வாசு சார்
மேற்கண்ட பதிவு அவசரத்தில் போட்டது. சர்வர் மக்கர் பண்ணியதால் ரொம்ப நேரம் அவஸ்தைப்பட்டு அந்த விளக்கத்தை அளித்தேன். திரியை விட்டு போகும்போது கூட குற்றவாளியாக போகக்கூடாது. நம் தரப்பை விளக்கி விடவேண்டும் என்று தவித்து விட்டேன் என்பதே உண்மை.
கோபால் அவர்கள் என் பதிவுகளை திருக்குறள் போல சுருக்கமாக என்று சொன்னதற்கே அந்த பதிவை இட்டேனே அன்றி, நீங்களும் முரளி சாரும் பதிவிட்டதெல்லாம் என் கவனத்துக்கு வரவில்லை.
இந்த திரியின் 1120-வது பதிவில் கோபால் சார் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி என்னை விளித்து வரும் பதிவுகளை 'கோட்' பண்ணியே பதிலளிக்கிறேன்.
என் விளக்கத்தைப் படித்து உங்கள் முந்தைய பதிவை நீக்குவீர்கள் அல்லது மாற்றம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இனி நான் திரியில் தொடர்வதும் விடைபெற்றுப் போவதும் உங்கள் முடிவு.