http://i65.tinypic.com/xpykk7.jpg
Printable View
அபூர்வ சக்தி எம் ஜி ஆர்
ஒன்றும் இல்லாமல் அனாதையாக வந்து தமிழகத்தின் மக்களின் மனதை வென்று அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழகத்தை தன் சுண்டு விரலின் அசைவில் வைத்தது எம் ஜி ஆர் அபூர்வ சக்தி
சினிமா அரசியல் இரு துறையில் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்கும் மேல் வலம் வந்தது எம் ஜி ஆர் அபூர்வ சக்தி
மனித குலத்தில் முப்பிறவி கண்டு இறைவனையே மலைக்க வைத்த வேண்டுதல்களை நிகழ்த்தி காட்டிய அபூர்வ சக்தி எம் ஜி ஆர்
ஊழல் அற்ற எவராலும் வெல்ல முடியாத முதல்வராய் பொற்க்கால ஆட்சி செய்தது எம் ஜி ஆர் அபூர்வ சக்தி
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் அவன் எம் ஜி ஆராக மாறினால் என உலகிற்க்கு உணர்த்தி சக்தி எம் ஜி ஆர் சக்தி
தமிழனின் கல்வி கடவுளாய்
நல்போதனை தந்த வாத்தியாராய்
வீரத்திற்க்கு கருணைக்கு மனிதநேயத்திற்க்கு எடுத்து காட்டாய் கூறும் கடவுளாய்
தமிழனை வதைத்த போது ஒரு நாட்டையே எதிர்த்து போரிட்ட மாவீரனாய் விழங்கியது எம் ஜி ஆரின் அபூர்வ சக்தி
வாழ்க அபூர்வ சக்தி எம் ஜி ஆர்... Thanks Friends...
நம்முடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களுக்கு நிகராக இந்த உலகத்தில் யாரும் பிறக்கவும் இல்லை.பிறக்க போவதுமில்லை.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகள் நம்முடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் MGR அவர்களுக்கு மட்டுமே 100% என்றும் எப்போதும் நன்றாக பொருந்தும்.... Thanks Friends...
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "மகாதேவி " உதயமான தினம் 22/11/1957.
61 ஆண்டுகள் நிறைவு பெற்றது . கருத்தாழமிக்க ,இனிய இசையுடன் கூடிய
பாடல்கள். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் டைட்டில் பின்னணி இசை இந்த படத்தில் இருந்து பிரபலம் .கவிஞர் கண்ணதாசன் பாடல்களுடன் வசனம் அருமை. பட்டுக்கோட்டையாரின் பாடலும் படத்திற்கு மெருகூட்டியது .சுறுசுறுப்பான , விறுவிறுப்பான , சண்டை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது .பி.எஸ்.வீரப்பாவின் வில்லத்தனமான வசனங்கள் மிக பிரபலம் பிரபல இயக்குனர் சுந்தர்லால் நட்கர்னி சிறப்பாக இயக்கியிருந்தார் .
அடைந்தால் மகாதேவி, அல்லது மரணதேவி.
மகாதேவியிடம் பேசும் வசனம் : மரியாதையாக என் இச்சைக்கு இணங்கிவிடு .
இல்லையானால் உன் மங்கல பொட்டு விலகும் , மஞ்சள் அழியும் . உன் மணவாளன் பிணமாவான் . நீ தனியாவாய் . எனக்கு கனியாவாய் .இது போன்ற வசனங்களால் படம் பார்த்த பின் பெண்கள் வசை பாடினர் . வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தனர்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் பல காட்சிகளில் .சில காட்சிகளில் உடைகள் பலத்த கைதட்டலை பெற்றன.
வாள் வீசும் காட்சிகளில் அனல் பறந்தது . ரசிகர்கள் மெய்மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர் . ஆனாலும் நெடுநேரம் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்ததால் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை .அதனால்தான் என்னவோ மிக பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. சராசரி படமாக அமைந்தது .சென்னையில் 5 அரங்குகளில் வெளியான படம்.
வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணாவில் 1958 பொங்கலுக்கு புதிய படங்கள் வரவினால்
53 நாட்களுடன் முடிவுற்றது .வேலூரில் 53 நாட்களும், திருச்சி ராக்சியில் 84 நாட்களும் ஓடியது . மற்ற அரங்கு விவரங்கள் கிடைக்கவில்லை .
மறுவெளியீடுகளில் இந்த படம் எங்கு எப்போது வெளியிட்டாலும் வசூலை வாரி
வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு முறை மறுவெளியீட்டில் 3 அரங்குகளில் 3 வாரங்கள்,பிளாசா, கிரவுன், புவனேஸ்வரியில் ஓடியுள்ளது .