http://i61.tinypic.com/s33gjp.jpg
Printable View
[QUOTE=s.vasudevan;1231758]Courtesy: Tamil Hindu
‘நடிகர் சங்கம் மீது நம்பிக்கை இல்லை’: சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்ட வலியுறுத்தல் - ஜூலை 21-ல் உண்ணாவிரதம்
சரத்குமார்.....ராதாரவி....காளை ....இவர்களை போல உள்ள அரசியல்வாதிகள் நடிகர் சங்கத்தில் இருக்கும் வரை மணிமண்டபம் பகல்கனவே !
நடிகர் திலகம் அவர்கள் உழைப்பில் மேற்பார்வையில் கட்டிடம் மற்றும் ஞாயிறு விடுமுறை போன்ற நற்காரியங்கள் கண்ட சங்கம்...இடித்து தரைமட்டமாக்கி ...கமிஷன் வாங்கிகொண்டு லீசுக்கு கொடுத்த புண்ணியவான்கள் மேற்கூறிய அந்த மூவர்....!
இவர்கள் பச்சை அரசியல்வாதிகள்....நடிகர்சங்கம் வளர இவர்களுக்கு என்ன அக்கறை.....இப்போது விஷால் மூலமாக சங்கத்திற்கு விடிவுகாலம் வர ஒரு வாய்ப்பு ...பார்க்கலாம்....!
திரு சந்திரசேகர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
RKS
முரளி /ராகவேந்திர சார் - vbkp பற்றி ஏதாவது செய்தி உண்டா ? படம் எப்பொழுது வெளிவரும் ? இதைப்போல ராஜபார்ட் ரங்கதுரை என்னவாயிற்று ?
அன்புடன்
ராஜ் குமார்,
நீங்கள் இங்கேயே பதிவிட்டிருக்கலாமே? சுருங்க சொன்னால் இந்த பதிவிலிருந்து எனக்கு புரிவது.
1)கடமையை செய் பலனை உரியவர்களுக்கு விட்டு விடு.
2)அவரவர் தொழிலை சரியாக செய்ய வேண்டியது அவரவர் கடமை.
3)செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம். அதில் சொந்த கருத்துக்களை குழப்பி திணித்தல் நல்லதல்ல.
4)ஒரு வெள்ளந்தியான உரையாடல். ஊர் உன் திறமையை சரியாக உபயோக படுத்தி பலனடையட்டும் .நீ அடையும் பொருளின் பலன் உன் செழுங்கிளை தாங்கும் உரமாகட்டும்.
அமைதிக்குப் பின் புயல் குறுந்தொடர் பகுதி 2 : தெய்வ மகன்
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWkQuote:
தன்னைப் போலவே முகவிகாரத்துடன் பிறந்த குழந்தையை உளவியல்ரீதியாக தான் அனுபவித்த சித்திரவதைகளை ஏளனங்களை மனரணங்களை அவனும் அனுபவிக்க வேண்டாமே என்ற பாச மேலீட்டில் தனது டாக்டர் நண்பனிடம் கொன்றுவிட சொல்லும் மிக சிக்கலான உணர்வுக் கோலங்களை வெளிப்படுத்த வேண்டிய சவாலான பாத்திரத்தில் நடிகர்திலகம் தவிர்த்து யார் பொருந்த இயலும்?
மகனைத் துறந்த கணத்தோடு அவன் இறந்து விட்டதாக மனைவியை நம்ப வைத்து இன்னொரு அழகம்சம் மிக்க மகனையும் தந்து பழைய நினைவுகளை அறவே நீக்கி அமைதியாக வாழ்க்கை ஓடம் செல்கையில் இறந்து விட்டதாக நம்பிய தெய்வமகன் தனது முன்னே வந்து நின்று மடை திறந்த வெள்ளமாக பதிலளிக்க முடியாத கேள்விகளால் மடக்கும் போது ....அமைதி முடிவுக்கு வந்து புயல் ஆரம்பித்து மனநிம்மதி இழந்து உறங்கிக் கிடந்த பாசமும் உயிர்பெற்று....எவரால் தர முடியும் இந்த தகப்பனின் சோதனைகளால் அடிபடும் வேதனை முகபாவங்களை ?
புயலே உருவாக தந்தையை எதிர்கொள்ளும் தெய்வமகன் தம்பியைக் கண்டதும் சர்வமும் ஒடுங்கி பாச வெள்ளத்தில் தத்தளிப்பதில் வெளிப்படுத்தும் நயம்
எந்த ஒரு வேற்று கலைஞராலும் தொட முடியாத உயரமே !!
ஒரு பணக்கார வெகுளிப் பையனாக அழகியல் பாவனைகளையும் மிக வித்தியாசமாக வெளிப்படுத்துகிறாரே !
மூன்று சிவாஜிகளும் அவரவர் பாணியில் நடிப்புக் கலைக் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் காலங்களை வென்ற காட்சியமைப்பு !!
Gap filler
புறக்கணித்த / சூழ்நிலையால் பிரிக்கப்பட்ட தாயை கண்டறியும் மகன்களின் மனநிலை !!
நடிகர்திலகத்தின் பரிதவிப்பு!
கர்ணன்
https://www.youtube.com/watch?v=pslsqW3vslk
தெய்வமகன்
https://www.youtube.com/watch?v=mU-GlbPlong