https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...ab&oe=5C43A0E6
Printable View
https://youtu.be/GMi3TMNImKE
சிவாஜி பாட்டு -46
---------------------------------
மனிதனின் கண்களில் நடப்பு
மட்டுமே காட்சிகளாய் இருப்பதில்லை.
அவனது இன்ப, துன்பங்கள் நிரம்பிய, அவன் மிகவும் சிரமப்பட்டுத் தாண்டி வந்த அவனது கடந்த காலம்...
ஏற்கனவே அவன் நுகர்ந்து தவித்த துன்பங்களின் பொசுங்கல் வாடையை இனியும்
நுகர்ந்து விடலாகாதென்று அவன்
பிரயத்தனங்கள் மேற்கொண்டிருக்கிற அவனது
இன்றைய நிகழ்காலம்...
வளமும், புகழுமாய் அவன் எதிர்கொள்ளக் துடிக்கிற அவனது
எதிர்காலம்...
இவற்றிலும் அவன் கண்களுக்குக் காட்சிகளிருக்கின்றன.
---------
"இருந்தோம்.. வாழ்ந்தோம்.. போனோம்" என்று அர்த்தமற்ற
வாழ்க்கை வாழ்கிற வெகுசராசரி
மனுஷர்களைத் தவிர்த்த மற்ற
எல்லோருக்கும் அவசியமான பாடல்.. இது.
எதிர்காற்றை மீறி மேட்டில் மிதிவண்டி அழுத்துவதற்கு நிகரானது.. நடைமுறை வாழ்வின்
சவால்களை மீறி இலட்சியத்துடன் வாழ்வது.
வாழ்வில் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும், நம்பிக்கை என்பது
அவசியத் தேவையாகிறது.
" எங்களுக்கும் காலம் வரும்"
இந்தப் பாடலை நிறையப் பேர்
நம்பிக்கைப் பாடல் என்றே கருதுகிறார்கள்.
ஊன்றிக் கவனித்தால் தெரியும்..
இது வெற்றிப் பாடலென்பது.
" நாளை இப்படிச் செய்வோம்.. அப்படிச் செய்வோம். அப்போது எங்களுக்குக் காலம் வரும்" என்பதாய் இந்தப் பாடல் நகரவில்லை.
"இன்றொரு இனிமை செய்தோம். வென்றோம்" என்று பாடல் நகர்கிறது.
உழைப்பின் உன்னதம் உணர்த்துவதாய் ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கிய சந்தோஷத்தில் வெடிக்கும் பாடல்
இது.
" செய்வோம்" என்கிற அலட்டல்
கிடையாது. செய்து முடித்தவர்களின் அடங்காத மகிழ்வு.
ஆர்ப்பாட்டமில்லாத ஆனந்தம்.
கர்வம் தடவாத களிப்பு.
புயலாய்ச் சாய்த்து விட்டுப் போகிற வேகமில்லை.. இந்தப் பாடலில். வியர்வை உலர்த்தும்
மென்காற்றாய் ஒரு நிதானம்
இந்தப் பாடலில்.
நன்மை செய்து விட்டு நல்ல விளைவுக்குக் காத்திருப்போரின்
பொறுமை " காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே!"
என்ற வரிகளில் புரியும்.
அடுத்த மனிதனுக்கும் அன்பு கொடுத்து வாழ நினைக்கும் பெருங்குணம் " உறவும், சுவையும்
என்றும் நாம் வளர்ப்போம்" என்ற
வரிகளில் புரியும்.
--------
ஒளிவு, மறைவற்ற உள்ளத்தின்
பேரானந்தம் பின்னணியில் இசை போட ஆடிப் பாடும் பெருங்கூட்டத்தை நம்மோடு ஒப்பிடலாம்.
அணிந்திருக்கிற முழுக்கால் சட்டையும், வெள்ளை மேல்சட்டையும் போன்ற "தாராளமான" மனங்கொண்ட நம்
தலைவன் நம்மை வைத்துக் கொண்டிய பாடிய " வஞ்சமில்லா
வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என்கிற வரி
அப்படியே பலிக்கும்.
நம் சபைகளில் என்றுமிந்த வெற்றிப் பாடல் ஒலிக்கும்.