-
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம் .ஜி.ஆர் ., சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ............ Thanks.........
-
உடன் பிறவா பாச சகோதரர்கள் திருவாளர்கள் ... லோகநாதன்... மஸ்தான் சாஹிப், சுந்தரபாண்டியன் உட்பட எல்லோருக்கும் நன்றி... நக்கலாகவோ, சம்பந்தப்பட்டவர்களை களங்க படுத்தவோ பேட்டியின்போது சொன்னதாக தெரியவில்லை... கண்ணுக்கு தெரிந்த ஒரு உதாரணத்துக்கு தான் கோடிட்டு காட்டவே என எடுத்து கொள்ள வேண்டும்... இதை பெரிது படுத்தி தேவையில்லாத... நன்றி கெட்ட தனமான, மன சாட்சியே இல்லாத கருத்துக்களை சிலர் கொட்டுகிறார்கள். அது மட்டுமல்ல... பாவம், நடிகர் பிரபு தொலைக்காட்சியில் பேசும்போது யாரோ சொல்லி கொடுத்ததை அப்படியே ஒப்பிக்கிறார்.. இதிலேயே அவரவர்களின் திறமையும்? சரக்கும் என்னவென்று பலர் அறிய உதவுகிறது.. எந்த சம்பவம் எப்போது நடந்தது! என்று கூட தெரியாமல் இருக்கிறார்களே என பரிதாபமே மேலிடுகிறது.......
-
ஜனநாயக நாட்டில்
சிங்கம் வளர்த்த "மன்னாதி மன்னன்" எம் ஜி ஆர்
மேல் ஆதிக்க காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியில் இருந்து மாற்றிய வீரன் எம் ஜி ஆர்
திராவிட இனத்தை ஆள வைத்த மாவீரன் எம் ஜி ஆர்
ஊழல் அரசியல் வாதிகள் உள்ள நாட்டில் ஊழல் இல்லா முதல்வராய் ஒரு பொற்க்கால ஆட்சி தந்த இளம் சூரியன் எம் ஜி ஆர்
வீரர் அலக்ஸாண்டரை கண்டதில்லை நெப்போலியனை கண்டதில்லை கண்டோம் அன்பால் வீரத்தால் கொடையால் எவரையும் வெல்லும் உலகை வென்ற மாவீரன் எம் ஜி ஆரை
எவராலும் வெல்ல முடியாத சக்தி புகழ் கொண்ட மன்னன் எம் ஜி ஆர் புகழ் காப்போம்
வாழ்க எம். ஜி .ஆர்., புகழ்......... Thanks.........
-
எம்.ஜி.ஆர் மடியில் உரிமையோடு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா..? - https://tamil.asianetnews.com/cinema...-in-mgr-q19p5g.......... Thanks.........
-
சர்க்காரியா கமிசன் சுட்டிக்காட்டிய
திமுகவின் முக்கிய ஊழல்களில் ஒன்று , " குளோப் தியேட்டர் ஊழல் " இது என்ன புதுக்கதை ? புதுக்கதை எல்லாமில்லை ...
பழைய கதைதான் ...
சென்னை மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி அருகில் உள்ள குளோப் தியேட்டர், சிலகாலம் கழித்து அலங்கார் தியேட்டராகி இன்று ஷாப்பிங் மால் ஆக இருக்கிறது .அப்போ இது குளோப்
தியேட்டர் .இந்த இடம் வட இந்தியாவை சேர்ந்த குஷால் தாஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது .இந்த கட்டிடத்தை குஷால் தாஸ் கிட்ட இருந்து 25 வருட குத்தகை அடிப்படையில் வரதராஜ பிள்ளை என்பவர் வருடத்துக்கு ரூ 5000/- என்ற ஒப்பந்தம் அடிப்படையில் பெற்று அதில் குளோப் தியேட்டர் நடத்தி வந்தார்.தியேட்டர் மூலம் வாரத்துக்கு ரூ 8000/- வீதம் வருடத்துக்கு ரூ 4 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தார்.என்றாலும் ரூ 5000/- மட்டுமே ஆண்டிற்கு பெற்று வந்த குஷால் தாஸ் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.
குத்தகை காலம் முடிவடைந்ததும் மறு குத்தகை விடப்போவதில்லை என்றார் இட உரிமையாளர்.
வருடத்தில் எல்லா செலவும் போக சுளையாக 4 லட்சம் வருமானம் பார்த்த வரதராஜ பிள்ளை சும்மா இருப்பாரா ?
குஷால் தாஸ் & வரதராஜ பிள்ளை இருவரும் நீதிமன்றத்தில் முட்டி மோதிக்கொண்டனர் ...
நீதிமன்ற தீர்ப்பு இட உரிமையாளர்
குஷால் தாஸ்க்கு சாதகமாக வருகிறது .
6 வார காலத்தில் இடத்தை காலி செய்து உரிமையாளர் கிட்ட இடத்தை ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டது கோர்ட்.வரதராஜ பிள்ளை முரசொலி மாறன் கிட்ட போய் கண்ணை கசக்கி கொண்டு நின்றார்.
அவர் உள்ளாட்சி துறை அமைச்சர்
ப.உ.ச அவரை பார்க்கச்சொன்னார்.
ப.உ.ச வரதராஜ பிள்ளையிடம் இதற்கு ஒரேதீர்வு சட்டமன்றத் தில் குத்தகைக்காரனு க்கேஇடம் சொந்தம் என்று அவசர சட்டம் போடணும் .முதல்வர் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அதுக்கு ஒரு லட்சம் செலவாகும் என கூறுகிறார் .வரதராஜ பிள்ளை முன்பணமாக
ரூ 30000 /- ப.உ.ச கிட்ட கொடுக்கிறார்.பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கருணாநிதி கிட்ட அழைத்துச்சென் றார்.ஒரு லட்சம் கேட்கிறார் கருணாநிதி.
ப.உ.ச கிட்ட கொடுத்த ரூ 30,000/- மேலும் கருணாநிதி கிட்ட மேலும் ஒரு 30,000 /- ஆக ரூ 60,000/- முன்பணமாக கொடுக்கப்படுகிறது.
மீதியை பின்னர் கொடுப்பதாக வாக்குறுதிகொடுக்கிறார் வரதராஜ
பிள்ளை குத்தகை சட்டம் திருத்தப்பட்டு நீண்டகால குத்தகை யில் இருப்பவர்களுக்கு நிலம் உரிமை என்ற அவசர சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேற்றி யது.கோர்ட் 6 வார காலத்தில் நிலத்தை உரிமையாளர் கிட்ட ஒப்படைக்க சொல்லி தீர்ப்பளித்துள்ளதால் அவசர சட்டம் அதற்குள் நிறைவேற வேண்டுமானால் ஜனாதிபதி கையொப்பமிட்டால் மட்டுமே செல்லுபடியாகும் .
அதற்காக சட்டமன்ற அவசர சட்ட
தீர்மானம் பிளைட்டில் டில்லிக்கு
கொண்டு செல்லப்படுகிறது ...
" செத்தவன் சாமான் சுமப்பவன் தலைமேலே " என்பதுபோல் பயனாளி வரதராஜ பிள்ளை அச்செலவை ஏற்றுக்கொள்கிறார் ....
ஓரிருநாளில் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று
அவசர சட்டம் அமலுக்கு வந்து வரதராஜ
பிள்ளை இடத்தின் உரிமையாளராகி விடுகிறார் .மவுண்ட் ரோடு சொத்து வரதராஜ
பிள்ளைக்கு உரிமையாகி விடுகிறது .சர்க்காரியா கமிசன் குற்றச்சாட்டு களில் குளோப் தியேட்டர் குற்றச்சாட்டு பிரதானமானது.!!! ......மக்கள் திலகம் சாதாரண மக்களின் மனதில் வாழ்ந்து, சாமர்த்தியமான அரசியல் வாதியை அல்லவா வென்று, சரித்திரம் படைத்திருக்கிறார்கள்...
Shared
நன்றி.
Rambadran Sir......... Thanks...
-
-
வரும் 29-11-2019 முதல் அட்டகாசமான துவக்கம்...மதுரை - சென்ட்ரல் சினிமா dts., தினசரி 4 காட்சிகள்... திரையுலக அசல் அஃக் மார்க் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும்........."ராமன் தேடிய சீதை" , குளு, குளு கலர்புல் காவியம் வருகை.........
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#தொழிற்கல்வியின் #அவசியம்...
இளைஞர்கள் படிக்கவேண்டும்...
கல்வி கற்கவேண்டும்...
அதிலும் தொழிற்கல்வி மிக மிக அவசியம்...
புரட்சித்தலைவர் வாத்தியாரின் அற்புதமான இந்தக் காணொளியைப் பார்த்து மகிழுங்கள்...
https://m.facebook.com/story.php?sto...fRHcu9wMgbmyEx............ Thanks.........
-
ஒரு கேள்வி பதில் 1972.........
அண்ணா தி.மு.க வின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
எம்.ஜி.ஆரி.ன் செல்வாக்கு பிரமாண்டமானது..... பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடான கோடிக்கணக்கான மக்கள் எம்.ஜி.யாருக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். சாதாரண மக்கள் கூட்டத்தை திசைதிருப்புவதற்கு ஒரு திறமையான தலைவனுக்கு அதிக காலம் எடுக்காது.
தமக்கு ஆதரவாக உள்ள லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான, மக்களை தமது கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர். ரால் முடியுமானால் அவருடைய கொடி நிச்சயமாக உயரப் பறக்கும்..... உயர பறந்துகொண்டே இருக்கும்........... Thanks.........
[கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்]
-
ஒரு கேள்வி பதில் [1972]:.........
எம்.ஜி.ஆரின் விலாசத்தை அறியத் தருவீர்களா?
எம்.ஜி.ஆருக்கு விலாசமா?! அவருடைய விலாசம்தான் தமிழ் பேசுமிடமெல்லாம் பரந்து விரிந்து இருக்கிறதே!.......... Thanks........
எம்.ஜி.ஆர், தமிழ் நாடு, இந்தியா என்று எழுதினால் போதும்.
-
பேரறிஞர் அண்ணா !
************************
புரட்சி நடிகர் MGR ரைப்பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வதற்கு சமம் உண்மை தானே !
முல்லைக்கு மனம் உண்டு என்பதை கூறவா வேண்டும் !!
எம் ஜி ஆர் நடிக மணிகளிலே வீரர் !
விவேகம் நிரம்பிய தோழர் !!
இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடைய அறிவியக்கவாதி !
இரக்கவாதி !!
இது தானே பேரறிஞர் அண்ணா வின் சேதி !
அனல் M. அமரநாதன் B.Sc,........... Thanks.........
-
-
-
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,
ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !
ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு பின்னால்
நிறைய அவமானங்கள்தான் இருக்கின்றன.
அந்த மனிதன் - “எம்.ஜி.ஆர்.”
“நாடோடி மன்னன்”
– இது எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம்.
திரும்ப திரும்ப ஒரே காட்சியை படமாக்குகிறார் எம்.ஜி.ஆர்.
காரணம் , அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக !
ஆனால் இதைக் கண்டு ,
ஆத்திரம் கொண்ட கதாநாயகி பானுமதி ,
படப்பிடிப்புத் தளத்தில் , பலர் முன்னிலையில் எம்.ஜி.ஆரை அழைக்கிறார் இப்படி:
“மிஸ்டர் ராமச்சந்திரன்!"
திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.
பானுமதி படபடவென்று பொரிந்து தள்ளுகிறார் :
"ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன்.
நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல. நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க . முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க.
இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி .”
அத்தனை பேர் மத்தியிலும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி விட்டு அங்கிருந்து போய் விட்டார் பானுமதி .
ஆனால் , எம்.ஜி.ஆர். ஆத்திரம் அடையவில்லை ; அவமானம் கொள்ளவில்லை.
பானுமதி கதாபாத்திரத்தை பாதியிலேயே இறப்பது போல மாற்றி விட்டு , சரோஜா தேவியை வைத்து “நாடோடி மன்னன்” படத்தை தொடர்ந்து எடுத்து , அதை வெற்றிப் படமாகவும் ஆக்கிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.
சரி , பலர் முன்னிலையில் தன்னை பரிகாசம் செய்து அவமானப்படுத்திய பானுமதியை , பதிலுக்கு பதிலாக எப்படி பழி வாங்கினார் ?
எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் அல்லவா ?
25 ஆண்டுகள் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். !
அவர் தமிழக முதல்வராக ஆனபின் -
பானுமதியின் மீதுள்ள பகையை எப்படி தீர்த்துக் கொண்டார் எம்ஜிஆர் ?
1983 இல் “கலைமாமணி” விருதை பானுமதிக்கு வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர்.
அது மட்டுமா ?
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை அமர வைத்தும் அழகு பார்த்தார்.
அவமானப்படுத்தியவருக்கு இத்தனை
வெகுமானங்களா ?
ஆச்சரியமாக இருக்கிறது!
இப்படி ஒரு தெய்வீக குணம் நமக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது.
குணம் வருகிறதோ இல்லையோ ,
ஒரு குறள் நினைவுக்கு வருகிறது .
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”
“தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்;
பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.” .......... Thanks.........
-
இந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காவிய
திரைப்படங்கள் விபரம்...
----------------------------------------
சென்னை - பாலாஜி DTS.,
"தாய்க்கு தலை மகன்",
தினசரி 2 காட்சிகள்
மேட்னி/இரவு காட்சிகள்
மதுரை- ராம் dts., அரங்கில்
"நினைத்ததை முடிப்பவன் " டிஜிட்டல்
தினசரி 3 காட்சிகள்
கோவை- டிலைட் dts.,
உழைக்கும் கரங்கள்
தினசரி 2 காட்சிகள்............ Thanks.........
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார்.
இப்போதும் கூட ‘ சோ அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவ தாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர்.
ஆனால்,
‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ,
அதற்கு சொல்லும் காரணம்,
‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார்.
‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன்..."
திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது.
சோவின் கேள்வி இது....
‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’............ Thanks.. ..........
-
1976 ஜனவரி இறுதியில் அன்றைய தமிழக அரசு கலைக்கப்பட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மைசூர்
நகரில் '' நீதிக்கு தலை வணங்கு '' படபிடிப்பில் இருந்தார்.
02.02.1976 அன்று பெங்களுர் நகருக்கு வந்த மக்கள் திலகம் அவர்கள்
நேரமின்மையால் 03.02.1976 அன்று பெங்களுர் நகரில் அறிஞர் அண்ணா அவர்களின்
7வது நினைவு ஆண்டு அனுசரிக்க முடிவு செய்து அன்று இரவு
முடிவு செய்து பெங்களுர் நிர்வாகிகளுக்கு தகவல் கூறினார் .
இரவோடு இரவாக வாய் மொழி மூலமும் , மிதி வண்டி மூலமும் முக்கியமான மன்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது .
03.02.1976 காலை 8மணியளவில் பெங்களூர் - சிவாஜி நகர்
லாவண்யா அரங்கின் அருகில் கிறிஸ்தவ ஆலய மைதானத்தில் அனுமதி பெற்று நினவு அஞ்சலி நிகழ்ச்சி
துவங்குவதற்கு முன் மக்கள் திலகம் சரியாக 8 மணிக்கு வந்து சேர்ந்தார் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக தொண்டர்களும் யாருமே
எதிர் பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கில் குவிந்து நினைவு
நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாது
மைதானத்தில் மக்கள் வெள்ளம் . மரங்கள் மீதும் , கட்டடங்கள் மீதும் மக்கள் அமர்ந்திருந்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் சரியாக 3 நிமிடம் பேசிவிட்டு
பின்னர் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்
படபிடிப்புக்கு திரும்பினார் ......... Thanks...
-
#எம்.ஜி.ஆர்.,--- ரசிகர்கள் ஏன் மற்ற நடிகர் படங்களை விரும்பறதில்ல?...
இதோ ஒரு உண்மையான ரசிகரின் பதில்...
உலகில் பிறக்கும் கோடிக்கணக்கான பேர்களில் ஒரு சிலரே வரலாற்றில் தங்கள் பெயரை பதித்துவிட்டுச் செல்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களால் இதயதெய்வம் என போற்றப்படுபவர் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்., திரை உலகிலும் மன்னர்.......சக்கரவர்த்தி...........
அரசியல் உலகிலும் சூப்பர் ஸ்டார். இது அவர் வாழ்ந்த காலத்தில்....
இன்று எம்ஜிஆரை முன்னாள் நடிகர், முன்னாள் முதல்வர் என போகிற போக்கில் சொல்லிவிட்டு போகமுடியுமா?
சில மாதங்களுக்கு முன்........
#"ரிக்சாக்காரன்", படம். 11 மாதத்தில் 4 வது முறை கோவை - ராயல் திரையரங்கில்..........
"இப்படி எங்களை அனாதையாக்கிட்டுப் போயிட்டியே தலைவா'"என்ற ஏக்கத்துடன் திரண்டு நிற்கிறார்கள்... எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்கள்.....
""எத்தனை படங்கள் வந்தாலும் பெட்டிக்குள் முடங்கிவிடும்.எம் தலைவர் படம் 48 வருசமா ஓடிக்கிட்டே இருக்கு பாத்தியா என ஒரு ரசிகர் பெருமிதத்தின் உச்சிக்கே செல்கிறார்.
தலைவர் படத்த தவிர வேற எந்த படமும் பாக்கறதில்லங்க.
பாத்த படத்தையே பாத்தாலும் மறுபடி புதுசா பாக்கறமாதறதான் இருக்கு.
அலுக்கவே இல்ல.
இந்த மாதிரி தலைவரின் எல்லாப் படங்களையும் புதுப்பிக்கணும்.
தலைவர் படத்தில் எல்லா விசயங்களையும் நிறைவு செய்துவிட்டார். இயல்பான தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்தியதால் 1971 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.சண்டைக் காட்சிகளில் தனி முத்திரைப் பதித்தார். குறிப்பாக சுருள் பட்டைக் கத்தி சண்டைக் காட்சி தலைவருக்கு முன்பும் இன்றுவரையும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை.ரிக்சாவில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு ஒற்றைக் கையாலே சிலம்பம் சுற்றி நடித்த ஸ்டைல்...ரிக்சாவை பின்னோக்கி ஓட்டி வட்டமடித்து வரும் ஸ்டைல்...இப்படி எண்ணற்ற சாகசங்களை நிகழ்த்தி காட்டியவர்.
பாடலில் பள்ளிக்கூடமே நடத்தியவர்.
கதை அமைப்பிலும் பண்பாடு கலாச்சாரம் காத்தவர். கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு , காத்தவர்......
இன்னிக்கு இந்த மாதிரி யாரு காமிக்கறா? பெத்த தகப்பனையே கேவலமா பேசறானுக.
அத பாத்து நெசத்துலயும் அவனுக ரசிகனுக பண்றானுவ. சினிமாங்கறது படு கேவலமா போச்சு.சம்பாரிக்கவா தலைவர் சினிமாவுக்கு வந்தாரு?..
ஏதாவது நல்ல சேதி சொல்லனும்.சனங்களுக்கு நல்ல கருத்து சொல்லனும், நாலு பேருக்கு உதவனும் இதான் தலைவர்.
இதைத் தாண்டி வேறொரு அதிசயத்தைக் காட்டும் ஒரு நடிகர் உண்டென்றால் சொல்லுங்கள்...நான் அவருக்கு ரசிகராகிறேன்' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு ஈடாக எந்த நடிகரை காட்டுவது??
மக்களுக்கு நல்ல கருத்துள்ள படம் எங்க போய் தேடுவது?
பதில் எங்கிட்ட இல்லாததால் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
ரசிகர்களை எம்ஜிஆர் எவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருந்தாரோ.
ரசிகர்களும் அதே மாதிரி அவரை புரிந்து கொண்டுள்ளனர்..
இது போன்ற உண்மையான நேசமுள்ள ரசிகர்கள் இருக்கும் வரை எம்ஜிஆரின் புகழ் மங்காது மறையாது.....
மீண்டும் அடுத்த பதிவில்........ Thanks..........
-
-
-
-
-
-
-
-
-
சூப்பர்ஸானிக் ஹீரோவின் சூப்பர்ஹிட் ஃபிலிம்
குலேபகாவலி
[29.7.1955 - 29.7.2013] : 59வது ஆண்டு துவக்கம்
சீர்மேவும் சென்னையின் சீரான புள்ளிவிவரம்
COMMERCIAL CLASSIC என்கின்ற அந்தஸ்தில் கண்ணியத்தோடு போற்றப்படும் கலையுலக கனவானின் "குலேபகாவலி" முதல் வெளியீட்டில், 29.7.1955 வெள்ளியன்று சென்னையில் கெயிட்டி, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி ஆகிய நான்கு திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
சென்னை 'கெயிட்டி'யில் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 நாட்கள் வெற்றிமுரசு கொட்டியது. 14.10.1955 வெள்ளியன்று 'கெயிட்டி'யில் "அனார்க்கலி" மொழிமாற்று[டப்பிங்] திரைப்படம் வெளியானது.
இதே போல 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கிலும் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 அபார வெற்றி நாட்கள். 14.10.1955 வெள்ளியன்று 'ஸ்ரீகிருஷ்ணா'வில், ஜெமினி-சாவித்திரி இணைந்து நடித்த "மாமன் மகள்" திரைப்படம் வெளியானது.
'உமா'வில் 29.7.1955 தொடங்கி 29.9.1955 முடிய 63 வளமான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று 'உமா'வில் "ஷாஹி மெஹ்மான்" என்ற ஹிந்தித் திரைப்படம் வெளியானது.
அதே போல 'ராஜகுமாரி'யிலும் 29.7.1955 அன்று ஆரம்பித்து 29.9.1955 முடிய 63 வனப்பான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று இந்த அரங்கில் 'குரு தத்'தின் "Mrs. & Mr. 1955", ஹிந்தித் திரைப்படம் வெளியானது.
ஆக, குணக்குன்றாகக் கோலோச்சியவரின் "குலேபகாவலி", முதல் வெளியீட்டில், சிங்காரச் சென்னையில் ஓடிய நாட்கள் மிகச் சரியாக:
கெயிட்டி - 77 நாட்கள்
ஸ்ரீகிருஷ்ணா - 77 நாட்கள்
உமா - 63 நாட்கள்
ராஜகுமாரி - 63 நாட்கள்
மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் மிகமிக வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ்-ஆபீஸில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கிய COMMERCIAL CLASSIC, "குலேபகாவலி"............ Thanks.........
-
அறிந்த தகவல் அறியாத செய்தி
புதிய தொடர் எழுவதற்கு முன் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். பாசம் படத்தில் வரும் ஒரு வசனம் இந்த உலகத்தில் நாம் எதை விரும்புகிறமோ. அது நமக்கு கிடைப்பதில்லை. .எதை ஒதுக்கிறமோ. அது நமது காலடியில் இருக்கும். .இது எந்தளவுக்கு உண்மை என்று, நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரவர் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். .வட இந்திய பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் அகில இந்தியா அறிந்த சிறந்த பின்னனி பாடகி பல விருதுகளை குவித்தவர் இது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது. . வட இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் .பல தலைவர்கள் லதா மங்கேஷ்கர் தான் அகில இந்தியாவிலேயே சிறந்த பாடகியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏன் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .ஆனால் வாத்தியார் மட்டும் அதற்கு ஒப்புதல் தரவில்லை காரணம். தமிழகத்தில் உள்ள P. சுசீலா தான் என்னைப் பொருத்தவரைக்கும் சிறந்த பாடகி. தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பாடகர் இருக்கும் போது வடமாநிலத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் எப்பவும் சுசீலா ரசிகர் லதா மங்கேஷ்கர் நல்ல பாடகிதான் அதற்காக சுசீலா விட சிறந்தவர் என்பது ஏற்றுக் கொள்ள வில்லை என்றார், வாத்தியாரின் கருத்துக்கள் அறிந்த பின் தமிழ் நாட்டில் கருத்து தெரிவித்தார்கள் தலை குனிந்தனர். .....
அதேப்போல் P. சுசீலா அவர்கள் தனது 70 வது வயதில் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கினார். . அந்த அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவும் சுசீலாவின் 75 . ம் ஆண்டு பவள விழா சேர்ந்து ஜெயா டிவி சிறப்பாக நடத்தியது. அதில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் பல தலைவர்களும் சுசீலாவை வாழ்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்கள் அப்போது தந்த தகவல்தான் நான் மேலே குறிப்பிட்டது.
அனைவரும் சுசீலாவை வாழ்த்தினர் பாராட்டினர் புகழ்ந்தனர் போற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் கடைசி நாளன்று P. சுசீலா அவர்கள் கூறினார்கள். ...
இன்று நான் அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்கிறேன் என்றால், அந்த எண்ணம் செயலும் நமக்கு வசதி வாய்ப்பு வாழ்க்கை அமைந்த பிறகு நமக்கு தேவையானது சேர்த்த பிறகு நமது தேவைக்கு அதிகமாக சேர்ந்த பிறகுதான் இந்த எண்ணம் நமக்குள் எழுந்துள்ளது என எண்ணி வருத்தம் அடைகிறேன். .காரணம்
பிறருக்காக வாழும் போதும் பிறர்க்கு உதவி செய்யும் போதும். அதன் மூலம் பிறர் அடையும் பலனும். சந்தோஷம் மகிழ்ச்சியும் அவர்கள் நம்மை மனதார வாழ்த்தும் போதும். மனம் அமைதி பெறுகிறது சாந்தம் அடைகிறது. இதை ஆரம்பத்தில் செய்யாதை எண்ணி வருத்தம் அளிக்கிறது. . இப்போது தான் எனக்கு புரிகிறது அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பேர் புகழுக்காக தர்மம் செய்ய வில்லை. அதிலே கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. பிறர்க்கு உதவிசெய்யும் போது மனம் மகிழ்ந்து செய்கிறார். கொடுப்பதில் சந்தோஷம் கண்டவர். இருக்கும் போது வசதி வந்த பிறகு செய்வது வள்ளல்தனம் அல்ல அது பிறவிலே வரணும். . அண்ணன் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே அந்த குணம் இருந்தது. அதனால் தான் அவர்க்குகொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது.
இன்று வரை அவர் பேர் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது காரணம் அவரது வள்ளல் குணம் தான். .நீங்களும் உங்கள் தேவைக்கு அதிகமாக இஇருந்ததால் பிறர்க்கு உதவி மகிழ்ச்சி கொள்ளுங்கள். .என்றார். ........... Thanks........
-
மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து ரசிகராக - பின்னர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவராக பணியாற்றி
பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுத்து
1980ல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பெருமைக்குரியவர்
திரு குண்டுராவ் அவர்கள் ஒரு முறை கூறிய பேட்டி
''1951ல் சர்வதிகாரி படத்தை பார்த்து எம்ஜிஆர் ரசிகனானேன் .
பின்னர் மைசூர் -குடகு பகுதியில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கி
அவரது எல்லா படங்களையும் பல முறை பார்த்து அவருடய
தீவிர ரசிகனாக மாறினேன் .
அவரது நடிப்பு - பாடல்கள் - சுறுசுறுப்பு - எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது . அவருடைய படங்களை பார்த்த பின்தான்
அரசியலில் ஈடு பட வேண்டும் என்று எண்ணம் தோன்றி
இன்று ஒரு மாநில முதல்வராக அமர்வதற்கு முழு காரணம்
மக்கள் திலகம் என்று கூறியுள்ளார் .
1970களில் மக்கள் திலகம் படங்கள் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்த நேரத்தில் திரு குண்டுராவ் பல ஒத்துழைப்பு
கொடுத்துள்ளார் .
மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்கள் திலகம் அவர்கள் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த திரு குண்டுராவை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து கௌரவ
படுத்தினார் ........... Thanks........