பாராட்டுக்கு நன்றி!
அது அவர் ஸ்பெஷாலிடி! அவரது தனித்திரி பார்க்க:
http://www.mayyam.com/talk/showthrea...na-Pooo/page11
Printable View
பாராட்டுக்கு நன்றி!
அது அவர் ஸ்பெஷாலிடி! அவரது தனித்திரி பார்க்க:
http://www.mayyam.com/talk/showthrea...na-Pooo/page11
கடல் மேல் தீராத காதல் எனக்கும் உண்டு! அருமையான சுற்றுலா அரபுக் கடற்கரைகளுக்கு!
இந்தக் ”கடலை” ஆரம்பம் கொஞ்சம் படுத்தி விட்டது.
கடலை அங்கே தாண்டு தற்கு
கால்கள் ஊன்றி அவனும் நின்றான்..
என்று ஆரம்பித்து எழுதலாம் என்றால் பக்தி மூட் வரவில்லை..
கடலையைச்
சின்ன வயதில்
பக்கத்து வீட்டு மாமா
விரும்பிச் சாப்பிடுவாராம்..
கடலையும் அதிகம் போடுவார் போல..
பாவம்
இப்போது
கால்களில் வீக்கம் வந்து விட்டதாம்..
காரணம் ப்ரோட்டீனாம்..
பருப்பு வகையறாவே சேர்க்கக் கூடாதாம்..
என எழுதி முழுமை பெறுவதற்காக யோசித்துக் கொண்டிருக்கையில் பக்கத்து ஃப்ளாட் மாமாவே
வந்து விட்டார்.. !எனில் அதை அப்படியே விட்டு விட்டேன்.
ஒரு வழியாய் எழுதியது இது.. நன்றி..
**
ஆமாம் கனெக்*ஷனில் ப்ராப்ளமா என்ன..
ஆமாம்! தீராத தலைவலி! விதம் விதமாய் பிரச்சினை! கொல்லாமல் கொல்கிறது! விட்டு விட்டு தொடர்கிறது!!!
ஹை.. ஜாலி தான்.. எனக்கு ஒரு முழுது..(தமிழில் ஃபுல் என்பார்கள்)..புரியலை...(பார் திற்ந்து வைத்தேன் - என எழுதியிருக்கிறீர்களே...!
சிவ சிவா! அபச்சாரம்! பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே என்னை ரட்சியும்! பாவி நான் அறியாது செய்த பிழை! அல்லாவே இது நல்லாவே இல்லை!
ஐய்யா, மிக கவனமாக குறித்துக் கொள்ளுங்கள்: எல்லா இடங்களிலும்-வீட்டில், வெளியில், இணையத்தில் மிகத் தீவிரமாக குடியை எதிர்ப்பவள் நான்; என்னை பல ஆண்டுகளாய் அறிந்தவர்கள் குறுக்கெழுத்து திரியில் போல, எனக்காக 'உற்சாக' பேச்சை குறைத்துக்கொண்டு அடக்கி வாசிப்பார்கள். எனக்கு மன்னிக்கும் சுபாவம், பிழைகளை, 'பலவீனங்களை' 'ஏற்றுக்' கொள்ளும் குணம் அறவே கிடையாது!!!
அரை மனிதனை முழு மனிதனாய் சமைக்கும் பெண்ணின் மகத்தான சக்தியை நான் சிலாகிக்க இப்படி பிள்ளையார் பிடிக்க குரங்காகலாமா? நற நற..பல்லை கடிக்கும் சத்தம் கேட்கிறதா?:argh::x:angry2::curse:
அது யாருங்க அந்தப் பெண்.. மனிதனைச் சமைக்கிறாளே...!!! காட்டு வாசியோ..!! (சரிங்க..jokeக்குத் தான் சொன்னேன்..அதுக்கு மறுபடி நற ந்ற சொல்லாதீங்க..)...
**
ஆனா ஒண்ணு... பெண்ணின் சக்தியைப் பற்றி எழுதி இருக்கேன்னு நீங்க சொன்னதுக்குஅப்புறம் தான் எனக்கு கவிதையே புரிந்தது..
**
அது சரி..முழுதாய் மாற்றுவீங்களாமில்ல.. நாங்கல்லாம் யாரு...மாறின மாதிரி நடிப்போமில்லை..!!!
நாய் வாலை நிமித்த முடியாதுன்னு எங்களுக்கு தெரியாதாக்கும்! வாலை சுருட்டிக் கொண்டு நல்லபடி நடக்க/நடிக்க வைக்க முடிவதே எங்கள் பெருஞ்சாதனை!!!
சின்னதா கதை எழுதிப் பார்க்கலாம்னு ஒரு யோசனையில் இருக்கிறேன்..ரொம்ப நாளாவே.. ஓரிரண்டு நல்ல தலைப்புக் கொடுங்களேன்..தனித்திரி தொடங்கி எழுதிப் பார்க்கிறேன்..
நல்ல கதையா இருக்கே! வேணா ஒன்னு செய்யலாம்- முன்னொரு காலத்தில், இந்த மன்றத்தின் பொற்காலமாக நான் கருதும் அருமையான நண்பர்கள் பலர் பங்கு கொண்டிருந்த காலம், எல்லோருமாய் சேர்ந்து 'மிக அருமையாக' தொடர் கதை எழுதினோம் - ஆளுக்கு ஒரு வரியிலிருந்து அரை பக்கம் வரை கதையை மனம் போல தொடரலாம்.அப்பப்பா, எத்தனை திருப்பங்கள், ஆளுக்கு ஒரு பக்கம் வம்பாக இழுத்துச் செல்ல முயல..ஒரே ஜாலி!http://www.mayyam.com/talk/showthrea...=kathai+thodar
நாடகம் போட்ட கூத்தை பழைய திரிகளில் 'கொலை கொலையா முந்திரிக்கா'வில் தேடிப்பார்க்கவும்!
கதைப் பகுதியில் ஏகப்பட்ட பேர் எக்கசக்கமாய் கதை எழுதியிருக்கிறோமே! என் கதைகள் கூட நிறைய இருக்கே!