எனது 27,000* பதிவுகளுக்கு நேரிலும், கைபேசியிலும் , வாட்ஸ் அப்பிலும் , மய்யத்திலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து* நல்ல இதயங்களுக்கும்* இதயங்கனிந்த நன்றி .
Printable View
எனது 27,000* பதிவுகளுக்கு நேரிலும், கைபேசியிலும் , வாட்ஸ் அப்பிலும் , மய்யத்திலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து* நல்ல இதயங்களுக்கும்* இதயங்கனிந்த நன்றி .
திரையில் வீரம், நிஜத்திலும் , வீரம் அதுவே எம். ஜி. ஆர் .,.........
ராகவேந்திரா மண்டபம் கட்டிய போது ஒரு பெரும்புள்ளி இடைஞ்சலான போது நான் பல மேல்மட்டத்தையும் அணுகியும் நடக்கவில்லை கடைசியில் எம் ஜி ஆரிடம் போய் சொல்லி விட்டு சென்று பார்த்த போது பெரும் புள்ளி எம் ஜி ஆர் முன் கைகட்டி நிற்ப்பதை பார்த்தேன் அது தான் எம் ஜி ஆர் அவர் ஒரு தெய்வப்பிறவி இப்படி கூறியவர் ரஜினி காந்து
இறைவனிடம் முறையிட்டாலும் நிறைவேற்ற சிறு தாமதம் ஆகலாம் ஆனால் என் அன்பு தெய்வம் எம் ஜி ஆரிடம் முறையிட்டால் உடனே நடக்கும் இப்படி கூறியவர் சரோஜா தேவி
ஜெனநாயக நாட்டில் ஒரு மன்னனாக வாழ்ந்தவர் எம் ஜி ஆர் இப்படி கூறியவர் எம் என் நம்பியார்
எம் ஜி ஆரை வென்றவர் இல்லை
நினைத்ததை முடிப்பவர் எம் ஜி ஆர்
எந்த கொம்பனும் எம் ஜி ஆர் முன் தலை வணங்குவான்
எம் ஜி ஆர் நல்லவனுக்கு நல்லவனாக
கெட்டவனுக்கு அவன்வழியிலே நல்வழி காட்டிய மாவீரன்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.......... Thanks.........
நமது தோழர்கள் மாற்று முகாம் நண்பருக்கு உண்மையான, நடந்த விடயங்களை பூசி மொழுகாமல் உள்ளதை தெரிய படுத்துவதில் எந்த தவறுமில்லை... அவர்களின் அபிமான நடிகரே 1970ம் வருடம் 140 படங்களில் நடித்து வெளியான பின் ரசிகர் மன்ற ஆல்பத்தில் கர்ணன் பட comment செய்யும்போது ' பிரமாண்ட தயாரிப்பு என்றாலும் எதையோ கோட்டை விட்டு விட்டோம்' என்று பதிவு போட்டதை சிலர் அறியாமல் இருக்கலாம்.. அதே ஆல்பத்தில் சிவந்த மண் பட பதிவில், 'அள்ளி அள்ளி தந்த மக்களுக்கு ஆனந்ததால் கண் சிவந்தது', என்றும் பதிவு செய்திருப்பார்.. அந்த தகவல் வேண்டுமானால் அந்த பட தயாரிப்பாளர் மூலமாக தவறாக கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.. ஏனெனில் மக்கள் திலகம் போன்று எல்லா விடயங்களிலும் அவர்கள் நடிகர் update கிடையாது என்பதும் பலரும் அறிந்ததே...... Thanks...
தினத் தந்தி ...
இது குறித்து நான் முன்பே பதிவு செய்துள்ளேன்.
ஊமையன் கோட்டை
நேற்று தினத் தந்தியில் "புரட்சித் தலைவர் கண்ணதாசன் கருத்துவேறுபாடு" படித்தேன். அதில் வந்த செய்தி உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த உண்மையை/படித்ததை சொல்கிறேன் :
புரட்சித் தலைவர் அவர்களை "தானாக முன்வந்து நான் ஊமைத்துரை பாத்திரத்தில் நடிக்கிறேன்" என்றார். படத்துக்கு பைனான்ஸ்/ நிதி வேணுகங்கா பிலிம்ஸ் ...திரு. சிங்காரம் செட்டியார். மிகவும் கண்டிப்பானவர்.
படத்தின் இயக்குனர் இலங்கைவாசியும் பல சிங்கள படங்களை டைரக்ட் செய்த மஸ்தான். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி - இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. நெப்ட்டுனே ஸ்டுடியோவில் சின்னமருது பெரிய மறுத்து தர்பார் செட் போடப்பட்ட 'சாந்துப் பொட்டு தளதளக்" ஷூட்ஜிங் நடைபெற்றது.........
இந்த காலத்தில் திரு. ரங்கசாமி அவர்கள்தான் புரட்சித் தலைவருக்கு மேக்கப் போடுவார். "விக்" செய்யும் விஷயமாக திரு. செட்டியார் அவர்களை அணுகினார். செட்டியார் அவர்கை மொன்று நாங்கள முறை சாக்குபோக்கு சொல்லி அலையவிட்டார். தலைவரிடம் ரங்கசாமி விவரத்தை சொன்னார். தொலைபேசியில் தலைவர் செட்டியாரிடம் பேசினார் .....இருவருக்கு பெரிய தகராறு.
செட்டியார் பைனான்ஸ் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஊமையன் கோட்டை படம் நின்றுவிட்டது. "சிவகங்கை சீமை" படத்தில்
'சாந்துப் பொட்டு தளதளக்" என்று பாடலை பார்க்கலாம்.
புரட்சித் தலைவர் கவிஞரை அழைத்து சமாதானப்படுத்தி அடுத்த படம் பண்ணித்தருவதாக சொல்லி அனுப்பினார்.
ஆகா படம் நின்றதற்கு "பைனான்சியர்"/"விக்" தான் காரணம். இது எனக்கு தெரிந்த தகவல்.
நன்றி. ... Thanks mr.SB.,
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றியும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சாதனைகளை பற்றியும்
சமூக வலை தளங்கள் , முகநூல் , வாட்ஸ் ஆப் மற்றும் எம்ஜிஆர் குழுக்கள் போன்ற இணைய தளத்தில் பலரும் உண்மைக்கு மாறான செய்திகளையும் , தவறான தகவல்களையும் ,பதிவிட்டு வருகிறார்கள் . குறிப்பாக சரியாக படிக்காமல் மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள் . இது வருந்தத்தக்கது .
அதே போல் நடிகர் சிவாஜி கணேசனின் சாதனை என்ற பெயரில் பொய்யான பல செய்திகளை பரப்பி வருகின்றனர் .
ஆதார பூர்வமாக பத்திரிகைகளில் வந்த விளம்பரம் ஒன்றுதான் நம்பக தன்மை கொண்டது .
நாடோடிமன்னன்
எங்க வீட்டுப்பிள்ளை
காவல்காரன்
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்காரவேலன்
ரிக்ஷக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
மேற்கண்ட எம்ஜிஆரின் படங்கள் வசூல் விபரத்தோடு விளம்பரங்கள் வந்தது . இதுதான் உண்மையான ஆதாரம் .
சென்னை நகரில் 10 லட்சம் வசூல் செய்த முதல் படம் 1965ல் "எங்க வீட்டுப்பிள்ளை "...
சென்னை நகரில் 1977 வரை வசூலில் முதலிடம் இருந்த படம் 1973ல் "உலகம் சுற்றும் வாலிபன் ."
தென்னிந்திய திரை உலகின் வசூல் மன்னன் , வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் ., என்பதை உலகமறிந்தது .........
தென்னிந்திய திரை உலகின் அதிகம் சம்பளம் வாங்கியவர் எம்ஜிஆர் .
ஏராளமான மன்றங்கள் , ரசிகர்களை பெற்று இருந்தவர் எம்ஜிஆர் .
சாதனைகளின் சிகரத்தில் இருந்தவர் ...இருக்கிறவர் ,,இருக்கப்பபோகிறவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை அறிவோம் . நிஜத்திலும் அதற்கு தகுதியாகி முறையாக நிரூபித்து காட்டிய மஹான்...
தவறான பதிவுகளை யாருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் .
தவறான பதிவுகளை புத்தகத்தில் அச்சிட வேண்டாம் .
சந்தேகம் இருப்பின் மூத்த எம்ஜிஆர் விசுவாசிகளிடம் பேசி பகிர்ந்து கொள்ளலாம்
எம்ஜிஆர் ரசிகர்களே
தவறான செய்திகளை ஆராய்ந்து பாராமல் பதிவிடுவதை நிறுத்தவும் .
எம்ஜிஆரின் நடிப்பின் ஆளுமைகளை உங்கள் பார்வையில் விரும்பிய காட்சிகளை அழகாக எழுதி பதிவிடவும் .......... Thanks.........
கலைப் பேரரசர் எம்ஜிஆர், அஷ்டாவதானி பானுமதி ராமகிருஷ்ணா, விஜயகுமாரி, எஸ்எஸ் ராஜேந்திரன், எம் ஆர் ராதா, முத்துகிருஷ்ணன், அசோகன், திருப்பதி சாமி, டி ஏ மதுரம், ஜி சகுந்தலா, மனோரமா, நளினி, மாலா, எஸ் ராமராவ், செந்தாமரை, பெங்களூர் பச்சையா மற்றும் பலர் நடித்த மாபெரும் பல்லவர் சரித்திர திரைப்படம் காஞ்சித்தலைவன் இன்றோடு(26-10-1963) இந்த படம் வெளியாகி 56 வருடங்களை கடந்து மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கும் மாமல்லன் நரசிம்ம பல்லவர் (எம்ஜிஆர்) இன் மகத்தான வெற்றி காவியம். பாடல்கள் அத்தனையும் அருமை குறிப்பாக, (கண் கவரும் சிலையே), (மயங்காத மனம் யாவும் மயங்கும்), (ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா), (மக்கள் ஒரு தவறு செய்தால்), இவை யாவும் மிகவும் சிறப்புடன் தேமாங்கனி ஆக இனிக்கும். அனல் பறக்கும் சண்டை காட்சிகள் நெஞ்சை புல்லரிக்கச் செய்யும். பெங்களூர் பச்சைyavudan எம்ஜிஆர் மல்யுத்தத்தில் வெற்றி பெறுவார். இதில் பச்சையா தான் படத்தில் நடிக்கவும் என்பதை மறந்து தாறுமாறாக நடந்துகொள்வார். ஆனால் எம்ஜிஆர் எப்பேர் பட்ட பயில்வான் என்றாலும் தோற்கடித்து விடுவார். ஆதலால் எப்படியும் பச்சையாvai வெற்றிக் கொள்வார் எம்ஜிஆர். எம்ஜிஆர் பானுமதியின் அபாரமான நடிப்பு சிறப்பானது. படத்திற்கு மெருகூட்டுகிறது............. Thanks.........
அனைவருக்கும் இனிய " தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்... என்றும் வாழ்க வளமுடன்...
எம்.ஜி.ஆர் பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.இச்சூழலில் புரட்சித்தலைவரின் இரட்டைஇலை நாங்குநேரி விக்ரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.இதற்கு உழைத்த EPS &OPS அண்ணன்களுக்கும் அவர்களுடன் உழைத்த அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் எம்.ஜி.ஆர் பக்தன் என்ற முறைக்கு நான் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ஒரு சூட்சுமமும் உள்ளது.ஆளும் அரசு பல வசதிகள் ..........செய்தது.இருப்பினும் ஒரு கூடுதல் அம்சம் இரட்டை இலைக்கு வோட்டு போட்ட 20000க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் பக்தர்கள்.வசதிகள் போக உள்ள சுத்தியுடன் வோட்டு போட்டவர்கள்.காரணம் சைதயார் இந்த தேர்தல் பிரச்சார காலங்களில் தினத்தந்தி TV ல் 7 எபிஸோடு நம் தலைவன் எம்.ஜி.ஆர் மற்றும் அவர் காமராஜரை எப்படி மதித்தார் என்று மிக விலாவாரியாக விவரித்து அந்த எபிசோடில் சொன்னார்.நாங்குநேரி கணிசமான காங்ரஸ் ஒட்டு வங்கி.அதில் சில அனுதாபிகள் எம்.ஜி.ஆர் இந்த அளவுக்கு காமராஜரை மதித்தார் என்ற மகிழ்வில் நமக்குவோட்டு கிடைத்தது என்ற நிலை உள்ளது.ஏனெனில் நாங்குநேரி காங்ரஸ் முக்கியஸ்தர்கள் சைதயாரிடம் இது குறித்து முக்கால்மணி நேரம் நேரடியாக பேசியுள்ளனர்.சோர்வுடன் இருந்த எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு சைதயாரின் 7 எபிஸோடு பேச்சு நமக்கு மிக்க உந்துதலாக இருந்தது என்பதை மறக்க முடியாது.நாங்குநேரி மக்கள் நிறைய பேர் தந்தி TV பிரியர்கள்.அதனால் சைதயாரின் 7 எபிசோடின் பேச்சு அவர்களை ஈர்த்தது என்பது மறுக்க முடியாத உண்மை.ஆக நாம் சைதயாருக்கும் நன்றி சொல்லவேண்டும்........... Thanks...........
.
எந்தக் கட்சி வரலாற்றிலும் இல்லாத அளவு 300 க்கும் மேற்பட்ட சாதாரணத் தொண்டா்களை ,
அமைச்சா்களாக உயா்த்திய இயக்கம் .........அஇஅதிமுக !............ Thanks.........
https://youtu.be/dXvvFDzvTIc.......... Thanks...