Originally Posted by
jaisankar68
தினமலர் போன்ற பழம் பெருமை வாய்ந்த நாளிதழ்களில் கூட தற்போது பல தவறான செய்திகள் அள்ளி இறைக்கப்படுவது கவலையளிப்பதாக உள்ளது. அடிமைப்பெண் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து வந்து வாய்ப்பளித்தது எம்.எஸ்.விஸ்வநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்குப் படத்திற்காக தான் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங்கின் போது பாடிய பாடலை தற்செயலாகக் கேட்டு விட்டு அந்த வாய்ப்பை அளித்தவர் எம்.ஜி.ஆர் என்று எஸ்.பி.பி அவர்களே குறிப்பிட்டுள்ளார். மேலும் அடிமைப் பெண் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள். அப்படி இருக்க எம்.எஸ்.வி அந்த வாய்ப்பை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. தவறு. மேலும் கூண்டுக்கிளி படத்திற்கு இசைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா அவர்கள் எம்.எஸ்.சுப்பையா அல்ல. படத்தின் கதை வசனகர்த்தா விந்தன் அவர்கள் எழுதிய பாடல் தான் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்னும் பாடல். படத்தில் அந்தப் பாடலுக்காக இரு திலகங்களும் போட்டி போட்டதாக வெளியான செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அந்தப் பாடலுக்கான சூழல் படத்தில் இல்லை. அதன் காரணமாகத் தான் அந்தப் பாடல் படமாக்கப்படவில்லை என நினைக்கிறேன்.