-
இளையதிலகத்தின் பட வரிசை
http://uploads.tapatalk-cdn.com/2016...93de1ff10f.jpg
முத்து எங்கள் சொத்து
ரிலீஸ்:9.12.83
இளையதிலகம்பிரபு,கே.ஏ.தங்கவேலு,சிவச்சந்திரன் ராதா,வனிதா,ராஜீவ்,மனோரமா..
தேங்காய் சீனிவாசன்,
பூர்ணம் விஸ்வநாதன்
இசை:இளையராஜா
இயக்கம்:G.N..ரங்கராஜன
வசதி படைத்த ராமநாதன் குடும்பத்து வேலையாள் முத்து.மிகவும்பொறுப்பான, நேர்மையான வேலைக்காரன் முத்து.ராமநாதனின் மகன்கள் இருவர்.ஊதாரிகள்.அவர்களை திருத்த ராமநாதன் ஒரு முடிவெடுக்கிறார்.அந்த இருவரும் முறையாக திருமணம் செய்து யார் முதலில் பிள்ளை பெறுகிறார்களோ அவர்களுக்கே தன் சொத்து என்று ராமநாதன் சொல்லி விடுகிறார்.அந்த சொத்துக்காக மகன்கள் போடும் பொய் வேஷங்கள் ராமநாதனுக்குதெரிந்து மேலும் அது கவலை அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் முத்துவும் தன் மகன் என்று தெரிகிறது.முத்து அவர்களை திருத்துவது தன் கடமை என்று தந்தையிடம் வாக்கு கொடுத்து அந்தக் குடும்பத்தை காப்பாற்றுவதே படத்தின் மையக் கரு.
்
100 நாள் ஓடி விழா கொண்டாடிய படம்.
Muthu Engal Sothu 1983: Full Tamil Movie: https://youtu.be/m9MFoOUVOuo
-
1983ல் இளையதிலகம் நடித்த படங்கள் மொத்தம் பத்து.நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த படங்கள் ஐந்து.இரண்டு வெள்ளிவிழா.(நீதிபதி,சந்திப்பு)
மிருதங்க சக்கரவர்த்தி.,வெள்ளை ரோஜா இரண்டும் நூறு நாள் படங்கள்.
-
இளையதிலகத்தின் பட வரிசை
18.திருப்பம்
14.01.84 பொங்கல் வெளியீடு.
http://uploads.tapatalk-cdn.com/2016...e8831271cc.jpg
நடிகர்திலகம்,இளையதிலகம்,சுஜாதா,அம்பிகா,ஜெய்சங்கர், சுதர்சன்,தேங்காய் சீனிவாசன்,Y.G.மகேந்திரன்,சில்க்,...
இசை:M.S.விஸ்வநாதன்
இயக்கம்:R.கிருஷ்ணமமூர்த்தி
நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு கச்சிதமாக நடித்திருப்பார்.கம்பீரத்திலும் ஜொலிப்பார்.தனக்கு கடமையுணர்வை போதித்த சீனியர் போலீஸ் ஆபீசரையே கைது செய்ய துடிக்கும் காரெக்டர்.துடிப்பான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
புது வருட கொண்டாட்டப்பாடல்களில் ஒன்றாக இன்றுவரை தவறாது இடம்பெறும் பாடலாக
"தங்கமகள் துள்ளி வந்தாள்"
பாடல் அமைந்தது.பாடலில் பிரபுவின் ஆட்டத்தில் வேகம் இருப்பதுடன் பார்ப்பதற்கும் நளினமாக இருக்கும்.
திருப்பம் திருப்பங்கள் நிறைந்த படம்.
100நாள் வெற்றிப்படம் இது.http://uploads.tapatalk-cdn.com/2016...54f7f765a4.jpg
-
இளையதிலகத்தின் பட வரிசை
http://uploads.tapatalk-cdn.com/2016...c4daa8131a.jpg
19.ப்ரியமுடன் பிரபு
ரிலீஸ்:14.01.84
இளையதிலகம்.,நாகேஷ்,ராஜீவ்,
வனிதா,பிருந்தா,கவுண்டமணி.,
செந்தில்...
இசை.கங்கை அமரன்.
இயக்கம். கங்கை கொண்டான்
http://uploads.tapatalk-cdn.com/2016...a311f51ac8.jpg
கதாநாயகனின் பெயர் படத்தின் டைட்டிலில் ஆறுமுறை காண்பிக்கப்பட்ட படம் இதுவே.
http://uploads.tapatalk-cdn.com/2016...b7725ead08.jpg
பக்தியுடன் பிரபு
அன்புடன் பிரபு
பண்புடன் பிரபு
பாசத்துடன் பிரபு
ப்ரியமுடன் பிரபு
உங்கள் ஆதரவுடன் பிரபு
என்று டைட்டிலில் வரும்.
பிரபு கோழிப்பண்ணை வைத்து நடத்துபவராக வருவார்.
http://uploads.tapatalk-cdn.com/2016...0f9777c28f.jpg
Full movie:
Priyamudan Prabhu Tamil Full Movie : Prabhu, Brin…: https://youtu.be/f9iANjP8vE8
-
இளையதிலகத்தின் பட வரிசை
20.பொழுது விடிஞ்சாச்சு
ரிலீஸ்;22.02.84
http://uploads.tapatalk-cdn.com/2016...c9bf0ad900.jpg
இளையதிலகம்பிரபு,சுலக்சனா,
M.N.நம்பியார்,அஞ்சலிதேவி,
வினுசக்கரவர்த்தி,சண்முகசுந்தரம்..சத்யராஜ்
இசை:இளையராஜா
இயக்கம்:கங்கை அமரன்
கதைச்சுருக்கம்:
சண்முகசுந்தரம் வினு சக்கரவர்த்தியும் நல்ல நண்பர்கள் போல் பழகி வருகிறார்கள்.வினு சக்கரவர்த்திக்கு மனைவி இல்லை. முத்தையா (பிரபு)என்ற சிறு வயது மகன் உண்டு.
வினு சக்கரவர்த்தியின் தங்கையை சண்முகசுந்தரம் காதலிக்கிறார்.அவர் கர்ப்பிணி ஆகிறார்.சண்முகசுந்தரம் வேறு திருமணம் செய்ய முயல்கிறார்.
வினுசக்கரவர்த்திக்கு தங்கையின் நிலைமை தெரியவருகிறது.
.சண்முகசுந்தரத்தின் உண்மை சொருபம் இப்பொதுதான் தெரிகிறது.பழம்பகையை தீர்ப்பதற்காகவேஉறவாடிக் கெடுத்த விதம் வினு சக்கரவர்த்திக்கு தெரிய வர,ஆத்திரத்தில் அரிவாளை தூக்குகிறார்.தங்கையைப் பற்றிய சில தகாத பேச்சுக்களால் வரும் கோபத்தால் வினு சக்கரவர்த்தி ஒருவரை வெட்டி சாய்த்து விட்டு சண்முக சுந்தரத்தை கையோடு வீட்டுக்கு இழுத்து வந்து தங்கைக்கு தாலி கட்டச்சொல்கிறார்.சொத்தை தன் பெயருக்கு எழுதித் தந்தால்தான் தாலி கட்டுவேன் எனச் சொல்ல அவ்விதமே செய்யப்படுகிறது.
வினு சக்கரவர்த்திக்கும் பாதி பங்கு சொத்து உரிமை இருந்தாலும் தங்கைக்காக முழு சொத்தையும் எழுதித்தர சம்மதிக்கிறார்.அந்த சொத்துக்களை கைப்பற்றுவதும்,அவர்களை பழி வாங்குவதும் தான் சண்முகசுந்தரத்தின் குறிக்கோள்.
கொலை செய்ததால் வினு சக்கரவர்த்தி சிறைக்கு செல்கிறார்.துக்கத்தில் தந்தையும் இறக்கிறார்.
பின் சிறிது காலம் சென்றுவினு சக்கரவர்த்தியின் தங்கையும் ஒரு குழந்தையை ஈன்றபின் இறந்து விடுகிறாள்.சண்முகசுந்தரம் அந்த வீடு சொத்துக்களை விற்றுவிட்டு தன் குழந்தையுடன் புறப்படுகிறான்.சண்முகசுந்தரத்தின் மாமியார்(அஞ்சலிதேவி)வினு சக்கரவர்த்தியின் குழந்தையையும் வளர்க்கச் சொல்கிறாள்.ஆனால் அவன் மறுத்து விடுகிறான்.ஏளனப் பேச்சும் பேசுகிறான்.
தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமே அவன்தானே,அவனே இப்படி பேசுவதை எண்ணி வெகுண்டு அவனை பழி வாங்குவேன் என்று அவனிடமே சபதம் செய்கிறான்.
காலங்கள் செல்கின்றன...
http://uploads.tapatalk-cdn.com/2016...964a81983b.jpg
முத்தையாவை(பிரபு) வளர்த்து ஆளாக்குகிறாள் அவள் பாட்டி.
சண்முகசுந்தரத்தின் மகள் கற்பகமும் (சுலக்சனா) வளர்ந்துஆளாகிறாள். அவள் முத்தையாவை காதலிக்கிறாள்.இதுதான் அவர்களை பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என்று முத்தையாவும் அவளை தான் காதலிக்கவில்லை' என்றும்அதனால் திருமணம் செய்ய முடியாது என்றுபஞ்சாயத்தில் மறுத்து விடுகிறான்.அதனால் அவள் விஷம் குடித்து விடுகிறள்.ஆனாலும் பிழைத்து விடுகிறாள்.அவளைவேறு ஒருவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க சண்முகசுந்தரம் முடிவெடுக்கிறான்.முத்தையாவின் பாட்டி அவனை அழைத்து நம் நோக்கம் அவள் தந்தையை பழிவாங்குவதான் மட்டும்தான்,எனவே அவளை காப்பாற்றி திருமணம் செய்து கொள் என கூறி முத்தையாவை அனுப்பி வைக்கிறாள்.பெரும் சண்டை நடக்கின்றது.முத்தையா எல்லோரையும் அடித்து துவம்சம் செய்கிறான்.
இறுதியில் சண்முகசுந்தரம் அம்மன் கோவில் சூலத்தில் குத்தி உயிர் துறக்கிறான்.இறக்கும் தருவாயில்தான் அவன் தன் தவறுகளை ஒப்புக்கொள்கிறான்.
தான் போட்ட சபதத்திற்கு இப்போழுதுதான் பொழுது விடிந்தது என்று முத்தையாவின் பாட்டி நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.
முத்தையா கற்பகம் திருமணத்துடன் அவர்களின் இனிய வாழ்க்கை ஆரம்பமாகிறது.
http://uploads.tapatalk-cdn.com/2016...3356f78aa4.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...e5ac674be4.jpg
கிராமத்து கதைக்கே உரிய அம்சங்களுடன் பொழுது விடிஞ்சாச்சு படம் இருக்கும்.
pozhuthu vidinchachu TAMIL HD NEW MOVIE Prabhu,Su…: https://youtu.be/aMdb9IGj1-0
-
-
-
-
-