//'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'//
ஜாக்கிரதையா இருக்கணும்பா மனுஷர்கிட்ட.:) இதைக் கூட ஞாபகம் வச்சுண்டிருக்கார்.:)
Printable View
//'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'//
ஜாக்கிரதையா இருக்கணும்பா மனுஷர்கிட்ட.:) இதைக் கூட ஞாபகம் வச்சுண்டிருக்கார்.:)
இன்னைய டார்கெட் அப்பாவிப் பிள்ளை ரவியோ?
//வாங்க வாங்க வூட்டாண்ட சொல்றேன்//
நீண்ட கியூ இருக்குமே! பரா...ல்லியா?:)
ரவி சார்,
தைரியமா 'லைக்' போட நான் இருக்கேன்.:) :) 'நிலா'வுக்கு அல்ல:)
//பாவம் குழந்தை கஷ்டப் பட்டிருக்கும்.//
அப்பாடா! போட்டியில ஒன்னு குறைஞ்சுது.:)
ஆதி ராம்.. நான் எதுவுமே சொல்லவில்லையே..என்னை ஏன் இழுக்கிறீர்கள் (அதுவும் கஷ்டம் தான் 108 கிலோ ) :)
அது ரவி சொன்னது..
A Seperation -2011- Iran - Asghar Farhadi
பல விருதுகளை வென்று குவித்த ஈரானிய படம்.கே.எஸ்.ஜி படங்களை பார்த்து ரசித்த ,தமிழ் உள்ளங்களுக்கு அன்னியமாக தெரியாத குடும்ப படம். இந்த கால மெகா சீரியல் போல குடும்ப சிதைவை(குற்றங்களையும்) உள்ளடக்காது ,குடும்ப பிரச்சினைகளை, நாடு,மத,தனி மனித பின்னணியில் அணுகிய படம். அற்புதமான திரை கதை,இயக்கம், நடிப்பு என்று நம்மை அசத்தி அசத்தி ,அந்நிய தன்மை தோன்றாமல் செய்து விடும். கட்டி போட்டு விடும். மொழிக்கு subtitle தேவை ஆனாலும் ,மிக குறைந்த வசனங்களே .நடேர் என்ற கணவன்,
சிமின் என்னும் மனைவி,தோமே என்னும் பெண் குழந்தை,நடேர் தந்தை ,ரசியா என்னும் பனி பெண்,சாட்ஜா என்னும் அவள் கணவன் இவர்கள்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்.
1)பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கண்ணுக்கு தெரியும் அளவு,தங்களை நம்பி வாழும் மற்ற உறவுகளின் முக்கிய துவம் தெரியாது போலும். இது மத,இன,மொழி,நாடு வேறுபாடு கடந்த இணைப்பு சங்கிலி போலும்.
2)ஆண்களுக்கோ பல வித உறவின் முரண்களை அணைத்து நின்று , அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரம். ஆனாலும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போது ,சுயநலம் அற்ற போக்கில் ஆண்களே முதன்மை.
3)எல்லா மதங்களும் தனி வாழ்விலும், சமூக பொது வாழ்விலும் இடையூறு செய்து மனிதம் குலைக்கும். ஒரு கால கிறிஸ்துவம் தேவாலயம் சார்ந்த சர்வாதிகாரம், ஹிந்து மதம் ப்ராமணம் அரசின் மீது செலுத்தி தன மக்களையே பிரித்த அநீதி,தற்காலங்களில் மட்டு பட்டாலும், இஸ்லாம் இன்னும் மனிதத்தை துறந்து மதமே என்று நாடுகளில் கோலோச்சும் வினோதம்.
4)மத்திய வர்க்கமே,இன்னொரு தாழ்ந்த தன வர்க்கத்தின் பிரச்சினையில் கண் மூடி சுயநலம் காட்டும் சுயநல ஆதிக்க வக்கிரம்.
5)வயதான மனிதர்கள் வாழ்வு ,மற்றவர்களின் வாழ்வை ஆக்கிரமித்து ,வாழ வேண்டிய வயதினரின் வாழ்வு குலைக்கும் ,நோக்கமில்லா துன்பங்கள்.
6)பணத்தை விட ,மத நம்பிக்கை,மனசாட்சி மனிதர்களின் மீது செலுத்தும் ஆதிக்கம்.
7)ஒரு பிரச்சினையின் பல கோணங்கள்.சிக்கல்கள். தெளிவான சுளுவான குழந்தைதன தீர்வு முறை.
நாடென்ன,மதமென்ன,இனமென்ன,மொழியென்ன,மதமென்ன, சமூக கட்டமைப்பை தூக்கி பிடிக்கும் மத்திய தர வர்க்கம் , தன்னுடைய பிரச்சினையின் தீர்வுக்கு ,அனைத்து கோணத்தையும் சீர் தூக்கி பார்க்கும் தெளிவு.
அவசியம் பார்த்தே ஆக வேண்டிய உன்னத படைப்பு.
கோபால் தொடருங்கள்..ஒவ்வொரு படமாக ப் பார்த்த பிறகு தான் என்னால் பின்னூட்டம் என ச்சொல்லமுடியும்.. ஆனால் உங்கள் இடுகைகள் படம்பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகின்றன..
//பவழமணித் தேர் ஏறி பவனி வரும் தென்றலே// அது எனக்குக் கொடுத்து வைகக்வில்லை ராகவேந்தர் சார்..இன்பமிங்கேயிலும் சரி ராகா டாட் காமிலும் சரி பாட் கேக்க மாட்டேங்குது..
ம்ம்
சரின்னு ச்சின்னதா ஒரு ரவுண்ட் அடிச்சேனா.. ஒரு பவழப் பாட் கிடைச்சுச்சே
ரவிச்சந்திரன் ஒல்லிஒல்லிப்ரமீளா
நெஞ்சுக்குள் தஞ்சமென நேரிழையின் முன்னாலே
கொஞ்சியே பேசிடும் கோ
*
அது அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
எது எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
உதடுகள் செம்பவழப் பெட்டி
அதில் ஊறிக்கிடக்கும் வெல்லக் கட்டி..
https://youtu.be/N4doLtqxCVk
வள்ளி தெய்வானை என்பது படமாம்..எப்படி இருக்கும்..
என்னமோ போங்க – 24
கொஞ்சம் நடக்கும் சில நடவடிக்கைகளைப் பார்த்ததில் மனதுக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. கொழுந்துவிட்டும் எரிந்தது..அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து என்ன செய்தேன்…
அப்படியே பக்கத்தறைக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தேனா.. ஏற்கெனவே கொஞ்சம் சுமாரழகான முகம் இன்னும் கொஞ்சம் சுமாராக மாறி இருக்க ரொம்பவே கோபம்..
வந்து ஏதாவது அது இதுன்னு பாட்டுக் கிடைக்கிறதா என்று பார்த்தால் கீழே உள்ளபாட்டு தான் முதலில் கிடைத்தது..
அதற்கப்புறம் தான் அது இது ..
அந்த முதல்பாட்டு பார்த்த போது குறள் தான் நினைவுக்கு வந்தது
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
மனஸ் புண்ணாய்டுச்சுன்னா அது எங்க தெரியுமாம் ஃபேஸ்புக்ல ஸாரி ஃபேஸ்ல தெரியுமாம் வள்ளுவர் அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கார்..
அப்புறம் இந்தப் பாட் முழுக்கக்கேட்ட பிறகு மறுபடி கண்ணாடியைப்பார்த்தேன்.. என்முகம் சிரித்தபடி வெகு அழகாக..
ஸோ கோபம் வந்துச்சுன்னா டைவர்ஷனா ஒண்ணை எடுத்துக்கிட்டு பண்ணிடனும் என்று ஆன்றோர்கள் சொல்வாங்க..உண்மை தாங்க..நம்பலையா.. சரி..என்னமோ போங்க..
*
ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் (அது என்ன உடை சுடிதாரும் இல்லாமல் நைட்டி போலும் இல்லாமல்) வெகு அழகாக உடற்பயிற்சி போல் நடனம் ஆடுகிறார்கள்..(புலியூர் சரோஜா டான்ஸ் போல இருந்தது) பட் பாடல் வரிகள் வெகு அழகு..
*
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி
சபையறியாமல் நடக்கும் அது
தலைமுறை கால்வரை அளக்கும்
இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசி போல் இருக்கும்
ஆசையை ப் பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்
ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்
பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது
கண்ணுக்கு த் திரைகிடையாது
அது கலந்தபின் விலகுவதேது ஏது
https://youtu.be/RBzqNmOqcvo
மாடி வீட்டு மாப்பிள்ளை படமாம் :)