நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம் தானே உன் நினைவிருந்தால்
நலமே ஜி.. ஏன் ஏன் ஏன்னு கொன்னுட்டீங்க
Printable View
நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அற்புதப் பாடல்...
விவரமாக விஸ்தாரமாக எழுதப் போவதில்லை.. வாசு சாரின் எழுத்தில் இதைப் பற்றிப் படியுங்கள்.
https://www.youtube.com/watch?v=SD1WGCUcVgU
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மற்றோர் பாடல் ஏன் படத்திலிருந்து...
கண்ணன் எனக்கொரு பிள்ளை.. சூலமங்கலம் ராஜலகஷ்மியின் குரலில்...
https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU
வாசு சார்
வடிவுக்கு வளைகாப்பு பாடலைத் தந்தை மகற்காற்றும் பாசத்தொண்டாய் அருமையாக சித்தரித்து தங்கள் எழுத்தின் சிறப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
கருவின் கரு - 142
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
வாசு - புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதை போல - தோகையை விரித்தாடும் மயிலைக்கண்டு வான் கோழி தானும் ஆடுவதைப்போல - இந்த பாடலை உங்கள் பாணியில் அலசலாம் என்ற ஒரு நப்பாசை - இந்த பாடல் என்னிடம் இருந்து தப்பித்து நெய்வேலி செல்லப்பார்த்தது - ஒரே அமுக்கு - தப்பிக்க முடியவில்லை ( வீட்டுக்கு வீடு - நாகேஷ் பாணியில் --- ம்ம் மாட்டிக்கிச்சு --------)
ஒருவன் பாசத்தைப் பொழிய தந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை - அந்த , பரிவு அந்த பாசம் இருந்தால் போதும் - அவனும் தந்தையின் அந்தஸ்த்தை பெற்றுவிடுவான் . இதோ பாபுவைப்பாருங்கள் - யாரோ பெற்றமகள் - ஒரு வேலை அன்புடன் தனக்கு அன்னம் இட்டார்கள் என்ற ஒரே காரணத்தினால் தன்னை அந்த குடும்பத்திற்கு செருப்பாக தெய்த்து போடுகிறான் - அந்த பெண்ணை தன் மகளாக நினைத்து வளர்க்கிறான் -- தெய்வங்கள் எங்கெல்லாம் வசிக்கும் என்பதை பட்டியல் போட்டு அந்த பெண்ணிற்கு அன்பை , பாசத்தை , நெறிமுறைகளை இந்த பாடல் மூலம் போதிக்கிறான் --- இனி பாடல் ரசிப்போம்
வலது கையை காட்டி " இதோ எந்தன் தெய்வம் முன்னாலே " என்றபடி பாடல் ஆரம்பிக்கிறது - அந்த வரிகளில் இருந்து தலைவரின் கொடி விண்ணுயரத்திர்க்கு பறக்க ஆரம்பிக்கிறது - முகத்தில் ஒரு பூரிப்பு - கண்களில் கருணை வெள்ளம் -- ( ந.தியின் TMS க்கு எப்படி பொருந்துகிறது ----) ஸ்ரீதேவியை தூக்கி தன் ரிக்ஷ்ஷாவில் உட்க்கார வைப்பார் - கொடுத்து வைத்த ஸ்ரீதேவி !!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
ஒரே பார்வையில் தான் சொல்ல வந்ததனைத்தையும் சொல்லிவிடுவார் ...
கமலும் ஸ்ரீதேவியும் மிகுந்த பாக்கியசாலிகள் - இருவரும் தலைவரின் கைகளிலே தவழ்ந்து விளையாடியவர்கள் . பம்பரமாக சுத்தும்போது நமக்கே வலிக்க ஆரம்பிக்கும் . சோர்வை அலட்சியமாக தள்ளி விட்டு பாடும் வரிகள் கீழே :
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்......
அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கோடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
மீண்டும் உயரத்தில் ஸ்ரீதேவியை தூக்குவார் - கருணை உள்ள நெஞ்சிலே என்று சொல்லும் போது அவரது கண்களை பாருங்கள் - புத்தன் , ஏசு , அல்லா எல்லோருமே ஒரு நிமிடம் தோன்றி மறைவார்கள் . சௌகார் ஜானகி கொண்டுவரும் உணவை தன் கையில் வாங்கி ஸ்ரீதேவிக்கு அழகாக ஊட்டி விடுவார் -- கீழே வரும் வரிகள் பெரிய பெரிய பண்டிதர்களும் சுலபமாக சொல்ல முடியாத வார்த்தைகள் -
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ எந்தன் தெய்வம் என்று விரலை சுண்டிவிட்டு சொல்லும் போது நம் மனம் ஒரு பெரிய கீதோ உபதேசத்தையே கேட்டுவிட்ட மகிழ்ச்சியை அடையும் . நிலவு மேலே வர ஆரம்பிக்கும் - அதை தலைவருக்கு ஸ்ரீதேவி காட்டும் காட்சி - அதை மீண்டும் அவளுக்கே காண்பித்து ஊட்டிவிடும் அழகு -- காண கண் கோடி வேண்டும் -- வரிகள் தொடரும் .
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.
ஆ...ஆ.....ஆ......ஆ......ஒ......ஒ......ஒ,..... .
ஊட்டி விட்டது முடிந்தபின் - மீண்டும் தூக்கிக்கொண்டு ஒரு பெருமிதத்தில் கொஞ்ச தூரம் நடப்பார் - அந்த நடையில் தெரியும் மிடுக்கு , தன்னிடம் இருக்கும் குழந்தை பெரிய மனுஷி யாக கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கை , அவள் தான் இனி தன் உலகம் என்ற மகிழ்ச்சி - தான் ஊட்டிவிட்டதில் தூங்கி விட்டாளே என்ற பூரிப்பு - சொன்ன பொன் மொழிகள் அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன - இனி கவலை இல்லை என்ற சந்தோஷம் - இத்தனையையும் ஒரே நடையில் சொல்லிவிடுவார் - கண்ணீர் இல்லாத வரிகள் அனால் கண்ணீரை வரவழைத்துவிடும் அவரின் நடிப்பு .. பிறந்ததற்காக அவர் நடிக்கவில்லை - நடிப்பதற்காக பிறந்தவன் இவன் ஒருவன் தான் என்பதை இந்த பாடல் பல தலைமுறையத்தாண்டியும் நிரூபித்துக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ....
https://youtu.be/k3YN6RCZHs0
https://youtu.be/RALoq6Lv0qw
கருவின் கரு - 143
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மற்றுமொரு மறக்க முடியாத பாடல் - ஒரு அண்ணன் இங்கே தந்தையாகுகிறான் - அதே பரிவு , அதே பாசம் !!
enthan ponnvaname anbu poovaname
enthan ponnvaname anbu poovaname
nenjil poratama kannil nirotama
athai nan parkava manam than thanguma
enthan ponnvaname anbu poovaname
kovil illai endral theivam illai
inge ni illai yen kanne nanum illai
vanam illai endral mathiyum illai
unthan varthai iillai endral keetham illai
nee vantha thal thane poo vanthathu
nee vaadinal vanna poo vadume
enn rajathi kanne kalangathiuru
enthan ponnvaname anbu poovaname
pennai kanden athil unnai kanden
thalai kanden intha kathirai kanden (this line not sure)
ennai kanden nenjil uravai kanden
niyum illai endral nanum enge sellven
thai seithathe thavam nan vanthathu
thai kondathe varam nam valvathu
enn rajathi kanne kalangathiuru
enthan ponnvaname anbu poovaname
kallam illai nenjil kavadam illai
naam kannir sintha oru niyayam illai
kalam varum angu theivam varum
antha naalum varum nalla vazhvu varum
kalam thani nan vara vaithen
kanne unnai naan vazha veithen
enn rajathi kanne kalangathiuru
enthan ponnvaname anbu poovaname
nenjil poratama kannil nirotama
athai nan parkava manam than thanguma
enthan ponnvaname anbu poovaname
https://youtu.be/tOxcNByVzVU
கருவின் கரு - 144
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
"கண்ணழகு பார்த்தால் பொன்னெதற்கு. கையழகு பார்த்தால் புவெதற்கு. காலழகு பார்த்தால்...... தெய்வத்திற்கு கருனை என்றொரு பேரெதற்கு" -இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மனது நெகிழ்ந்து விடுகிறது.
அண்ணன் தந்தையாகும் இன்னொமொரு பாடல்
https://youtu.be/f2gQqwbeJRM
கருவின் கரு - 145
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
தந்தையாக அண்ணன் --
" தண்ணீரிலே தாமரை பூ --- எனக்கு என்று இருப்பது இந்த மகளான என் தங்கை ஒருத்திதான் - இதனுடன் தானா உன் வழக்கு ???
https://youtu.be/7wwZV_6sqOA
கருவின் கரு - 146
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
இந்த அண்ணனை பாருங்கள் - என்ன பாசம் !! தந்தையையும் தோற்கவைக்கும் -- பத்து பிள்ளை தங்கச்சிக்கு பொறக்கணும் - நான் பாமாலை சட்டை தைச்சுகொடுக்கணும் ----
நாகேஷ் அவர்கள் நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று
https://www.youtube.com/watch?v=h20IllB8z_g
ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி!
எள் என்பதற்குள் எண்ணையாக 'ஏன்?' படத்தின் அபூர்வ பாட்டுப் புத்தகத்தைப் பதிவு செய்து 'ஏன்?' பதிவுக்கே பெருமை சேர்த்து விட்டீர்கள். இதெல்லாம் எங்கே பார்க்கப் போகிறோம் என்று நினைத்தோம். இதன் அருமை தெரிந்தவர்களுக்கு இது பொக்கிஷமே. சேமிப்பில் வைத்துக் கொண்டேன். இப்படியெல்லாம் படம் வந்தது இப்படியெல்லாம் பாடல்கள் இருந்தது என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியாய் விளங்குவது இது போன்ற ஆவணங்களே!