Whatever it is will post from today hoping that no confusions occur
Printable View
Whatever it is will post from today hoping that no confusions occur
வணக்கம் அன்பு சிவாஜி திரி நண்பர்களுக்கு
வெகு நாட்களுக்கு பிறகு எழுதுவதில் மகிழ்ச்சி
கடைசியாக நான் எழுதியது உனக்காக நான்
கிட்ட தட்ட 2 மாத கால இடைவேளைக்கு பிறகு இந்த பதிவு
திரு சந்திரசேகர் அவர்களின் டிவி பேட்டியை பார்த்தேன்
ஹட்ஸ் ஆப் sir
மற்றும் முரளி சாரின் பதிவுகள் அபாரம்
மற்றும் Subraminam சார் , ஹரிஷ் சார்,ரவி கிரண் சூர்யா சார் , சிவாஜி செந்தில் சார் மற்றும் ரவி சார் ஆகியோர்யின் பதிவுகளை படித்து கொண்டு தான் இருந்தேன்
பாரதத்தில் பிடித்தது -6
இந்த ஆறாவது பாகத்தில் நான் எழுத போகும் படத்தின் பெயர் ஆனந்தகண்ணீர். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1986
ரஜினி ,கமல் இருவரும் கோடம்பாக்கத்தில் கலக்கி கொண்டு இருந்தனர் , பிரபு ,கார்த்திக் , விஜயகாந்த் வேறு ஏக பட்ட படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர்
நம் நடிகர் திலகம் அப்பொழுது வயதுக்கு எத்த பாத்திரங்கள் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு வேறு சுமந்து கொண்டு இருந்தார்
பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம்
இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்
கதை :
தபால் துறையில் இருந்து தசரதராமன் (சிவாஜி ) ஓய்வு பெறுகிறார் , அவருக்கு 3 மகன்கள் ,1 மகள் , (மகன்கள் , ராஜீவ் , ரவி , ரவி ராகவேந்திரன் ), மனைவி லக்ஷ்மி
அன்பான குடும்பம் ,
தசரதராமனின் மகன் ராஜீவ்க்கு, தன் மகள் ராஜலட்சுமியை கல்யாணம் செய்து வைக்கிறார் பாப்பா (விசு) , (பாப்பாவுக்கு தசரதராமன் அத்திம்பேர் முறை )
முதலில் அனைத்தும் சரியாக அமைய , லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) தானே வந்து தன் மகனுக்கு தசரதராமன் பெண்ணை கேட்கிறார்
தசரதராமன் அதற்கு ஒத்துக்கொண்டு , அவர் கேட்கும் வரதக்ஷணைக்கு மேலே கொடுக்க சமதிக்கிறார்
ஆனால் தசரதராமன் பிள்ளைகள் (ராஜீவ் & ரவி) தனி kudithinam சென்று விடுகிறார் , வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடுகிறார் ,
தன் தந்தை கஷ்ட படுவதை பார்த்து , ரவி ராகவேந்தர் தேங்காய் ஸ்ரீனிவாசன்யிடம் உண்மையை சொல்லி விடுகிறார் , அவர் வரதக்ஷணை பணத்தை 20000 அதிக படுத்தி கேட்கிறார்
தசரதராமன் கல்யாணத்தை எப்படி நடத்தினர் என்பதே மீதி கதை
பாரதத்தில் பிடித்தது -6
இந்த ஆறாவது பாகத்தில் நான் எழுத போகும் படத்தின் பெயர் ஆனந்தகண்ணீர். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1986
ரஜினி ,கமல் இருவரும் கோடம்பாக்கத்தில் கலக்கி கொண்டு இருந்தனர் , பிரபு ,கார்த்திக் , விஜயகாந்த் வேறு ஏக பட்ட படங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர்
நம் நடிகர் திலகம் அப்பொழுது வயதுக்கு எத்த பாத்திரங்கள் செய்ய வில்லை என்று குற்றச்சாட்டு வேறு சுமந்து கொண்டு இருந்தார்
பாவம் அவர் தான் என்று செய்வார் சிவாஜி என்ற சிங்கத்துக்கு நாம் தயிர் சாதத்தை தானே கொடுத்தோம்
இருந்தாலும் post 80 ல் அவர் நடிப்பில் முத்திரை படித்த படம் தான் இந்த ஆனந்தகண்ணீர்
கதை :
தபால் துறையில் இருந்து தசரதராமன் (சிவாஜி ) ஓய்வு பெறுகிறார் , அவருக்கு 3 மகன்கள் ,1 மகள் , (மகன்கள் , ராஜீவ் , ரவி , ரவி ராகவேந்திரன் ), மனைவி லக்ஷ்மி
அன்பான குடும்பம் ,
தசரதராமனின் மகன் ராஜீவ்க்கு, தன் மகள் ராஜலட்சுமியை கல்யாணம் செய்து வைக்கிறார் பாப்பா (விசு) , (பாப்பாவுக்கு தசரதராமன் அத்திம்பேர் முறை )
முதலில் அனைத்தும் சரியாக அமைய , லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) தானே வந்து தன் மகனுக்கு தசரதராமன் பெண்ணை கேட்கிறார்
தசரதராமன் அதற்கு ஒத்துக்கொண்டு , அவர் கேட்கும் வரதக்ஷணைக்கு மேலே கொடுக்க சமதிக்கிறார்
ஆனால் தசரதராமன் பிள்ளைகள் (ராஜீவ் & ரவி) தனி kudithinam சென்று விடுகிறார் , வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு விடுகிறார் ,
தன் தந்தை கஷ்ட படுவதை பார்த்து , ரவி ராகவேந்தர் தேங்காய் ஸ்ரீனிவாசன்யிடம் உண்மையை சொல்லி விடுகிறார் , அவர் வரதக்ஷணை பணத்தை 20000 அதிக படுத்தி கேட்கிறார்
தசரதராமன் கல்யாணத்தை எப்படி நடத்தினர் என்பதே மீதி கதை
நடிகர்களின் பங்களிப்பு
சிவாஜி :
சிவாஜி சாரின் படங்களில் யார் எப்படி நடித்தாலும் limelight அவர் தான் , அதுவும் வெகு நாட்களாக commercial படங்களில் நடித்து விட்டு இந்த படம் அவருக்கும் , ரசிகர்களுக்கும் ஒரு welcome change .
இந்த படத்தில் வியட்நாம் வீடு பாதிப்பு நிச்சயம் உண்டு ஆனால் அதை உள்வாங்கி நடிப்பது நம்ம ஆளு ஆயிற்றே நன்றாகவே வித்தியாசம் காண்பித்து இருக்கார் மனிதர்
என்ன டா இது வியட்நாம் வீடு படத்தின் சாயல் கதை என்று சொல்லி விட்டு அந்த இரு protaginist பற்றி கொஞ்சம் compare & contrast செய்வது அவசியம் என்று எண்ணுகிறேன்
Prestige பத்மநாபன் உழைத்து lower கிளாஸ் socitey ல் இருந்து மேலே வந்தவர் , அதனால் எதிலும் ஒரு ஒழுக்கம் , நேர்மை , மட்டும் இல்லது வீம்பும் இருந்தது , அதே சமயம் ஏழை தொழிலாளி யிடம் கரிசனம் அதிகம், உழைத்து முன்னுக்கு வந்ததால் ஒரு superiority complex உண்டு திரு Prestige பத்மநாபன்க்கு , தன் வேலையே உலகம் என்று இருந்தவருக்கு retirement என்பது ஒரு இடி , அதை cope up பண்ண முடியாமல் தவிக்கிறார் , தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதில் யாருக்கும் பொறுப்பு இல்லை என்ற நிலை (இது கொஞ்சம் தான் , Prestige பத்மநாபன் பாத்திரம் படும் அவலம் தான் பிரதானம் , மகன்களால் வேறு பிரச்சனை ) மனைவியிடம் கூட அன்பும் , அக்கறையும் இருந்தும் ஒரு rigid அணுகுமுறை தான் வெளிபடுத்துகிறார்
தசரதராமன் :
ரொம்ப ஜாலி மனிதர்
எதிலும் ஒரு ஒழுக்கம் , நேர்மை , மட்டும் இல்லது வீம்பும் இருந்தது , அதே சமயம் ஏழை தொழிலாளி யிடம் கரிசனம் அதிகம் , முதல் காட்சியில் சீல் அடிக்க கத்து குடும் பொது அதில் ஒரு நேர்த்தி (படிக்காதவன் போட்டோ பார்த்ததும் ஒரு பரவசம் ) complex என்பது கிடையாது , இவர் compromise தசரதராமன் , எல்லோரிடமும் compromise செய்து சென்று விடும் கேரக்டர் , retirement பயம் துளியும் இல்லாத மனிதர் .
தனக்கு கிழே பணிபுரியம் நபர் தப்பு செய்ததும் தண்டிப்பதும் , பிறகு வேறு ஒரு நபர் மூலமாக பணம் கொடுத்து உதவிகிறார் .
வீட்டுக்கு போகும் நடை இருகிறதே சும்மா ஜிங் ஜிங் என்று குதித்து நடக்கும் பாங்கு டாப் , வீட்டுக்கு போகும் பொது , காய் வங்கி , குடையை , கக்கத்தில் வைத்து நடந்து வரும் பொது ஆச்சு அசல் மிடில் கிளாஸ் வயசான பிராமின் தான் .
அடுத்த காட்சியில் 31ச்ட் திருமண நாள் பொது , வசதி சட்டையில் நல்ல பாந்தமாக இருப்பார் , ராத்திரியில் மனைவியிடம் அரட்டை ,லூட்டி அடிக்கும் பொது , சிரிப்பு தான் (அம்மா அப்பாவுக்கு தெரியாமல் தான் )
அதே போலே மருமகள் முதலில் தன்னை அப்பா என்று அழைத்த உடன் உச்சி குளிர்ந்து மனைவி உடன் அதை பகிர்ந்து கொள்ளும் காட்சி அருமை
அதே மருமகள் தன்னை மாமா என்று அழைத்த உடன் மனசுக்குள் வேம்பி , அதை கண்ணில் காடும் காட்சி , ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .
மகன் தன்னிடம் மாச சம்பளத்தை kodukamal , தன் மனைவிடம் கொடுக்க போகும் பொது , அதை லட்சமி எதிர்ப்பதும் , அதை லாவகமாக
சமாளித்து குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்துகொள்ளும் இடத்தில் ,எப்படி பிரச்னையை அணுக வேண்டும் என்பது ஒரு எடுத்துகாட்டு
லேடி கிருஷ்ணா அய்யர் வந்து சம்பந்தம் பேசிய உடன் , தன் மகன்கள் இருக்கும் தைரியத்தில் அவர் கேட்டதுக்கு அதிகமாக செய்வதாக ஒப்பு கொண்டு விடுகிறார்
தன் முத்த மகன் வெளியே போக போதும் பொது , லட்சமி கெஞ்சுகிறார் , அந்த சமயத்தில் அங்கே வரும் சிவாஜி ஒரு பார்வை வீசுவார் பார்குங்கல் , ராஜீவ் & ராஜலக்ஷ்மி இருவரும் பின்னாடி நடக்க ஆரம்பிப்பார்கள் , அந்த காட்சியில் RR டாப் கிளாஸ் (சங்கர் கணேஷ் ) , சிவாஜி அவர் காலில் விழ போவது போலே ஒரு தோற்றம் வரும் , ஆனால் அவர் சூட் கேஸ்யை எடுத்து கொடுத்து , வெறும் action ல் அவர்களை வெளியே போக சொல்லுவர் பாருங்கள் , 1000 கிளாப்ஸ் , உடனே அடுத்த குண்டு
இளைய மகன் ராஜாராமன் ஜோசப் ராஜா என்று பெயர் மாற்றி ,chirstian பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நிற்பது தான் அதிர்ச்சி
இந்த விஷயம் அவருக்கு தெரிந்து இருந்தது தான் அதில் விந்தை , சிவாஜி பேசும் பொது , உன் கல்யாணத்தை நடித்தி வைத்தது Rev father -------, உன் பெயரை மாற்றியது Rev father --------------------- எல்லா பாதர்க்கும் தெரிந்து இருக்கிறது ,ஆனால் உன்னை பெற்ற இந்த பாதர்க்கு தெரியவில்லை , மேலும் பூணல் 1000 போட்டது , பெயர் வைத்தது என்று பழைய விஷியத்தை பற்றி சொல்லும் பொது , நம்மளை கண் கலங்க வைக்கிறார்
தசரதராமன்யின் பெருந்தன்மை , லேடி கிருஷ்ணா அய்யர்யின் யோசனை வடிவம் பெற்று , பிறகு கட்டளை என்ற வடிவம் ஆகிறது , தன் தந்தையின் நிலைமை கண்டு ரவி ராகவேந்தர் உண்மையை சொன்ன உடன் நிபந்தனை வடிவம் பெறுகிறது
மனிதன் அறிவு தான் எத்தனை விசிதிரம் , பிரச்சனை தீர்ந்து போகும் என்று எண்ணினால் , நடந்து அதற்க்கு நேர் எதிர்
தன் மனைவியின் பேச்சை கேட்டு மகன்கள்யிடம் உதவி கேட்டு அவர்கள் கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் , கல்யாணத்துக்கு என்ன அவசரம் , எழவு என்ற அசுபம் வார்த்தைகளால் பேச்சு வந்த உடன் , அவர் போய்டுங்கோ என்று கையை வைத்து சொல்லுவர் பாருங்கள் , என்ன ஒரு expression , அக்டிங்
கல்யாண நடத்த வழி இல்லாமல் தவிக்கும் பொது , தலையில் அடித்து அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைக்கும் , அதே தசரதராமன் தன் chirstian மருமகள்யை ரோடு ல் சந்தித்து பேசும் காட்சி , மத
நல இணக்கத்துக்கு ஒரு எடுத்துகாட்டு
அதில் அவர் நானும் வேளாங்கன்னிக்கு போவேன் ஆனால் என் பெண் கல்யாணம் நடக்கணும் அதனால் கொஞ்சம் தள்ளி இருப்போம் என்று சொல்லும் காட்சி , இந்த சமுகம் எத்தனை பின்தங்கி இருக்கிறது என்பதும் , ஒரு பெண்ணை பெற்ற தகப்பன் சூழ்நிலை கைதியாக இருபதுக்கு ஒரு எடுத்துகாட்டு
கடைசியில் தன் சம்பந்தி யின் பேச்சை பொறுக்க முடியாமல் , திட்டவும் முடியாமல் , தன் chirstian மருமகள் வெளியே செல்லும் பொது மௌனமாக இருப்பதும் , பின் சாப்பாடு எடுத்து செல்வதும் என்று தான் நல்லவன் தான் என்பதை நிருபித்து விடுகிறார்
தன் கிட்னியை தானம் கொடுத்து , தன் மகளின் கல்யாணத்தை நடத்தி முடக்கும் பொது , நாம் நெஞ்சில் குடி புகுகிறார் தசரதராமன் , அந்த காட்சியில் அவர் தன் உடமையை கொடுக்கும் காட்சி நம கண்களில் கண்ணீர் வரவைக்கும் காட்சி
லக்ஷ்மி
இவர் நடிப்பை பற்றி என்ன சொல்வது , சிறந்த நடிகை , வியட்நாம் வீடு பத்மினி கொஞ்சம் ஓவர் அக்டிங் , (நாடகத்தை பார்த்த என் தந்தை , படத்தை பார்த்து விட்டு என்னிடம் சொன்ன்னது) லக்ஷ்மி எதில் சிவாஜிக்கு கொஞ்சமும் சளைக்காத performance , apt foil போர் சிவாஜி சார்
தன் முத்த மகன் வெளியே போகும் பொது கெஞ்சும் காட்சி உணர்ச்சி பிழம்பு , அதே மகன் தன் கணவரின் financial handling capacity யை கேள்வி கேட்கும் பொது கொதிக்கும் காட்சி , புருஷனுக்கு ஒரு இழுக்கு என்ற உடன் கொதிக்கும் காட்சி , சம்பந்தி அதிகமாக பணம் கேட்டதுடன் என் பையன் 10த் கிளாஸ் ல் 8 தடவை fail ஆகிவிட்டான் , அதற்கும் ஒரு ரேட் சொல்லுங்க என்று தன் கோபத்தை வெளி படுத்தும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்
விசு :
தஞ்சாவூர் பப்பைய்யர் என்ற பாத்திரம் , சரியான சாப்பாடு ராமன் , வயறு சரி இல்லை என்று அவர் சாப்பிடும் காட்சி நல்ல தமாஷ் ,
தன் மகளை பெண் பார்க்க தன் அத்திம்பேர் வர வைக்கும் காட்சி , ஒரு ஏழை தந்தையாக காட்சி அளிக்கிறார் , அவர் மகள் பிரச்சனை செய்யும் பொது , கடைசியில் நாக்கை பிடுங்குவதை போலே அவர் உண்மையை உடைக்கும் காட்சி , அவர் உண்மையின் பக்கம் தான் என்று நிலை நாட்டுகிறார்
குறை என்று பார்த்தல் ஜனகராஜ் காமெடி, ரவி ராகவேந்தர் லவ் scenes தான்
பாடல்கள் சுமார் ரகம்
கதை வசனம் : பரத் , இயக்கம் : விஜயன்,
மொத்தத்தில் under rated நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று
DVD- Moser Baer 3 in 1 , raj Video vision
Kindly excuse for spelling mistakes
வெள்ளி முதல் கோவை ராயலில் அவன் தான் மனிதன்
[QUOTE=RavikiranSurya;1109240]நடிகர் திலகம் பிறந்தநாளை முன்னிட்டு SUNLIFE தொலைக்காட்சி ஒளிபரப்பிய " பாக்ஸ் ஆபீஸ் மன்னன் " -
நடிகர் திலகம் அவர்கள் தமிழ் சினிமாவை பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை உணரவைக்கும் சிறப்பு நிகழ்ச்சி.
அன்புள்ள ரவிகிரன் - உங்கள் பதிவுகள் மிகவும் அருமை - எங்கள் எல்லோருடைய உள் கொதிப்பையும் மிகவும் அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் . ோகன் ராமின் வருணனை அபாரம் - அவர் நம் NT யின் மீது எவள்ளவு அன்பும் , மரியாதையும் வைத்து இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருகின்றது . Innum சிறப்பாக சொல்லியிருக்கலாம் என்று கூட சில சமயம் தோன்றுகின்றது .
உதாரணத்துக்கு சில
1. கர்ணன் - re ரிலீஸ் - பாக்ஸ் ஆபீஸ் மன்னன் ( மறைந்த பிறகும்) NT தான் என்று நிரூபித்ததே – தைபற்றி சொல்ல மறந்து விட்டார்
2. வசந்த மளிகை , ராஜா, பட்டிக்காடா பட்டணமா , ஞானஒளி போன்ற படங்கள் வசூல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பறை சாற்றிய படங்கள் - இதை பற்றியும் அவர் ஒன்றுமே சொல்ல வில்லை
3. Box office க்கு மறு பெயர் Muthal Mariyathai - அதை பற்றியும் குறுப்பிடவில்லை
ொத்தத்தில் நன்றாக இருந்தாலும் , சில விஷயங்களை இன்னும் ஆணித்தரமாக கூறியிருக்கலாம்
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
அருமையான பதிவு
http://youtu.be/7q48ybLXwQc
அன்புடன் ரவி