http://i58.tinypic.com/8zpjq8.jpg
Printable View
தாம்பத்யம் -4
....வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு நல்ல மனைவி தேவை ---
உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
உன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்ததடி
https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg
என் தேவையை யார் அறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் ------
" என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு - என் தேவன் தந்ததிந்த நிறைவு "
https://www.youtube.com/watch?v=y7alUNh9U-0
தாம்பத்யத்தின் இனிமையை இந்த பாடல்களை விட வேறு ஏதாவது மிக அழகாக எடுத்துச்சொல்லிவிடுமா ?? கண்டிப்பாக முடியவே முடியாது .
====
40 வருடங்களுக்கு மேல் ஆகியும் இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் அழிவதில்லை ; நம் மனங்களை விட்டு நீங்கு வதில்லை இனி இப்படிப்பட்ட பாடல்கள் வரப்போவதும் இல்லை - தமிழ் சமுதாயத்தின் அடையாளச்சின்னம் சிவாஜி - ஆயிரம் ஆஸ்கர் அவார்டுகளை இவரது காலடியில் கொட்ட வேண்டும் -கண் நடிக்கிறது - புருவம் நடிக்கிறது - அவரை விட அவரை வைத்து கோடீ ஸ்வரர்கள் ஆனவர்கள் ஒரு கோடி - அவர்கள் இன்னும் நடித்துக்கொண்டிருப்பதால் - மணிமண்டபம் இன்னும் வராமல் நம்மிடம் நடித்துக்கொண்டே இருக்கிறது ------
=====
வாசு - "குழந்தை உள்ளத்தை" மிகவும் ரசித்தேன் - எனக்கென்னவோ gg க்கு pbs அல்லது amr இவர்கள் குரல்கள் பொருந்தியதைப்போல spb யின் குரல் அவ்வளவு கச்சிதமாக பொருந்தவில்லை என்றே தோன்றுகின்றது . மன்னிக்கவும் - இது என் தனிப்பட்டக் கருத்து . இந்த படத்தில் ggக்கு யாரோ - " இது காதல் பாட்டு - கண்களில் உணர்ச்சிகளை காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் " என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன் . காதல் உணர்ச்சிகள் என்ற பெயரில் சில இடங்களில் அவர் கண்களை உருட்டும் போது - தனியாக இந்த பாடலை ரசிக்க பயமாக இருந்தது . மற்றபடி spb யின் குரல் இனிமையில் தமிழில் அவருக்கு ஏற்ப்பட்ட தடுமாற்றம் பெரிதாக தெரியவில்லை . போனஸ் ( 20% ஆ அல்லது 8.33% ஆ ??) இணைப்பு மிகவும் அருமை
//போனஸ் ( 20% ஆ அல்லது 8.33% ஆ ??) இணைப்பு மிகவும் அருமை//
ரவி சார்,
இங்கு ஆறாவது நாளாகத் தொடரும் ஸ்ட்ரைக்கில் ஆறு நாளும் சம்பளம் கட். (கிட்டத்தட்ட 12000 ரூபாய்) இதில் 'போனஸ் 20% ஆ அல்லது 8.33% ஆ' ? என்று கேள்வி வேறா?:)
ஓ...நீங்க பதிவு போனஸ் பற்றிய சதவீதம் கேட்டீர்களா?:)
அப்புறம் ஜெமினி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு அருமையாக பதில் சொல்வார் நம் அருமை சிவாஜி செந்தில் சார். எஸ்கேப். விடு ஜூட்.:)
ரவி சார்
உங்கள் தொடரின் தலைப்புக்கு நான் தரும் பரிசு.
http://i.ytimg.com/vi/9IxLsPjOvEc/maxresdefault.jpg
http://i.ytimg.com/vi/8Rgc2Y6y_gk/maxresdefault.jpg
ஹாய் ஆல்
ஒரு வழியாய் மஸ்கட் வந்தாகி விட்டது( ஐந்தரை மணி நேரம் ட்ரைவ்)... ஹாஆஆவ்.. ரெஸ்ட் எடுத்து நாளை மறுபடி ஆஃபீஸ்
வாசு..
ஸ்ட்ரைக் பற்றி நீங்கள் சொன்னது வருத்தமாக இருக்கிறது..கூடிய விரைவில் சரியாகிவிடும் அனைத்தும்.. என்னுடைய ப்ரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன்..
குழந்தை உள்ளம் கதை க் குழப்பத்தில் - இழையோடிய நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்.. இந்த முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வந்து முன்பு போட்ட போது நீங்கள் எஸ்பிபி தொடரில் போடப் போகிறேன் என்றுசொன்னது மட்டும் நினைவில்.. பாட் மட்டும் மறந்து போயிருந்தது..இப்போது தங்களது வண்ண அழகிய விவரணைகளுடன் ஜோர்..
//ஆனால் வாணிஸ்ரீயிடம் 'முன்னிடை மெலிந்து நூலாக' என்று ஜெமினி// அவர் என்ன பண்ணுவார் பாவம்..கவிஞரின் கற்பனை.. டைரக்டரல்லவா தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் நாயகியை..
*
தாம்பத்யத்திற்கும் (எல்லா பதிவுகளுக்கும்)குறள் கொடுத்து கொண்டு போயிருந்தால் இன்னும் ஜோராயிருந்திருக்கும் ரவி..
மனைவி அமைவதெல்லாம் பதிவு ஏனோ எனக்கு சுவாரஸ்யமாக இல்லை. கடைசியில் அதை எழுதியவர் நீர் இல்லை..(படித்ததில் பிடித்தது ) என போட்டிருக்கிறீர்கள்.. யாருடையது எனச் சொல்லிருக்கலாம்..
குறளும் இசையும் ஓ.கே.. குறள் என எடுத்து அதில் ஆரம்பிக்காமல் வள்ளுவன் என வரும் பாடல்களைப் போட்டது ட்விஸ்ட் தான்..பாருங்கள் சைக்கிள் கேப் பில் யுகேஷ் முந்திக் கொண்டுவிட்டார்..ஆனால் என்ன அந்தக் குறள்களுக்கும் உங்கள் நேரேஷன் கொடுக்கலாமே.. (ஏதோ எனக்கு மனதில் பட்டதைச் சொல்கிறேன்..)
'குழந்தையும் தெய்வமும்' படத்தில் சுசீலா அம்மா நாம் என்றென்றும் நன்றி சொல்லும் அளவிற்கு எப்படி 'நான் நன்றி சொல்வேன்' தந்தார்களோ அதையே தெலுங்கிலும் ('Letha Manasulu') அற்புதமாகத் தந்திருப்பார்கள். தமிழில் ஜெய்சங்கருக்குப் பதில் ஹரநாத். ஹீரோயின் தமிழின் ஜமுனாவேதான். தெலுகுதான் சுசீலா அம்மா வாயில் உச்சரிக்கப்படும் போது எவ்வளவு அழகு! இரண்டையும் கேளுங்களேன். என்ன இனிமையான பாடல்கள்!
'குழந்தையும் தெய்வமும்' தமிழ் 1965 ல் வெளிவந்தது. தெலுகு 'லேத மனசுலு' 1966 ல் வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழை விட தெலுங்கில் ஜமுனா சற்று முதிர்ச்சியாகத் தெரிவார். தெலுங்கில் இப்பாடலுக்கு லொகேஷனை கம்ப்ளீட்டாக மாற்றியிருப்பார்கள். முழுப் பாடலும் மலைப் பிரதேசத்தில் ஏரி ,அருவி என்று படமாக்கியிருப்பார்கள்.
சுசீலா அம்மாவிற்கு இந்த ஒரு பாடல் போதும். அந்த அமிழ்தக் குரலும், அந்தக் குரலுக்கேற்ற ஜமுனாவின் 'ஜம்'மென்ற முகமும், கொஞ்சமும் அலட்டாத, அருமையான, அவரின் பாடலுக்கான நடிப்பும், மைசூர் பிருந்தாவனத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காமிராவின் ஒர்க்கும், 'மெல்லிசை மன்ன'ரின் தாலாட்டும் இசையும் இந்தப் பாடலை சிகரத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றன. ஜமுனாவின் செல்ல முகச் சுளிப்புகளைக் கவனியுங்கள். சொக்கிப் போவீர்கள்.
'நான் நன்றி சொல்வேன்'
http://i.ytimg.com/vi/0VYfAewIyis/0.jpg
https://youtu.be/5oENOUx8olM
http://2.bp.blogspot.com/--Ov8CM3j7z...ngs-lyrics.jpg
https://youtu.be/LynKzfuhHhk
மனிதர்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத , ஏகாந்தமான கானகம் !
அதன் நடுவே ஒரு தடாகம் ...
.அத்தடாகத்திலே , ஆங்காங்கே மலர்ந்த தாமரை மலர்கள் !
நாயகி சரோ , ஒயிலாக நடந்து .... தடாகத்திலிருந்த ஒரு தாமரை இலையை எடுத்து ........ குருத்து போன்ற தனது அழகான கரங்களில் ....தடாகத்து நீரை எடுத்து ......பின் , .அன்ன நடை பயின்று கார் நின்றிருந்த இடத்தையடைந்து ..நாயகன் எம் ஜி ஆரை , எதிர் நோக்கி , காருக்குள் நோக்க ..... ...அங்கு அவரை காணாததால் .... மருண்டு போய் ...... தன் பெரிய விழிகளால் சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டு ........பின் ..செய்வதறியாது நின்றிருக்கும் போது ...
அவர் சற்றும் எதிர்பாராத வகையில் , மக்கள் திலகம் காரின் மேல் பகுதியிலிருந்து ' திடீரென்று 'தோன்றி ,
சரோவின் தலையில் செல்லமாக தாளமிட்டவாறு ..
'' பேசுவது கிளியா ''
என்று பாட .....அப்போது சரோ , ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ...
ஆஹா .....அதியற்புதம் ! சூப்பர் !...
காதுகளில் ஜிமிக்கி ஊஞ்சலாட
'' பாடுவது கவியா
பாரிவள்ளல் மகனா ''
என்று பாடும் அழகே அழகு !
இந்த பாடலை காவியப்பாடலாக்கிய பெருமை , .சாருகேசி ராகத்தில் வெகு அழகாக பாடலை அமைத்த மெல்லிசை மன்னர்கள் + ..கவியரசரின் எளிமையான வரிகள் + திரையில் இப்பாடலுக்கு உயிரூட்டிய மக்கள் திலகம் - சரோஜாதேவி + திரைக்கு பின் இந்த பாடலுக்கு ' நடித்த ' டி எம் எஸ் - சுசீலாம்மா ...!
courtesy net