எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
21
'ஆரம்பம் இன்றே ஆகட்டும்'
http://i.ytimg.com/vi/M8qM87nGWrc/hqdefault.jpg
1970-ல் வெளிவந்த, சௌகார் ஜானகி தயாரித்த, பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த, வெற்றிப்படமான, செல்வி பிலிம்ஸ் 'காவியத் தலைவி' படத்திலிருந்து இன்று பாலாவின் தொடரில் ஒரு அற்புதமான பாடலைப் பார்க்கப் போகிறோம்.
இசை 'மெல்லிசை மன்னர்'தான். 'காவியத் தலைவி' மிகவும் பேசப்பட்ட ஒரு படம். 'கடவுள் எல்லா இடங்களிலும் தானே இருக்க முடியாது என்பதனால்தான் தாயைப் படைத்தான்' என்ற உண்மையை உணர்த்தும், தாய்மையின் மகள் பாச உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். தாய் ஒரு காவியம் ஆனதால் இது ஒரு தாயின் கதை அதாவது காவியத்தின் கதை. அதனால்தான் அவள் 'காவியத் தலைவி' காசு கலெக்ஷன் அள்ளியதிலும் தலைவிதான்.
காதலனை கைபிடிக்க முடியாமல், ஒரு கயவனை கணவனாய் மணந்து, கட்டிலுக்குக் கடன் கொடுத்து, தொட்டிலுக்கு விலை கொடுத்து ஒரு மகளை ஈன்று, நாட்டியமாடி மகளை வளர்த்து, மானத்தோடு வாழ்ந்தாலும் மானம் போனவளாய் சமூகத்தால் சித்தரிக்கப்பட்டு, தன் நிலை தன் மகளுக்கும் வந்து விடக் கூடாதே என்று அவளுக்குத் தெரியாமல் தள்ளியே நின்று, உண்மைகள் உணர்ந்த, அவளுக்காகவே வேறு திருமணம் செய்யாமல் தன் வாழ்வைத் தியாகம் செய்த பழைய காதலன் அவளுடைய மகளை தன் சொந்த மகளாகத் தத்தெடுத்து, வளர்த்து பெரிய ஆளாக்க, தள்ளி தள்ளி நின்று மகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பார்த்து பூரித்து, இறுதியில் மகளின் திருமண வாழ்வை சீர்குலைக்க வந்த கணவனையே சுட்டு வீழ்த்தி, மகளே தாய்க்காக வாதாட, பின் உண்மை தெரிந்து மகளே 'அந்தத் தாய் பெற்ற மகள் நான்தான்' என்று அனைவரிடமும் பெருமை பொங்கக் கூறி, அந்தத் தாயின் புனிதத்தை சபையில் உணர்த்தி அவளை பெருமைப்படுத்த, மகளுக்காக ஓடாகத் தேய்ந்து உருக்குலைந்துபோன அந்த தியாகத்தாய் மகளின் மடியிலேயே உயிரை விடும் பரிதாபமான கதை.
கதையும், நடிப்பும், இயக்கமும் நெஞ்சைப் பிழிவது நிஜமே.
சீனியர் நடிக நடிகைகள். ஜெமினி, ரவி, சௌகார் இரட்டை வேடம் (தாய் மற்றும் மகளாக), எம்.ஆர்.ஆர்.வாசு, ஜெமினி மகாலிங்கம், ராகவன் என்று நடிகர் கூட்டம். மூலக்கதை நிஹார் ரஞ்சன் குப்தா. பாடல்கள் கண்ணதாசன்.
திரைக்கதை, வசனம், இயக்கம் 'இயக்குனர் சிகரம்'
இந்தப் படத்தின் கதை, நடிப்பு, இயக்கம் எல்லாமே அம்சம். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது 'மெல்லிசை மன்னரி'ன் மறக்க முடியாத, காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள். வடநாட்டு இசைக் கருவிகளின் ஆளுமையை அற்புதமாக இந்தத் தென்னாடு ரசிக்கும்படி கொடுத்திருப்பார்.
ஒவ்வொரு பாடலும் கோடி அட்சரம் பெறும்.
'கவிதையில் எழுதிய காவித் தலைவி'
'பெண் பார்த்த மாப்பிளைக்கு'
'என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு'
'நேரான நெடுஞ்சாலை'
'கையோடு கை சேர்க்கும் காலங்களே'
எல்லோர் மனதிலும் மிக ஆழமாகப் பதிந்த,
http://s1.dmcdn.net/CjdfY/526x297-x-m.jpg
'ஒருநாள் இரவு பகல் போல் நிலவு' ('கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? என் கண்மணி சுகமா?)
அப்புறம் இன்றைய பாலா தொடரில் பிரகாசிக்க வரும்,
'ஆரம்பம் இன்றே ஆகட்டும்'
என்று ஏகோபித்த வரவேற்பைப் பற்ற பாடல்கள். சுசீலாவின் முழுத் திறமையையும் இப்படத்தில் அவர் பாடியுள்ள பாடல்களின் மூலம் அறியலாம். விதவிதமான உணர்ச்சிகளில் பாடி நம் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வார்.
http://i.ytimg.com/vi/rW-c2WbvmCM/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/8JzGuteAGi4/hqdefault.jpghttp://img.youtube.com/vi/iB43rYqvB6s/0.jpg
தாய் வேடத்திற்கு சௌகார் படு பாந்தம். வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியாது. தானழுது நிஜமாகவே நம்மையும் அழ வைப்பார். ஆனால் மகள் கிருஷ்ணா வேடத்தில் நம் எல்லோரையும் முகம் சுளிக்க வைப்பார். நடிப்பில் சமாளிக்க முற்பட்டாலும் இளமைத் தோற்றம் முற்றிலும் பழிவாங்க இவரை மகளாகப் பார்க்கும் போது நமக்கு வருவது கொட்டாவி. (மகள் கேரக்டரை வேறு யாருக்காவது விட்டுக் கொடுத்திருந்தால் இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும். என்னுடைய சாய்ஸ் லஷ்மி. பாலச்சந்தருக்கு தோதான நடிகையும் கூட.)
ஜெமினி அருமை. (நடிகர் திலகத்திற்கு இந்த ரோல் கிடைத்திருக்கக் கூடாதா!). ரவி ஜுனியர் வக்கீலாம். ஒப்புக்குச் சப்பாணி. இயக்குனர் சிகரம் இயக்குனர் சிகரம்தான் என்பதற்கு 'ரேகா டிபார்ட்மெண்ட் ஸ்டோரி'ல் (ஜெமினியின் சொந்த ஸ்டோரா?) ஜெமினியும், சௌகாரும் சந்திக்கும் காட்சியை சில தினங்களுக்கு முன் எழுதி இருந்தேனே அந்த ஒரு காட்சியே சாட்சி.
படம் முழுதும் சோகம் நிரம்பி வழிய, ஆறுதலுக்கு ஜாலியாக பாலாவும், ஈஸ்வரியும் பாடும் டூயட் பாடல். படத்தில் மகள் சௌகார் ஜானகிக்கும், ஜெமினியிடம் ஜூனியர் வக்கீலாகப் பணி புரியும் ரவிச்சந்திரனுக்கும் காதல் டூயட்.
ஓகே! ஓகே! நம் பாடல் எது? இதோ வந்து விட்டேன்.
ஒரு நல்ல என்ஜாய்பிளான பாடலை கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அதைப் பார்த்துத் தொலைக்கக் கூடாது என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம். முகம் முற்றிய சௌகார், வழக்கமான சுறுசுறுப்பு இல்லாத ரவி (இளமையான ஜோடி இல்லை என்ற வருத்தமோ!?) என்று பார்க்கவே பிடிக்காது. சௌகாரே அவருக்கு திருஷ்டி.
சௌகார் மாடர்ன் டிரெஸ் வேறு. பேன்ட் ஷர்ட், ஓவர் ஜாக்கெட், பெல்பாட்டம் என்று. அப்புறம் தலையை விரித்துப் போட்டு தலை சைடில் ஒற்றை ரோஜா என்று கொடுமை மேலும் தொடரும். (தாங்கல சாமி), ரவிக்கு ஒரு ஜிப்பாவைக் கொடுத்து விட்டார்கள். அப்புறம் போனாப் போகுது என்று ஒரு ஸ்வெட்டர் பனியன்.
பாலம், ஏரி, அணைக்கட்டு, பார்க் என்று முழுதுமே வெளிப்புறப் படப்பிடிப்பு என்பது சற்று ஆறுதல்.
இந்தப் படத்தில் இரு ஆண்குரல்கள். ஒன்று பாலா. இன்னொன்று படத்தின் இசையமைப்பாளர். (என் உயிர்ப் பாடலான 'நேரான நெடுஞ்சாலை') ஆண் பாடகர்களில் டைட்டிலில் பாலா பெயர் மட்டுமே இருக்கும். 'மன்னர்' பெயர் இருக்காது. ஏன்?
ஆனால் பாலாவும் ஈஸ்வரியும் கலக்கியிருப்பார்கள். இவர்களே இப்பாடலின் நாயக நாயகியர்.
பாடலை ஈஸ்வரி 'ஆஆஆஆ' என்று ஹம்மிங் செய்ய ஆரம்பித்தவுடனேயே நம் மனதில் உற்சாக நெருப்பு 'பக்'கென்று பற்றிக் கொள்ளும். அந்த ஹம்மிங்கே எம்.எஸ்.வியின் விசில் சப்தமாக தொடர்ந்து வரும் போது அந்த நெருப்பு தீவிர ஜ்வாலையாய் எரியும்.
பாலா 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' என்று வேண்டுகோள் வைக்க, ஈஸ்வரி அந்த வேண்டுகோளை ஆறேழு நாட்கள் தள்ளி வைப்பதாக சொல்ல, 'அப்போதும் தள்ளி போடுவியா?' என்ற அர்த்தத்தில் 'அப்போதும் தள்ளிப் போடக் கூடாது' என்று பாலா செல்லக் கண்டிப்பு வைக்க, 'இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது' என்று ஈஸ்வரி மீண்டும் முரண்டு.
பாலா கெஞ்சலும், கொஞ்சலுமாக 'அப்போதும் தள்ளிப் போடக் கூடாது' என்று பாடும் போதே எப்போதும் இப்பாடலைத் தள்ளிப் போடாமல் கேட்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது?
'பொன்னான அங்கத்தையெல்லாம்' பாடும் போது அங்கத்தை... யெல்லாம்' என்று அந்த 'யெல்லா'மை எப்படி விட்டு எடுப்பார் தெரியுமா? அதே போல 'சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்' பாடும் போதும்.
பாலா ஈஸ்வரியுடன் சேர்ந்து நாம் வானொலியில் கேட்க முடியாத அந்த
'லால்ல லல்லா லால்ல லல்லா
லலல லல்லா லலல லல்லா'
ஹம்மிங் அருமையோ அருமை.
ஈஸ்வரியின் அந்த 'ஆஆஆஆ' வெட்டும், .'லாலலலலா' ஜோரும் சோறு தண்ணி இல்லாமல் கேட்டு மகிழக் கூடியவை.
இது பாலாவின் தொடரில் 21 ஆவது பாடல். இத்தனை பாடல்களில் எது ஹிட் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது எது பிடிக்க வில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். முன்னே பின்னே இருக்குமே தவிர அத்தனையும் செம ஹிட் சாங்க்ஸ். அதுதான் சார் பாலா. ஆரம்பத்திலேயே பாடுவதில் பல சாதனைகள் புரிந்து விட்டார் அவர்.
இப்போது பாலாவும் உடன் ராட்சஸியும் உங்களை உலுக்கப் போகிறார்கள் பாருங்கள்.
http://i59.tinypic.com/95oaig.jpghttp://i58.tinypic.com/11weucm.jpg
ஆஆஆஆ.....ஆஹா
(விசில்) ரவி அழகாக விசிலடித்துக் கொண்டே 'ஜம்'மென்று வந்து நிற்பார்.
ஆஆஆஆஆஆ.....ஆஹா
(விசில்)
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆஆஆஆ.... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆஆஆஆ.... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
லால்ல லல்லா லால்ல லல்லா
லலல லல்லா லலல லல்லா
பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆஆஆ
பொன்னான அங்கத்தையெல்லாம்
கண்ணாலே பார்த்தால் போதுமோ
ஆஆஆ
கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
கண்டாலும் உள்ளம் தித்திக்கும்
என்றாலும் பெண்மை உன்னை சந்திக்கும்
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஆஆஆ....ஆறேழு நாட்கள் போகட்டும்
ம்ம்ம்ம் ..... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
(இந்த இடத்தில் சௌகார் புள்ளி மான் போல நாணல்களுக்கு மத்தியில் துள்ளித் துள்ளி ஓடி வருவார். இதே போல தாய் சௌகார் 'கையோடு கை சேர்க்கும் காலங்களில்' பாடலில் டிட்டோவாக ஓடி வருவார். தாய் போல மகள் என்பதை பாலச்சந்தர் அற்புதமாக ஞாபகம் வைத்து நமக்கு அழகாக இரு பாடல் காட்சிகளும் உணர்த்துவார். நன்றாக கவனித்தீர்களானால் தெரியும்.
(விசில்)
முத்துச்சரம் வாடும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
பத்துத்தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
முத்துச்சரம் வாடும் வண்ணம் மெல்ல அணைத்தேன்
பத்துத்தரம் வாங்கிக் கொள்ள நெஞ்சில் நினைத்தேன்
முத்தமிடலாம் கொஞ்சம் பொறுத்தால்
சத்தமிடுவேன் தூது (?) கொடுத்தால் (மது அண்ணா! ஹெல்ப் ப்ளீஸ்!)
லாலலலலா லாலலலலா
லால்ல லல்லா லால்ல லல்லா
லலல லல்லா லலல லல்லா
சட்டங்கள் திட்டங்கள் எல்லாம்
சந்திக்கும் வேளை ஏனம்மா
ஆஆஆஆ
பட்டங்கள் பெற்றால் போதுமோ
பண்பாடு மாறிப் போகக் கூடுமோ
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆஆஆஆ....ஆறேழு நாட்கள் போகட்டும்
ஆஆஆஆ..... அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
ஆஆஆஆ...ஆஹா
ஆஆஆஆ....ஆஆ
ஹோஹஹஹோ ஹோஹஹஹோ ஹோஹோ
ஹோஹஹஹோ ஹோஹஹஹோ ஹோஹோ
https://youtu.be/XG8yZuymHXc