http://i67.tinypic.com/20s9idd.jpg
Printable View
தமிழக அரசு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டி தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது (கெஜட் அறிவிக்கை எண்.163,நாள் 5.04.2019,மற்றும் அரசாணை எண்.217,பொதுத்துறை நாள் 5.04.2019) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயர் வைக்க முதன்மை அழுத்தம் கொடுத்த உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர்,மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அவர்களுக்கு இன்று (6.04.2019)மூத்த எம்.ஜி.ஆர் பக்தர்கள் .நெல்லை எஸ். எஸ்.மணி,ஒம்பொடி C.பிரசாத் சிங்,ஹயாத்,புதியவன்,வெங்கட்ராமதியாகு,சரவணராஜ்கோபால ் ஆகியோர் ஆளுயரமாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.......... Thanks wa.,
உலகநாடுகள் போற்றி புகழ் பாடிய பொன்மனச் செம்மலுக்கு நமது பாரதமும் பரந்த மனதுடன் உண்மையான புகழாரத்தை கடந்த காலங்களில் சூட்டி மகிழ்ந்தது.... பாரத் விருது, பாரத ரத்னா விருது பெற்ற ஒரே இந்திய நாயகன் புரட்சித்தலைவரே ! அது மட்டுமின்றி ஓரு தேசத்தின் தலைவராகவும், இந்தியா என்றால் எம்.ஜி.ஆர் என்று வெளி நாடுகளில் புகழாரம் சூட்டப்பட்டு, .இந்திய திரைப்பட கலைஞர்களில் பலர் இருந்தாலும்.... வெளிநாட்டு மக்களுக்கு உடனே நினைவுக்கு வந்தது தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் மட்டும் தான். அந்த அளவுக்கு 50 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் புகழ் மனம் வீசிய ஒரே திரைப்பட கலைஞர் நமது மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ஒருவரே! சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்த காலத்தில் புகழ் பெற்று மறைந்த பின் சுமார் 30.ஆண்டு காலம் மக்கள் மனதில் வைத்து பூஜித்து கொண்டிருக்கும் ஒரே தேசபிதா மகன். மனித சக்தியின் பேராற்றலின் திருவுருவம். வரலாற்று சிற்பமாம் வள்ளல் திருமகன் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரே!. பட்டங்கள் பல வந்தாலும், அப்பட்டங்கள் சிறப்பு பெற்றது என்றால் பொன்மனச் செம்மலின் திருமுகத்தின் ஒலியால் தான்... அதுப்போல தான் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது என்றால் அதன் மூலம் இன்று தான் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கே புதுப்பொலிவு வந்துள்ளது... ஆகையால் தலைவர் திருமந்திரத்தை நல்ல முறையில் பயன் படுத்தினால் மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாழ்வு நிச்சயம் உதயமாகும்... தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் எதிர்காலத்தில் இல்லை. இது தான் தலைவரின் ஜாதகமாகும்.!. நன்மையே உன் வாழ்வில் ஒளி வீசட்டும்... நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்....அன்பு கொண்ட வள்ளலை தூயமனதுடன் தினமும் வணங்குங்கள் ! வாழ்வில் ஒழுங்கும், ஒழுக்கமும் , பக்தியும் மனநிறைவுடன் கிடைக்கும்.... இது தான் உண்மை நிலவரம். வாழ்க மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். புகழ்! .....என்றும் வள்ளலை நித்தம் வணங்கும். உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
" புரட்சி தலைவர் Dr.எம்ஜிராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் " என்று சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு பெயர் வரக்காரணமான அண்ணன் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு கோடானு கோடிகள் நன்றிகள்,
நாளை 8-04-2019 காலை 9:00 மணிக்கு புரட்சி தலைவரின் நினைவிடத்தில் அரசு வெளியிட்ட அரசாணையை சமர்ப்பணம் செய்யப்படும், அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்,
கலந்து கொள்பவர்கள் நடிகை
"எம்ஜிஆர் லதா " அவர்கள், முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், எஸ்.ஆர்.ராதா, ஐசரி கணேஷ், அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ், முருகு பத்மநாபன், ஓமபொடி பிரசாத், மற்றும் புரட்சி தலைவரின் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்,
அனைவரும் வருக...! வருக...!!!............ Thanks wa., Friends...
இன்று (07/04/19) பிற்பகல் 3 மணியளவில் சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் , மேடை பேனர் , மற்றும் நுழைவு சீட்டு .
http://i64.tinypic.com/versp2.jpg