-
நடிகர்திலகத்தின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு 30:09:2018 அன்று 52 வார தொடர் அன்னதான நிகழ்ச்சியினை ஒரு புள்ளியிலிருந்து துவக்கினோம். ஐயனின் ஆசிர்வாதத்தால் இன்று பொன்விழா வாரத்தை எட்டியிருக்கிறது இந்த சமூகப்பணி.
ஓரிரு வாரங்கள் நடக்கும்...
நாலு வாரங்கள் நடந்தாலே பெரிய விஷயம்...
கூட்டு முயற்சி பலன் தராது...
ஒவ்வொரு வாரமும் யாரைப் பிடிப்பது......
என்று எந்தவொரு கேள்விக்கும் இடங்கொடுக்காமல், எந்த வேகத்தில் புறப்பட்டோமோ அதே வேகத்தில் ஐம்பதாம் வாரம்வரை பயணித்திருக்கிறது இந்தக்குழு.
இந்தப் பெரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய நடிகர்திலகத்தின் அத்தனை ரசிகர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி.
தமிழகத்தில் எந்தவொரு ரசிகக் கூட்டமும் செயல்படுத்தியிராத அரும்பணி இது.
தொடர்ந்து ஐம்பது வாரங்களும் நிகழ்ச்சியின் நேர்த்தி குறையாமல், உணவின் சுவை குறையாமல், ஆதரவளித்த நெஞ்சங்களின் கூட்டம் குறையாமல் நடந்திட்ட இச்சேவைக்கு முதன்மைக் காரணம் குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் அமைப்பாளர் திரு.பி.கணேசன் என்றால் மிகையாகாது. பொன்விழா வார நிகழ்ச்சி முடிந்தகையோடு இதோ அடுத்த ஐம்பது வாரங்களுக்கான அன்னதான அறிவிப்பையும் அவர் வெளிப்படுத்திவிட்டார்.
அடுத்த 52 வாரங்களுக்கான தொடர் அன்னதான நிகழ்ச்சி ஞாயிறு மட்டுமன்றி சனிக்கிழமையும் சேர்த்து வாரம் இருமுறை நடைபெறும் என்று அவர் கூறியபோது மனம் துள்ளலில் லயிப்பது வியப்பில்லை.
திலகத்தின் ரசிகர்களின் எண்ணமும், ஆசைகளும் ஒரு நதியினைப்போல... அதை வெறும் சங்குக்குள்ளேயெல்லாம் அடங்கி விடாது.. அடக்கவும் முடியாது என்பது உறுதி.
நிற்க.
இன்றைய தொடர் அன்னதானத்தின் பொன்விழா வார உபயதாரராக பங்களிப்புச் செய்தவர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த திரு. ஸ்ரீதர் அவர்கள்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு குழுவின் சார்பாக திரு.K.S.நரசிம்மன் அவர்கள் ஐயனின் நூல்களும் நினைவுக் குறிப்பேடும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு திரு.ML.கான், திரு.R.S.சிவா, திரு.ஏழுமலை, திரு. R. குமார், திரு. பாண்டியன், திரு. பாலாஜி, திரு.S.ராமஜெயம், திரு.E.நந்தகுமார், திரு. காமராஜ், திரு. பூவராகன், திரு.சுகுமார், திரு. MM.சக்திவேல், திரு.காந்தி ( ஒரகடம்) உள்ளிட்ட சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி...
வருகின்ற அக்டோபர் முதல்தேதி நடைபெறவுள்ள ஆயிரம் பேருக்கு அன்னதான நிகழ்ச்சிக்குத் தன் பங்களிப்பாக ஆயிரம் ரூபாயினை இன்றைய நிகழ்ச்சியில் அமைப்பாளர் கணேசனிடம் வழங்கிச் சிறப்பித்தார் மயிலை உலகமாமன்னன் சிவாஜி மன்றத் தலைவரான திரு. காமராஜ் அவர்கள். அவருக்கு எம் நன்றி.
நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு...
அன்புடன்... வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3d&oe=5E0D7B67https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f2&oe=5E03B943
Thanks வான்நிலா விஜயகுமாரன்
-
-
டிஜிட்டலில் மறுவெளியீடு கண்டு சாதனை படைத்து யாராலும் எட்டிப்படிக்க முடியாத
முதலிடத்தில் இருக்கும் கர்ணன் படத்தின் சாதனை பட்டியல்
இதுதான்டா_சாதனை
2012 மார்ச் 16-ல் தொடங்கி 2012 ஆகஸ்ட் 15 ஆம் நாளுக்குள், சரியாக 5 மாதகால இடைவெளியில் 300க்கும் மேலான அரங்குகளில் திரையிடப்பட்டு, சுமார் 500 வாரங்கள் வரை இணைந்து ஓடி, தொடர்ச்சியாக 152 நாட்கள் ஒரே அரங்கவளாகத்தில் வெற்றி நடைபோட்டு, 5 கோடி ரூபாய்வரை வசூலை ஈட்டிய படம் #நடிகர்திலகத்தின்_கர்ணன்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு பழைய திரைப்படம் குறுகிய காலத்துக்குள் இத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டு இத்தனை பெரிய வசூலை ஈட்டியதாக கர்ணனுக்கு முன்பும்சரி பின்பும்சரி எதுவும் இல்லை.
அத்திரைக்காவியம் தமிழகத்தில் மாவட்ட ரீதியாக திரையிடப்பட்ட அரங்குகளும் ஓடிய நாட்களும் முகநூலில் முதன்முதலாக உங்கள் பார்வைக்கு பதிவிட்டிருக்கிறேன்.
#நன்றி #திவ்யாபிலிம்ஸ்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...92&oe=5E118C5E
கர்ணன் மறுவெளியீட்டில் 20 வாரம் கடந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது
வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து
நன்றி வான்நிலா விஜயகுமாரன் (முகநூல்)
-
-
-
-
-
-
-