அய்யோ தனுஜா பெயரே வேண்டாம்... கஜோலைவிட 100 மடங்கு சுமார் .. இவரும் கட்டைக்குரலுடன் ஆம்பள மாதிரி ஒரு தோற்றம். எப்படி ஹீரோயின் ஆனார் என்பது இன்றும் கேள்விக்குறி.
Printable View
அய்யோ தனுஜா பெயரே வேண்டாம்... கஜோலைவிட 100 மடங்கு சுமார் .. இவரும் கட்டைக்குரலுடன் ஆம்பள மாதிரி ஒரு தோற்றம். எப்படி ஹீரோயின் ஆனார் என்பது இன்றும் கேள்விக்குறி.
அபர்ணா சென் - மூணு மூணு சென் - ரியா சென் ..
அதென்ன மூணு மூணு சென் .. டோட்டல் போட்டா வேற மாதிரி யாகிடும்னு வாய்ப்பாட்டையே பேரா வெச்சிட்டாங்களாக்கும்...
வாசு ஜி
உமக்கு ஒரு அருமையான மலையாளப்பாடல்
இசையரசி ஜமாய்க்கும் பாடல் இதோ
சாரதா, ஷீலா மற்றும் பிரேம் நசீர்
https://www.youtube.com/watch?v=JGnyPvW1QrM
சபாஷ் சிங்கக் குட்டி! அப்படிப் போடு. அப்படியே என்னைய மாதிரியே இருக்கீங்களே ரசனையில்.
இருந்தாலும் வீருதேவ்கன் மகனை இப்படியா வாருவது? அப்பா சண்டை மாஸ்டர். அதனால் நல்லா சண்டை போடுவார். அந்த சிங் வேஷம் வேற நம்மை பாடா படுத்தும். என்ன சொல்லுங்க. மண்ணு மாதிரி வந்து நின்னாலும் சன்னி தியோலுக்கு சிங் வேஷம் சூப்பரா பொருந்தும்.
அபர்ணா சென் இளம் வயதில்
http://img.india-forums.com/images/6...aparna-sen.jpg
அம்மா அபர்ணா சென் இயக்கிய 'Mr. and Mrs. Iyer' படத்தில் மகள் கொன்கொனா சென்.
http://www.city.fukuoka.lg.jp/fu-a/f...117imageja.jpg
சுசிச்த்ரா சென் இளம் வயதில்
http://static.dnaindia.com/sites/def...13/1948846.jpg
மிடில் வயதில்
http://i.ndtvimg.com/mt/movies/2014-...ras-stable.jpg
http://images.jagran.com/suchitraa-sen-30-12-2013.jpg
சுசித்ரா சென் பேத்தி ரெய்மா சென்
http://s1.images.ramdevengineering.c...tures_2849.jpg
அருமை ராகவேந்திரன் சார்.
http://www.tamilmp3songslyrics.com/l...hoongaatha.GIF
திலக சங்கமத்தில் 'தூங்காத கண்ணென்று ஒன்று' பாடலை நடிப்பு வள்ளலின் அசைவுகளோடு அற்புதமாக படம் பிடித்து, 'மதுர கானங்கள்' தேருக்கும் வடம் பிடித்து, உங்கள் முத்திரையை தனியாக தடம் பதித்து உள்ளீர்கள். என்னா ஸ்டைல்! விக் கழற்றி சொந்த முடிவரும் போது அதை வேகமாக சில தடவைகள் கோதி விடும் போது மனத்தையும் கோதி கொத்தி விடுவார் அப்போதும். தலையை அப்படியே மேலே உயர்த்தி சிரித்தபடியே ஷர்ட் பட்டனை கழற்றுவது அருமையோ அருமை.
http://i.ytimg.com/vi/dk1sa4YN-WI/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/j7-cDxpGSic/hqdefault.jpg
பாடலின் முடிவில் கட்டிலை விட்டு எழுந்திருக்கும் அழகக் காணக் கண் கோடிதான் வேண்டும். 'துடிக்கின்ற சுகமென்று ஒன்று' என்னும் போது கட்டிலை விட்டு ஸ்டைலாக, ஒரு ஸைடாக எழுந்து காமெராவின் இன்னொரு சைடு ஆங்கிளுக்குத் தக்கபடி அற்புதமாகத் திரும்பி, பின் நடக்க ஆரம்பிப்பார் பின் பக்க போஸில். காமெராக் கோணங்களுக்குத் தக்கவாறு மிக துல்லியமாக முகத்தையும், உடலையும் கொண்டு வருவதிலும் இவரை மிஞ்ச எவரும் இல்லை.
அதனால்தான் பல முதல்தர காமேராமேன்கள் கூட அப்படியே இவர் நடிப்பில் நடிப்பு கிடக்கட்டும்... முதலில் இவரது குளோஸ்-அப் ஷாட்களில் மயங்கி, ஷாட் முடிந்தும் கூட காமெராவை நிறுத்த மறந்து, மெய் மறந்து, பிறகு இவர் சற்று கோபமாக குரல் கொடுத்தவுடன் சுயநினைவுக்கு வந்து காமெராவை நிறுத்திய கதை எவ்வளவோ இருக்கிறதே!
மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ராகவேந்திரன் சார். திலக சங்கமத்துடன் நானும் சங்கமித்து விட்டேன். நன்றி!