-
திரையுலகம் என்னும் தேரில் உண்மையின் இயற்கை நாயகனாக பவனி வரும் வரலாற்று பெருமகன் மூடிசூடா மாமன்னன் நிகரான வசூலை எல்லா கால கட்டத்திலும் தான் பங்கு கொண்டு வெள்ளித்திரையில் பவனி வந்துக் கொண்டு வரும் காலத்தை வென்று பயனுள்ள கருத்துமிகு காவியங்களை தந்த, உலக திரைவானில் இன்றும் தன்னுடைய காவியம் மூலம் நல்ல மனிதர்களை, நல்ல எதிர்கால தலை முறைகளை உருவாக்க கூடிய படைப்புகளை தந்த மகான், மனிதநேயர், மக்கள் புனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரையுலக சகாப்தத்தில் எத்தனையே மனிதநேய செயல்கள்... வரலாறு காணாத வகையில் நிரம்பியுள்ளது. அப்பெரும் சரித்திரங்களை பேச, எழுத, உரையாட வருடங்கள் போதாது.... அப்படிப்பட்ட மானிடப்பிறப்பின் மாமனிதரை..
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றி மக்களுக்காக திரைப்படத்துறையில் தோன்றி , தமிழ் நாட்டு மக்களின் குறை தீர்க்கும் பகலவனாக. வந்து... மக்களின் பேராதவுடன், நிறைந்த புகழுடன் , மறைந்த புண்ணியத் தலைவரை..அந்த மனிதநேய செம்மல் இருக்கும் வரை அவரை வணங்கியவர்கள்.... அவர் வழியில் தான் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் தோன்ற வேண்டும் என சொன்னவர்கள்..... சொன்னவரை நேசிக்கும் பிள்ளைகள்.. சொன்னவரின் முன்னோர்களை கொஞ்சைப் படுத்துவதில் பெருமை கொள்கின்றார்கள் என்றால்..... உன் பிறப்பு வளர்ப்பு எப்படி .... பிறறை பிடிக்கவில்லை என்றால் நாம் ஒதுங்கி போவது தான் நல்லதை தவிர... அவர்களை கேவலமாக பேசுவதால்.... உன் பிறப்பு ஒரு கரும் புள்ளியாக.... பல பேர் உன்னை சபீக்கும் முறை.... உன் வருங்கால தலைமுறை பாதிக்கும் அளவுக்கு கொண்டு போய் சேர்த்து விடும்... வள்ளல் பணி மூலம் இறைப்பணி செய்த தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். என்னும் மகானை எவர் ஒருவர் தன்னிலை மறந்து தவறாக பேசிகின்றரோ... அவர்களின் வாழ்வு தலை முறை .....தலை முறையாக துன்பங்கள்...., சூறாவளி போல் சுழலும்...மூன்றெழுத்து நாமம் போற்றி வழிபடுபவர்களுக்கு மட்டுமே நன்மையும், நலமும், நல்ல எண்ணங்கள் குடும்பத்தில் பிறக்கும்..... ' திருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் இருந்தென்ன லாபம்..... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லிக்கொண்டு வாழும் தெய்வமாக வாழும் வள்ளலின் வழியில் நாமும்..... ஊர் சொல்லும் படி நாம் மேலும் புகழ் பாடுவோம். புகழ் சேர்ப்போம்..... உரிமைக்குரல் ராஜு............ Thanks...
-
தங்கத்தலைவரின் திரையுலக சாதனைகள் ஆயிரமாயிரம் பூத்துக் கொண்டு மலர்கிறது.... தலைவரின் நான்கு தொடர் காவிங்களான அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் ....சென்னையில்... 12 அரங்கில் 100 நாளை கடந்தது... ஒடிய அரங்கு மட்டும் 10 ஆகும். இதுப்போல் எவருக்கும் தொடர் சாதனை அரங்கு கிடையாது. மிட்லண்ட் ( 2 படம்) கிருஷ்ணா ( 2 படம்) மேகலா, நூர்ஜகான், சித்ரா, சரவணா, பிளாசா, பிராட்வே, கிருஷ்ணவேணி, சயானி .... ஒரு நடிகருக்கு மூன்று அரங்கு (சாந்தி, புவநெஸ்வரி, கிரெளன் ) மட்டும் தான்... உரிமைக்குரல் ராஜு......... Thanks...
-
1966 ல் மக்கள் திலகத்தின் 3 படங்கள் அன்பே வா, பெற்றால் தான் பிள்ளையா, முகராசி படங்கள் வெவ்வேறு அரங்கில் நிகரற்ற மகத்தான சாதனைகள் ஆகும். அன்பே வா... காஸினே 154 நாள், கிருஷ்ணா 147 நாள், மேகலா 119 நாள்அடுத்து.... பெற்றால் தான் பிள்ளையா ஸ்டார் 100, மகாராணி 100, நூர்ஜகான் 84, உமா 80 அடுத்து முகராசி கெயீட்டி 100, பிரபாத் 56, சரஸ்வதி 56 மூன்று படங்கள் 10 அரங்கில் 56 நாள், 8 அரங்கில் 80 நாள், 6 அரங்கில் 100 நாள்,2 அரங்கில் 147 நாள். ஒரு அரங்கில் 154 நாள். ஆறு திரையரங்கில் 100 நாளை சாதனையாக நிகழ்த்தியுள்ளார். 1966 தலைவரின் 9 படங்கள் ஒடியது போல் எந்த ஆண்டும் எந்த நடிகரின் படங்களும் அதிக அளவில் 50 நாட்களை கண்டதில்லை... 8 படங்கள் மட்டும் திரையிட்ட 27 அரங்கிலும் 50 நாட்கள் ஒடி சாதனையாகும். உரிமைக்குரல் ராஜு......... Thanks.........
-
வேலூர் ரத்னகிரி லக்ஸ் வேல் dts வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகரின் காவியங்கள்... " எங்க வீட்டுப்பிள்ளை", 2 காட்சிகள் "நினைத்ததை முடிப்பவன்" 2 காட்சிகள் 10-10- 2019 முதல் புதிய பொலிவுடன் இந்த திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது......... Thanks Vellore Ramamurthy...
-
திருச்சி - முருகன் DTS., திரையரங்கில் புரட்சிதலைவர் புரட்சிதலைவி இணைந்துள்ள "ஆயிரத்தில் ஒருவன்" விழாவில் 5000 வாலாசரவடி படம்பார்க்கவந்தவர்களுக்கு லட்டுவழங்கபட்டது திருச்சி மாவட்ட மனித தெய்வம் *ஸ்ரீ எம்.ஜி.ஆர்* பக்தர்கள் குழு சார்பில் சிந்தாமணி *K.கிருஷ்ணன்* அருகில் கல்லுகுழி டி செல்வராஜ் டிபன் கடை T.ரவிச்சந்திரன், பட்டாணி S.குமார்,M. ரமேஸ் அரியமங்கலம் முகம்மது ரபிக் உறையூர் சீனி பி முனியன். பாரதியாதெரு சந்திரசேகர் இபி ரோடு முருகேசன் மனிததெய்வம் ஸ்ரீஎம்ஜிஆர்.பக்தர்கள் குழு.......... Thanks...........
-
-
ரிலாக்ஸ் பாடல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம்.
சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.
கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.
பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்
ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.
எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...
நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.
கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.
விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.
'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,
ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.
இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.
'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'
'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'
அடேயப்பா! என்ன வரிகள்!
அடுத்த வரி டாப்.
தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,
'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)
மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.
அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,
எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,
'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்'
என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.
எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,
'படார் படார் படார்
படார் படார் படார்'
என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,
எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,
'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
படார் படார் படார்
படார் படார் படார்'
என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.
'படார் படார் படார்
படார் படார் படார்
எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...
(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)
இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'
என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,
'நிப்பாட்டு'
என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.
'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.
நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)
தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.
'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்'
எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!
நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.
'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.
'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'
இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.
'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'
மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,
இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,
இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.
ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.
'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'
என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!
'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'
எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.
'லவ்லி பியூட்டி கமான் சார்!'
எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்
'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'
என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)
அப்படியே இசை மாறும்.
ஈஸ்வரி,
'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'
எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)
பதிலுக்கு எம்.ஜி.ஆர்,
'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'
இப்போது மேடம் டர்ன்.
'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'
(அப்படிப் போடு அருவாள!)
எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.
'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'
ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.
'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'
(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)
இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.
'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'
மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.
'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே
வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே
யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.
அப்பாடா!
பாடல் முடிவடையும்.
எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.
பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.
எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.
எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.
பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.
'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'
வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார். 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!
நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.......... Thanks.........
-
-
-
-
-
-
ஹீரோ 1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு 1971ல் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் '' ரிக் ஷாக்காரன் '' படத்திற்காக 1972ல் கிடைத்தது . உலகமெங்கும் வாழும் மக்கள்; திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள் .தென்னிந்திய நடிகர் சங்கம் , பல்வேறு கலைத்துறையை சார்ந்த அமைப்புகள் , திமுக இயக்கம் , எம்ஜிஆர் மன்றங்கள் என்று எம்ஜிஆருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் . எம்ஜிஆரின் புகழ் இமயத்தின் உச்சிக்கே சென்று விட்டது .
1972ல் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள்.
சங்கே முழங்கு
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
இதய வீணை
நல்ல நேரம் சென்னை நகரில் சித்ரா , மகாராணி , மேகலா , ராம் நான்கு அரங்கில் 100 நாட்கள் ஓடிய பெருமை பெற்றது .
இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது .
ராமன் தேடிய சீதை இலங்கை கொழும்பு நகரில் 100 நாட்கள் ஓடியது .
இதய வீணை
சென்னை மதுரை திருச்சி நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது .
சங்கே முழங்கு , நான் ஏன் பிறந்தேன் அன்னமிட்டகை படங்கள் வணீக ரீதியில் வெற்றி கண்டது .
1972ல் எம்ஜிஆர் சுமார் 15 புது படங்களில் நடித்து கொண்டு வந்தார் .
எம்ஜிஆர் மன்றங்கள் மிகவும் துடிப்புடன் செயல் பட்டு கொண்டு வந்தார்கள் .
1972ல் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' ஆனார் .
அரசியலில் உருவான எம்ஜிஆர் புயல் நாடெங்கும் அதிர்வு அலை உண்டாக்கியது . மக்கள் செல்வாக்கும் ஏகோபித்த எம்ஜிஆர் ரசிகர்களும் இணைந்து எம்ஜிஆரை அண்ணா திமுக என்ற பேரியக்கத்தை மையப்படுத்தி சினிமா மற்றும் அரசியலில் ஹீரோ 1972 என்று இரட்டை இலை விருந்தை துவக்கி வைத்தார்கள் .
47 ஆண்டுகள் கடந்தாலும் எம்ஜிஆரின் திரை உலக புகழும் அரசியல் நிரந்தர ஒட்டு வங்கியும் எம்ஜிஆர் ஆட்சியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது என்றாலும் 1972 ஆண்டு தந்த வெற்றிபடிக்கட்டுகள் இன்னமும் பசுமையாக உள்ளது ............. Thanks........
-
மாற்று முகாம் பதிவாளர்கள் தங்கள் திரியை தாங்கள் படிக்கவே மாட்டார்கள் போல இருக்கின்றது.
நாம் மோசமாக எழுதுகின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் எதற்காக அப்படி கடுமையாக சொல்ல வேண்டி வந்தது என்பது அவர்களுக்கு தெரியாதா? அவர்கள் திரியை படிக்கவில்லையா.
நாம் ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டி இருந்தது என்பதை திரியின் நெரியாளர்களுக்கும் பதிவாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.
தங்களுக்கு அப்படி எல்லாம் மோசமாக எழுத வராது என்கின்றார்கள். ஆனால், அவர்கள் திரியில்
பாகம் 21 -- பக்கம் 21 ---- பதிவு எண் --201
மற்றும்
பாகம் 21 -- பக்கம் 27 ---- பதிவு எண் --268
ஆகிய இரண்டு பதிவுகளை எல்லாரும் பார்த்து படிக்கவும். நம்மை குற்றம் சாட்டுகின்ற பதிவாளர்களும் படிக்கவும்.
இது எல்லாம் தரமானதா.. கேவலமானது இல்லையா.
அட... எங்களைப் பற்றி சொன்னால் கூட பரவாயில்லை. பொறுத்துக் கொள்வோம்.
ஆனால், எத்தனயோ ஏழைகளின் மற்றும் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் பசியை தீர்த்த வள்ளல் புரட்சித் தலைவரைப் பற்றி என்னவெல்லாம் மேற்சொன்ன பதிவுகளில் இருக்கிறது என்று பாருங்கள்.
நடுநிலையாளர்கள் படிச்சு விட்டு இதெல்லாம் நியாயமா? என்று யோசித்துப் பாருங்கள்.
அதற்குத்தான் நாங்களும் கடுமையாக பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
திருப்பியும் மக்கள் திலகம் எங்களுக்கு அப்பிடி போதனை செய்தார் என்று கூசாமல் சொல்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் நடிகர்தான் அவர்களுக்கு இப்படி எல்லாம் மோசமாக எழுத போதித்து இருக்கிறார். 1977 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவரும் கருணாநிதியும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டது எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே நம் திரியிலும் பதிவு போட்டுள்ளோம். அதே பாணியில் அவரது ரசிகர்களும் எழுதுகின்றார்கள்.
புரட்சித் தலைவர் தன் அரசியல் வாழ்க்கையில் யாரையும் தரக்குறைவா பேசியது இல்லை. திரைப்படங்களிலும் ஒருபடத்தில் கூட மோசமான வசனங்களை பேசியது இல்லை.
எங்களுக்கு நல்லவற்றைத்தான் புரட்சித் தலைவர் கற்றுக் கொடுத்தார்.
அவரையே மோசமாக எழுதியதால்தான் நாங்களும் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்ல வேண்டி வந்துவிட்டது என்பதை எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சித் தலைவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து நடந்து அவரது புகழ் பரப்புவோம்.
-
நண்பர் லோக நாதன் அவர்களே,
முன்ன எல்லாம் புரட்சித் தலைவர் பற்றின நிறய பத்திரிகை செய்திகள், படங்கள் போடுவீர்கள். நாங்கள் தெரிந்துகொள்வோம். இப்பவும் பத்திரிககளில் புரட்சித் தலைவர் பற்றி செய்திகள் வருகின்றன. படங்கள் தியேட்டரில் வருகின்றன. ஏன் அதுபற்றி படங்களோடும், பத்திரிகை நகல்களயும் பதிவிடுவது இல்லை.
வாயால் சொல்வதை விட உங்கள் பணி ஆதாரத்தோடு படங்களோடு, பத்திரிகை நகல்களோடு இருக்கும். உங்கள் பணி தொடர வேண்டும்.
நன்றி நண்பா.
-
நாங்கள் எப்படி எல்லாம் எங்கள் அபிமான நடிகருக்கு துரோகங்கள் செய்தோம் தெரியுமா ?...
எங்கள் அபிமான நடிகர் உயிர் கொடுத்து நடித்த ஒரு தேசிய செம்மலின் படத்தை காண முதல் நாளில் ஆர்வம் காட்டாமல் மாற்று முகாம்... நடிகர்... நடித்த படத்தை காண கதர் சட்டை போட்டு கொண்டே தைரியமாக நீண்ட வரிசையில் நின்று படம் பார்த்து எங்கள் நடிகரின் படத்திற்கு பட்டை நாமம் போட்டோம். நாங்களும் அவரின் ரசிகர்களே
மகாபாரத கதை கொண்ட பிரமாண்ட படம் என்று வந்த நேரத்தில் சாதாரண கருப்பு வெள்ளை மாற்று நடிகரின் படம் மக்கள் வெள்ளத்தில் சக்கை போடு போட்டது அறிந்து எங்கள் அபிமான தயாரிப்பாளரே எங்கள் நடிகருக்கு டாடா காட்டி ஆயிரத்தில் ஒருவனாக அங்கே போனார் .அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே
பக்தி படங்கள் பண்ணினேன் .பணத்தை பார்க்கவில்லை என்று கூறி மாற்று முகாமில் சங்கமம் ஆகி கடன் தொல்லையிலிருந்தது மீண்டாரே
அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே
தீபாவளி அன்று வெளிவந்த ஒரு வண்ணப்படம் நூறு நாட்கள் ஒட்டப்பட்டாலும் வசூலை பார்க்காமல் நட்டம் என்று ஓப்பனாக சொன்னாரே அந்த தயாரிப்பாளரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே
மீண்டும் ஓரு தீபாவளி திருநாளில் வெளிவந்த படத்தை தயாரித்த இயக்குனர் பல காரணங்களை முன்னிட்டு மாற்று முகாமில் குரல் எழுப்பினாரே அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே .
1967
1971
1973
1977
1980
தமிழ் நாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சோம்பேறிகளாக உழைக்காமல் எங்கள் அபிமான நடிகரின் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கி அவரை ஏமாற்றிய நாங்கள்தான் உண்மையான துரோகிகள் .
இப்படி சினிமா அரசியல் இரண்டிலும் எங்கள் அபிமான நடிகர் தோல்வி மேல் தோல்வி அடைவதற்கு நாங்கள் மட்டுமே முழு பொறுப்பு .
முதல் வெளியீட்டில் எங்கள் அபிமான நடிகரின் 150 படங்களுக்கு மேல் தோல்வி அடைய செய்த பெருமை எங்களுக்கே .
இன்னமும் விரிவாக சொல்வோம்.........தெம்பாக கேட்டு அறிந்து கொள்ளலாம்... Thanks.........
-
நடிகர் கணேசனின் பித்தலாட்டத்தில் பாவ மன்னிப்பு படம்..... இலங்கை, பெங்களுர் திருவனந்தபுரம் 100 நாள் ஒடவில்லை. அடுத்து ராம்நாட் 100 நாளில் 50 ஆயிரம் கூட வராத டூரிங் தியேட்டரில் 2 லட்சத்திற்கு மேல் வசூலாம். 1965 ல் வெளியான திருவிளையாடல் மெயின் ஊரான நாகர் கோவிலில் 100 நாள் வசூல் 85 ஆயிரம் தான். இப்படி ஒரு பொய். அடுத்து சென்னையில் 8 லட்சம் கூட வசூல் வராத பாவ மன்னிப்பு 10 லட்சம் வசூலாம். 10 வருடம் கழித்து வந்த கணேசனின் சொர்க்கம் சென்னையில் தேவிபாரடைஸ்100 அகஸ்தியா 77 ராக்ஸி 77 ராம் 50 இவ்வளவு நாள் ஒட்டப்பட்டும் வசூல் : 10,73,184.84 தான். ஆனால் பாவ மன்னிப்புக்கு இவ்வளவு வசூலாம்.... பொய்யின் சிகரம் தான் பிறவி ( துறவி) நடிகனின் ரசிகன் பித்தலாட்டம். உரிமைக்குரல் ராஜு....... Thanks to mr. James Watt... Nagercoil...
-
திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும். அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.
அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.,அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.
நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.
அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது? என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.
மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சிதலைவர்
உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள். காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.
காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர், ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.
மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…!!!............. Thanks.........
-
-
-
-
-
-
-
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :
A. . உலக சாதனைகள் :
1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)
2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 32 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.
3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 32 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.
4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.
5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !
6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !
7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !
8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !
B. ஆசிய சாதனைகள் :
1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.
2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]
C. இந்திய சாதனைகள் :
1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)
2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)
4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)
5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !
7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.
8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
D. தமிழக சாதனைகள் :
1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !
2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)
3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)
4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)
5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்
6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.
7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.
8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.
திரையுலகின் முடி சூடா மன்னன், முடி சூடிய சக்கரவர்த்தி... எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட)........... Thanks.........
-
வழிச் செலவுக்கு கொடுத்த வள்ளல் :
கிழக்கு கர்நாடகம் உடுப்பி அருகே சுப்பு புரொடக்ஷன்ஸ் இன்று போல் என்றும் வாழ்க
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது சிவகாசியைச் சேர்ந்த ஆறு வாலிபர்கள் மக்கள் திலகத்தை சந்திக்க நான்கு, ஐந்து நாட்கள் முயற்சி செய்தனர்.மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழகத் தொண்டர்களுமான அவர்கள் சிமெண்ட் குழாய் செய்யும் பணிக்காக வந்து அங்கே வேலை இல்லாமல் திண்டாடி ஊர் திரும்பவும் வழியில்லாமல் இருந்தனர்.இவர்களின் நிலைமையை,மக்கள் திலகம் அறிய வந்தபோது மனம் பதறி அவர்களை நேரில்
சந்தித்து விசாரித்து ஆறுதல் சொல்லி அவர்கள் மீண்டும் திரும்ப ரயிலுக்கும்,வழிச்செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பினார்.மொழி தெரியாத இடத்தில் வீடு திரும்பவும் பணமின்றி வாடித் தவித்த போது,வழிகாட்டி ஆறுதல் மொழி உரைத்து,பயணம் செய்ய பணமும் தந்த
புரட்சித் தலைவரை,வாழ்த்தியபடியே அவர்கள் ஊருக்குப் புறப்பட்டனர்.
-1976 ம் ஆண்டு வந்த செய்தி.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.......... Thanks.........
-
48 years A.I.A.D.M.K anniversary 17/10/1972 - 17/10/2019 valargha Thalaivar pughaz...புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தாய் குலங்கள், பொது மக்கள் பேராதரவோடு...தனியாக கட்சி, இயக்கம் துவங்கிய திருநாள்.........17-10-1972 ...17-10-2019........... Thanks.........
-
*அண்ணா திராவிட. முன்னேற்றக்கழகம்*
ஒரு பார்வை...
1949 ல் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட தி.மு.க வின் கொள்கை கோட்பாடுகளை கண்விழிக்காத கிராமத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் மக்கள் திலகம் MGR...
பெரியார் வழிதான் என் வழி என்று சுயமரியாதை பாதையில் சென்ற அண்ணாவை அரசியல் களம் காண பாதை அமைத்துக்கொடுத்தவர் மக்கள் திலகம் MGR..
1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வர வாய்பில்லை டெல்லிக்கு போவோம் என்று நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட அண்ணாவை
துப்பாக்கி தோட்டாக்களை தொண்டையிலே சுமந்து 138 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற காரணமாக இருந்து டெல்லி போகவிருந்த அண்ணாவை சென்னைக்கு திருப்பி முதலமைச்சராக முடிசூடவைத்தவர் இதயக்கனி MGR.
பேரறிஞர்அண்ணா இரண்டாண்டுக்குள் மறைந்து விட்டாரே..???
அடுத்து யார்.?? என்ற கேள்வி எழுந்தபோது பலர் எதிர்ப்புகளை மீறி தன்னோடு திரையுலகில் பழகிய பாசத்துக்காக கருணாநிதி எனும் நச்சுப்பாம்பை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தவர் மனிதப்புனிதர் MGR.
கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கோடிகளை குவிக்கத்தொடங்கியது லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடியது எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் தி.மு.கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்..
இதை கண்டு மனம் கொந்தளித்தார் மக்கள் திலகம் MGR.
முதலமைச்சர் முதற்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்..
அண்ணா பிறந்த செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பொதுக்கூட்டம் போட்டு கேட்டார்..
தான் வளர்த்த கட்சி தன்னால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது கணக்கு வழக்குகளை பொதுக்குழுவிலே சமர்ப்பிக்க வேண்டுமென்று ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பொதுக்கூட்டத்தில் வீர முழக்கமிட்டார் மாசற்ற மன்னாதி மன்னன் MGR..
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த கொடியவன் கொடுங்கோலன், கொலைகாரன், திருட்டுபுத்தி,தீயசக்தி கருணாநிதியோ கணக்கா கேட்கிறாய் உன்கதையை முடிக்கிறேன் பார் என்று தி.மு.கழகத்தை விட்டே நீக்கினார்... உயர்ந்த உள்ளம் கொண்ட தலைவர் MGR அவர்களை..
*நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் எந்தன் நிலைமாறும்*.
மாற்றம் ஒன்றே மாறுதலுக்கு வழி என்று தீயசக்தியின் திருட்டுக்கூட்டத்தை ஒழிக்க 1972 அக்டோபர் 17 ல் அண்ணா திராவிட முனனேற்றக்கழகமாக தொடங்கி 1976 ல் *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமாக* செயல்படத் தொடங்கி 1977,1980,1984,1991,2001,2011,2016,என்று தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி இன்றும் அன்னைத்தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அண்ணா தி.மு.கழகத்திற்கு 48 வது பிறந்தநாள் விழா (17,10,2019)
நமது வெற்றியை என்றுமே சரித்திரம் சொல்லும்..
*வாழ்க புரட்சித்தலைவர் புகழ்*
*வாழ்க புரட்சித்தலைவி புகழ்*
என்றுமே வெற்றியை நோக்கி பயணிப்போம்..
*தஞ்சை க.இராசசேகரன்*
தலைமைக்கழகப்பேச்சாளர்
அ.இ.அண்ணா.தி.மு.கழகம்
சென்னை-91
............ Thanks.........
-
கபிலர்மலை தொகுதிMLA வாக இருந்த cvவேலப்பன் அவர்கள் தலைவர் அண்ணா தி.மு.கழகம் தொடங்கியவுடன்,கட்சியில் இணைந்தார்,1973அல்லது1974என்று நினைக்கிறேன்,தலைவர் ரஷ்யா நாட்டுக்கு பயணம் சென்றார் வழியனுப்புவதற்கு சென்ற வேலப்பன்,தலைவர்சென்றதும் மீண்டும் கோபாலபுரம் சென்று தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார், பின் தலைவர் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பியபோது,எஸ்.டி.எஸ் மூலம் கழகத்தில் இணைத்துக்கொண்டு,தலைவரை வழிஅனுப்பிய நான் வரவேற்காமல் போவேனா அதுதான் மீண்டும் கழகத்தில் இணைந்தேன் என்று சொல்லி அறிக்கை விட்டார் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தலைவரை வரவேற்றனர் ,புரட்சித்தலைவர்,சென்னைவந்தவுடன்,cvவேலப்பனை கட்சியை விட்டு நீக்கினார் ,அரசியல் நாகரீகம் வேண்டும் என்றார்... Thanks...
-
48-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் *அஇஅதிமுக*
வரலாற்றின் பரபரப்பான பக்கங்கள்…!
1960-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில்..
“விரைவில் திமுக பிளவுறும். *MGR* கட்சியை விட்டு வெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.
ஏன் பேரறிஞர் அண்ணா,MGR கருணாநிதியே கூட அதைப் படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது.
48-ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது.தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த *கருணாநிதி* MGR என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழுந்த ஈகோ யுத்தம் திராவிட இயக்கத்தில் அதிமுக என்ற இன்னொரு புதிய பங்காளி உதயமாக காரணமானது.
அதிமுக 1972-ல் உதயமானது என்றாலும் கருணாநிதி MGR என்ற இரு அத்யந்த நண்பர்களிடையே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனஸ்தாபம் உருவாகிவிட்டது எனலாம்.இந்த மோதல் முற்றி திமுக MGR பிரிவு ஏற்பட்டது.
'மத்திய அரசு விரித்த வலையில் விழுந்துவிட்டார் MGR' என திமுக பிளவுக்கு காரணம் சொன்னார் கருணாநிதி.
'தன் பிரமாண்ட வளர்ச்சியை விரும்பாமல் கருணாநிதி என்னை துாக்கியெறிந்துவிட்டார்' என MGRரும் அதற்கு காரணம் சொல்லி வைத்தார்.
உண்மையில் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற அறிவியல்தான் அந்த நேரத்து அரசியலை நிர்ணயித்தது.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற சாணக்கியனை மீறி MGR என்ற பிரம்மாண்டம் திமுகவில் வளர்ந்து வந்தது.
தலைவன் ஆவதற்கு MGR விரும்பவில்லை யென்றாலும் திமுகவின் தலைவர்களில் ஒருவராகவே பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து கருதப்பட்டார் MGR.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த எதிர்ப்புகளை மீறி கருணாநிதி திமுக தலைவராகவும், முதலமைச்சர் ஆனதற்கும் MGRரின் பங்களிப்பு, தமிழக அரசியல் அறிந்த யாரும் அறிந்தது.
முந்தைய சட்டமன்றத் தேர்தல்களின் போது வேட்பாளர்களின் வெற்றிக்கு ‘உதவிய’ MGRரால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது.
கருணாநிதியின் கைக்கு திமுக முழுமையாக வந்த பின் MGR என்ற ஆளுமையை கட்சிக்குள் அடக்கும் அங்குசம் கருணாநிதியிடம் இல்லை.
கட்சியில் அத்தனை ஸ்திரமான இடத்தை பெற்றிருந்தாலும் அதை உறுதி செய்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள MGR என்ற இன்னொரு நபர் தேவைப்பட்டதை கருணாநிதியின் மனம் ஏற்க மறுத்திருக்கலாம்.
அல்லது கருணாநிதிக்கான ஸ்தானத்தை தான்தான் உறுதி செய்தோம் என்ற எண்ணம் MGR மனதில் யாரோலோ விதைக்கப் பட்டிருக்கலாம்.முடிவு திமுக MGR பிளவு ஏற்பட்டது.
கட்சிக்குள் MGR கருணாநிதி மனஸ்தாபம் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டம் முதன் முறையாக MGR கருணாநிதி இடையிலான பனிப்போரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
1972 அக்டோபர் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில் 'திமுக தலைவர்கள் ஊழல் புரிந்துவிட்டார்கள்' என குற்றஞ்சாட்டினார் MGR.
“பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்து விட்டனர்.திமுக மீது மக்கள் அதிருப்தி யடைந்துள்ளனர்.
நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர்.
அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்து விபரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர்.
இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்” என கொதிப்பாக பேசினார். இது திமுக தலைவர்களிடையே பரபரப்பு பொருளானது.
மதுரையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த கருணாநிதிக்கு தகவல் போனது.அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய MGR இதே பிரச்னையை மீண்டும் கிளப்பினார்.
கருணாநிதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக் கூட்டத்தில்.
”MGR என்றால் திமுக… திமுக என்றால் MGR என்றேன்.உடனே ஒருவர் நாங்கள் எல்லாம் திமுக இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது.
எனக்கு உரிமை இருக்கிறது. உனக்கு துணிவிருந்தால் நீயும் சொல்.உனக்கு துணிவில்லாததால் என்னை கோழையாக்காதே” என்று பேசிய MGR தொடர்ந்து 45 நிமிடங்கள் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.
மதுரையிலிருந்து கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது.அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு போனது.
முதல் நாள் இரவே சென்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் MGR மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், ‘கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் MGR மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி’ அவர்களால் கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதலமைச்சர் கருணாநிதி கையில் வந்தது.
MGRரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் மூலம் செய்தி சொல்லப்பட்டது.
'நேற்று இன்று நாளை' படப்பிடிப்பில் இருந்த MGRருக்கு இந்த தகவல் சென்றது.
சட்டமுறைப்படி விளக்கம் கேட்கும் நோட்டீசு அனுப்பப்படாமல் திமுகவின் தன்னிச்சையான இந்த முடிவு MGRருக்கு அதிர்ச்சியளித்தது.
கொஞ்ச நேரத்தில் MGR இருந்த படப்பிடிப்புத் தளம் பத்திரிகையாளர்களால் சூழப்பட, படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்தார் MGR.
"பேரறிஞர் அண்ணா வளர்த்த கட்சியை சர்வாதிகாரம் சூழ்ந்து விட்டது.
அதன் பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும்"
-என ரத்தின சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் MGR.
MGRரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தி அலைகளை கருணாநிதிக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தது.
வெறும் வாதப் பிரதிவாதங்களாக பேசப்பட்டு வந்த MGR விவகாரம் உடுமலைப் பேட்டையில் இசுலாமிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்குப் பின் விபரீதமாகிப் போனது.
MGR ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது.
தமிழகம் முழுவதும் MGR மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் அதை தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
திமுகவில் MGRரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் MGR கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரி செய்ய முயன்றனர்.
MGRரும் கருணாநிதியும் சந்தித்துப் பேசினால் நிலைமை சரியாகி விடும் என்று கூறிய அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர்.
ஆனால் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான திமுகவினர்,மற்றும் MGR ரசிகர்கள் இவர்களுக்கிடையே நடந்த மோதல்கள் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டது.
'சட்ட நெறிமுறைகளுக்கு மாறாக தன் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தன்னால் வருத்தம் தெரிவிக்க முடியாது' என உறுதியாக நின்றார் MGR.ஏதோ ஒரு முடிவை நோக்கி கருணாநிதி MGR இருவரும் தள்ளப்பட்டனர்.
திட்டமிட்டபடி திமுக செயற்குழு கூடியது.
“கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட MGRருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர் மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக் கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிலைமை இன்னும் தீவிரமானது. செயற்குழுவில் இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் MGR கடந்த காலத்தில் திமுகவுக்கு பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி 'MGRரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கை வைப்பதற்கு சமம்' என கண்ணீர் விட்டபடி கூறினார்.
ஆனால் MGR கருணாநிதி இரு தரப்பிலும் எந்தவித நெகிழ்வு தன்மையும் உருவாகாததால் நிலைமை கை மீறிப்போயிருந்தது.
பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் திமுகவுடன் அனுசரனையை கடைபிடித்து வந்த தந்தை பெரியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் MGRரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
இரண்டு தலைவர்களிடமும் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் துயரங்களையும் பட்டியலிட்டு தன் நிலையை எடுத்துச் சொன்னார் MGR.
இதற்கிடையே திமுகவினர் MGR மன்ற உறுப்பினர்களுக்கிடையே தமிழகம் முழுக்க மோதல் ஏற்பட்டு ரத்தக்களறியாகிக் கொண்டிருந்தது.
இந்த பரபரப்புக்கிடையில் பொதுக்குழு கூடியது. 277 பேர் MGR நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில் அவர் 'கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்' என அறிவித்தது திமுக தலைமை.
தமிழகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. MGR மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள்.பால்ய வயதில் நண்பர்களாகி தொழிற்முறையில் சகோதரர்களாக பழகி ஒருவருக்கொருவர் தொழில் ரீதியாக வளர்ச்சிபெற உதவிக் கொண்ட இரு ஆளுமைகள் எதிர் எதிர் அணியாக அரசியல் களத்தில் நின்றது அரசியல் களத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் பேசப்பட்டது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது MGR இதயவீணை படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன் MGR பிக்சர்ஸ்க்கு வைத்த, திரைப்படங்களில் திமுகவையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக்கண்களை மறைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த MGR கருவேப்பிலை போல் தான் துாக்கி யெறியப்பட்டதை தாங்கிக் கொண்டார்.
ஆனால் அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆளும் கட்சியாக இருந்தும் திமுகவினர் வெளிப்படையாக தங்கள் கார்களில் கட்சிக்கொடியை ஏற்றிச் செல்ல முடியாத நிலையை உருவாக்கினார்கள் அவர்கள்.
“MGR என் மடியில் விழுந்த கனி…அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டேன்” என பத்தாயிரம் பேர் சூழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் பேரறிஞர் அண்ணா.
MGRரை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதையே சற்று மாற்றிப்போட்டு “கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் துாக்கி தூர எறியவேண்டியதானது” என தன் வார்த்தை ஜாலத்தோடு பதில் சொன்னார், கருணாநிதி.
இறுதிக்காலம் வரை திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சியபடி பேரறிஞர் அண்ணாவின் கட்சிக்கு ஆதரவாளராக தன் இறுதி வாழ்க்கையை கழிக்க நினைத்த MGR அதற்கு நேர்மாறாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பரபரப்பு அரசியல்வாதியாக மாற அடித்தளம் போட்டது கருணாநிதியின் நடவடிக்கைகள்.
“நான் இறக்கும் வரை பேரறிஞர் அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன்.நான் இறக்கும் போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்பட வேண்டும்”
-என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்த MGR,பேட்டி வெளியான சில மாதங்களில் திமுகவை எதிர்த்து ஒரு கட்சியையே உருவாக்கும் கட்டாயத்துக்கு உள்ளானதுதான் வரலாற்றின் விளையாட்டு.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சாரி சாரியாக தன்னை வந்து சந்தித்த ரசிகர்களும்,திமுகவின் அதிருப்திக் கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகக் காரணமானார்கள்.
கழகத்தில் ஆரம்பகட்டப் பிளவை இருபெரும் ஆளுமைகளும் பேசித் தீர்த்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொண்ட நந்திகளும் இதற்கு முக்கிய காரணமானார்கள்.
காலத்தின் தேவையும் கழகத்தில் சிலருடைய உள்நோக்கமும் MGRருக்கு நிஜத்தில் இன்னொரு பாத்திரத்தை வழங்கியது.
எதிலும் பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி செயல்படும் MGR கட்சிப் பெயரிலும் அண்ணாவின் பெயரை சேர்த்து *'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்'* என்ற கட்சியை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17 நாளில் துவங்கினார்.
திண்டுக்கல்லில் இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியை தன் ஆயுட்காலம் வரை மக்களின் துணையால் தக்க வைத்துக் கொண்டார் MGR.
அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகாமல் இரண்டு தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் எதிரொலியாக உருவான ஒரு கட்சி கிட்டதட்ட 48 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றிகரமாக கோலோச்சிவருவது பெரும் சாதனை.அந்த சாதனைக்கு MGR என்ற தனிநபரே காரணம்.
MGRரின் மறைவிற்குப் பின் சிதற இருந்த கட்சியை தன் சாதுர்யத்தாலும் திறமையாலும் கட்டிக்காத்து ஆளும் கட்சியாக நீடிக்கவைத்திந்தது *ஜெயலலிதா* என்ற இரும்புப் பெண்மணியின் சாதனை.
*வாழ்க புரட்சி தலைவர் நாமம்*........ Thanks...
-
*அஇஅதிமுக 48ம் ஆண்டுவிழா தொடக்கும் இந்த நேரத்தில் சில நினைவுகள்...*
*திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள்* *கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார்.*
*முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.*
*ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம்,* *குரோம்பேட்டை,* *மீனம்பாக்கம்,* *தாம்பரம்,* *காஞ்சீபுரம்,* *ஆரணி,* *அரக்கோணம் ஆகியவை ஆகும்.* *அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம்,* *ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து,* *எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.*
*அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.*
*பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார்.* *மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்* *”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள்,* *உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”.* *என்று முழங்கினார்கள்.*
*அதற்குப் பின்னர்,* *தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று,* *உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார்.* *பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார் மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி,* *இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.* *அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.*
*நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன.* *வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின.* *திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது* *தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.*
*அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார்.* *ஆனால்,* *மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது.* *அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்ஜிஆர் திகைத்து நின்றார்.*
*அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர்.* *அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்.*
*பின்பு அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று,* *மேடையில் அமரச் செய்தனர்.*
*மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்.* *பின்பு அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார்.* *பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால்,* *அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும்.* *நீங்கள் அளிக்கும் பதில் என்ன?* *நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?* *என்று கேட்டார்* *புரட்சிதலைவர்.*
*உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில் ”அங்கீகரிக்கிறோம்"* *"அங்கீகரிக்கிறோம்”* *என்று முழங்கினார்கள்.* *காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது.* *தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.*
*காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார்.* *பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார்.* *முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம் எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.*
*காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்ஜிஆர் ஆரணியிலும்,* *அரக்கோணத்திலும் கேட்டார்.* *மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.*
*இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே,* *மக்கள் அளித்த பதிலும் ஒன்றே* *எம்ஜிஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.*
*ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும்.* *அதேபோல, ஓர் அரசியல்வாதி,* *புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.*
*மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள் அதுதான் வாடிக்கையாகும்.* *இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…*
*அவருக்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா,* *அண்ணன் ஓபிஎஸ்,* *அண்ணன் ஈபிஎஸ்* *ஆகியோர்களின் வழியில் உண்மையான தொண்டனாக என் பயணம் தொடர்கிறது...* *தொடரும்...* *சி.ரங்கநாதன்*
*நட்சத்திர பேச்சாளர்,* *நடிகர், இயக்குநர்*✌............ Thanks...
-
அன்றும் இன்றும் என்றும் மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்று திகழும் ஒரே தலைவர் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தநாள்...(17 அக்டோபர் புரட்சி - அண்ணாதிமுக தொடங்கப்பட்டநாள்)......... Thanks...
-
கட்சி தொடங்கப்பட்ட
48 ஆண்டுகளில் , ஆளுங்கட்சியாகவே 34 ஆண்டுகள் அஇஅதிமுக ;
ஒவ்வொரு தொண்டனும் பெருமிதம் கொள்வோம் !......... Thanks.........
-
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 48 ஆம் ஆண்டு துவக்க நாள்........ இன்று ,தமிழகத்திலேயே 29 ஆண்டுளாக ஆட்சி செய்யும் ஒரே இயக்கம்......... அண்ணா திமுக , இது வரை ஸ்தாபன காங்கிரஸ் 20 ஆண்டுகளும் , திமுக 19 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன,100 நாட்கள் ஒடுமா ? இந்த கட்சி என்று கேலி பேசிய தலைவர்கள் மத்தியில் சிங்கமென, யானையாக... நிமிர்ந்து நிற்கின்றது... பரம்பரை ஆட்சி குடும்பம் ஆட்சி நடந்தும் கட்சிகளைப் போலின்றி, எளிய தொண்டனும் தலைமைப்பொறுப்புற்கு வரமுடியும் என நிரூபிக்கும் ஒரே மக்கள் இயக்கம் ...அண்ணா திமுக ... எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது...வாழ்த்துக்களுடன்........தோழர்கள்.. . Thanks...........
-
தலைவர்,முதல்வர் ஆகும்போது60வயது என்று யார் சொன்னது,தலைவர் தன்வயதையோ,பிறந்தநாளையோ,சொன்னது உண்டா,தலைவர் முதல்வர் ஆன பிறகு சட்டமன்றத்தில் பேசும்போது ஒரு முறை தான், சிறுவனாக பாய்ஸ் நாடகக்கம்பெனியில் இருந்த சமயம் சென்னைக்கு எம்டன் என்ற கப்பல் வந்தது அதைப்பார்க்கலாம் என்று போனோம் பார்க்க முடியவில்லை என்று பேசினார் இது சட்டமன்றக் குறிப்பேட்டில் இருக்கும் ,அந்தக்கப்பல் வந்தது1914ஆம் ஆண்டு அதைத் தன் நினைவில் வைத்து சொல்கிறார. என்றால் அப்போது தலைவருக்கு என்ன வயது இருந்திருக்கும், ஆனால் இப்போது சொல்கிறார்கள் தலைவர் 1917ல் பிறந்தார் என்று இது எப்படிச் சாத்தியம்?!!!... Thanks... MK.Raja...
-
இது தேவையில்லாத சர்ச்சை... தலைவர் என்றும் இளைஞர் ...அவர் வயதைப் பற்றி அவரே நினைத்து பார்க்காத போது நமக்கு ஏன் இப்போது இந்தச் சர்ச்சை இதை விடுத்து அவர் புகழ்பாடும் புனிதப் பணியைச் செய்வோமே...... Thanks...
-
-
வரலாற்று ஏடுகள்
வாழ்ந்த வரலாறை
தன்னுள் ஆழமாய்
பதித்துக்கொண்ட
நாள்..
இந்திய
துணைகண்டமே
மூக்குமேல் விரல்வைத்து
ஆச்சர்யத்தில்
* ஆ* வென
வாய் பிளந்துப்போனது.
காலமே முன்னின்று
புரட்சித்தலைவரை
தன்னுள் அழியாது
உளிகொண்டு
செதுக்கிக்கொண்டது..
சிறு அத்தியாயமாகத்தான்
தொடங்கியது
இந்த
வரலாற்று தினத்தின் முதல் பக்கம்...
பின்னாளில்
பல அத்தியாயத்
தொகுப்பாய்
தொடர்ந்துப்போனது..
எத்தனையோ நிகழ்வுகளை ஆவணப்படுத்திய காலம்
இந்த நன்னாளை
மட்டும் கொண்டாடிக்கழிக்கிறது
அரை நூற்றாண்டான
போதும்..
நம் புரட்சித்தலைவரை
வரலாற்றுக்கும்
பிடித்திருக்கும் போல..
விளைவுதான்
இன்னும் தலைவரை
தினமும் தலைமுறை
கடந்தும் கடத்திக்கொண்டிருக்கிறது
அடுத்தடுத்த தலைமுறைக்கு..
கருணையற்ற நிறைய
நிதியுள்ள
வஞ்சனின் சூழ்ச்சி
வெளியேற்ற
தாங்கப்பிடித்தன
தமிழ் மக்கள் கரங்கள்
தன்
இதயத்தில் பதித்த
அண்ணாவை
இயக்க கொடியிலும்
கண்டார் தலைவர்.
விரல் நீட்டினார்
* அண்ணா *
கருப்பு சிவப்புக்கு
நடுவே
தூய வெள்ளையில்..
தமிழக பட்டித்தொட்டியெங்கும்
கழக கொடிமரங்களில்
மறைந்தும்
உயிர்த்திருந்தார்..
தூக்கியெறிந்தவனுக்கு
நன்றி..
வருடக்கணக்கில்
அண்ணா கண்ட
கழகத்தில்
நிரந்தரமாயிருந்தால்
அங்கீகாரம் கிடைத்திருக்குமா
தலைவருக்கு..
வெளியேற்றிய
^க.....தி* செயலுக்கு
பாரட்டு ..
நீ
நினைத்திருப்பாய்
தமிழகத்தையே
அடித்து
உன் வீட்டு
உலையில் போடலாமென்று...
விடுவாரா
பிறர்பொருளை
அபகரிக்க நினைக்கா
எம் தலைவன்.
நாசமாகி வனவாசம்
போனாய்
பதினாலு ஆண்டுகள்..
வள்ளல்
இருக்கும் வரை
ஆட்டி ஆட்டி
சிறு அசைவைக்கூட
ஏற்படுத்த முடியாத
நீயெல்லாம்
அரசியல் சாணக்கியனாம்..
எவனோ உன்னை
புகழ்ந்து பாடி
பொறுக்கித்திண்ண
முயன்ற
திண்ணைத்தூங்கி
பயலாக்கத்தான்
இருக்க வேண்டும்
அவன்..
விடமாட்டோம்
மரணித்து விட்டாலும்..
எம் தலைவனுக்கு
நீ
செய்த துரோகங்களை
பட்டியலிட்டு சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்போம்..
தகரமாய் நினைத்தாய்
72 ல்
அது தங்கமாகி
இன்னும் ஜொலித்தபடி..
கெடுவான் கேடு நினைப்பான்
இது
உனக்கே உனக்கான
பழமொழி
க........நிதி
கால பெருவெளியில்
அண்ணாவை
போற்ற
ஒரு இயக்கம்
கண்டது
அண்ணாவின்
* இதயக்கனி*
யுகங்கள் கடந்தாலும்
தலைவன் தந்த
இயக்கம்
தன் சுழற்சியை
நிறுத்துவதில்வை
நிறுத்தப்போவதுமில்லை..
அ.இ.அ.தி.மு .க
தொடக்க தினம்
நன்றி
ஆக்கமும் எழுத்தும்
** இரா.குமார்.**
.......... Thanks.........
-
*பொன்மனச்செம்மல் , வரலாற்று தலைவர்*
மக்களின் முதல்வர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் ,
நாற்பது ஆண்டு்கால நண்பர் என்றாவது சொல்லி அரியணையை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டார் கருணாநிதி ,
அந்த கனவின் கணக்கே கருணாநிதியின் கழுத்தை நெருக்கும் கதையானதை நாடு நன்கறியும்......
மூன்றாம் முறையும் முகராசி தலைவன் முதல்வராக தேரந்தெடுக்கப்பட்டார் ,
கருணாநிதியின் கெஞ்சல் பேச்சு மட்டுமல்ல , கொஞ்சல் பேச்சும் காற்றோடு கலந்ததை நாடு நன்கறியும் ,
அமெரிக்காவில் படுத்த படுக்கையாக காண்டீப சக்தியோடு ஆண்டிப்பட்டியில் நின்றார் !
தேர்தல் பட்டியலில் இடம் பெற்றார் !! தேர்தலில் வென்றார் ! வெற்றி தேரில் நின்றார் !!
வலது கால் , வலது கையிக்கு வாழ்க்கையில்லை என்று சொன்ன வஞ்சகர் கருணாநிதிக்கு ,
இரண்டு கால்களால் நின்று , வலது கையை ஆட்டி .....
இருவிரலை நீட்டி !! உலகை மைப்பூட்டி ! தொண்டனுக்கெல்லாம் தெம்பூட்டி !!
உலகே ஆச்சரியம்படும் அளவிற்கு சென்னை கிண்டி ராணுவ திடலில் பிபரவரி 4 , 1985 அன்று டாடா காண்பித்த பொன்மனச்செம்மல் , புரட்சிதலைவர் , மக்கள் முதல்வரை பார்த்து..
கருணாநிதி சொன்ன வார்த்தை :-
"பேச்சற்றவர் , சிந்திக்கும் நினைவற்றவர் , அரியணையை சந்திக்கும் திறன் அற்றவர்" ,
எம்ஜிஆர் - ராஜிவ் காந்தி இருவரையும் இப்போது இருக்கும் பேராசிரியர் அன்பகழகன் கருணாநிதியை மேடையில் வைத்துகொண்டு..
"வாயில்லா பிள்ளைக்கு (எம்ஜிஆர்) ஒரு ஒட்டு
"தாயில்லா பிள்ளைக்கு (ராஜீவ்) ஒரு ஒட்டு" போடுவது வெட்ககேடானது என்று பேசியவர் தான் இன்றைய அன்பழகன்..
--கடைசி காலத்தில் எம்ஜிஆர் அதிகம் பேச இயலாவிட்டாலும்.. அது கடைசி கூட்டம் நெய்வேலியில் ராஜீவ் காந்தி கூட்டம் (1987) திக்கி பேசினார் எம்ஜிஆர்.
பொதுமக்களும், தொண்டர்களும்..."தலைவரே.. பேசாதீங்க/./.. நீங்க நின்னாவே போதும்" என்று கதறி அழுதார்கள் .குறிப்பாக தாய்மார்கள் இந்த காட்சி....
ஆனால் பேசி பேசியே திறமை காட்டி வாழ்ந்த கருணாநிதி கடைசி காலத்தில் வாய் இருந்தும் ஊமையாகவே இருந்து மறைந்தார்.
--படத்தில் அந்த காலகட்டத்தில் கருணாநிதி எப்படி அமர்ந்திருக்கிறார் என்பதும், எம்ஜிஆர் எப்படி அமர்ந்துள்ளார் என்பதும் யாரிடம் அடக்கம் இருந்தது என்பதை படமே சாட்சி........(புகைப்படத்தில் மறைந்த திரு மு.கருணாநிதி பந்தாவாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, மக்கள் திலகம் எப்பொழுதும் போல் அடக்கமாக சாதாரணமாக அமர்ந்திருந்த காட்சி)...... Thanks...
-