-
கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை சுற்றுலா தளமாக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளும் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு உறுதி அளித்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடவனூர் என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டை சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு கோடி ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்.நினைவு இல்லமாக அமைத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த நினைவு இல்லத்தை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும் கேரள கவர்னருமான சதாசிவம் திறந்து வைத்தார்.மிகமிக அபூர்வமான
எம்.ஜி.ஆர்.புகைப்பட மற்றும் வீடியோபட ஆவணக்காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நேற்று ( வெள்ளிக்கிழமை)
வடவனூர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சைதை துரைசாமி செய்திருந்தார்.சுமார் 800 பேர் விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்களை சூலூர் வாசுதேவன் , கோவிந்தன் ஆகியோர் வரவேற்றனர்.
கேரள ஆளும்கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கே.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் கேக் வெட்டினார்.
நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அவரது தாய் தந்தை உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் விழாவில் அவர்பேசும் போது , வடவனூரில் உள்ள இந்த எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை அமைத்த சைதைதுரைசாமியை பாராட்டினார்.நினைவு இல்லத்தை கேரள சுற்றுலா தள பட்டியலில் சேர்க்க எல்லாஏற்பாடுகளையும் செய்வேன் என்று உறுதி அளித்தார்.
விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
சூலுர் வாசுதேவன் மதிய உணவை வழங்கினார்.
நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஆவணக்காப்பக திரைப்பட கூடத்தில் எம்.ஜி.ஆரின் அரிய வீடியோ காட்சிகள் காலை முதல் மாலைவரை திரையிடப்பட்டது.
விழாவுக்கு வந்திருந்தோர் கூட்டம் கூட்டமாக அதை பார்த்து
வியந்தனர்.
.கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை சுற்றுலா தளமாக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆளும் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. கே.பாபு உறுதி அளித்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடவனூர் என்ற கிராமத்தில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு உள்ளது. இந்த வீட்டை சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு கோடி ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர்.நினைவு இல்லமாக அமைத்தார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அந்த நினைவு இல்லத்தை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும் கேரள கவர்னருமான சதாசிவம் திறந்து வைத்தார்.மிகமிக அபூர்வமான
எம்.ஜி.ஆர்.புகைப்பட மற்றும் வீடியோபட ஆவணக்காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நேற்று ( வெள்ளிக்கிழமை)
வடவனூர் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் எம்.ஜி.ஆர். 103 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சைதை துரைசாமி செய்திருந்தார்.சுமார் 800 பேர் விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்களை சூலூர் வாசுதேவன் , கோவிந்தன் ஆகியோர் வரவேற்றனர்.
கேரள ஆளும்கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.கே.பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் கேக் வெட்டினார்.
நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அவரது தாய் தந்தை உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் விழாவில் அவர்பேசும் போது , வடவனூரில் உள்ள இந்த எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை அமைத்த சைதைதுரைசாமியை பாராட்டினார்.நினைவு இல்லத்தை கேரள சுற்றுலா தள பட்டியலில் சேர்க்க எல்லாஏற்பாடுகளையும் செய்வேன் என்று உறுதி அளித்தார்.
விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பாயாசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
சூலுர் வாசுதேவன் மதிய உணவை வழங்கினார்.
நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஆவணக்காப்பக திரைப்பட கூடத்தில் எம்.ஜி.ஆரின் அரிய வீடியோ காட்சிகள் காலை முதல் மாலைவரை திரையிடப்பட்டது.
விழாவுக்கு வந்திருந்தோர் கூட்டம் கூட்டமாக அதை பார்த்து
வியந்தனர்.......... Thanks.........
-
அந்த ராமசந்திரன் தனிபெரும் பட்டாளத்தை வைத்திருந்தார், அவருக்கென திரண்ட கூட்டமும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் அளவு அவர்கள் அவரை உயிராய் மதித்ததையும் இன்னொரு நடிகன் பெறமுடியாது
மாபெரும் படை அது, அவர் உத்தரவிட்டால் எதையும் செய்ய தயாராய் இருந்த கூட்டம் அது
ராமசந்திரன் வெறும் நடிகராயினும் அவருக்கு மனசாட்சி இருந்தது, அவரின் மனசாட்சியின் குரலாக அவர் சொன்னது இதுதான்
"எனக்கு ரசிகர்கள் அதிகம், அவங்க அதிகம் படிக்காதவங்க. என்னை கடவுள் அளவுக்கு வச்சிருக்காங்க*
என்னை பின்பற்றும் அவர்களுக்கு தவறான வழிகாட்டிவிட கூடாது, ஆண்டவன் என்னை அவங்க கவனிக்கிற இடத்துல வச்சிருக்கான், அத தப்பா பயன்படுத்த கூடாது
அவங்க நல்லாயிருக்கணும், நல்லபடியா வளரணும். அதுக்குத்தான் என் படத்துல தாயினை மதிக்க சொல்றேன், குடிக்காதீங்கண்ணு சொல்றேன், பெண்களை மதிக்க சொல்றேன், என்னால முடிஞ்ச அளவு அவங்களுக்கு நல்லது போதிக்கிறேன்"
ஆம், சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது, அவன் பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம்
அந்த வெற்றிக்கு சாட்சி இப்படம், அந்த மூதாட்டிக்கும் ராமசந்திரனுக்கு என்ன உறவு? என்ன பந்தம்?
அவளுக்கு தெரிந்தவரை ராமசந்திரன் ஒரு காட்சியும் தப்பாக நடித்ததில்லை, நல்லது தவற எதுவும் பேசியதில்லை, தாயினை அப்படி வணங்கினான்
தனக்கொரு மகன் இருந்தால் எப்படி வளர்க்கவேண்டும், அவன் எப்படி உருவாக வேண்டும் என இத்தாய் விரும்பினாளோ அதை அந்த மனிதரில் கண்டாள், இதோ வணங்கிகொண்டிருக்கின்றாள்
அந்த தாயின் முகத்தை பாருங்கள்,
பாரதத்தில் கர்ணனை மடியில் போட்டு அழுத குந்தியின் முகம் இப்படித்தான் இருந்திருக்கும். (மக்கள் திலகம் திரு உருவ புகைப்படத்திற்கு பூமாலை அணிவித்திருக்கும் நிலையில் மூதாட்டியின் எண்ண சிந்தனைகள்) ........... Thanks.........
-
-
மேலே பார்த்து ரசித்த
காட்சி
பெரிய இடத்துப் பெண்
திரைப்படத்திலிருந்து
ஒரு காட்சியென
நாமறிந்ததே...
இந்த
சமூகத்தில் நிலவி வரும்
பல்வேறு அவலங்களை
ஒரு பாமரனும் அறிந்துகொள்ளும்
வகையில் எளிமைப்படுத்தி
எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் தலைவர்..
அந்த காலக்கட்டத்தில்
அனைவரும் ஆலயங்களுக்குள் சென்று கடவுளை
வழிபடுவதென்பது
சிரமமே..
இப்படியான பாகுபாடுகளை உடைத்தெறிய தனது
திரைக்காவியங்களை
ஆயுதமாக தலைவர்
பயன்படுத்தியிருக்கிறார்..
நினைத்தாலே
ஒருவித சிலிர்ப்பு.
தந்தை பெரியார்
பெரிய சமூகப்போராளி
அறிஞர் அண்ணாவும்
அப்படியே...
ஆனாலும் அவர்கள்
பேசி எழுதி
மாற்றங்களை
கொஞ்சமாகத்தான்
செய்ய முடிந்தது..
அவர்களை
விடவும்
மிக வீரியத்தோடு
பல மடங்கு செய்து முடித்திருக்கிறார்
தலைவர்..
இன்னும்
நம் தலைவரெல்லாம்
நீண்ட ஆயுளோடு
இருந்திருந்தால்
தமிழகம் இன்னும் கூட
சமூக மாற்றங்களை
கண்டிருக்கும்...
கிடைத்த வரம்
முழுப்பலனில்லை..
யார் சபித்தாரோ
தமிழகத்தை..
நன்றி
ஆக்கமும் எழுத்தும்
பொன்மனம் புகழ்பாடி
இரா.குமார்........... Thanks.........
-
-
எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் | MGR | J Jayalalitha | ADMK | DMK | Durai Karuna
https://youtu.be/ELK_BW8CLYA.......... Thanks...
-
தலைவரின் பிறப்பு கலியுகத்தின் திறப்பு....
.... அவரை வழிபடுவது பக்தர்களின் சிறப்பு.அந்த சிறப்பை செயல்படுத்துவதுவதே நமது பிறப்பு.அந்த பிறப்பின் கடமையை செவ்வனே செய்த கோடிகணக்கான சேவகர்களின் ஒருதுளியான கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை 17.01.2020 சென்னை வாலாஜா சாலையில் தொடர்ந்து 32 வது வருடமாக தலைவரின் திருஉருவத்திற்கு மாலை அணிவித்து பூஜை புனஸ்காரங்கள் செய்து இனிப்பு வழங்கிவிட்டு அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு ஆர்த்தி எடுத்த சமயத்தில் தமிழகத்தில் என் பிறந்தநாள் அன்று ஆரத்தி எடுத்து என்னை குளிரவைத்த ஒரே காரணத்தால் உங்களை ஆசிர்வதிக்கின்றேன் என்று (மாலையும்) பூ விழுந்து சமிக்ஞை செய்ததை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாமல் செய்த எங்கள் இதயதெய்வத்திற்கு திலகமும் இட்டு மகிழ்ந்த கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் வீடியோக்கள்......... Thanks.........
-
#எப்பேர்_பட்ட_மாமனிதர்_அவர்
கேள்வி : பலருக்கு பல ஆயிரக் கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது , யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா ?
பதில் : பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள் .
கேள்வி : அப்படிப் பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும் , மறக்க முடியாததும் எது ?
பதில் : கலைவாணர் என் எஸ் கே அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார் . பத்து , பதினைந்து என்று மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கூட கவலை படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்க முடியாது . ஆனால் அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன் . என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை
யார் கேட்ட கேள்வி ?
யார் சொன்ன பதில் தெரியுமா ?
1968 ம் ஆண்டில் பொம்மை பத்திரிக்கைக்காக
#புரட்சிதலைவி அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு
#மக்கள்_திலகம் சொன்ன
பதில்கள் தானே இவை
#எப்பேர்ப்பட்ட_மாமனிதன்......... Thanks.........
-
-