யாழ் சிவாஜி ரசிக நண்பர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்
http://oi66.tinypic.com/2s80lfc.jpghttp://oi65.tinypic.com/2ef5o40.jpghttp://oi63.tinypic.com/2wdaky8.jpg
Printable View
யாழ் சிவாஜி ரசிக நண்பர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்
http://oi66.tinypic.com/2s80lfc.jpghttp://oi65.tinypic.com/2ef5o40.jpghttp://oi63.tinypic.com/2wdaky8.jpg
( a v m குமரன் )
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...e5&oe=5C8317DB
சிவாஜி – எம்.ஜி.ஆர்., வள்ளல் யார்?
பத்திரிகையாளர்களுக்கு ‘கவர்’ கொடுக்கும் பழக்கம் ‘சிவாஜி’யிடம் இல்லாததால் அவரை ‘கஞ்சன்’ என்று கதை கட்டியவர்கள் பத்திரிகையாளர்களே.
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ஒழித்து, காமராஜர் கொண்டு வந்த கிராமபுறப் பள்ளிக் கூடங்கள் திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாய் கொடுத்தவர் சிவாஜி கணேசன். இன்றைய மதிப்பு சில கோடி....
அதற்காகவே ‘கொடைவள்ளல்’ என்றுவிடுதலையில் தலையங்கம் எழுதி கொண்டாடினார் சிவாஜியை பெரியார்.
100 முறைக்கும் மேல் நடத்தப்பட்ட கட்டபொம்பன் நாடகத்தில் வசூலான லட்சக்கணக்கான தொகையையும் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கே கொடுத்தார் சிவாஜி.
சிவாஜியைப் போல் அரசு திட்டங்களுக்கு அப்போது எம்.ஜி.ஆர். எந்த நன்கொடையும் கொடுத்ததில்லை. அவர் பிரமுகர்களுக்கு உதவி செய்தார். அதைப் பத்திரிகையாளர்களுக்குக் கவர் கொடுத்து செய்தியாக்கிக் கொண்டார்.
வாங்கிய பிரபலங்களும் இன்றுவரை அதைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். - வே.மதிமாறன்.
பாகப்பிரிவினை
இன்றைக்கு 59 ஆம் ஆண்டினை நிறைவு செய்யும் பாகப்பிரிவினை வெற்றிக் காவியத்தை, இந்தி மொழியில் தயாரிக்க முடிவெடுத்து, அன்றைக்கு அங்கு முன்னணி நாயகர்களாக இருந்த திலீப்குமார், ராஜ்கபூர், தேல் ஆனந்த் ஆகியோரை அணுகியபோது, நடிகர்திலகத்தின் ஊனமுள்ளத் தோற்றமும் நடிப்பும் கண்டு, இவரைப்போல் நம்மால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். கடைசியில் சுனில்தத் நடிக்க, பீம்சிங் இயக்க, 'காந்தான் ' என்ற பெயரில் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கிடைத்த பெரும் இலா...
பத்தில் தயாரிப்பாளர் வாசுமேனன் 'வாசு ஸ்டூடியோ'வையே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின்போது கண்டினியூட்டி ( Continuity) தவறக்கூடாது என்பதற்காக, நடிகர்திலகம் ஏற்றிருந்த கன்னையன் கதாப்பாத்திரத்தின் கையசைவுகளை கவனிப்பதற்காகவே ஒரு உதவி இயக்குநரை நியமித்திருந்தது அன்றைய திரையுலகில் அதிசயமான செய்தி.
நடிகர்திலகம் நடித்து பராசக்திக்குப் பிறகு 200 நாட்களைக் கடந்த இரண்டாவது கருப்பு-வெள்ளைப் படமான பாகப்பிரிவினை 'கலசி உண்டே கலது சுகம்' என்னும் பெயரில் தெலுங்கிலும், 'நிறகுடம்' என்னும் பெயரில் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
ஸ்ரீ, கீதா, சாரதா, ஸ்வஸ்திக் என்று பெங்களூரில் முதன்முதலாக நான்கு அரங்குகளில் 50 நாட்ளைக் கடந்து ஓடிய பாகப்பிரிவினை முதன்முதலாக திண்டுக்கல் NVGB அரங்கில் 100 நாட்கள் ஓடிய படமாகும்.
மதுரை சிந்தாமணி அரங்கில் 216 நாட்கள் ஓடிய மொத்த வசூல் ரூ. 3,36,180.54 ஆகும்.
1959 ஆம் ஆண்டுக்கான தேசியவிருது வெள்ளிப்பதக்கம் பெற்ற படமும்கூட.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c0&oe=5C80EA78