செந்தில் சார்.
அது சாந்தாதான். பின்னாளில் தாரா என்ற நடன இயக்குனராக இருந்தவர் இவரா எனத் தெரியவில்லை.
Printable View
vaNakkam Sivajisenthil Sir! :) I think Chinnakannan Sir and Vasudevan Sir are doing a wonderful job discussing the songs from Chemmeen!
In the meantime, here is a link to "The World of Salil Choudhury", which is a comprehensive portal on the great Salilda...
http://www.salilda.com/filmsongs/malayalam/chemmeen.asp
Songs in Bengali, Hindi, Malayalam, Tamil and other languages are listed, featured and discussed in these pages:
http://www.salilda.com/filmsongs/films.asp
http://www.salilda.com/
Sundaram master cheated Tara Master
https://youtu.be/0IUimRlYMMI
அனைத்து நண்பர்களும் தத்தம் திறமைகளைக் காட்டிய அற்புதமான 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' பாகம் நான்கின்
இருநூறு பக்ககங்கள்.
http://elyoyofugitivo.com/wp-content...5/05/200-1.jpg
எல்லார் போஸ்டையும் தாண்டி ராஜேஷ் ஜி.. ஏன் திடீர்னு பொம்மைல்லாம் காட்டிபுட்டீஹ..அதுவும் ஸ்ரீப்ரியா பொம்மை இருக்கே.. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் மாறாமல் வாழ்ந்தென்ன லாபம்ங்கறது சொல்லுது..(ட்ரஸ் கொஞ்சம் டைட்டோ!)ம்ம் பேஷ் பேஷ்.. டாங்க்ஸ் :)
ம்ம் சிற்றிடை என்பது முன்னழகு சிறு நடை என்பது பின்னழகு.. பூவில் விளைந்தது உன்னழகு பொன்னில் விளைந்தது என்னழகு... அதுசரி..அவுக சாந்தாவாமா.. அதுவும் நம்ம நெய்வேலிக்காரவுக புட்டு புட்டுல்ல வச்சுபுட்டாக.. வெஷயத்துக்கும் பாட்டுக்கும் அவருக்கும் ஒரு டாங்க்ஸ் சொல்லிப் புட்டோம்ல..
ம்ம் என்னைக் காதலித்த ஒற்றி (சரிதானுங்களே செந்திலண்ணாச்சி) நாளைக்கு வருமாக்கும்..அதுக்கும் ஒரு அட்வான்ஸ் டாங்க்ஸ்... அந்த ஈரோயினப் பத்திக்கொஞ்சம் வெலாவாரியா எழுதுவீகளா..
இப்படி ஆளாளுக்கு சூப்பரா எழுதினா நா என்னதேஞ்செய்றது (ம்ம் திடுதிடுதிப்னு ரவி ய வேற கோச்சுக்க வச்சுட்டன்)
சரி ஐ.என்.எஸ் எழுதுதேன்..!
இ.நே. சி. - 3
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாமே”
(திரு மூலர் திருமந்திரம்)
அகல் எண்ணெய் சுடர் என்றெல்லாம் பலவிதமாய்த் தெரிவது எண்ணெய் இடப்பட்ட விளக்கு.. தோற்றம் பலவாறானாலும் அது விளக்கு தான்..
பலவிதமாகத் தோன்றும், பலவிதமான மனிதர்களைத் தன்னுள் வைத்திருக்கும் பிரபஞ்சம் எனப்படும் உலகம் பரம்பொருளான சிவத்தில் அடங்கும்
என்பது இதன் பொருள்..
**
https://youtu.be/sesdbv0pXHA
**
Chemmeen Lehren is the Hindi dubbed version of Chemmeen (1965) (Malayalam).
Here is a song I liked most.
Pyasa hai main kya karoon... (sung by Hariharan)
http://www.youtube.com/watch?v=91GuiqRBksc
From the original (already posted)
Maanasa maine varoo... (sung by Manna De)
http://www.youtube.com/watch?v=W4FHG5baLOM
Same tune used by Salil Chodhuri in the Bengali movie, Srikante Will
Naam Sokuntola taar... (sung by Jesudas and Sabita)
http://www.youtube.com/watch?v=UGDqsyR1TqY
RD: I could not locate the video clips of songs from Circar Express. Probably due to spelling change in transliteration or copyright issues. I will keep trying. Was Chemmeen dubbed in other Indian languages? It was dubbed in English as
'Anger of the sea'.
Thank you Raj! :) I am not aware of the movie Chemmeen being dubbed into any other languages other than Hindi and English even though the novel was translated into more than 30 languages. By the way, it was "The Anger of the Sea" in English. I have re-mixed youtube copies of the other songs from the Hindi version that I will post at another time. For anyone more interested in the movie, here is a well-written review: http://madhulikaliddle.com/2013/04/09/chemmeen-1965/ . Too much Chemmeen for one day; I am not going to talk about it anymore! :)
OLD TAMIL MOVIES ADVT.
http://i60.tinypic.com/5lxc0k.jpg
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ஹும் வேக வேகமா ஐ.என்.எஸ். எழுதிட்டு நைட் ஷோ பாகுபலி பத்து மணிக்குப் போய் ஒரு மணிக்கு முடிந்து வீடுவர ஒன்றரை.. படம் நீளம்..ஆற அமர யோசித்து வெகு பிரம்மாண்டமாய் எடுத்திருக்கிறார்கள் இருந்தாலும் என்ன சொல்ல.. பச்சக் கென மனதில் ஒட்டிக் கொண்டது யாராக்கும்.. வேறு யார் தமன்னாவாக்கும்..
காலை எழுந்தவுடன் ஹேய் ஹேய் என்னை ப் பற்றி எழுதப் படாதோ என தமன்னா கண்ணுக்குள் வந்து மயிலிறகால் டபக் டபக் என வருடிவிட..எழுதிவிட்டேன்.,.
*
வெண்பனியின் மூட்டமதும் வேடிக்கை கொண்டங்கே
பின்னலெனக் கொள்ளாமல் பேரழகைக் காட்டத்தான்
மின்னல்போல் வேகமாய் மேவி விலகிவிட
கண்ணுள் விழுந்தாளே காண்..
*
காண்பதென்ன தேவதையா காட்டிலுள்ள மோகினியா
வான்நிலவு தானுதிர்த்த வண்ணநிறைக் கீற்றதுவா
தூண்டிவிடும் இளமையதைத்\ தூக்கிவிடும் மோகத்தை
பூண்டிருக்க கண்டமனம் புண்..
*
புண்ணாகும் என்றாலோ பூவையவள் கண்களதும்
என்னவிது என்றே எழுச்சியுடன் கேட்டுவிடும்
கன்னியவள் மெல்லங்கே காட்டிய நல்லெழிலை
எண்ண இனிக்குமே ஆம்..
*
பச்சைத் தீயே எனத் தமிழில் ஆரம்பிக்கும் பாடல் தெலுகில் பச்சை பொட்டேசினா
https://youtu.be/6otduL8VnA8
*
பின்ன வாரேன்
மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம்
பார்ட் 11 : The Spy Who Loved Me (1977) starring Roger Moore as James Bond OO7!
The lukewarm response to the first two outings of Bond with Moore created a sort of rift between Broccoli and his longstanding partner Harry Saltzman and resulted in a break up of partnership. Then Broccoli settled the dues for him and started producing on his own from this 1977 venture!! Rest is a success story continuing till date irrespective of which actor dons the Bond role!!
Quote:
இப்படத்தின் மூலம் காமெடி கலந்த கடமை வீரராக ஜேம்ஸ் பாண்டிற்கு புது உருவம் கொடுப்பதில் வெற்றி கண்டார் ரோஜர் மூர்!
ஷான் கானரியின் தவிர்க்க முடியாத நிழல் படிவத்திலிருந்த குணாதிசயங்களை விட்டுக் கொடுக்காமல் நகைச்சுவை கலந்து ஆக்ஷனையும் பரிமாறினார் !!
மூரின் படங்களிலேயே பிரம்மாண்டமான படம் இதுவே , சற்று தண்டர்பால், யு ஒன்லி லிவ் டுவைஸ் படங்களை நினைவு படுத்தினாலும்!!
டைட்டிலுக்கு முன்னால் வரும் மெய்சிலிர்க்க வைக்கும் பனிச் சறுக்கு துரத்தல் காட்சி கின்னஸ் சாதனையாகும். ஜான் பேரியின் தீம் இசை சூழலின் வேகத்தை கூட்டும் வண்ணம் அபாரமாகக் கோர்க்கப் பட்டிருக்கும் !! வில்லனின் கடலடி மாளிகை, இரும்புப்பல் வில்லன் ஜாஸ், கடலுக்குள் நீர்மூழ்கி கப்பலாக மாறும் கார், ....மறக்க முடியாத அனுபவம்!!
இந்த ஒரு படத்தில் காட்டிய சுறுசுறுப்பான ஆளுமையை ஏனோ ரோஜர் மூரால் தொடர இயலவில்லை.!! டைட்டில் இசைப்பாடலும் மிகவும் பொருத்தமான வரிகளில் ஜேம்ஸ் பாண்ட் புகழ் பாடும் !!
கதாநாயகி பார்பரா பேக் ஒரு ஸ்பை பெண்ணை நன்கு சித்தரித்துள்ளார் ஜேம்ஸ் பாண்டுக்கு இணையாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில்லன்
தன்னை கோல்டுபிங்கராக எண்ணிக்கொண்டு கொஞ்சம் சொதப்பியிருக்கிறார் !
Grand Gala Pre-titile adventure by Moore/Bond!! Most of the scenes Moore manages with his body double and back projection aided close-ups!!
https://www.youtube.com/watch?v=_kyQauA2udc
Excellent titile music, theme song mix with graphics!!
Nobody does ... sung by Carly Simon; Music by Marvin Kamlich! No more John Barry BGM but his theme music is just sprinkled in the critical action scenes to build up the tempo!!
https://www.youtube.com/watch?v=Wy-c8aAntWA
Enjoy the enchantic BGM in the Pyramids' light and sound show with thrills infused in the presence of Bond/Moore alongside Jaws/Kiel!!
https://www.youtube.com/watch?v=AxNyEUMewzg
https://www.youtube.com/watch?v=mC_H2URj8-E
James Bond's Spy Technology improvised Lotus Espirit Car!!
No Auston Martin...but Roger Moore fulfilled his desire to drive Sean Connery/Bond's Goldfinger car Auston Martin in a spoof Bond role in Cannon Ball Run starring alongside Burt Reynolds!!Enjoy the exotic visuals and one liner quips by Moore in dispatching baddies one by one!!
https://www.youtube.com/watch?v=UUxpXy1Oot4
James Bond Vs Jaws! The 7feet tall Richard Kiel reached the pinnacle of his fame after his Jaws characterization in this Bond flick!! Roger Moore looks quite handsome in this black dress with his comical winkling at Jaws before dragging him underneath the giant magnet!!
https://www.youtube.com/watch?v=7wmZrU6VQzE
The train fight is not so grand compared to that in Sean Connery starrer From Russia with Love's terrific duel with Robert Shaw! Moore does a light movement even as Jaws looks awesome with his projecting steel teeth that is a larger than life depiction!!
https://www.youtube.com/watch?v=CogCFACcNPc
The thrill filled end of villain! Roger Moore's suave and stylish Bond movements are impressive!!
ரோஜர் மூரின் ஜேம்ஸ் பாண்ட் இவ்வளவு க்ளோஸ் ரேஞ்சில் வில்லனை புல்லட்டடிப்பது சற்று அதிர்ச்சியே!!
https://www.youtube.com/watch?v=XbqxXFv1sik
21/07
நினைவில் நிலைத்த நடிகர்திலகம் ....
அவரது நினைவு நாள் மன அஞ்சலி ...
https://www.youtube.com/watch?v=MmYciykHXMM
https://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE
https://www.youtube.com/watch?v=SriIJv8p47Q
நடிகர்திலகத்தின் நினைவஞ்சலியை ஒட்டி எனது மதுர கான திரி பதிவுகளை 22.07 முதல் தொடர்கின்றேன்.
செந்தில்
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .
அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்
கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்
காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.
நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்
நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை
எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை
நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை
வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது
உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு
ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக
தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை
ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே
தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
ந.தி நினைவு நாளில் மீள் பதிவாக...
***
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
*
என்றென்றும் எண்ணவும் ஏட்டில் எழுதவும்
தண்ணொளி பெற்றுவிட்ட தங்கமாய் – மின்னி
துடிப்பாய் இருந்திடும் தூய்மையாய்த் தோன்றும்
நடிகர் திலகம் நடிப்பு
*
நடிப்பென்று சொன்னாலும் இல்லையவர் நெஞ்சம்
வடிக்கின்ற ஆற்றல் அறிவீrரே – விடியாத
வெண் திரைக்கு நன்றாக வித்தியாசம் கொண்டுவந்த
மின்னலாம் ஆவார் அவர்..
*
அவர்தான் நடிப்பென்று ஆய்ந்தவர்கள் சொல்ல
கவர்ந்திடும் கண்களால் பேசி – தவறென்று
தக்கபடி சொல்லியே சிரிக்கும் அடக்கத்தைப்
பக்குவமாய்ப் பெற்றவர் பார்..
*
பாரில் இவர்க்குநிகர் பார்த்தாலும் எந்தவொரு
ஊரிலு மிவர்போலே யாருமிலை – நேரிலோ
மென்சிரிப்பு நல்லாற்றல் மேன்மைக் குணமென்று
தன்னிறைவு பெற்றவர் தான்..
*
தானாட விட்டாலும் தாமாய்த் தசையாடக்
காணாத பேருக்குக் காட்டியவர் – வீணாய்ப்
புறம்பேசிப் பின்பக்கம் துற்றியவர் தம்மைத்தான்
புறந்தள்ளி விட்டவர் தாம்..
*
தாம்தூமாய்த் தம்நடிப்பே மேலென்று தாவியவர்
ஆமென்று சொல்வார் இவர்நடிப்பை மேம்பட்டு
பண்பட்டு மின்னிடும் பட்டென மக்களின்
கண்ணைக் கவர்ந்தவர் காண்..
*
காண்பதைக் கைப்படுத்தி காட்சியிலே நன்றாக்கித்
தூண்டி நடிப்பினைத் துல்லியமாய் -வேண்டுதற்போல்
மீண்டும் விழிபார்க்க மேலும் மெருகேற்றித்
தீண்டினார் நம்நெஞ்சில் தேன்..
*
தேனென்றும் பாலென்றும் தேவதையாய்ப் பாவையர்முன்
தூணென்றே காதலினைத் தூக்கியவர் – மீண்டுமே
கண்டிப்பாய்க் காதல் கவித்துவம் மேலேற்றித்
திண்ணமாய்ச் செய்தவர் தான்..
*
தான்தான் குழம்பெனில் தக்க ரசமாக்க
வீண் எண்ணம் என்றுமே விட்டவர் – மேன்மேலும்
தீட்டி நடிப்பைத் தெளிவாக வெண் திரையில்
காட்டியவர் நம்மிடம் ஆம்..
*
ஆமென்று சொல்லி அழகாய் மறுதலித்துப்
போமென்கும் பொய்கொண்ட வெண் திரையில் - நாமென்றும்
விந்தையாய்ப் பார்க்கும் வியப்பாம் நடிப்பினால்
சிந்தை நிறைந்தவர் தான்
*
அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.
பாடல்
அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்
உரை
தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.
பாடல்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது
உரை
எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்
ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.
பாடல்
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்
உரை
சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது
ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.
பாடல்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே
உரை.
இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு
கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.
பாடல்
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே
உரை.
தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)
பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.
பாடல்
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்
உரை
சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து
செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.
பாடல்
கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது
உரை.
தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல
நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு
ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.
தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.
பாடல்.
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை
உரை
பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.
காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.
பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.
வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.
பாடல்
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே
உரை
தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது
ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு
பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து
உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.
பாடல்
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்
உரை
தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை
மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .
தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை
இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.
பாடல்
காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.
உரை
உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி
அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி
உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து
மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.
பாடல்
நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்
நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை
உரை
ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை
பாடல்
எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை
நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை
உரை
எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.
பாடல்
வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது
உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு
உரை
எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.
பாடல்
ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக
உரை
ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .
பாடல்
தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை
ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே
உரை
human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்
அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..
பாடல்
தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
உரை.
உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்
உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,
எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.
வாசு,
எஸ்பிபி பாடல்கள் தொடரை படித்துக் கொண்டு வருகிறேன். சில நேரங்களில் உடனே. சில நேரங்களில் தாமதமாக. ஆதலினால் உடனே அதை பற்றி எழுத முடிவதில்லை. .
வீட்டுக்கு வீடு படத்தில், அங்கம் புது விதம் பாடலை நீங்கள் அலசிய விதம் நன்றாக் இருந்தது. பிற்காலத்தில் எஸ்பிபியின் முத்தரையாக கருதப்பட்ட சில improvisations இந்தப் பாடலில்தான் தொடங்கியதோ என்று யோசிப்பேன். அவர் அங்கம் என்று சொல்லும் ஸ்டைலைதான் குறிப்பிடுகிறேன். 1970 மே மாதம் வந்த படம். இதுவும் மதுரை தங்கத்தில்தான். நன்றாக போனது. பிற்காலத்தில் [அதாவது 3,4 வருடங்களுக்கு பிறகு] என் கஸின் படித்த் மதுரை கல்லூரியில் [Madura College] மாணவர் யூனியன் சார்பில் திரையிட்டபோது பார்த்தேன்.
மங்கையரில் மகாராணி அருமையான பாடல். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சில வரிகளில் எஸ்பிபி கிளப்பியிருப்பார்.
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
தீராத ஆசை கோடானு கோடி
போன்ற வரிகளை சொல்ல வேண்டும்.
ஆயிரம் நினவு பாடலை விட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலும் மலர் எது பாடலும் ரொம்பவே பிடிக்கும். அதிலும் மலர் எது படமாக்கம் சூப்பர். [ஆனால் ஸ்ரீதரின் சிஷ்யன் சிவிஆர் இதற்கு முன்னரே நில் கவனி காதலி படத்தில் ஜில்லென்று காற்று வந்ததோ பாடலில் underwater ஒளிப்பதிவை அருமையாக பண்ணியிருப்பார். என்ன அது பிளாக் & ஒயிட், இது கலர்].
அவளுக்கென்று ஒரு மனம் படத்தை நினைக்கும்போது எனக்கு எப்போதும் இரண்டு சிந்தனைகள் வரும். ஒன்று அந்த படத்தின் விளம்பரங்களிளெல்லாம் எரிந்துக் கொண்டிருக்கின்ற மூன்று மெழுகுவர்த்திகள். ஒரொரு மெழுகுவர்த்தியிலும் படத்தின் தலைப்பிலிருந்து ஒரொரு வார்த்தையை எழுதியிருப்பார்கள்
இரண்டாவது, அவளுக்கென்று ஓர் மனம் 1971 ஜூன் 18 அன்று ரிலீஸ் ஆனது. மதுரை சென்ட்ரலில். 71 ஏப்ரல் 14 வெளியாகி 10-வது வாரமாக பிராப்தம் ஓடிக் கொண்டிருந்தது. அதை எடுத்து விட்டுத்தான் அவளுகென்று ஓர் மனம் வெளியானது. இந்த படத்தை ஓபனிங் ஷோ பார்த்து விட்டு படம் தேறாது என்று என் கஸின் சொல்லி விட்டான். கடுப்பாக வந்தது. இந்த படத்தை ஏன் இங்கே கொண்டு போட வேண்டும், விட்டிருந்தால் பிராப்தம் ஓடியிருக்குமே என்ற எண்ணம் எப்போதும் வரும்.
ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை. 1970-ல் வந்த பாடல். சங்கர் கணேஷ் இசை. சுறுசுறுவென தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், (உங்கள் பாஷையில்) அதம் பதமாக லட்சுமி.
"மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்" என்று சற்றே மூக்கால் பாடுவார் எஸ்பிபி. அதில் "நாள் மணநாள் நெருங்கினால்" என்ற இடம் அள்ளிக் கொண்டு போகும். எந்த பாடல் என்று உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இந்த பாடல் போட்டு விட்டீர்களா?
அப்புறம் எனக்கு இரண்டு மூன்று எஸ்பிபி பாடல்கள் இருக்கின்றன. 1973-ல் G.K வெங்கடேஷ் இசையில் வந்த பாடல், 1974-ல் விஜயபாஸ்கர் இசையில் வந்த பாடல். எல்லாவற்றிருக்கும் மேலாக 1974-ல் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பிபி உங்கள் ராட்சசியுடன் இணைந்த பாடல் (எனக்கு பிடித்த சுறுசுறு ஹீரோவும், எனக்கு பிடிக்காத நடிகரும் நடித்தது).அதெல்லாம் வருமல்லவா?
நன்றி! தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது கலந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..
மீள் பதிவு..
***
நண்பர்கள் கொடுத்த உற்சாக போதையில் மனம் மயங்கி சற்றே மதியிழந்து
இங்கு எழுதப் போவது என்னவோ இரண்டு செளகார் ஜானகி படங்கள்! (என்னா தெகிரியம்)
அதாகப் பட்டது நல்ல உயர்ந்த ரக டர்க்கித் துண்டினை வாஷிங்க்மெஷினில் போட்டு நனைத்து அலசி
பின் பிழிந்து பின் உதறி கொடியில் காயப் போட்ட பிறகும் கூட அதிலிருந்து ஓரிரு துளிகள் கீழே சிந்தும்..
அப்படிப் பட்ட துளி போல அடியேனும் இழையோட்டத்திலிருந்து மாறாமல் எழுதப் போகும் முதல் படம்…..அதே தான்..
அரபு நாட்டில் இருப்பதால் மன ஒட்டகத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ள முயற்சித்து, முடியாமல்
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பி அழகான வாயால் அசைத்து எண்ணத்தைப் பின்னோக்கி ஓட வைத்தால்..
அட யாரந்தச் சிறுவன்.. மெரூன் கலர் டிராயாரும் வெள்ளை (ரின் சோப்) சட்டையுமாக என உற்றுப் பார்த்தால்
அட நான் தான்.(ஒன்பதாம் வகுப்பு).என்னருகில் இருந்தது வீடிருந்த தெருவில் மறு முனையில் இருந்த
வீட்டில் இருக்கும் பையன் சோமு(எட்டாம் கிளாஸ்) அவனருகில் அவனது அக்கா விம்மி என்றழைக்கப் பட்ட ஒல்லி நிர்மலா(?!) –
கேப்ரன் ஹால் பத்தாம் வகுப்பு என நினைவு..
இருவரும் என்னிடம் தீபாவளிக்கு ரீரன்னாக வந்த படமான புதிய பறவையைப் பற்றிக் கொஞ்சமாய்ச்
சொல்ல என் வயிற்றுக்குள் கொஞ்சம் மிளகாய்க் காந்தல்..அதில் சோமு வேறு ஒன்றைச்
சொல்லிப் படுத்தியும் விட்டான்..அதற்காக இரண்டு வருடங்கள் கழித்து
அவனைத் திட்டியிருக்கிறேன்..(அது கடைசியில் சொல்கிறேன்)
அந்த வருடம் இரு முறை முயன்றும் டிக்கட் கிடைக்கவில்லை என நினைவு..பின்
தொலை தூர அலங்காரில் ஒரு தடவை போட பார்க்க முடியவில்லை என வருத்தம்
..இரண்டு வருடம் கழித்து அப்பாவின் ராலே சைக்கிள் கிடைத்ததும் பளஸ் ஒன்னில்
ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அந்தப் படத்தை பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
.
ஒரு நல்ல சனிக்கிழமையில் அம்மாவிடம் பர்மிஷன்+ இரண்டு ரூபாய் வாங்கி
மாலைக்காட்சி பார்க்கக் கிளம்பினால் மழை.. “அடடா மழைடா அடை மழைடா” என்ற பாடல் மட்டுமல்ல
அந்தப் பாடல் பாடும் கதாநாயகி கூடப் பிறந்திருக்காத வருடம் அது!
இருந்தும் விறு விறு என மிதித்து கர்டர் பாலம் கீழே அவ்வளவாக தண்ணீர் தேங்காததால்
இறங்கி ஏறி கேப்ரன் ஹாலைக் கடந்து ஆரப்பாளையம் கிராஸ் அடைந்து குறுக்குவாட்டில்
பயணித்து தியேட்ட்ர் அடைகையில் ஆள் முழுக்க தெப்பமாகியிருந்தேன்..ஹச்..
இருந்தும் கூட்டம்..கியூவில் நின்று மேல்வரிசை 1.45ரூ டிக்கட் வாங்கி உள்சென்று
அமர்கையில் மனமெல்லாம் மத்தாப்பூ..(அதைப் பார்த்த யாரோ தான் பிற்காலத்தில் படத்தலைப்பாக்கினார்கள்!)…
பின் இளமை பூரிக்கும் மாலா வந்து கோல்கேட் பற்பசை வாங்கச் சொல்லிச் சிரிக்க,
ஆரோக்கிய வாழ்வைக் காப்பது லைப்பாய் எல்லாம் வந்து, அரங்கம் நிறைந்திருந்தும்
ஏதோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் வெள்ளம்
என மத்திய அரசு செய்திப்படம் ஓட, எனக்குள் எரிமலை பொங்கிக் குமுறி வெடிக்கும் நேரத்தில்
சென் ட்ரல் போர்ட் ஃபில்ம் சென்சார் போட எனக்கு இன்ப அதிர்ச்சி..
இந்த இரண்டு வருட காலகட்டத்தில் புதிய பறவை பாடல்கள் அனைத்தையும்
இலங்கை வானொலியில் கேட்டு ருசித்திருக்கிறேன், மறந்திருக்கிறேன் என்னை, ரசித்திருக்கிறேன்..
இன்னும் என்னவென்னமோ ..கிறேன்..!அதுவும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல்,
மெல்ல நட மெல்ல நட பாடல் எல்லாம் மனத்திரையில்(மன்னிக்க பழைய உவமை)
நடிகர் திலகம் கறுப்பு வெள்ளையில் க்ரேபாண்ட் வொயிட் ஷர்ட்டிலும் சரோஜா தேவி
டார்க் கறுப்பு புடவையிலும் நடப்பதாக ஓட்டிப் பார்த்திருந்த் எனக்கு படம் ஈஸ்ட்மென்கலர்
எனப் பார்த்ததும் சர்க்கரைப் பொங்கலை வாயிலிட்டால்
கூடவே முந்திரிப்பருப்பும் நிரடினால் என்னவொரு மகிழ்ச்சி பொங்குமோ அது போல ஆனது.
.
வைத்த கண் வாங்காமல் காரோட்டும் நடிகர் திலகக் கண்கள், ஓடும்பெண் என டைட்டில் பார்த்து
கப்பலில் ந.தி தெரியாமல் சரோஜா நதியுடன் மோதித் திரைப்படம் தொடர அதில் மூழ்கிவிட்டேன்..
சுவாரஸ்யமான த்ரில்லர்.. நடிகர் திலகத்தின் அற்புதமான முகபாவங்கள்:
சரோஜாதேவி தனது எண்ணத்தை சிட்டுக்குருவியிடம் பார்த்துத் தெரிந்து கொண்டது
போலச் சொல்லும் பாடல்- ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா…இரவினிலே
நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா-
என செக்கச் செவேல் மேக்கப் போட்டகன்னத்தைக் காட்டி வெட்கப் படும்போது முத்தெடுத்துக் காட்டும் முகபாவம்,
சடசடத்து ரயில் செல்ல படபடத்த இதயத்தை முகத்திலே காட்டுவது,
எம் ஆர் ராதாவின் டெலிஃபோன் உரையாடலைக் கேட்கும் போது யோசனையில் நெளியும் நெற்றிச் சுருக்கங்கள்,
பின் இரண்டாவது தடவை ரயிலில் வரும்போது சொல்லும் ஃப்ளாஷ் பேக்..
ப்ளாஷ் பேக் வரும்போது அவருடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டிருக்கிறேன்..
அவர் ஹோட்டலில் அமர்ந்து நடனத்தைப் பார்க்க ஆரம்பிக்க- என்னா அருமையான பாட்டுங்க அது- அந்த நீல
நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் – எனப் பாடும் செளகார் ஜானகியைப் பார்த்ததும் சற்றே ஏமாற்ற்ம் தான்.
.
என்ன தான் சொல்லுங்கள்..” என் கனவுக் கன்னி செளகார் ஜானகி தான்..என்ன ஒரு நிறம்..
என்ன ஒரு அழகு என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு அழுகை..எப்பொழுதும் வந்து என்னிடம் டூயட் பாடுகிறார் அவர்” என
எந்தத் தாத்தாவும் சொல்லியிருக்க மாட்டார்.. இதற்காக செளகாரை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம்..
இந்த குறிப்பிட்ட படத்தில என்ன தான் வித்யாச நடிப்பைத் தந்திருந்தாலும்
கொஞ்சம் இளமைக் குறைவு அப்பட்டமாகத் தான் தெரிந்தது..
பின் ஃப்ளாஷ் பேக் முடிந்து சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் வாங்குதல்
, நிச்சய தார்த்தத்தில் மறுபடி செளகார் ஜானகியைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி,
அவள் தன் மனைவியில்லை எனப்போராடும் தருணங்கள், இறுதியில் லதா நீயா இப்படிப் பண்ணே எனக் கேட்கும்
கையறு நிலை (ஏற்கெனவே கோபால் சார் புட்டுப் புட்டு வைத்ததால் நான் சுருக்கிவிட்டேன்)
என அபார நடிப்பு நடிகர் திலகத்தினுடையது....
சரோஜா தேவி முழுக்க முழுக்க ஆடையணிந்த மேக்க்ப் அணிந்த தேவதையாய் வந்தாலும்,
மேக்ஸியில் நடிகர் திலகத்துடன் கொஞ்சும் சமயத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாய்த் தெரிவார்..
நாகேஷின் முகபாவங்கள், எம்.ஆர்.ராதாவின் யதார்த்தமான வில்ல நடிப்பு
கதைக்குத்தேவை என்பதாலோ கொஞ்சம் பொம்மைத் தனமான இரண்டாம் செள.ஜா வின் நடிப்பு,
ராமதாஸ், ஓஏகே தேவர் என அனைவரும் தம் பங்கை ஒழுங்காய்ச் செய்திருந்தனர்..
இந்தப் படம் பார்த்துச் சிலமாதங்கள் கழித்துத் தான் சோமுவைப் பார்த்தேன்
மீனாட்சி அம்மன் கோவிலில்.. குட்டியாய் முதுகில் குத்தும் விட்டேன்.
.”பாவி இப்படிப் பண்ணிட்டயே” என..
அவன் அன்று சொன்னதாவது “ கடைசில தாண்டா சரோஜா தேவியும் போலீஸ் ஆஃபீசர்னு தெரியும்!”
எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் எனக்கு அலுக்கவே இல்லை..
*
https://youtu.be/xNInBEF8E7M
//கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..//
அன்பின் முரளி.. ரொம்ப ரொம்ப ஸாரிங்க.. எல்லா நண்பர்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தான்.. இந்த தடவை லீவில் நிறைய டூர் போட்டுக்கொண்டு விட்டேன் ப்ளஸ் – ஒருகுட்டிப் ப்ரச்னையால் மன உளைச்சல்..(இங்கு வந்த பிறகு தான் சால்வ் ஆனது)சென்னையில் இருந்ததே இரண்டு+இரண்டு நாலு நாள் தான். தவிர திரும்புகையில் ஜலதோஷம் லொக் லொக் இருமல்..அதனால் சோபனம் முடித்த புது மணப் பெண்ணின் கண்களைப் போல கண்களில் சிவப்பு! விமானம் ஏறும் போது கூட இமிக்ரேஷன் என் கண்களைப் பார்த்து மறுமுறை பார்த்தார்..
கண்டிப்பாக அடுத்த விசிட்டில் உங்களை வாசுவை மதுண்ணாவை ராகவேந்திரரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..இந்த முறை என்னை மன்னிக்கவும்..
ஓ உ.ப அலங்காரா.. ஸாரி..வயதாகி வருகிறதோ..தெரியவில்லை ..(என்னைச் சொன்னேன்)
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .// கோபால் சாமி சத்தியமா கோனார் நோட்ஸ் படித்த பின்னர் தான் புரிந்தது.. ஆனால் நினைவு நாளுக்கு க் கவிதை என்று எழுதீயிருந்தீர்கள்.. கவிதை எங்கே..?! (கண்ணா எஸ்ஸ்கேப் :) ) என்னமோ மரபு தெரியும் தெரியும் நு யாரோ சொன்னாங்க..ஆனா எழுத மட்டும் மாட்டாங்களாம்..ம்ம் என்னமோ போ நாராயணா :)
பழனி -இதயம் இருக்கின்றதே
குழிமேட்டில் இருந்து இதயம் இருக்கின்றதே என்று பாடிக்கொண்டே தலையைத்தூக்கி அவர் பாடுவது சோக ராகம் என்றாலும் அதிலும் கூட பிரமிப்பூட்டும் முக பாவனைகளில் சாகசம் செயயும் நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அடக்க முடியாத சோகங்களைதன் அடக்கியாளும் நடிப்பினால்அடக்கிக் காட்டும் நடிப்புச்சித்தன்இந்தப் பழனியாய் வாழ்ந்த நடிகர்திலகம்.அந்த இடத்திலிருந்து அவர் மெல்ல எழுந்துவரும்போது அவர் காட்டும் உணர்வுகள்அரை நூற்றாண்டு வாழ்ந்து கெட்டஒரு மனிதனின் சரித்திரத்தை அரை நொடியில் காட்டி விடும் நடிப்பல்லவா அந்த நடிப்பு.முதல்முறை வரும்"தம்பி "
என்கிற வார்த்தையின் போது வெளிப்படுத்தும்தலையாட்டல் இரண்டாம் முறை"தம்பி"என்று பாடும் போது வேறு. விதமாய் இருக்கும்.அதே "தம்பி"மூன்றாம்முறை இன்னொரு விதம்.இதே மூன்று வேட நடிப்பாகி விட்டது.இதெல்லாம் மீறினால்20 செகண்டுகளுக்குள் நடந்து விடும் மாயாஜாலம்.இந்த நடிப்புகளை நாம் கிரகித்து வியக்கும் காலகட்டங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதனால்தான்அவை அதிசயங்கள்.அதிசயங்கள் எல்லா காலங்களிலும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பதைப் போல்தான் இதுவும்.
வாழ்வின் உறவுகளை அதன் இழப்புகளை
வலிய பாடல்வரிகளையும் தாண்டி
பாவங்கள் காட்டிஅவர் நடித்த நடிப்பு கற்காலம் முதல் நிகழ்காலம் வரை மனிதன் பார்த்தறியாத உணர்ச்சிப் பிளம்புகளாகத்தான் இருக்கும்.
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
துண்டை தோளில் தூக்கிபோட்டு" ஓடிடும் ஏழையர்க்கும்" எனும்போது நெஞ்சத்து குமுறல்களைமென்மையாகத்தான்வெளிப்படுத்துவார்.ஆன ால் அந்த வெளிப்பாடு எரிமலையின் சீற்றம்உள்ளே அடங்கி இருப்பதுபோல் காட்டும் மறைமுகநடிப்பின் வெளிப்பாடு.கிராமத்து விவசாயிகளின் துயரங்களையும்,இயாலாமைகளையும்
சில நிமிடங்களில் சாட்சியப்படுத்தும் பாடலுக்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.எல்லாம் அறுந்து இனி பிடிப்புக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் , தரையில் மெதுவாக அவர் அமரும் காட்சி ஒன்றே அதை விளக்கிவிடும்.
எளியவர்களின் வலிய சோகங்களை துல்லியமாய் காட்டும் அந்த நடிப்பு அசாத்தியமானது.எந்த எழுத்து அதை வடிக்க இயலும்?
தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!.
தானாட மறந்தாலும் என்பதற்கு முன் ஒரு நடை வரும்.உடம்பை ஒடுக்கி,குறுகி நடந்து வரும்நடை.அந்த நடையே அந்தப்பாத்திரத்தின் தன்மையை விளக்குவதாக இருக்கும்.சோகத்தை கூட சொர்க்கமாக்கும் அவருடைய நடிப்பு.
ஒரு மரத்துக்கிளிகள் ஒன்றைவிட்டு
எங்கோ பறக்கின்றதே
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்,
பிரிவுகளை.,பிரிவுகளின் வருத்தங்களை
விளக்கும் வரிகள்.இந்த வரிகளுக்கு ஒரு கையைத் தூக்கி நடித்தே வரிகளை வரலாறு ஆக்கி விட்டார்.ஜீவனுள்ள நடிப்பு.நெஞ்சையறுக்கும் படப்பதிவுகள்.
பழனி யின் இந்தப்பாடல் கிராமத்து பாமரனின் நெஞ்சகுமுறல்.அந்தக் குமுறல்
அவனின்சாதாரண புலம்பல் அல்ல.
அதில் மண்ணின் பாரம்பரியமுமம்,
உறவுகளின் சங்கமும்,அவற்றின் தன்மையையும் உணர்த்தும் பாடல்.
நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகர்கள் பழனியைப் பாருங்கள்.
பழனி ...வாழ்கைப் போராட்டங்களின் பாடம்
இதயம் இருக்கின்றதே - தம்பிஇதயம் இருக்கின்றதே!வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்... (இத)உறவினில் நீராகி பிரிவினில் நெருப்பாகும்உணர்வும் இருக்கின்றதே! - தம்பிஉணர்வும் இருக்கின்றதே!... (இத)தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் 4!...தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!... (இத)ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்றுஎங்கோ பறக்கின்றதே! - தம்பிஎங்கோ பறக்கின்றதே!... (இத)கூடப் பிறந்து விட்ட கொடுமையினால் மேனிகனலாய்க் கொதிக்கின்றதே! - தம்பிகனலாய்க் கொதிக்கின்றதே!
- Kannadasan
Monotony Breakers! Gap Fillers!!
தமிழ் படங்களில் பெண்ணாண்மை கீத மதுரங்கள் !
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு : ஆண்மையின் பெண்மைப் போ(பா)ர்வை!
Quote:
என்னதான் ஆண்மகனாக பிறந்து வளர்ந்து வாலிபம் எய்தினாலும் உளவியல் ரீதியாக மனதில் ஓர் ஓரத்திலாவது பெண் வேடமிட விரும்பாத ஆடவர் அபூர்வமே!! பெண்டிர் ஆடவர் போல உடையணிய எண்ணுவதும் உளவியல் கூறே!
வீரத்திருமகன் ஆனந்தனும் நீலகிரி எக்ஸ்பிரஸ் முட்டைக்கோஸ் கண்ணர் 'சோ'வும் (மொட்டை பாஸ் அசோகனுடன்) நளினமாக அதகளப்படுத்தும் ஆண்மையின் பெண்மை!! கண்களுக்குக் காட்சி விருந்து! காதுகளுக்கு மதுர மருந்து !!அருந்துவோமே !!!
https://www.youtube.com/watch?v=3VAX91N3uJc
https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE
பெண் திரைப் படத்தில் சந்திரபாபுவின் குரலில் வீணை எஸ் பாலசந்தரின் நளினமான பெண்ணாண்மை!
https://www.youtube.com/watch?v=JgtZk34-5WM
இனிது இனிது வடிவேலு!!
https://www.youtube.com/watch?v=y3nA4CgpYzA
ரிக்ஷாமாமா கவுண்டமணி !!
https://www.youtube.com/watch?v=Gfy-uRCIkKM
Thanks RD ! I corrected the title in my post. I am not going to touch Cemmeen anymore. I am allergic to shellfish - Shrimp(chemmeen). crab and lobster. It is all yours ! :lol: Just joking. When we took a boat ride in the backwaters of Kerala we ordered shrimp(prawns) for the boys. After lunch they said that was the best shrimp they ever tasted! :)
I will wait for your dishes of Chemmeen ! :)
சி.செ. கொஞ்சூண்டு கோபம் உங்களிடம் (அது இப்போது இல்லை பிகாஸ் ஆஃப் யுவர் போஸ்ட்)
நினைவு நாள் கழித்து வருவதாகச் சொல்லியதால் கோபம்..
இந்த ஸ்பை ஹூ லவ்ட் மி இருக்கிறதே..அது என்னவாக்கும்..
*
கண்ணா ஒரு காமிக்ஸ் லவர் இந்த (பலவருடம் குறைந்த) வாசு சார்வயதிலும்.. (லார்கோ, வேய்ன் ஷெல்டன் லயன் காமிக்ஸ் படித்திருக்கிறீர்களா..இல்லையெனில் படியுங்கள்.காமிக்ஸ் அறிமுக மானது எனக்கு இரும்புக் கை மாயவியில்.. எங்கள் வீட்டு முனையில்பி. 4 போலீஸ் ஸ்டேஷன் அதன் இடது பக்கம் வந்தால் ஒரு செட்டியார் கடை..
அதற்கு முன் ஒரு டெய்லர் ஆர். எம் டெய்லர்..ப்ளஸ் அதைத் தாண்டி ஒரு பொடிக் கடை..அங்கு தான் வாங்கினேன்..(90 பைசா) அந்தக் காலத்தில் அந்த 90 பைசா வென்பது ஓஹோ பணம்..ஆனால் பணத்திற்கு வொர்த்..
அதன் பின்னர் வரிசையாக வந்த புத்தகங்களை வாஙக்ப் பணம் கொஞ்சம் தான் இருந்தத்.. உறை பனி மர்மம் வாங்கினேன் கொலைகாரக் க்ள்வன் (ஒன்று சொல்லவேண்டும் அந்த சமயத்தில் குமுதம் 65 பைசா விகடன் 75 பைசா (ஆ.வி தான்))
நாச அலைகள் வாங்கவில்லை பக்கத்து வீட்டு செட்டியார் பையன் வாங்கியிருந்த காற்றில் கரைந்த கப்பல்கள் வாங்கி என் வீட்டின் மாடியின் குறுகலான படியில் குட்டியூண்டு கண்ணனாக படித்தது மட்டும் நினைவில் .. ஹீரோக்கள் லாரன்ஸ் டேவிட் ( தேங்க்ஸ் டு மை ஆழ் மனம்.இது டைப் பண்ணும் வரையில் லாரன்ஸ் என்ற பெயர் நினைவிலேயே இல்லை)
கதை.. ஒரு கப்பல் கடலில் செல்கிறது இன்னொரு கப்பல் விழுங்காமல் அதை காப்ச்யூர் செய்து பெயர் மாற்றுகிறது என்பது போல் வரும்,
அதையே விகடனில் ஒரு விமர்சனத்தில் (மதன் தான் ஆ.ப விமர்சனம் எழுதினார்) படிக்கவும் ஆவல் மேலிட ஆனால் அது வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதம் அல்லது ஒருவருடம் கழித்து ரிலீஸ் ஆக..எங்கே தங்கம் தியேட்டரில் (முரளி சரியா)
அது தான் ஸ்பை ஹூ லவ்ட் மி
ஆரம்பத்தில் கப்பலை பெரிய கப்பல் விழுங்கும் காட்சியிலாகட்டும் இறுதியில் பாண்டும் அந்தப் பெண்டும் முத்தங்கொளும் காட்சியிலாகட்டும் சோடை போகவில்லை..
ஆனாக்க
வீடியோவில் ஆரம்பக் காட்சியே கிடையாது. துபாயில் அந்தப் படம் banned. அரபிக் காட்சிகள் வருவது என்பதால் ..(உங்களுக்குத் தெரியுமா..பட்ட்த்து ராணி பார்க்கும் பார்வை அந்த்தப் பாட்டையே தடை செய்திருந்தார்கள் வீடியோவில்.. 1987 முதல் 1995 வரை கொஞ்சம் ஜெயராஜ் படங்களுக்கும் கறுப்பு மை பூசியிருப்பார்கள் ஆனந்த விகடன் குமுதம் இன்ன பிற பத்திரிகைகளில்)(சென்சாராம்!)
2000 ல் ஒரு ஈராஸ் தியேட்டரோ வேறு எதுவோ (அதுஇப்போது இல்லை) அங்குஎன் ப்ரதர் இன்லாவிடம் சொல்லி போய்ப்பார்த்தேன்..அந்த வெர்ஷனிலும் கிடையாது..
ம்ம்
ஆனால் நல்ல படம்..ஆ. ...என சி.க பார்த்து ரசித்த படம்..அதுவும் கடலிலிருந்து கார் வெளியேறும் போது ஒரு மீனை பாண்ட் எறியும் காட்சியின் நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்..
நினைவூட்டலுக்கு நன்றி சி.செ :)
ஜாஸ் என்னவோ எனக்குப் பிடிக்காது...!
எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை வெளிப்படுத்தவே என்னுள்ளே எம்எஸ்வி நிகழ்ச்சி! - இளையராஜா பேட்டி
ஜூலை 27-ம் தேதி இளையராஜா நடத்தும் என்னுள்ளே எம்எஸ்வி என்ற இசையஞ்சலி நிகழ்ச்சி, வெறும் பாட்டுக்கச்சேரியாக மட்டுமல்லாமல், எம்எஸ்வியின் இசை நுணுக்கங்களை விளக்கும் நிகழ்ச்சியாக நடக்கப் போகிறது. ஒவ்வொரு பாடலையும் எம்எஸ்வி உருவாக்கிய விதம், அந்த இசையின் நுணுக்கங்கள் போன்றவற்றை தன் இசைக் குழு மூலம் வாசித்து விளக்கப் போகிறார் இளையராஜா. Ilaiyaraaja speaks on Ennulle MSV concert இந்த நிகழ்ச்சியை ஜீவா இளையராஜா அறக்கட்டளை நடத்துகிறது. இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "இந்த நிகழ்ச்சி வெறுமனே அண்ணன் எம்எஸ்வியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்துவது அல்ல. எம்எஸ்வி என்ற மாமேதை தந்த இசையின் நுணுக்கங்களை ரசிப்பது. அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும். அண்ணனின் உடல் மறைந்த 13வது நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்," என்றார். இதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில்லை. ஒரு இசையமைப்பாளர் இறந்தால், இசைக் குழுக்கள் சில இப்படி நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் பெரும் இசையமைப்பாளர் யாரும் அப்படி நடத்தியதில்லை. இளையராஜாதான் முதல் முறையாக எம்எஸ்விக்கு இப்படி இசையஞ்சலி நடத்துகிறார்.
http://i59.tinypic.com/dyxcol.jpg
http://i1087.photobucket.com/albums/..._005384921.jpg
நடிப்புக்கு மட்டுமல்ல
வாழ்வியல் நெறிமுறைகளுக்கும்
ஆசானே!
இன்று உன் நினைவு நாள்.
நினைவிலேயே கலந்தவருக்கு
நினைவு நாளா?
இறைவனுக்கு ஏது இறப்பு?
நீ தெய்வத்தின் பிறப்பு
எம் அகம் புறம் அத்தனையும்
ஆண்டதால்
என் ஆண்டவன் நீ
நான் தொழும் முழு முதற் கடவுளே
கணேச நாமம் தவிர வேறு ஒன்றும் நானறியேன்
என் ஐம்புலன்களும் என் வசமில்லை
அது நான் பிறந்த போதே உன் வசமானது
மாதா பிதா குரு தெய்வம் உலகிற்கு
அனைத்தும் நீ ஒருவனே எனக்கு
அங்க அசைவுகள் மூலம் அமிர்ததைத்
தெளித்தவனே
அழகு எதுவென உலகிற்கு அடையாளம்
காட்டியவனே
உன்னால் அகிலம் அன்பைக் கற்றது
பாசத்தைப் பயின்றது
காலன் உன்னை அழைத்துக் கொண்டாலும்
காலம் உன்னை மறவாது
என் தேவனே என்னைப் பாருங்கள்
பாவிகளின் பாவங்களை வாங்கிக் கொள்ளுங்கள்
உன்னை இயக்கிய இயக்குனர்கள்
எத்தனையோ பேர் இருக்க
என்னை இயக்குபவன் நீ மட்டுமே
என் உயிரின் அணு ஒவ்வொன்றும்
உனக்கு மட்டுமே
சிவ பூஜை சிவனடியார்களுக்கு
சிவாஜி பூஜை இந்த அடியேனுக்கு
துன்பம் நேர்கையில் யாழ் நீ எனக்கு
இன்பம் தருவதில் இன்னிசை நீ எனக்கு
இன்பதுன்பம் எது வந்தாலும்
எனக்கு நீதான் உலகம்
வினாடி கூட உன்னை மறவாத
விந்தைக் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் நீதான் என் இறைவன்.
உடலால் மட்டுமே நீ மறைந்த
இந்நாளில்
உயிராய் உணர்வாய் உன்னை
என்றும் போல் இன்றும் வணங்குகிறேன்.
எங்களைக் காத்தருள்வாய்.
அன்பின் முரளி சார்!
பாலா தொடரை தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி! நேரம் கிடைக்காவிடினும் எப்படியும் தாங்கள் வாசித்து விடுவீர்கள் என்று தெரியும். பாராட்டுதல்களுக்கும் நன்றி!
//ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை//
இல்லை முரளி சார். இன்னும் இடம் பெறவில்லை. 1969 லேயே இன்னும் சில பாடல்கள் பதிவிடுவதற்கு இருக்கின்றன. என்னிடம் இருக்கும் பழைய படங்களின் டிவிடி க்களை முழுதும் மீண்டும் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டுத்தான் இத்தொடரை நான் எழுதுகிறேன். முடிந்தவரை படத்தின் கதை, பங்கு கொண்ட நடிகர்கள், டெக்னீஷியன்கள் என்று விவரங்களை அளிக்க வேண்டுமென்றுதான் இப்படி. மறந்த, பார்க்காத அல்லது இல்லாத படங்களை பார்த்து விட்டுத்தான் எழுத வேண்டும் என்பதால் சில பாடல்கள் விடுபட்டுப் போகின்றன. ஆனால் நிச்சயம் மிஸ் ஆகாது. படம் கிடைத்து பார்த்த பின் கண்டிப்பாக வரும்.
நீங்கள் சொன்ன சின்னப்பரின் ஸ்டூடன்ட் நிச்சயம் கல்யாண ராமனாய் லஷ்மிகரமாக விரைவில் வருவார்.
அதே போல உங்களுக்குப் பிடித்த சுறுசுறு ஹீரோவும், பிடிக்காத நடிகரும் நடித்த படத்தில் நிச்சயம் பிடிக்காத நடிகர்:) உங்களுக்குப் பிடித்த பாடல் பாடி சைக்கிளில் ஊர்கோலம் வருவார் அதே சட்டக்காரியுடன். ஒரு கோடி இன்பங்களை ஒன்றாக அள்ளித்தரும் ராட்சஸி பாலா இணைவு. அந்தக் க(றை)ரையும் பச்சைதான். பிரகாசத்தின் பச்சை. சரிதானே அல்லது தவறா?
அதே போல 73 ன் வானம் சிந்திய தேனும், 74 ன் விதுபாலா, ஜெயசித்ராவின் அம்மா போட்ட சபதத்தின் விளைவாக ஓடி வரும் அன்பு மேகமும் விடுபட்டால் பாலாவின் தொடருக்கு அர்த்தம் எது?
இதற்கெல்லாம் மேலே அனைத்திற்கும் டாப்பாக விஜயா 1971ல் முன்னமேயே போட்ட சபதம் ஒன்று உண்டே. அதே gkv மலர்களாய் தென்றலாய் நம் மனதை தொட்ட பனித்துளிப் பாடல்.
எல்லாமே வருகிறது முரளி சார்.
தங்கள் நினைவூட்டல்களுக்கும், உயரிய ரசனைக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
சின்னா!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
கண்களில் அருவி.
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட நடிகர் திலகம் பட விழா பற்றிய அண்ணா நாளிதழில் வெளிவந்த ஆவணம் - இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாளில் மலரும் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்
http://i58.tinypic.com/2uymzad.jpg
டியர் வாசு சார்,
பேசும் தெய்வம் பாடலில் ஆடுவது கீதாஞ்சலி அல்ல சாந்தா என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி. நான்தான் சற்று குழம்பி விட்டேன்.
மற்றபடி சாந்தா பற்றிய மற்ற விவரங்கள் நாம் ஏற்கெனவே பேசியதுதான். பாகம் இரண்டில் என்று நினைக்கிறேன்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான (துணை) நடிகை. 'அவளுக்கென்ன அழகிய முகம்' பாடலில் மட்டுமல்ல, 'சிலையெடுத்தான்' பாடலிலும் அவர் ஆடுவார். 'அவளுக்கென்ன' பாடலில் அணிந்த அதே உடையில்.
ஏ.வி.எம்.படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு மாஸ்ட்டர் சாந்தா, இன்ஸ்பெக்டர் சாந்தா, டெர்ரர் சாந்தா என பல பெயர்கள் உண்டு (இரண்டுமுறைக்கு மேல் சொல்லிக் கொடுத்தும் சரியாக ஆடாத குரூப் டான்சர்களுக்கு 'பளார்' என்று விடுவாராம்). நம்ப முடியவில்லை அல்லவா. சரவணன் சார் கொடுத்திருந்த சுதந்திரம் அப்படி. அவரிடம் அறைவாங்கிய ஒரு ஜூனியர் நடிகை சில ஆண்டுகளுக்கு முன் டி.வி.யில் சொன்னார். சாந்தாவால்தான் முன்னுக்கு வந்தேன் என்றும் சொல்லிக்கொண்டார்.
ஏ.வி.எம்.மில் எஸ்.பி.எம். நுழைந்ததும் சாந்தாவை மாஸ்ட்டர் பதவியிலிருந்து ஓரம் கட்டி தனது ஆஸ்தான புலியூரை முன்னிலைப் படுத்தினார்.
அரசகட்டளையில் ஜெயலலிதாவும் சாந்தாவும் குழாயடியில் நனையும் காட்சி ஓவர் விரசம். அதோடு ஒப்பிடுகையில் நீங்கள் சொன்ன 'என்ன சொல்ல என்ன சொல்ல' எல்லாம் ஒன்றுமில்லை.
சாந்தா அழகாக இருந்ததால் அன்றைய கதாநாயகிகள் அவரைத் தனது தோழியாக நடிக்கவைக்க தயங்கினார்கள் என்ற தங்கள் கூற்றைப் படித்ததும், பலகாலம் முன்பு ஒரு வாரப் பத்திரிகையில் படித்த ஜோக் நினைவுக்கு வருகிறது....
ஒருவர் தன நண்பரிடம்: "கருப்பான, குள்ளமான, அழகில்லாத இளம்பெண்கள் ஒரு ஐந்தாறு பேரை அழைத்து வர ஏற்பாடு செய்"
நண்பர் : "எதற்கு?"
முதலாமவர் : "இன்றுமாலை என் மகளை பெண்பார்க்க வருகிறார்கள். அவளைச்சுற்றி தோழிகளாக நிறுத்தத்தான்"
சாந்தா இடம்பெற்ற பாடல்களின் வீடியோக்களை தேடியெடுத்து பதித்த உங்கள் சுறுசுறுப்பான உழைப்பு அசர வைக்கிறது. பர்ரட்டுக்கள்.
நடிகர்திலகத்தின் நினைவு நாளையொட்டி கோபால் சார், வாசு சார் மற்றும் நண்பர்களின் அஞ்சலிக்கவிதைகள் மனதை கனக்க வைக்கின்றன.
அவற்றுக்கு நிகராக நான் எதுவும் எழுதிவிட முடியாதென்பதால் அந்த அஞ்சலியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
வாழ்க நடிகர்திலகத்தின் மாண்பு, பெருமை, சாதனை.
டியர் வாசு சார்,
பாலா தொடரில் மாணவன், அக்கரைப்பச்சை, சபதம், பொண்ணுக்கு தங்க மனசு, எங்கம்மா சபதம் படப்பாடல்கள் தொடரவிருப்பது மகிழ்ச்சி (உங்கள் மனசாட்சி: "நான் மூடு மந்திரமாக எழுதினால் இப்படிப் போட்டு உடைக்கிறானே")
முரளி சாருக்குப் பிடித்து கோபால் சாருக்குப் பிடிக்காத நடிகரும், கோபால் சாருக்குப் பிடித்து முரளி சாருக்குப் பிடிக்காத நடிகரும் இணைந்து நடித்த "ஓ.. மைனா" பாடலை ஏற்கெனவே வேறொரு தலைப்பில் பதிவிட்டிருக்கிறீர்கள். இருப்பினும் பாலாவுக்காக மீள்பதிவு செய்வீர்கள் அல்லவா?.
'பொட்டுவைத்த முகமோ', 'இரண்டில் ஒன்று', 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது', 'யமுனா நதியிங்கே' பாடல்களையெல்லாம் கிளைமாக்ஸில் வைத்துக்கொள்ள திட்டமா?.
ஆதிராம்.. நலமா :) ஆஹா..இப்படி போட்டு உடைத்ததற்கு மிக்க நன்றி..சின்ன மூளை ( நான் தான்) ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிட்டுக் குழம்பிக்கிட்டு இருந்தேன்!
கல் நாயக் எங்கே ஆளையே காணோம்..
வந்து மறுபடியும் வேலை..லீவ் முடிந்து போச்..
ஊர் சுற்றலில் கண்ட மழை, பனி எல்லாம்கனவு தான்..இதோ இதோ இங்கே சுடும் வெயில் மட்டும் நிஜம்..
ம்ம் பாட் கேக்கலாம்..வேறென்னசொல்ல..
https://youtu.be/9ZOCSLL261w