அன்னை சத்தியத்தாய் பெற்ற மாணிக்கங்கள் தலைவர் MGR அவர்அண்ணன்சக்ரபானியும் வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.... Thanks...
Printable View
அன்னை சத்தியத்தாய் பெற்ற மாணிக்கங்கள் தலைவர் MGR அவர்அண்ணன்சக்ரபானியும் வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.... Thanks...
அனைத்திலும் அவர் மக்களின் முன்னோடிதான், மனிதர்கள் இப்படி இருக்க வாய்ப்பு இல்லை, அவர் தெய்வத்தின் தெய்வம், அதாவது தெய்வத்திற்கு மேலானவர்...... Thanks...
https://youtu.be/58SjCwGZiqU.... Thanks...
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின்நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின்கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவிசெய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல். ...... Thanks...
https://youtu.be/1ZQhbhO_Df8.... Thanks...
https://youtu.be/UJe6I8WZ058.... Thanks...
நான் முன்பு படித்தது,உறந்தை உலகப்பன் நிகழ்ச்சிக்கு தலைவர் மட்டும்தான் அழைக்கப் பட்டிருந்தார்,அங்கு தலைவருக்குப் புரட்சி நடிகர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்,தலைவர் தன்னோடு கருணாநிதியையும் அழைத்து வந்து விட்டதால்,கருணாநிதிக்கு மரியாதை செய்யும் விதமாகத்தான் அவர் கையில் புரட்சிநடிகர் என்று எழுதிய பேழையைக் கொடுத்து தலைவரிடம் அதை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர் என்றுதான் படித்துள்ளேன்....... Thanks SDN
சென்னை - அண்ணா சாலை ''தேவி பாரடைஸ் '' 70 MM., A/C திரை அரங்கு பொன்விழா ஆண்டு 1970 - 2020
21.07.1970 தேவிபாரடைஸ் - துவக்க தினம் . 49 ஆண்டுகள் நிறைவு . பொன்விழா துவக்கம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் மலரும் நினைவுகள்
1970ல் திரை உலக ரசிகர்களால் கவரப்பட்ட மிக சிறந்த குளிர்சாதன திரை அரங்கு ''தேவி பாரடைஸ் ''
1. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் ''தேவி பாரடைஸ் அரங்கில் 29.05.1971 அன்று வெளிவந்தது, முதல் நாள் சிறப்பு காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் முன்னலையில் எம்ஜிஆர் திரை நட்சத்திரங்கள் , அரசியல் பிரபலங்கள் ஏராளமான எம்ஜிஆர் மன்றங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . முதல் முறையாக இத்திரை அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் , 125.காட்சிகள் 151 காட்சிகள் அரங்கு நிறைந்து 147 நாட்கள் ஓடி வசூலில் பிரமாண்ட சாதனை நடைபெற்றது .
2. தீபாவளி விருந்தாக 18.10 .1971 அன்று மக்கள் திலகத்தின் '' நீரும் நெருப்பும்'' திரைக்கு வந்தது . சிறப்புக்காட்சிகள் நடந்தது .9 வாரங்கள் படம் ஓடியது .
3. பரப்பரப்பான சூழ் நிலையில் 11.05.1973 அன்று வெளிவந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''. முன்பதிவில் 7.05.1973ல் ரசிகர்களின் கூட்டமே சாட்சி .63 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 182 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
4. மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' 9.05.1975 வெளியானது . தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கம் நிறைந்து வசூலில் சாதனை .12 வாரங்கள் ஓடியது .
5. மக்கள் திலகத்தின் லட்சிய படைப்பான ' பல்லாண்டு வாழ்க '' 31.10.1975ல் திரைக்குவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது .
6. '' தேவிகலா '' அரங்கில் முதல் முறையாக 18.03.1976 எம்ஜிஆரின் '' நீதிக்கு தலை வணங்கு '' தினசரி 4 காட்சியுடன் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
7. எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்கு முன்னர் 5.05.1977 ல் வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . 100 வது நாள் விழா நேரத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது .
8. தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆன பின்னர் 14.08.1977 அன்று திரைக்கு வந்த படம் ''மீனவ நண்பன் '' 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
9. மக்கள் திலகம் எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' 14.01.1978 திரைக்கு வந்து 50 நாட்கள் மேல் ஓடியது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா துறை விட்டு விலகிய பின்னர் அவருடைய பல படங்கள் ''தேவி பாரடைஸ் ' அரங்கில் வைகுண்ட ஏகாதசி நள்ளிரவு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது .
எம்ஜிஆரின் நாடோடிமன்னன் , படகோட்டி , மாட்டுக்கார வேலன் படங்கள் 1977-1989 இடைப்பட்ட காலங்களில் தேவி பாரடைஸில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது .
எம்ஜிஆரின் டிஜிட்டல் படங்கள்
2014- 2018 கால கட்டத்தில்
ஆயிரத்தில் ஒருவன்
ரிக் ஷாக்காரன்
அடிமைப்பெண்
எங்கவீட்டுப்பிள்ளை
நினைத்ததை முடிப்பவன்
போன்ற படங்கள் தேவி வளாகத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .
49 ஆண்டுகள் கடந்தாலும் தேவிபாரடைஸ் பெயரும் எம்ஜிஆர் படங்கள் திரைக்கு வந்த இனிய நாட்களும் ரசிகர்கள் கொண்டாடிய விழாக்கோலங்களும் என்றென்றும் மறக்க முடியாது .
விரைவில் இதே அரங்கில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிட்டல் படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது .
''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எங்களது அன்பு கலந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறோம்
எம்ஜிஆர் படங்கள் விளம்பரங்களை . இணைத்துள்ளோம் .
அன்புடன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ....... Thanks WA., Groups..........
.
தலைவர் 1962 இல் ராமாவரம் தோட்டத்தில் குடியேறினார்..14.06.1962 அன்னை ஜானகி அவர்களை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
கன்னிதாய், முகராசி, குடியிருந்த கோவில், ரகசிய போலீஸ் 115 படங்களை அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது கவனிக்கவும். தலைவர் தன் ஆட்காட்டி விரலில் ஒரு மோதிரம் போட்டு கொண்டு இருப்பார். அந்த மோதிரம் ஒரு தீவிர ரசிகரால் தலைவருக்கு பரிசாக அளிக்க பட்டது.
அதை எப்போதும் கழற்ற கூடாது என்ற அந்த ரசிகரின் கோரிக்கை...குண்டடி பட்ட போது கழற்ற பட்ட அந்த மோதிரத்தை பிறகு அணிந்து பின் பத்திரமாக காத்து வந்தார்.
14.06.1987 இல் அந்த மோதிரத்தை மற்றும் அன்னை சத்தியா அம்மா உருவம் பொதிந்த டாலர் கொண்ட நகைகள் மற்றும் அன்னை ஜானகி அவர்களும் நகைகள் போட்டு கொண்டு தன் திருமண நாள் அன்று. கீழே இருக்கும் படமே கடைசியாக இருவரும் விரும்பி சேர்ந்து எடுத்து கொண்ட கடைசி புகைப்படம் ஆகும். அப்புறம் வந்த படங்கள் மற்றவர்கள் எடுத்தது ஆகும்.
தலைவர் அமெரிக்க சிகிச்சை முடிந்து மீண்டும் வந்து முதல்வர் ஆகி தன் கடைசி டிசம்பர் மாதத்தில் அடிக்கடி
அண்ணா அவர்கள் தலைவருக்கு முதன்முதலில் போட்ட சால்வயை எடுத்துவர சொல்லி அதை முகத்தில் போட்டு கொண்டு கதறி கண்ணீர் சிந்தி இருக்கிறார்.
குண்டடி பட்டு கழுத்தை சுற்றி போடப்பட்ட அந்த கட்டு துணியை எடுத்து அதை பார்த்து கண்ணீருடன் இருந்து இருக்கிறார்.
தன் தாயின் படத்தை வெறித்து பார்த்து கொண்டு இருக்கும் போது அவர் கண்களில் இருந்து அருவியார் கண்ணீர் கொட்டுமாம்.
ஒரு நாள் கடைசிவரை தன்னுடன் இருந்த மாணிக்கத்தை அழைத்து கொண்டு அவர் கையை பிடித்து கொண்டு தோட்டத்தில் நடக்கும் போது ஒரு பெரியவர் பேத்திக்கு பேச்சு வரவில்லை என்று சொன்னதால் அந்த குழந்தையை தன் வீட்டில் தங்க சொல்லி தனக்கு பேச்சு பயிற்சி கொடுத்த மருத்துவர் கொண்டு சிகிச்சை அளிக்க பட்டு கொண்டு இருந்த அந்த பெண் குழந்தை தன் எதிரே வர....
கொஞ்ச நாட்கள் சிகிட்சையில் அந்த குழந்தை முன்னேற்றம் அடைந்து அன்று தலைவரை பார்த்து நன்கு பேச துவங்க அன்று இரவு அவர் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தனக்கும் அப்படி வரவேண்டும் என்று நினைத்து கலங்கி இருக்கலாம்.
விரைவில் விடை பெற போகும் உணர்வு அவருக்குள் மேலோங்கி இருந்தது என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் காட்டியதோ என்னமோ...இன்னும் வரும்...கடைசி நாட்களில் நடந்தவை.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்....... Thanks.........
Nellaimani Admk அண்ணா... தயவுசெய்து குறைத்து கொள்ள வேண்டாம்...
என்னைப் போன்ற பலர் தலைவரை நேரில் சந்திக்கும் பாக்கியத்தைத்தான் பெறவில்லை உங்களைப் போன்ற உண்மை பக்தர்கள் சிலர் மூலம் தான் நாங்கள் அற்புதமான ,
எதிர்பாராத நிதழ்வுகள் ஆகியவைகளை இதுபோன்ற பதிவுகள்மூலம் தான்
தெரிந்து கொள்கிறோம்...
ஆகையால் தயவுசெய்து எதையும் குறைத்து கொள்ளாதீர்கள் அண்ணா...... Thanks...