Originally Posted by
g94127302
திரு ஆதிராம் - நன்றாக எழுதுபவர்கள் எவ்வளவு முக்கியமோ , அவ்வளவு முக்கியம் அவர்கள் போடும் பதிவுகளை ரசனையோடு படிப்பவர்கள் , படித்து மனமார பாராட்டுபவர்கள் - இவர்கள் இல்லையென்றால் எழுதும் எழுத்துக்கள் செடிகள் போல பூத்துக்கொண்டே இருக்காது , வெறும் பூக்கள் போல பூத்து வாடிவிடும் - எழுதுபவர்களுக்குக் கூட அவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை - ஆனால் , படித்து , அதற்குப்பின்னால் இருக்கும் உழைப்பை உணர்ந்து அவர்களை ஓர் இரண்டு வார்த்தைகளாவது சொல்லிப்பாராட்டுவதர்க்கு பரந்த மனம் தேவை -
இந்த திரியில் யாருமே எதையுமே எதிர்ப்பார்க்காமல் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே நினைப்பில் பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கிறோம் - இந்த உழைப்பை , dedication யை வேறு எங்காவது காண்பித்து இருந்தால் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் - இங்கு கிடைப்பது விலை மதிக்க முடியாத ஆத்ம திருப்தி - இது ஒன்றுதான் வாசு போன்றவர்களுக்கு உங்கள் மூலமும் , கொஞ்சம் என் மூலமும் கிடைக்கிறது - சிலர் எதையுமே கண்டு கொள்ளாமல் அவர்கள் வழியில் , அவர்களுக்குப்பிடித்ததை மட்டுமே பதிவிட்டு மற்றவர்களின் ஈடுபாட்டை கண்டுக்கொள்ளாமல் இருப்பது - எழுதுபவர்களுக்கு ஒன்றும் இல்லை ஆனால் அந்த போக்கு நமக்குள் இருக்கும் சகோதரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாய் அமைவதில்லை .
மற்றவர்களுடைய நல்ல பதிவுகளை எவ்வளவு பழைய பதிவுகளையும் மனதில் கொண்டு அதையும் சம்பந்தப்படுத்தி அவர்களைப்பாராட்டுவது என்பது உங்களது பரந்த மனம் - இறைவன் கொடுத்த வரம் . வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன் - நம்மால் வாசுவிற்கு திருப்பி செய்யும் நன்றிக்கடன் இது ஒன்றுதான் - என்னால் உங்களைப்போல எழுத வராது , அதனால் ஒரு பெரிய நன்றி மீண்டும் உங்களுக்கு !!