு எந்த நெருடலும் இருப்பதாக உணர்ந்ததில்லை, வெற்றி தோல்விகளைப் பற்றி சிறித...ும் கவலைப்பட்டதும் இல்லை,
பின்னர் தமிழக அரசியலில் 1991 ல் செல்வி ஜெயலலிதா முதல்வராக பதவிக்கு வந்த பிறகு நடந்த அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை மூத்த அரசியல் தலைவர்களுக்கு நேரிடையாகவே நெருடல்களை உருவாக்கும் சூழல்கள் அமைந்தன,
அதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியலில் அதிகாரம் பெற்ற பிறகு நாம் அவர்களோடு அரசியல் செய்வதோ பேசுவதோ என்பது நாகரீகமாக அமையாது என்பதை உணர்ந்து கொண்ட நடிகர் திலகம் அரசியலில் நீடிக்க விரும்பாமல் அரசியலில் இருந்து விலகுவதென முடிவெடுத்தார்,
மற்றபடி அவர் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதால் விலகினார் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,
1971 ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து ஊடக செய்திகளுமே காங்கிரஸ் வெற்றி உறுதி எனவும் பெருந்தலைவர் காமராஜர் மீண்டும் முதல்வராகிறார் என்றே உண்மை நிலையை உணர்ந்து எழுதின
அப்படி எதிர்பார்த்த தேர்தலிலேயே தோல்வியை சந்தித்த நடிகர் திலகம் சிறிதளவு கூட சோடை போகாமல் மீண்டும் மக்களை ஒன்று சேர்க்க அயராது உழைத்தார், அரசியலில் தொடர்ந்தார்,
நன்றி Sekar Parasuram
-
-
-
-
-
-