http://i46.tinypic.com/2nvgr3q.jpg
Printable View
ஈடேதும் இல்லாத கலைச்சேவையில் தனி இடம் கண்ட உமைக் கண்டு இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
கவியரசு கண்ணதாசன்Attachment 1976
மனதோடு மனோ நிகழ்ச்சியிலிருந்து கங்கை அமரன் அவர்களது பேட்டியை பதிவிட்டதற்கு நன்றிகள். இதுவரை கேள்விப்படாத தகவல்கள் நன்றி திரு. கங்கை அமரன் சார்.
மக்கள் திலகம் அவர்களது இயல்பான நடிப்பு பல பரிமாணங்களைக் கொண்டது. அதில் இல்லாத பாவங்களே இல்லை எனலாம். எனினும் பொதுவான குற்றச்சாட்டு சோகக் காட்சிகளில் அவரது நடிப்பினைப் பற்றியது. சோகக் காட்சிகளில் அவரது மிகச் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
1. தாய்க்குப் பின் தாரம் தந்தையைப் பிரிந்து சிதையின் முன் கதறி அழும் காட்சி - இதற்கு உருகாதவர்கள் உணர்ச்சியற்றவர்களே
2. தாய்க்குத் தலைமகன் படத்தில் அண்ணனை (அசோகனை) இழந்து கதறும் காட்சி
3. பெற்றால் தான் பிள்ளையா படத்தில் தனது வளர்ப்பு மகனை இழந்து நீதிமன்றத்தில் அய்யா சட்டப்படி என் மகனை என்கிட்ட ஒப்படைக்க முடியாவிட்டாலும் தர்மப்படி பிச்சையாவது கொடுங்கய்யா என்று மன்றாடும் காட்சி
4. பெரிய இடத்துப் பெண் படத்தில் பெற்றமகனை பார்க்க இயலாத சூழலில் கலங்கும் காட்சி
5. நாடோடி படத்தில் தன் காதலியின் முகத்தைக் கூட பார்க்க இயலாத கொடுமையான நிலையில் அவளைப் புதைத்த இடத்தில் சென்று கதறும் காட்சி
6. ஊருக்கு உழைப்பவன் படத்தில் இறந்த மகனின் நினைவாக அவன் துயில் கொண்ட தொட்டிலின் முன் கதறும் காட்சி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர் முகத்தை கைகளால் மறைத்துக் கொள்வதும் இல்லை. சுவரின் பக்கமாகத் திரும்பிக் கொள்ளவும் இல்லை. இது போல இன்னும் எண்ணற்ற சோகக் காட்சிகளைச் சொல்லலாம். (நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே இன்னும் பல படங்கள்) இக் காட்சிகளைக் கண்டு கலங்காத கண்களே இல்லை எனலாம் . நவரசங்களையும் பிழிந்து கொடுக்கும் அற்புத நடிகர் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் (1971) பெற்ற எம்.ஜி.ஆர் அவர்கள்.
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பது சாதனை .
கோவை நகரில் 2012 செப்டம்பர் மாதத்தில் ஒளிவிளக்கு இரண்டு வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
http://i46.tinypic.com/1072m87.jpg
இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் ஒளிவிளக்கு வேறு அரங்கில் திரையிட்டு இரண்டாவது வாரமாக ஓடி கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் புகழ் , மற்றும் மக்கள் செல்வாக்கு அன்றும் இன்றும் என்றும் நிலையானது என்பது புரிகிறது .
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் டவுனில் இந்த வாரம் குமரிகோட்டம் முருகன் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .
http://i49.tinypic.com/2hdd1c2.jpg
[ தகவல் -மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் அனுப்பிய செய்தி .- நன்றி ராமமூர்த்தி சார் ]