http://i64.tinypic.com/2wd64ab.jpg
Printable View
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஏப்ரல் 2019
http://i64.tinypic.com/4lkg0h.jpg
தினத்தந்தி -09/04/19
http://i67.tinypic.com/212csbl.jpg
http://i67.tinypic.com/2a5j2h3.jpg
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.
- தி இந்து............ Thanks wa.,
ஓர் தலைவன் தெய்வமாகிறார்!
ஆயிரத்தில் ஒருவன் கார்வார் நடுகடலில்
படபிடிப்பு கடைசி தினம் என்பதால் பரபரப்பாக மாலை வரை நடக்கிறது.
படபிடிப்பு முடிந்தவுடன் டெக்னிஷியன்ஸ்,
துணை நடிகைகள், தலைவர் MGR, J.J, நம்பியார் என ஒவ்வொரு குழுவாக போட்டில் கரை திரும்புகின்றனர். சண்டை காட்சியில் நடிக்கும் நடிகர்கள் மொத்தம் 30 பேர் -மோட்டார் படகு வருகைக்கு காத்திருக்கின்றனர்.
மோட்டார் போட் வந்தது,கயிறு மூலமாக
பெரிய கப்பல் கட்டப்பட்டு இழத்துகொண்ட
கடலில் சிறிய தொலைவு வரும்போதே
எதிர்பாரமல் திடிரென கயிறு அறுந்தது.
மோட்டார் போட் ஒட்டுபவர் கயிறு அறுந்ததை கவனிக்காமலே சென்றார்.
மோட்டார் போட் கரை சென்றால் தான்
பெரிய கப்பலில் உள்ளவர்கள் வரவில்லை
என்பதே தெரியும். அலையினால் பெரிய கப்பல் இடமாறினாலும் கண்டுபிடிப்பது கடினம். இவ் உண்மை உணர்ந்து 30 பேருக்கும் நம்மை காக்க யார் உள்ளனர் என மரணபயமே வந்தது. கரை திரும்புவோமா, மீண்டும் குடும்பதாரை பார்போமா என கலங்கினர். சிறிது, சிறிதாக நேரம் சென்றது, அனைவரும் நம்பிக்கை இழக்கும் வேலையில் மோட்டார் போட் சத்தம் கேட்டவுடன் எல்லோர்க்கும் உயிர்பிழைத்தோம் என நிம்மதி. பின்னர்
மோட்டார் போட்டில் கயிறு வலுவாக பெரிய கப்பலுடன் இணைக்கப்பட்டு கரையை நோக்கி புறப்பட்டது. கரை நோக்கி வர, வர களங்கரை விளக்கின் ஒளியில் பார்க்கும்போதுதான் தெரிந்தது
அவர்களுக்காக ஒருவர் காத்திருப்பது.
ஆம் அங்கு தன் ரத்தத்தின் ரத்தங்களுக்காக
புரட்சிதலைவர் MGR காத்திருக்கிறார்
மாலை டெக்னீஷியன் மற்ற அனைவரும்
திரும்பி ஓய்வெடுக்க சென்றனர்
ஆனால் MGR அவர்கள் தன் சக நடிகர்கள்,
30 பேரும் வரட்டும் என கரையிலேயே இருந்தார். மோட்டார் போட் கயிறு அறுந்து
சக நடிகர்கள் இல்லாததும் MGR பதறிபோனார். உடனடியாக மோட்டார் போட்டுடன் அங்கிருந்த மீனவர்களையும், வலுவான கயிறும் கொடுத்து உடனடியாக மீட்க ஏற்பாடு செய்து காத்திருந்தார்.
கப்பலில் இருந்து இறங்கிய அனைவரும்
நம்மை காக்க தலைவன் உருவில் தெய்வத்தை ( MGR )கண்டவுடன் கண்ணீருடன் அவரிடம் சென்றனர்.
அவர்களை அன்பாக தட்டிகொடுத்து, ஆறுதல் கூறி பசியுடன் இருப்பீர்கள் உணவு சாப்பிடுங்கள் என அவர்களுடன் தானும் உணவு உண்டார்.
இது போல அக்கறை கொண்ட ஒருவரை
எப்போது காணமுடியும்.
நம் தெய்வத்தை (MGR) தவிர!
அன்புடன்: OKR ரமேஷ்........... Thanks wa.,