-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 11 வெள்ளி
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் நம் அருமை தலைவனை
வணங்குபவர் பெயர்
வி பி பாலசுப்பிரமணியன். இவர் ஒரு வழக்கறிஞர்
துணை சபாநாயகர்
வேடசந்தூர் தொகுதி
++++++++++++++++++++++++++++++++++
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை
,இந்தத் தொகுதியில்
நஞ்சுண்டையா
. என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான்
தொடந்து எம்எல்ஏவாக வருவார்
இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
1977. ஆண்டு வாசன் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் MGR
1980 ஆண்டு வி பி பாலசுப்ரமணியன் என்பவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்
வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்
1984 ஆண்டு மீண்டும் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியனை
வெற்றிபெற வைத்தார் MGR
உப்பிட்ட MGR குடும்பத்திற்கு உறுதுணையாக இருநதவர்
உண்டவீட்டிற்கு ரெண்டகம்
நினைக்காதவர்
ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்தவர்
இவர் சிறந்த பேச்சாற்றல் உடையவர்
இவர் சட்டசபையில் பேசும்பொழுது
மயான அமைதியாக இருக்கும் சட்டசபை
அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் இவருடைய பேச்சை உன்னிப்பாக கவனிப்பார்கள்
வேடசந்தூர் மிகவும் வறச்சியானதொகுதி அந்தததொகுயில்பலமில்களை உருவாக்கியவர் இவர்
வேடசந்தூரில் இருந்து கரூர்
செல்லும் ரோட்டில் பல மில் / பல. தொழிற்சாலைகளை
இவர் காலத்தில் உறுவாக்கினார்
இவரைபோன்ற. MGR ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான் ஜெயலிதா எடப்பாடி முதல்வராக. வர முடிந்தது
இவரைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது... Thanks...
-
அடேங்கப்பா இன்றாவது அவர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது என்றீரே !
ஆனாலும் ,, காங்கிரஸ் , கட்சிகூட காமராசர் கக்கன் போன்ற தலைவர்களால் , வேறு பல தொண்டர்களால் வளர்க்கப்பட்டதே. ஆனால் அதெல்லாம் அந்ததந்த காலகட்டத்தில் அவ்வளவே . அதையும் கட்சி சார்பற்ற மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆக திரு எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு , அவர் கட்சி பல்வேறு புதுப்புது தொண்டர்களால் தான் காப்பற்றப்பட்டு வருகிறது . அவர் கட்சி ஆட்சியும் தொடர்கிறது.
இங்கே தொடர்வதற்கு யார் காரணமாகிறார்களோ அவர்களின் உழைப்பே காரணமாகிறது. காலத்துக்கு காலம் தொண்டர்கள் வேறுபடுகிறார்கள் . புதுப்புது இரத்தம் கட்சியில் பாய்வதால்தான் கட்சி அழிவின்றி சாதிக்க முடியுமேயன்றி வேறில்லை.
அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த தலைமைக்கு விசுவாசிகளால் மட்டுமே கட்சி உயிர்ப்போடு இருக்கிறதே அன்றி , முன்னர் ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருந்தவரால் மட்டும் அடுத்தடுத்த தலைமைகளை வெற்றி கொள்ளச் செய்ய இயலாது.
எத்தலைமைக்கும் , எத்தகைய விசுவாசி இருப்பினும் , மக்கள் ஏற்று வாக்களித்து வெற்றி காணச் செய்யாவிடில் ( காங்கிரஸ் போல ) அத்தலைமையாளோ , அவர் விசுவாசிகளாலோ எவ்வித பிரயோஜனமும் இல்லை.......Fb... Thanks...
-
உண்மை உரக்க சொல்கிறேன் இவரை போன்ற தொண்டா்கள் இ௫ந்தால்தான் கட்சி ஆலமரமாக வளா்ந்து இ௫க்கிறது அதை கட்டி காக்க எம்ஜிஆா் பெயரை உரக்கச் சொல்லுங்கள் வெற்றி மேல் வெற்றி வ௫ம் வாழ்க எம்ஜிஆா்...... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 8 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் முதல் முதலாக எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றார்
அவரது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்
சுப்புலட்சுமி
அமைச்சரவை பட்டியலில் சுப்புலட்சுமியின் பெயரை பார்த்தவுடன் எங்களைப் போன்ற ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மன்றம் வைத்து அண்ணா திமுகவை வளர்த்தவர் களுக்கு அதிர்ச்சியாக இருந்தன
காரணம் கட்சியில் புதுமுகமாக இருந்தார்
சுப்புலட்சுமிக்கு எம்ஜிஆர் அமைச்சர் பதவி கொடுத்து இருந்தார்
சுப்புலட்சுமி ஆசிரியர் தொழில் பார்த்தவர்
1980 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தன
சிவகாசி /கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் தான் அண்ணா திமுக வெற்றி அடைந்தது
அதன் காரணமாக அண்ணா திமுக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்
இந்த சோதனையான காலகட்டத்தில் நாஞ்சில் மனோகரனும் சுப்புலட்சுமியும் அண்ணா திமுகவை விட்டு ஓடிவிட்டார்கள்
அடுத்த மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார்
தனி மனிதனாக பம்பரமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் மீண்டும் ஆட்சியை பிடித்தார்
இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களைப் பார்த்து கேட்ட கேள்வி
என்ன காரணத்திற்காக என் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்கள்
என்னுடைய ஆட்சி ஊழல் ஆட்சியா
நான் ஊழல் செய்து சொத்து சேர்த்தேனா
அடுத்தவர்களுடைய சொத்துக்களை நான் மிரட்டி எழுதி வாங்கினேனா
என் அண்ணன் குடும்பமோ என்னுடைய உறவினர்கள் குடும்பமோ அரசியலில் தலையிட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தார்களா
தமிழ்நாட்டு மக்களளே அதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்
அந்தப் பதில் உங்கள்வாக்குசீட்டு மூலமாக இந்த உலகிற்கு தெரிய வேண்டும்
இவ்வாறு ஊழல் செய்யாத. நம் உத்தமத் தலைவன்
அடுத்தவருடைய தோட்டம் காடுகளை பங்களாக்களை மிரட்டி எழுதி வாங்காத
வள்ளல் எம்ஜிஆர் மேடையில் முழங்கினார்
/////?///////////////////////////////////?????/?
1980 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்
அமைச்சர் காளிமுத்து அவர்கள் பேசியதாவது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்திரா காங்கிரசு கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை இந்தியா முழுவதும் வெற்றியடைய செய்து உள்ளார்கள்
திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்
இந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆரிடம் சிக்கி
திமுக காங்கிரஸ் கூட்டணி
தேர் சக்கரத்தில் சிக்கிய. தேங்காயை போல் சிதறி விடும்
இதோ என் தலைவர் புறப்பட்டுவிட்டார்
தரங்கெட்ட வர்களிடமிருந்து தாய்நாட்டை காக்க. புலி என புறப்பட்டுவிட்டார் புரட்சித்தலைவர்
என் தலைவன் எம்ஜிஆர் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக
அவரை இளக்காரமாக நினைத்து விடாதீர்கள்
எம்ஜிஆர் அவர்கள்
அலைகள் இல்லாத. பசிபிக் மகா சமுத்திரத்தை போன்றவர்
ஆரவாரம் இல்லை என்பதற்காக அந்தக் கடலுக்கு சக்தி இல்லை என்று நினைத்து விடாதீர்கள்
ஏனென்றால் உலகத்திலேயே மிகவும் ஆழமான கடல் பசிபிக் மகா சமுத்திரம்
அந்தக் கடலை போன்றவர்தான் எங்கள் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
இந்தியாவிலேயே மக்கள் சக்தி கொண்ட ஒரே தலைவன் எங்கள் எம்ஜிஆர் அவர்கள் தான்
இன்னும் சில நாட்களில் என் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறை ஆட்சியில் அமரப் போகிறார்
இவ்வாறு காளிமுத்து பேசினார்
///////////////////////////////////////////////////
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் எப்படி எம்எல்ஏ ஆனார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட எம்ஜிஆரிடம் மனு கொடுத்திருந்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனாரை எம்ஜிஆர் அண்ணா திமுக வேட்பாளராக அறிவித்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்
வேட்பு மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் அதில்சில தவறு இருந்த காரணத்தினால் அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள்
இப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது
வேட்பு மனுவில் டம்மி வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் மனு கொடுத்திருந்தார்
இதை அறிந்த எம்ஜிஆர் அவர்கள் சுப்புலட்சுமி அவர்களை அண்ணா திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதிக்கு அறிவித்தார்
இப்படி குறுக்கு வழியில் எம்எல்ஏ ஆனவர் சுப்புலட்சுமி
பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு ஓடி விட்டார்...... Thanks...
-
1980 புதுவை சட்டமன்ற பொது தேர்தலுக்கு இந்த அம்மாவைத்தான் தலைவர் அனுப்பி வைத்தார் ! சிறப்பாகத்தான் பணியாற்றினார் ! மது விலக்கு - தமிழகத்தோடு புதுவை இணைப்பு என்ற கோஷத்தால் தோல்வியை தழுவ வேண்டியதாகிவிட்டது ! மந்திரக்கோல் மைனரோடு தி மு காவில் தஞ்சம் பிறகு ! ..... Thanks
-
Purachi thalaivar ponmana semmal endrum makkala vazavaidhavar makkalin kadawol avarudaiya kodikannan sothukalai makkalluku varri vazavaidhavar makkalin kadawol adharkku pirrakku vandha varkal athanayum kollaiyadichi vaikkara arrashiyal vadhi Kal adhikkam endrum kodikanakkana thondarkallil nannum orvan Dr MGR thalaivar pukal marayadhu kodiyel oruvar purachi thalaivar Ennum 1000varusam annallum Dr MGR thalaivar pukal marayadhu kodiyel oruvar.......Fb.... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 7 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
1980 ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது
அடுத்து மூன்று மாதங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது
1980 ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்
அப்பொழுது கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது
அப்பொழுது எடுத்த படம்
1977 / 1980/ 1984 / ஆண்டுகளில் 3 முறை எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றார்
அப்பொழுது எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள் யார் / அவர்களுடைய பெயர் என்ன
,இன்று நான் அந்த. கால. நிகழ்ச்சி களை நினைத்துப் பார்த்தேன்
1980 அருமை தலைவர் எம்ஜிஆர் உடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது
கட்சியில் இருந்து பல அமைச்சர் பயல்களும் பல எம்எல்எ பயல்களும்
பல மாவட்டச் செயலாளர் பயல்களும்
பல நகரச் செயலாளர் பயல்களும்
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள்
அப்பொழுது எங்களைப் பார்த்து எதிர்கட்சி காரர்கள் கிண்டல் செய்வார்கள்
எம்ஜிஆரின் கூடாரம் காலியாகி விட்டது என்று எங்களை கிண்டல் செய்வார்கள்
அவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்
MGR. கட்சியை விட்டு எந்த தொண்டனும் போகவில்லை
வயித்து சோத்துக்கு வந்த எம்எல்ஏபயல்களும் மந்திரி பயல்களும் ஓடிவிட்டார்கள்
மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் வருவார் என்று நாங்கள் பதிலடி கொடுப்போம்
இந்த சோதனையான காலகட்டத்தில்
மார்க்கெட் இழந்த எந்த நடிகையும் எம்ஜிஆர் கட்சிக்கு வரவில்லை
எம்ஜிஆர் தனிமனிதனாக
மூன்று முறை முதல் அமைச்சராக
வந்தார்
எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அவர்களின் பெயர்
/////////////////////////////////?//////////????
தமிழ்நாட்டின் முதலமைச்சர்
எம்ஜிஆர்
கே ஏ கிருஷ்ணசாமி
ஆர் எம் வீரப்பன்
எஸ் ஆர் ராதா
நாராயணசாமிமுதலியார்
பொன்னையன்
காளிமுத்து
குழந்தைவேலு
ராகவா னந்தம்
டாக்டர் ஹண்டே
விஜயலட்மி / வீரபாண்டி / கொலைசெய்யப்பட்ட பூலாவாரி
சுகுமாரனினன் தங்ஙை
P.T. சரஸ்வதி
ராஜாமுகமது
ஆனூர் ஜெகதீசன்
அரங்கநாயகம்
எட்மண்ட்
V.V. சாமிநாதன் / புவனகிரி
முத்துச்சாமி / ஈரோடு
திருநாவுக்கரசு
எஸ் என் ராஜேந்திரன்
விஜயசாரதி / அரக்கோணம்
கோமதி சீனிவாசன் / வலங்கைமான்
நல்லுசாமி / திருச்சி/ 2. வது தொகுதியில் போட்டியிட்டவர்
எம் ஆர் கோவேந்தன் / பேராவூரணி
ஒரத்தநாடு வீராச்சாமி
திருச்சி சௌந்தரராஜன்
எஸ் டி சோமசுந்தரம்
பண்ருட்டி ராமச்சந்திரன்
நெடுஞ்செழியன்
ராஜாராம் / பனைமரத்துப்பட்டி
பா.உ. சண்முகம்
Y.S.M.யூசுப்
கிருஷ்ணராயபுரம் சௌந்தர பாண்டியன்
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
நாஞ்சில் மனோகரன்
மொடக்குறிச்சி சுப்பு லட்சுமி
இவர்கள் அனைவரும் அமைச்சராக பதவி வகித்தவர்கள்
எம்ஜிஆர் என்ற ஒரு தனி மனிதன் உருவாக்கிய அமைச்சரவையில்
இவர்களெல்லாம் அமைச்சராக இருந்தவர்கள்
இந்த அமைச்சர்களில்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பல அமைச்சர் பயல்கள் இருக்கிறார்கள்
எம்ஜிஆரால் பதவி பெற்றவர்கள்
எம்ஜிஆருக்கு துரோகம் செய்தால்
ஊழல் விசாரணை கமிஷனில்சிக்கி
வாய்தா வாய்தா வாய்தா வாய்தா வாய்தா என்று 18 வருடம் வாய்தா வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்
அடிபட்டு உதைபட்டு நல்ல மரணம் அடைய மாட்டார்கள்....... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 6. ஞாயிற்றுக்கிழமை
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் இருப்பவர்கள்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி
அவருடைய மனைவி மீனாட்சி அம்மாள்
அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
ராமாயணத்தில் வருகின்ற. ராமர் லட்சுமணனை போல் நம் கண் முன்னால் வாழ்ந்தவர்கள்
சக்கரபாணி எம்ஜிஆர் அவர்கள்
///////////////;///////////////////////////?////////
இந்திய சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் யார் சென்னை வந்தாலும்
சென்னை ஸ்டுடியோக்களில் நுழைந்து
பெரியவர் இருக்கிறாரா என்று கேட்டால் அது எம் ஜி சக்கரபாணி அவர்களைத்தான் குறிப்பிடும் வார்த்தை
சென்னை சினிமா ஸ்டுடியோக்களில் நுழைந்து
சின்னவர் வந்துவிட்டாரா என்று கேட்டாள்
அது எம்ஜிஆர் அவர்களைத்தான் குறிக்கும்
அண்ணன்-தம்பி இருவரையுமே
பெரியவர் / சின்னவர் / என்ற அடைமொழியோடு தான் சினிமா உலகில் அழைப்பார்கள்
///////////////////;/;;///////////////;/////////;//////
நாம் எம்ஜிஆர் குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்
பெரியவர் சக்கரபாணி அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள்
7. ஏழு ஆண் குழந்தைகள்
3 மூன்று பெண்குழந்தைகள்
++++++++++++++++++++++++++++++++++
சத்தியபாமா என்ற மணி
ராமமூர்த்தி
பிரபாகர்
சந்திரன்
சுகுமார்
லீலாவதி
விஜயலட்சுமி
ராஜேந்திரன்
பாலு
விஜயகுமார்
இந்த 10 குழந்தைகளுக்கும் பெயர் வைத்தவர் நம் அருமை தலைவன் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
சத்யபாமா
சுகுமார்
பாலு
இந்த மூன்று பேரும் இறந்து விட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் உள்ள நடிகர்களில் எம்ஜிஆரை போல் சினிமா உலகை கொடிகட்டி ஆண்டவர் யாரும் கிடையாது
இந்தியாவில் உள்ள முதலமைச்சர் களிலே எம்ஜிஆரை போல் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் யாரும் கிடையாது
எம்ஜிஆர் தமிழ் நாட்டில் பல ஆட்சியை உருவாக்கியவர்
பல
முதலமைச்சர்களை உருவாக்கியவர்
தான் முதலமைச்சராக கொடிகட்டி வாழ்ந்தபோதும்
தன் அண்ணன் தம்பி மாமன் மச்சான் குடும்பத்தினரே அரசியல் பக்கம் அண்டவிடாமல் செய்தவர் எம்ஜிஆர்
,முதலமைச்சரின் அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள்
ஆனால் பெரியவர் சக்கரபாணியின் குடும்பத்தினர் அரசியலிலோ ஆட்சி அதிகாரத்திலோ தலையிட்டவர்கள் கிடையாது.... Thanks...
-
உறவினர்கள் யாரும் தலையிட கூடாது என்று பொது அறிக்கையே வெளியிட்டவர் நம் தலைவர் ! அருமை ! வாழ்த்துகள் !... Thanks...
-
இருவரும் மாணிக்க கற்கள், அண்ணன்தம்பி பாசத்திற்கு எடுத்துக்காட்டு, ஆட்சி, அதிகாரத்தில் எம்ஜிஆர் குடும்பத்தினர் எந்த பலனும், சலுகையும் அடையாதவர்கள்... உயிர்காத்த
லீலாவதிக்கே எதுவும் செய்யவில்லை, ஒரு வார்டு மெம்பராக பதவி வகிப்பவன் என்ன வழியில் சம்பாரிக்கிறான், மக்கள்செல்வாக்கில்உச்சத்தில்இருந்தவள்ளல்எப்படிதன்ன டக்கத்தோடுஆட்சிசெய்தார், சிலதறுதலைகள்முதல்வராகபதவியில்இருந்துஆடிய, ஆட்டம்தான்என்ன, சம்மந்தமேஇல்லாதநாயைதன்னோடுசுயலாபத்திற்குசேர்த்துக் கொண்டுஅவளும், இவளும்சேர்ந்துஉடல்முழுக்கநகை, நட்டுக்கள்அணிந்துபோஸ்கொடுப்பது, உறவுப்பிள்ளைகளைஉதரிதள்ளிவிட்டுநாய்ஒருவனைவளர்ப்பமகன ்என்றுநாடகம்ஆடி, பலகோடிசெலவுசெய்துஅசிங்கப்பட்டு, இறப்பில்தெளிவின்மை, இப்படிப்பட்டநாயைஉத்தமர், தெய்வம்எம்ஜிஆர்நினைவுஆலயத்தில்புதைத்துதலைவரின்புகழ ைகெடுத்துவிட்டான்களே, இதுஎன்னடாஉலகம்,....... Thanks...