-
மோனை பாடல்களில் எங்கே வரவேண்டும்?
பதில்: பொதுவாகச் சொன்னால், நான்கு சீர் அடிகளில் 1-3 மோனை சிறப்பு. ஐந்து சீர் அடிகளில் 1-5 சிறப்பு; 1-3-5 இன்னும் சிறக்கும். ஆசிரிய விருத்தங்களில், அந்தந்த விருத்தத்திற்குரிய சீர் வாய்பாடினைப் பொறுத்து வரும்.
( நன்றி. பேரா. பசுபதி)
-
பட் ஒன் திங்க் கல் நாயக் முக்கியமா தளை என்பதை நாம் டச் பண்ணலை.. நாளைக்கு அல்லது ஈவ்னிங்க் பார்க்கலாம்..
-
கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்
ம-வ ஒரே இனம். (எ-கா) வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது (வ-மா- மோனை) என்பது முரணாக உள்ளதே? (ம- மெல்லினம்; வ - இடையினம்)
-
அது யாப்பிலக்கணத்தில் வருகிறது. ஓசை மாறுபடாததால் இருக்கலாம்..
-
இரு சீர் – தேமா புளிமா கருவிளம் கூவிளம்
முச்சீர் தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் தெரிந்தாகி விட்டது.. இப்போது தளை..
டபக்குன்னு வைரமுத்தோட பாட்டுக்குப் போவோமா
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு ( இதுக்குச் சீர் வாய்ப்பாடு போட்டுப் பாருங்க கல் நாயக் (விஷயம் இருக்கு))
ஸோ வைரமுத்து பொறுத்தவரைக்கும் இர்வும் பகலும் உரசிக் கொள்வது அந்திப் பொழுது.. இல்லியோ
இந்த ஒரு வார்த்தை (இருசீரோ முச்சீரோ நாற்சீரோ) அடுத்த வார்த்தையோட எப்படி உரசறதுங்கறத த் தீர்மானிப்பது தளை..
இப்போது தளைகளின் வகைகள் பற்றி என் குரு நாதர் பசுபதி சொல்லியிருப்பதிலிருந்து :
(1) ஈரசையான இயற்சீர் நான்கு(தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்)- இவை ஆசிரிய உரிச்சீர்கள் எனப்படும். பெரும்பான்மை அகவற்பாவிலும், வெண்பாவிலும் பயின்று வரும். தேமா/புளிமா தவிர்த்து விளச்சீர்கள் சிலநேரம் கலிப்பாவிலும் பயின்று வரும்.
(2) மூவசையான காய்ச்சீர் நான்கு (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) இவை வெண்பா உரிச்சீர்கள் எனப்படும். இவை வெண்பாவில் அதிகம் பயின்று வரும்.
(3) மூவசையான கனிச்சீர் நான்கு (தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி) இவை வஞ்சி உரிச்சீர்கள் எனப்படும். இவை வஞ்சிப்பாக்களில் அதிகம் பயின்றுவரும்.
(4) நான்கசையான பூச்சீர் எட்டு (தேமாதண்பூ, புளிமாதண்பூ, கூவிளந்தண்பூ, கருவிளந்தண்பூ, தேமாந்நறும்பூ, புளிமாந்நறும்பூ, கூவிளந்நறும்பூ, கருவிளந்நறும்பூ)
(5) நான்கசையான நிழற்சீர் எட்டு (தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், தேமாந்நறுநிழல், புளிமாந்நறுநிழல், கூவிளந்நறுநிழல், கருவிளந்நறுநிழல்)
இனி தளைகளைப் பற்றி பார்ப்போம். தளைகள் மொத்தம் ஏழு வகைப்படும். அவையாவன: (1) நேரொன்றிய ஆசிரியத் தளை, (2) நிரையொன்றிய ஆசிரியத் தளை, (3) இயற்சீர் வெண்டளை, (4) வெண்சீர் வெண்டளை, (5) கலித்தளை, (6) ஒன்றிய வஞ்சித்தளை, (7) ஒன்றாத வஞ்சித்தளை. ஒவ்வொரு தளையினைப் பற்றி விளக்கங்களைக் கீழே வரிசையாகத் தந்திருக்கிறேன்.
1) நேரொன்றாசிரியத் தளை : (மா முன் நேர்) அதாவது தேமா, புளிமா அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசை ஒன்றி வருவதாகும்.
(எ-கா) எடுத்துக்காட்டாக முழுவதும் தேமாச்சீர் வரும்படி நான் இயற்றிய நிலைமண்டில ஆசிரியப்பா கீழே:-
தங்கத் தட்டும் சங்காய் மின்னும்
மங்காப் பட்டும் மங்கை நல்லாள்
கன்னம் என்னும் காந்தம் முன்னே
என்றும் நேரோ சொல்வீ ரிங்கே!
2)நிரையொன்றாசிரியத் தளை : (விள முன் நிரை) அதாவது கருவிளம், கூவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாவது சீரின் முதலான நிரையசையுடன் ஒன்றி வருவதாகும்
(எ-கா) எடுத்துக்காட்டாக முழுவதும் கருவிளச்சீர் வரும்படி நான் இயற்றிய நிலைமண்டில ஆசிரியப்பா கீழே:-
மதுநிகர் கவிதையை மயக்கிடும் வகையிலே
செதுக்கிடும் சிலையென சிறப்புடன் வனைந்திடும்
புதுமையின் கவிஞரே! புதுக்கவி புனைந்திடும்
புதுவையின் கவிஞனை புலவனாய் உணர்கவே!
3) இயற்சீர்வெண்டளை : (மா முன் நிரை – விள முன் நேர்) அதாவது தேமா, கூவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நிரையுடன் ஒன்றுவதும், கூவிளம், கருவிளம் அமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாவது சீரின் முதலான நேரசையும் ஒன்றுவதும் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
(எ-கா) எடுத்தக் காட்டாக ஒரு குறள்வெண்பா கீழே:-
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
4) வெண்சீர் வெண்டளை : (காய் முன் நேர்) அதாவது காய்ச்சீர் அல்லது பூச்சீர் இவைகளில் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நேரசையுடன் ஒன்றுவது. இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியது பூச்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நேரசையால் காயெனக் கொள்ளபடுதல் வேண்டும்.
(எ-கா) எடுத்துக் காட்டாக ஒரு குறள்வெண்பா கீழே:-
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
5) கலித்தளை : (காய் முன் நிரை) அதாவது காய்ச்சீர் அல்லது பூச்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நேரசை இரண்டாவது சீரின் முதலான நிரையும் ஒன்றுவது. இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியது பூச்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நேரசையால் காயெனக் கொள்ளபடுதல் வேண்டும்.
(எ-கா) எடுத்துக் காட்டாக வெண்கலிப்பா ஒன்று கீழே:-
ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
தார் வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து
6) ஒன்றிய வஞ்சித்தளை : (கனி முன் நிரை) அதாவது கனிச்சீர் அல்லது நிழற்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாம் சீரின் முதலான நிரையசையுடன் ஒன்றுவது. இங்கு நினைவிற் கொள்ளப்பட வேண்டியது நிழற்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நிரையசையால் கனியெனக் கொள்ளபடுதல் வேண்டும்.
7) ஒன்றாத வஞ்சித்தளை : (கனி முன் நேர்) அதாவது கனிச்சீர் அல்லது நிழற்சீர் ஒன்றமைந்த முதற்சீரின் ஈற்று நிரையசை இரண்டாம் சீரின் முதலான நேரசையுடன் ஒன்றுவது. இங்கும் நினைவிற் கொள்ளப்பட வேண்டியத்உ நிழற்சீர் எட்டும் அவைகளின் ஈற்று நிரையசையால் கனியெனக் கொள்ளபடுதல் வேஎண்டும்.
(எ-கா)ஒன்றிய/ ஒன்றாத வஞ்சித் தளைகளுக்கு எடுத்துக்காட்டாக குறளடி வஞ்சிப்பா ஒன்று கீழே:
மந்தாநிலம் வந்தசைப்ப (ஒன்றாத வஞ்சித்தளை – கனி முன் நேர்)
வெண்சாமரை புடைபெயர்தரச் (ஒன்றிய வஞ்சித்தளை -கனி முன் நிரை)
செந்தாமரை தாள்மலர்மிசை (ஒன்றாத வஞ்சிதளை – கனி முன் நேர்)
எனவாங்கு (தனிச்சொல்)
இனிதிருந் தோங்கிய இறைவனை (ஆசிரிய சுரிதகம்)
மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே! (ஆசிரிய சுரிதகம்)
-
இவ்வளவு விஷயம் இருக்கு கவிதை எழுதுவதில் !
இது ஒண்ணுமே தெரியாமல், என்னமாய் கிறுக்கியிருக்கிறேன் நான் ! :banghead:
-
குட்டிக் குட்டி வெண்பாஸ் லாம் பாக்கலாமா
இப்போ வெண்பான்னா எந்தத் தளை வரணும்
நேரொன்றாசிர்யத் தளை நிரையொன்றாசிரியத் தளை நோ..
இயற்சீர் வெண்டளை மா முன் நிரை எக்ஸாம்பிள்ஸ் கண்ணன் கவிதா
அஜீத் அமலா
கனவு வனிதை
வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர்
கல்நாயக் கல்பனா
முரளிதரன் – மோனாலிசா..
சரியோ.
மகாகவி காளிதாஸ் படத்துல வந்த வெண்பா
அன்னையே எம்மில் அரும்புலவர் யாரென்று
இன்னமுத வாயால் இயம்பு
சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (திருக்குறள்)
வெண்பா ஆக்சுவலா நாலடில வரும்.. இரண்டடில வர்றது குறள் வெண்பா..
எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு
மேற்கண்ட பாட்டுல என்ன மிஸ்டேக்..
எ க்கு உ மோனை கிடையாது –
எண் சின் வண் கண் எதுகை ஓகே
இப்போ நாலு வரி இருக்குது இதில..கடைசி அடி மூணு சீர்ல இருக்கு இல்லியா..
சரி அந்தக் கடைசி வரி மூணுசீர்ல கடைசிச் சொல் இருக்கில்லியோ அது வந்து இந்த ஃபார்முலால இருக்கணும்.எந்தஃபார்முலா. நாள், மலர், காசு பிறப்பு
இந்த வெண்பால கடைசிச் சொல் காப்பு ப் சைலண்ட் ஸோ காசு வாய்ப்பாடுல சேர்த்துக்கலாம்
சரி வெண்பாவோட இலக்கணம் ஓகேயா இருக்கா
எண்ணுகையில் நெஞ்சுள்ளே கூவிளங்காய் தேமாங்காய் (ஆக்சுவலா கூவிளங்காய் வெண்பால அலோவ்ட் கிடையாது..பட்கொஞ்சம் அப்ப்ப ஓசை குறையாம இருந்துச்சுன்னா வெச்சுக்கலாம். அட் த டிஸ்க்ரீஷன் ஆஃப் கவிஞர் ( நாம தான் எக்சாம்லாம் எழுதப் போறதில்லையே))
அதாவது எண்ணுகையில் நெஞ்சுள்ளே காய் முன் நேர்.
உற்சாகம் தான் பிறக்கும் இதுவும் காய் முன் நேர் தான்
சின்னக் குழவியவன் – சின்ன தேமா குழவியவன் கருவிளங்காய் பட் இப்போ சின்ன ந்னா இன்னா தேமா மா. குழ நிரை..ஸோ மா முன் நிரை
இப்படியே எல்லாத்துக்கும் செக் பண்ணுங்க.. சரியா இருக்கான்னு சொல்லுங்க
மேலே எழுதிப் பார்த்தது இன்னிசை வெண்பா . அப்படின்னா நாலு வரிகளுக்கும் ஒரே எதுகை தான் வரணும் எண் சின் வண் கண் எதுகை
புரியலை.. நேரிசை வெண்பான்னு இன்னொன்னு இருக்கு.. அதப் பார்த்தா இது புரிஞ்சுடும்..
-
முரளி.. கைவசம் தமிழ் இருக்கு கற்பனை இருக்கு.. என்ன கொஞ்சம் பாத் தான் போடணும் அதான் இங்க இருக்கே.. ஈஸியாப் போட்டுடலாம்.. முட்டிக்கல்லாம் வேணாம்..
-
இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் ! உங்கள் B +ve attitude !
நான் தயார் ! நீங்க தயாரா? :shoot:
அடடா ! சந்தோஷத்திலே நன்றி கூட சொல்ல மறந்திட்டேனே ! :ty::ty:
-
ooh yes..ஆனாக்க நான் கற்றதே கைம்மண்ணளவு தான்.. எனக்குத் தெரிஞ்சதச் சொல்றேன்.. :)