ரவி சார்,
'திருக்குறளும் , திரை இசையும்'
அருமையான தலைப்பின் தொடர். அதுவும் திருக்குறளை முதலாக வைத்து. உங்களுக்கு சொல்ல்லித் தர வேண்டுமா? அழகழான சம்பவங்களுடன் தூள் கிளப்பி விடுவீர்கள். தாம்பத்யம் பதிவுகளும் அருமை. மனைவியின் பெருமையை உணர்த்தும் பதிவை இங்கே பதித்ததற்கு நன்றி!
'அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே' என்ற நம் 'அறிவாளி'யின் பாடல் எடுத்து தொடரை ஆரம்பித்து வைத்தது மிகப் பொருத்தமே. உங்கள் கான்செப்ட்கள் வியக்க வைக்கிறது.
அதே போல 'இன்று நமதுள்ளமே' பாடல் என்னை மிக மிக கவர்ந்த பாடல். மிக அழகாக அருமையாக நெஞ்சில் பதிந்த பாடல். பாடகர் திலகத்தின் குரல் அவ்வளவு அம்சமாக இருக்கும். அருமையான பாடலுக்கு உள்ளம் மகிழ்ந்த நன்றி.
'தன்னந் தனிமையிலே வரும்' என்று எனக்குத் தெரியும்.:)
தங்களுடைய பாராட்டுகளுக்கும் நன்றி!
தூள் கிளப்புங்கள்.