https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...eb&oe=5B65F4CE
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
11 வது வெற்றிச்சித்திரம்
இல்லற ஜோதி வெளியான நாள் இன்று
இல்லற ஜோதி 9 ஏப்பிரல் 1954
https://upload.wikimedia.org/wikiped...ara_Jyothi.jpg
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...80&oe=5B329A9F
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0e&oe=5B6B60C4
vaannila vijayakumar
உங்களுக்குத் தெரியுமா?
வைர நெஞ்சம் படத்திற்கு முதலில் வைத்தப் பெயர் ஹீரோ - 72 என்பது எல்லோர்க்கும் தெரியும்.
அந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தபோது வைத்தப் பெயர் என்ன தெரியுமா?
HERO - 76....
காரணம் வழக்கம் போலத்தான்.
1975 ன் இறுதியில் ' பெத்த மனிஷி ' என்ற பெயரில் வெளியான ஞானஒளியும், 1976 ன் துவக்ககத்தில் ' பங்காரு பதக்கம் ' என்ற பெயரில் வெளியான தங்கப்பதக்கமும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதனைத் தொடர்ந்து வெளியான வைர நெஞ்சத்திற்கு இந்தப் பெயரைச் சூட்டி விட்டனர். அது மட்டுமன்றி 1976 ல் மட்டும் 6 படங்களும், 1977 ஆம் ஆண்டில் 10 படங்களும் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகின.
1954 முதல் 1988 வரை நடிகர்திலகம் நாயகனாக கோலேச்சிய காலத்தில், தமிழைப் போலவே தெலுங்கிலும் ஆண்டுதோறும் மொழிமாற்ற்ம் செய்யப்பட்டு அய்யனின் படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அய்யனின் முதல் படம் அன்பு. அது 1954 ல்
' அபெக்ஷா ' என்ற பெயரில் வெளியானது.
அமரர் திரு பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கணக்குப்படி நடிகர்திலகம் நடித்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 25 வது படம் 1962 ல் வெளியான ' பவித்ர பிரேமா ' (பார்த்தால் பசி தீரும்)
50 வது படம் 1970 ல் வெளியான ' சிங்கப்பூர் அன்த்தகுமு' ( அஞ்சல் பெட்டி 520)
75 வது படம் 1977 ல் வெளியிடப்பட்ட
' பிரஜல கோசம் ' ( அவனொரு சரித்திரம் )
100 வது படம் 1993 ல் வெளியான ' சத்ரிய புத்ருடு ' (தேவர் மகன்)
கடைசியாக வெளியான படம் 1998 ல் வெளியான ' நரசிம்ஹா ' ( படையப்பா)
சிவந்தமண், தங்கப்பதக்கம், புதிய பறவை, தெய்வ மகன், சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம், முதல் மரியாதை, படையப்பா போன்ற படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடிய மாபெரும் வெற்றிப் படங்களாகும்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a0&oe=5B31BAC1
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fb&oe=5B608192
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5b&oe=5B304B38
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d6&oe=5B6831A6
Raghavan Nemili Vijayaraghavachari
உண்மையான வசூல் சக்ரவர்த்தி அன்றும் , இன்றும் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். அன்றைய கால கட்டத்தில் அவர் திரைப்படங்களில் நடித்த போது, ஒரே நாளில...் இரண்டு படங்கள் திரையிடப்பட்டது மொத்தம் 12 படங்கள் - ஆறு முறை. அவற்றில் இரண்டு தடவை திரையிடப்பட்ட இரண்டு படங்களும் 100 நாள்களைக் கடந்து பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அவை ஊட்டி வரை உறவு , இரு மலர்கள் மற்றும் சொர்கம், எங்கிருந்தோ வந்தாள். மீதமுள்ள படங்களில் ஒரு படம் 100 நாள்களும், மற்றொரு படம் 50 நாள்கள் முதல் 75 நாள்கள் வரை ஓடிய வெற்றிப் படங்கள்.
ஒரு சமயம் சென்னை சித்ரா, சாந்தி, வெலிங்டன், பாரகன், கெயிட்டி, மிட்லண்ட் திரை அரங்குகளில் நடிகர்திலகத்தின் புதிய படங்களெ வெளியிடப்பட்டு, அவர் படங்களை மட்டுமே சென்னையின் மையப் பகுதியான மௌண்ட் சாலையில் பார்க்கும் படி இருந்தன. இவ்வாறு பல திரை அரங்குகளில் அவருடைய படங்களே ஓடிக் கொண்டிருந்தாலும் அத்தனை படங்களும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தன.
நடிகர் திலகம் நடித்த ஞான ஒளி படம் திரையிடப்பட்ட போது, சென்னையில் பல திரை அரங்குகளில் அவர் ஏற்கனவே நடித்து வெளியாகி , வெற்றிக் கொடி ஈட்டிய படங்கள் , மறு வெளியீடாக திரையிடப்பட்டு , பொது மக்களால் ஆர்வத்துடன் பார்க்கக் கூடிய படங்களாக அமைந்தன.
அவ்வளவு படங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் ஓடிக் கொண்டிருந்த போதும், புதுப் படமாக வெளியான ஞான ஓளி திரைப்படம் ப்ரம்மாண்ட வசூலை வாரிக் குவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்கள் முதல் பத்து படங்களுக்கும் மேல் வெளியிட்டு, தன்னுடைய படங்களை, சிவாஜி ரசிகர்களால் மட்டுமின்றி , நல்ல நடிப்பை ரசிக்கும் பொது மக்களாலும் விரும்பிப் பார்க்க வைத்தவர் இவர் மட்டுமே,
மற்றொரு நடிகர் அவர் ஒரு படம் வெளியிட்டால், அந்தப் படம் திரையிடப்பட்டு, அவை ஓடி முடியும் நிலையிலேயே மற்றொரு படத்தை வெளியிடுவார். தன்னுடைய ஒரு படம் திரையிடப்படும் போது, சிறிது காலத்திற்குள்ளேயே , அவரின் அடுத்த படம் வெளியிடப்பட்டால், முன்னர் வெளியான படம் வசூலில் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட இடைவெளி கொடுப்பார். ஆனால் நடிகர் திலகம் அவ்வாறெல்லாம் நினைக்க மாட்டார், நடிப்பிலும் , கதை அம்சத்திலும் சிறந்த படங்களை வெளியிடுவதால் அவை மக்களால் ஈர்க்கப்பட்டு , பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுவார்.
இன்றும் கூட அவருடைய சில படங்கள் மறு வெளியீட்டில் வசூலை வாரிக் குவிப்பதுடன் 100 நாள்களை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் ஆதரவே இல்லாமல் , பொது மக்கள், மற்றும் சிவாஜி ரசிகர்களின் ஆதரவினால் அவை மீண்டும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. ஆக அன்றும் , இன்றும் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வசூல் சக்ரவர்த்தி.
திரைப்படங்களில் அற்புதமாக நடிக்கும் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவராக இருந்ததினால் , அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதைப் பற்றி ஒரு செய்தி.
சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்து தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் பொழுது, தன் உற்ற நண்பராகப் பழகிய எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்ற காரணத்தினால் , அவருடன் கூட்டணி வைத்து, அவரே கூட தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. தேர்தலுக்கு முன்பு கருணாநிதி, சிவாஜியை தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அழைத்து, அவருக்கு சுமார் 25 தொகுதிகள் ஒதுக்குவதாக வாக்களித்தார். ஆனால் அதனை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்பொழுது அவர் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அந்த 25 தொகுதிகளிலும் வென்று, அரசியலில் பெரும் வெற்றி பெற்றிருப்பார். ஆனால் நண்பனை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்ததால் அரசியலில் தோற்றார்.
ஒரு முறை இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தயாரித்த படத்திற்கு " ஹீரோ 72 " என்று பெயர் வைத்து, அதனை விளம்பரப்படுத்தும் போது, " வசூல் சக்ரவர்த்தி " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கும் படம் என்று குறிப்பிட்டிருந்தார்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d6&oe=5B72401F
Antony Vincent
பாகப்பிரிவினை படம் வந்த போது தெலுங்கு நடிகரோ அல்லது கன்னடநடிகரோ சரியாக தெரியவில்லை அவர் விமானத்தில் வந்து இந்த படத்தை ஒரு தயாரிப்பாளர் எடுக்க உள்ளார். இந்த படத்தில் நான் நடிக்க உள்ளேன்.நான் தாங்கள் நடித்த இந்த படத்தை முழுவதுமாக பார்த்தேன்.என்னால் ஒரு விசயம் மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை.
இடது கையை நீங்கள் எப்படி ஒரே இடத்தில் வைத்து கொள்ள முடிந்தது.எல்லா சீன்களிலும் நான் கவனித்தேன் ஒரே இடத்தில் தான் இருந்தது.எப்படி என்று திலகத்திடம் ஆச்சரியத்துடன் கேட்டாராம்.இதற்காகவா நீ விமானத்தில் இவ்வளவு செலவு செய்து வந்தாய்.ஒரு போன் செய்து கேட்டு இருந்தாலே நான் சொல்லியிருப்பேனே என்று செல்லமாக கோவப்பட்டு
அது ஒரு பெரிய விஷயம் அல்ல
கழுத்துக்கு கீழ் ஒரு சாண் அளந்து அந்த இடத்தில் கையை வைத்து கொள்ள வேண்டும். நீ எத்தனை முறை படம் பார்த்தாலும் குற்றமே கண்டுபிடிக்க முடியாது என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்.