வாசு சார்
உங்கள் நகைச்சுவை அபாரம
சொந்த ஊர் cuddalore தானா அல்லது ஸ்ரீரங்கம்/கும்பகோணம்/மாயவரம்/நக நக நாகப்பட்டினம் எதாவது
எதற்கு கேட்கிறேன்நா எழுத்தில் கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே ) சுஜாதா வாடை வெரி வெரி humerous
Printable View
வாசு சார்
உங்கள் நகைச்சுவை அபாரம
சொந்த ஊர் cuddalore தானா அல்லது ஸ்ரீரங்கம்/கும்பகோணம்/மாயவரம்/நக நக நாகப்பட்டினம் எதாவது
எதற்கு கேட்கிறேன்நா எழுத்தில் கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே ) சுஜாதா வாடை வெரி வெரி humerous
வேண்டாம் ராகவேந்தர் சார்,
அப்புறம் இங்கேயும் நாட்டாமை செலுத்த சில 'நாட்டு ஆமைகள்' வருவார்கள். 47,000 பதிவுகளுக்கு மேல் பலரால் பல்வேறு சிறப்பான பதிவுகள் பதிவிடப்பட்டு வளர்க்கப்பட்ட திரியை 'சில நூறு' பதிவுகள் மட்டுமே இட்டவர்கள் 'எங்களால்தான் திரியே வளர்ந்தது' என்று கொக்கரிப்பது போல இங்கும் கொக்கரிப்பார்கள். 20-க்கும் குறைவான பதிவிட்ட 'வாத்தியார்கள்' வந்து ஆணைகள் பிறப்பிப்பார்கள். எத்தனையோ பதிவர்கள் திரியை கஷ்ட்டப்பட்டு மெய்வருத்தம் பாராது வளர்த்திருக்க, ஏதோ இரண்டு மூன்று 'ஆர்'களால் திரி உயிரோடு இருப்பதாக சிலர் 'யெஸ் யெஸ்' என்பார்கள். ('ஆர்' என்பது நிச்சயம் உங்களைக் குறிப்பது அல்ல)
அவையெல்லாம் இங்கும் நடக்க வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போதே நாங்கள் மூட்டைகட்டி விடுகிறோம்.
வாசு சார்
1979 தேவதை என்று ஒரு படம்
ஜெயந்தி heroine ஆக நடித்து வெளி வந்த ஒரு மலையாள dubbing அல்லது ரீமேக் ஆ என்று நினவு இல்லை . பழைய லாவண்யா என்று ஒரு நடிகை இருந்தார்கள் அவர்களும் நடித்து இருப்பார்கள்
ஷ்யாம் மியூசிக்
கலீர் கலீர் என்று காலம் ஜானகியின் ஜாலம்
இங்கே இரு கோடுகள் பாலாவின் சோலோ சோக பாடல்
மாந்தளிர் வணங்குகிறேன் உன்னை மீண்டும் ஜானகி பாடலின் உள்ளே குயில் கிளி என்று கூவும் நல்ல மெலடி அண்ட் வெரி குட் கோரஸ்
பாலமுரளி கிருஷ்ணாவின் சுப்ரபாதம் கூட ஒன்று உண்டு
இது நெல்லை பர்வதியில் பார்த்த நினவு .ஜெயந்திக்கு பரத நாட்டிய டிரஸ் போட்டு ஒரு போஸ்டர் பார்த்த நினவு
கிருஷ்ணா சார்,
சுஜாதாவோட அப்சரஸ் என்னோட பேவரேட். அவர் 'படிக்கட்டில் ஏறினான்' என்று எழுதுவது என்பது
ன்
னா
றி
ஏ
இப்படி அச்சாகி இருக்கும் புக்கில். சூப்பர்
இந்த தேவதை பாடல்களும் சிலோன் ரேடியோ உபயத்தினால் ஹிட்
இன்பாக்ட் இந்த படத்தின் போஸ்டரில் கூட "இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த உங்கள் தேவதையின் பாடல்களை காண வாரீர்" என்ற வரிகள் கூட உண்டு
வாசு சார்
சுஜாதாவின் கதையை குழப்பி எடுத்த "கரை எல்லாம் செண்பக பூ "
பாடல்கள் நினைவிற்கு வருகிறதா
1."ஏற்றம் இறைச்சவரே ஏனையா உங்களுக்கு இந்த பொண்ணு தோது இல்லை " சுசீலாவின் சோக குரல்
2. "காடு எல்லாம் பிட்சி பூ கரை எல்லாம் செண்பக பூவு நாடே மணக்குது
மொட்டை டைட்டில் சாங்
3. "ஏரியிலே இலந்தை மரம் தங்கச்சி வைச்ச மரம் ஒரு கையும் இல்லை பூவும் இல்லை " சேர்ந்திசை பாடல் வரிசை
4. ஹே குக் ராமன் கல்யாண் ராமன் - ஜானகி பாலா
இந்த படத்தில் ஸ்ரீப்ரிய ஜோடி ஆக நடித்த சுந்தர் நு ஒரு actor எங்கே போனார்
கன்னட அர்டிச்டே
தப்புதாளங்கள்,கிராமத்து அத்தியாயம் போன்ற படங்களிலும் வருவர்
தேவதை படத்துல சிவக்குமார் தம்பியாகவும், ஜெயந்தி அக்காவாகவும் நடித்திருப்பார்கள் என்று நினைவு. கார்த்திக் சார்! உதவி பண்ணுங்க. please.
டியர் வாசு சார்,
இனி கேட்கவே முடியாதோ என்று நினைத்திருந்த கே.எஸ்.ராஜாவின் குரலைக் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி.
படத்தில் வரும் வசனங்களோடு தன் குரலையும் எடிட் செய்து ஒலிபரப்பி, நிகழ்ச்சிக்கு சுவை சேர்ப்பதில் வல்லவர் ராஜா.
ராஜராஜ சோழன் இலங்கையில் வெளியானபோது, ஏதோ ஏ.பி.என் எதிரில் அமர்ந்து பேட்டிஎடுப்பது போல. "திரு ஏ.பி.நாகராஜன் அவர்களே, நீங்கள் எழுதி இயக்கிய ராஜராஜ சோழன் படத்தைப்பற்றி ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டுவிட்டு உடனே படத்தின் துவக்கத்தில் ஏ.பி.என் பேசும் "பேரன்பு கொண்ட ரசிகர்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம்" என்று துவங்கி படத்தைப்பற்றிய அவரது முன்னுரையை ஒலிபரப்புவார். இருவரும் எதிரெதிரே அமர்ந்து பேசுவது போலிருக்கும்.