நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/j5fn10.jpg
Printable View
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/j5fn10.jpg
நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே. சர்வாதிகாரி படம் பற்றிய உங்களுடைய சுவையான கூடுதலான தகவல்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது வழிபாட்டு தலமான ராமாவரம் தோட்டத்தில் நேற்று நடந்த ஜானகி அம்மாள் நினைவுநாள் நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பை எழுதுங்கள். நன்றி.
நக்கீரன் பத்திரிகை நடத்தும் நக்கீரன் கோபால் ஒரு திமுக அபிமானி. ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் கூட கடுமையாக எதிர்த்து எழுதி தனக்கும் தன் பத்திரிகைக்கும் விளம்பரம் தேடிக் கொண்ட நபர். திமுக அபிமானி என்பதால் புரட்சித் தலைவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஆசாமி. அதை அடிக்கடி வெளிப்படுத்தவும் செய்வார். புரட்சித் தலைவரை பாராட்டுவது போல மட்டம் தட்டுவார். ஏற்கெனவே ஒருமுறை புரட்சித் தலைவரை தவறாக தனது பத்திரிகையில் விமர்சித்து நமது மன்றங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.
புரட்சித் தலைவர் மீது நக்கீரன் கோபாலின் காழ்ப்புணர்ச்சி அந்தப் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதிகளில் வெளிப்படும். அதுக்கு இந்தக் கேள்வி பதிலும் ஒரு உதாரணம். புரட்சித் தலைவர் உண்மையிலேயே தொண்டர்களை மதித்து அவர்கள்தான் அதிமுக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி அமைத்தார்.
இந்த பதிலைப் பாருங்கள். கட்சியில் மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், அறிவுஜீவிகளால் தனது தலைமை பொறுப்புக்கு சிக்கல் வந்துவிடக்கூடாதே என்பதற்காக அந்த விதியை புரட்சித் தலைவர் கொண்டு வந்தாராம். தனது செல்வாக்கையும் தொண்டர் பலத்தையும் நம்பி புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சியில் அவருக்கு எதிராக கிளம்பி, யார் கட்சியை கைப்பற்ற முடியும்? அப்படி யாராவது கட்சியை கைப்பற்றினால் தொண்டர்களும், பொதுமக்களும் புரட்சித் தலைவரை புறக்கணித்துவிட்டு அவர்களை ஏற்பார்களா?
இத்தனைக்கும் பதிலின் ஆரம்பத்தில் ‘மக்கள் செல்வாக்கையும் ….…… அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் அதிமுக என்கிற கட்சி’ என்று வேறு சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி செல்வாக்கு உள்ள புரட்சித் தலைவரிடம் இருந்து தலைமைப் பொறுப்பை யார் பறித்துவிட முடியும்?
ராகவானந்தத்தையும்கூட புரட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கினார். அதுவும் பதிலில் உள்ளது. அதையும் யாரும் எதிர்க்கவில்லை. புரட்சித் தலைவரை எதிர்த்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய எஸ்டி. சோமசுந்தரம் கூட தேர்தலில் தோற்றுப்போய் திரும்பவும் புரட்சித் தலைவரிடமே வந்து சேர்ந்தார். அவரையும் புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதி மீது அபாரமான பிரியம். திமுகவுக்கும் கருணாநிதிக்கும் சாதகமாகவே எப்போதும் அவர் பத்திரிகையில் செய்தி வரும். திமுக தேர்தலில் தோற்கும் என்று உலகத்துக்கே தெரிந்தாலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு (?) போட்டு கடந்த தேர்தல் உட்பட பலமுறை முகத்தில் கரியை பூசிக் கொண்டார். கருணாநிதி மீதும் இப்போது ஸ்டாலின் மீதும் இவரும் திமுகவினரும் கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பு தனிமனித வழிபாடு இல்லையா?
2009-ல் இதே மே மாதத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மகன் அழகிரிக்கும் பேரன் தயாநிதி மாறனுக்கும் மத்திய மந்திரி பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்த, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை நக்கீரன் கோபால் கண்டிக்கவில்லை.
அப்படி கண்டித்திருந்தால் ஆகா, அவருக்கு தனிமனித வழிபாடு இல்லை. கொள்கை வழி நிற்பவர் என்று சொல்லியிருக்கலாம். அப்பவும் கருணாநிதிக்கு ஜால்ரா போட்டார். ஸ்டாலின் பையன் உதய நிதி ஸ்டாலின் பெயரால் கூட எங்கள் மதுரையில் அமைப்பை தொடங்கிவிட்டார்கள். இது தனிமனித வழிபாட்டையும் தாண்டிய குடும்ப வழிபாடு இல்லையா? (ஆனால், இந்தக் குடும்ப ஆட்சி கனவுக்கும், கடந்த 5 நாள்களாக ரஜினிகாந்த் பேசிய பேச்சையும் நடவடிக்கையையும் பார்த்தால் ஆப்பு வைத்துவிடுவார் போல இருக்கிறது.அதுக்காகவாவது ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி.)
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரை மீட்பதற்காக தமிழக அரசின் தூதுவராக காட்டுக்குப் போய் வீரப்பனோடு நக்கீரன் கோபால் பல முறை பேச்சு நடத்தினார். ராஜ்குமாரை விடுக்க வீரப்பனுக்கு கொடுத்து அனுப்பிய பணத்தை (ராஜ்குமாரை மீட்க தானும் குறிப்பிட்ட தொகையை கொடுத்ததாக பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக சொல்லி சர்ச்சை ஆனது நினைவிருக்கும்) நக்கீரன் கோபால் ஆட்டைய போட்டதாக செய்திகள் வெளியானது.
அது எந்த அளவு உண்மையோ தெரியாது. கண்மூடித்தனமாக யார் மீதும் குற்றம் சொல்லக்கூடாது. ஆனால், ராஜ்குமாரை விடுவிக்கும் முன் நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளிலும் சரி, ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தபோதும் சரி. நக்கீரன் கோபாலை அனுப்ப வேண்டாம் என்று பேச்சுவார்த்தையை நக்கீரன் கோபால் மூலம் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி தலைமையிலான தமிழக அரசிடம் வீரப்பனே வெளிப்படையாக சொல்லிவிட்டான்.
அதன்பிறகுதான், அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எங்கள் மதுரை தந்த மாவீரன் அய்யா பழ. நெடுமாறன் போய் வீரப்பனுடன் பேசி ராஜ்குமாரை மீட்டு வந்தார். முதலில் சில முறை பேச்சு நடத்த நக்கீரன் கோபாலை வரச் சொல்லி அனுமதித்த வீரப்பன், பிறகு ஏன் நக்கீரன் கோபாலை வரவேண்டாம் என்று சொன்னான்? அதுதான்... வீரப்பனுக்கு கொடுத்தனுப்பிய பணத்தை நக்கீரன் கோபால் ஆட்டைய போட்டது உண்மைதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்படிப்பட்ட நக்கீரன் கோபாலுக்கு புரட்சித் தலைவர் தனது தொண்டர்களை மதித்து அவர்கள் மூலமே கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வழி செய்தார் என்று சொல்ல மனம் இல்லை. கட்சியின் அனுபவசாலிகளால் தனது தலைமை பொறுப்புக்கு சிக்கல் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அப்படி விதி அமைத்தாராம்.
அடப்பாவிங்களா... அதான் மழையே வரமாட்டேங்குது...
எத்தனையோ... அமைப்புகள்...?
எத்தனையோ... சேவா சங்கங்கள்...?
இத்துணை ஆண்டுகளாக...
அவர்கள் செய்யாததை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்...?
- "பத்தோடு பதினொன்றாய்..." நம்மை எதார்த்தமாய் பார்க்கும்...
"மதிப்புமிக்க அன்பர்" நேற்று கேட்டார் என்னிடம்...
இது தான் என் பதில்...
"இடது கையை இடுப்பிலும்... வலது கையை சைகையாய் ஆட்டியும் பேசும் உங்களைப்போன்றோர் சிலரும் ஆச்சரியத்தில் புருவமுயர்த்தி... வலது கையை வியப்பின் அடையாளமாக தாடையிலும் வைத்து நீங்கள் பார்க்கும் வகையில்...
நாங்க வரத்தான் போறோம்... இந்த சமுதாயத்துக்கு எங்களால ஆனத...
தரத்தான் போறோம்..." - என்றேன்..
- பொன்மனம் சிவகுமார்
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
பொன்மனம் பொதுநலப் பேரவை...
http://i65.tinypic.com/2eyf1qu.jpg
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களின் கவனத்திற்கு ,
நக்கீரன் இதழில் சில மாதங்களாக தவறாமல் எம்.ஜி.ஆர். -அகமும், புறமும் என்கிற தலைப்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகளை ஆதரித்தும்,எதிர்த்தும் பிரசுரம் செய்து வருகிறார்கள்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பாராட்டியும் பத்திரிகைகள் வளர்கின்றன .
வருவாய் ஈட்டுகின்றன. அவரை விமர்சித்தும், பொருந்தாத கருத்துக்கள் கூறியும்
சில தினசரிகள், வார இதழ்கள் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றன. இவை ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழக்கம்.உதாரணத்திற்கு , தி,.மு.க. ஆட்சியின்போது , புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த சமயத்தில் தினத்தந்தியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை இருட்டடிப்பு செய்து சரோஜாதேவி, நாகேஷ், நம்பியார் நடித்த "படகோட்டி " என்றும் ஜெயலலிதா நாகேஷ், நம்பியார் நடித்த "ஆயிரத்தில் ஒருவன் " என்றும் விளம்பரம் வெளியிட்டார்கள். சில மாதங்கள் வரையில் இந்த போக்கு நீடித்தது. பொதுமக்கள் இதை பொருட்படுத்தவில்லை . எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் முதல் வெளியீட்டிலும், மறு வெளியீட்டிலும் பெற்ற வரவேற்பை கண்டு மனம் திருந்தி மக்கள் தலைவர் பெயரை விளம்பரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது வரலாறு . எனவே, எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரையும், புகழையும், புகழ்ந்தும்,இகழ்ந்தும் பத்திரிகைகள் வாழத்தான் செய்கின்றன. வருமானத்தையும், விளம்பரத்தையும் தேடிக் கொள்கின்றன.
திரையுலகில், அரசியலில், பொது வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது நமது தலைவருக்கு வாடிக்கை. மற்றவருக்கு வேடிக்கை .
சந்திரோதயம் படத்தில் வரும் வசனப்படி, என் எதிரி கூட சமமாக இல்லை என்றால் அலட்சியப்படுத்துபவன் நான் .என்று எம்.ஆர். ராதா விடம் கூறுவது நினைவுக்கு வருகிறது .
எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை விட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன .
அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன . இன்றும். அவர் துவக்கிய கட்சி
ஆட்சி கட்டிலில் உள்ளது . அவரது பல படங்கள் டிஜிட்டல் தயாரிப்பில் உள்ளன .
மறு வெளியீடுகளில், பழைய படங்கள் வசூல் சாதனை செய்கின்றன .இவை
எல்லாம் நாம் பெருமைப்படக்கூடிய விஷயங்கள் .
எப்படியோ, எம்.ஜி.ஆர் என்கின்ற மனிதநேய மிக்க மாமனிதரின் பெயரை உச்சரிக்காமல் இன்றைய தினசரிகளோ, வார இதழ்களோ, மாத இதழ்களோ இல்லை . வரவேற்போம் நல்ல செய்திகளை மட்டும். துறப்போம் தவறான ,
பொய் செய்திகளை .
நக்கீரன் பற்றிய தங்களின் விமர்சனங்கள் அனைத்தும் உண்மையே.
அன்னை ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் , சென்னை ராமாவரம்
தோட்டத்தில் வெகு எளிமையாக அனுசரிக்கப்பட்டது . முன்னாள் அமைச்சர்
பொன்னையன் வந்திருந்தார் . முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். டெல்லி சென்றதால் வரவில்லை. தொண்டர்கள், பக்தர்கள் கணிசமான அளவில் வந்திருந்ததாக காவலாளி தெரிவித்தார். நான் பிற்பகலில் தாமதமாக
சென்றதால் யாரையும் சந்திக்க இயலவில்லை என்பதே தங்களுக்கு
தெரிவிக்கும் செய்தி.
கல்கி வார இதழ் -21/05/2017
http://i66.tinypic.com/2d7yk5y.jpg
புதிய தலைமுறை வார இதழ் -25/05/2017
http://i67.tinypic.com/3493tkp.jpg
http://i67.tinypic.com/6pcn0x.jpg
http://i67.tinypic.com/27x2ipi.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
உங்களுடைய உதாரணங்களைக் கொண்ட உணர்ச்சிபூர்வமான பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ராமாவரம் தோட்டத்துக்கு நீங்கள் தாமதமாக சென்றதால் ஜானகி அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சியை பதிவு செய்ய முடியாத உங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டேன். நன்றி.
தற்போது சன்லைப் சானலில் காலை 11 மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/f39hzr.jpg
தினமலர் - வாரமலர் -21/05/2017
http://i66.tinypic.com/2lkv8k1.jpg
http://i66.tinypic.com/15zp6rm.jpg