-
வெள்ளி த்திரைகளில் நடிகர்திலகத்தின் காவியங்கள்
" சிவகாமியின் செல்வன் "
*கர்ணன் *
சின்னத்திரைகளில்
இன்று 09/04/2016 நடிகர்திலகத்தின் காவியங்கள்...
10:30am க்கு வசந்த் டிவியில்
* சந்திப்பு*
1:00pm க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
* ராஜ ராஜ சோழன்*
5:00 pm க்கு மெகா டிவியில்
* ஜல்லிக்கட்டு*
10:00 pm க்கு(இரவு) ஜெயா மூவியில்
* துளிவிஷம்*
10:30 pm( இரவு)க்கு ராஜ் டிவியில்
* மிருதங்க சக்கரவர்த்தி*
கண்டு மகிழ்வோம்
என்றும் எங்கும் சாதனையை நிகழ்த்தக் கூடியது * சிவாஜி* என்ற மூன்றெழுத்து மட்டுமே
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...5c&oe=57B62B02
(முகநூலில் இருந்து)
-
-
சிவகாமியின் செல்வன் பாடல்கள் பற்றி சில தகவல்கள்.
எத்தனை அழகு கொட்டி கிடக்குது பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக புலமைபித்தன் எழுதியது. அதனை கவிஞர் அனுமதியோடு விஸ்வநாதன் சிவகாமியின் செல்வன் பட சூழ்நிலைக்கு பொருத்தமாக கடத்தி விட்டார். பிறகு இதே படத்திற்கு இனியவளே பாடலையும் புலமை பித்தனை கொண்டே எழுத வைத்தார். பிறகு புலமை பித்தன் ஒரு சிவாஜி படத்தின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதிய படம் இளையராஜா சிவாஜிக்கு முதல் முதல் இசையமைத்த தீபம்.
இப்படத்தில் ஹிட் வரிசையில் மேளதாளம்,உள்ளம் ரெண்டும்,இனியவளே,எதற்கும் ஒரு,என் ராஜாவின் ரோஜா முகம் என்று போனாலும் ,இந்த படத்தில் பின் தள்ள பட்ட எத்தனை அழகு பாடலின் இசையையே உபயோகித்து எம்.எஸ்.வீ சிஷ்யர் சங்கர்-கணேஷ் வெற்றி கண்டனர்,உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்,.இந்த பாடலுக்கு நடித்தவர் சிவாஜியின் சிஷ்யர் கமல்.
-
நினைப்போம். மகிழ்வோம்-126
"குங்குமம்".
"தூங்காத கண்ணென்று"
பாடல்.
பாடல் முடியும் தருவாயில்
பாகவதர் வேடத்திலிருப்பவர்,
ஒப்பனையைக் கலைத்து விட்டு, நிஜமான தலைமுடியை
இரு கைகள் கொண்டும்
விடுதலையாய்க் கோதி விட்டுக் கொள்ளும் போது,
முகத்தில் காட்டும் ஒரு
"அப்பாடா" உணர்வு.
-
நினைப்போம். மகிழ்வோம்-127
"சிவந்த மண்".
"ஒரு நாளிலே" பாடல்.
கடைசியாக, பல்லவி திரும்பி
பாடப்படும். காஞ்சனாவுக்காக
சுசீலாம்மா "ஒரு நாளிலே
உறவானதே" என்று தேனோழுக நீட்டிப் பாடிக்
கொண்டிருக்கும் போதே,
பாடகர் திலகத்தை முந்திக்
கொண்டு "கனவாயிரம்"
பாடுவதற்குத் துடிக்கும்
நம்மவரின் உதடுகள்.
-
நினைப்போம். மகிழ்வோம்-128
"வசந்த மாளிகை".
"ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" பாடல்.
"தக்கத் தகத் திமி தாள ஜதியோடு" வரியின் போது,
ஆடலழகியின் கைகோர்த்துக்
கொண்டு, நடப்பது போல் ஒரு
நடனம் (அல்லது) ஆடுவது
போல் ஒரு நடை.
-
-
-
-