welcome back with updates Mokshani
thank you
keep post
Printable View
welcome back with updates Mokshani
thank you
keep post
Quote:
மும்மொழி'யிலும் வரவேற்பு பெற்ற கஸ்தூரி
ஒரு நல்ல படைப்பு மொழிகளைக் கடந்தும் ஜெயிக்கும் என்பதற்கு சமீபத்திய சின்னத்திரை உதாரணம், கஸ்தூரி தொடர். பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பான இந்த தொடர், தமிழில் சன் டி.வி.யில் 500 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் 450 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும், மலையாளத்திலும் இந்த தொடருக்குப் பெயர் `கல்யாணி'
தமிழ் கஸ்தூரி தொடரில் நாயகியாக ஈஸ்வரிராவ் நடிக்கிறார். தெலுங்கில் இந்த கேரக்டரில் `மெட்டி ஒலி' காயத்ரி நடிக்கிறார். மலையாளத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார்.
கிராமத்துப் பெண்ணான கஸ்தூரி, நகரத்து இளைஞனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அப்பாவி மனைவியை புறக்கணிக்கும் கணவன், அவளை உதாசீனப்படுத்துவதையே கொள்கையாக வைத்திருக்கிறான். அத்தனையையும் பொறுமையே வடிவாய் தாங்கிக் கொள்ளும் கஸ்தூரிக்கு அடுத்த கட்ட சோதனை வருகிறது. கஸ்தூரி இருக்கும் போதே வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறான் கணவன்.
பொறுமையின் சிகரம் கஸ்தூரி, கணவனால் தனது எதிர்காலம் சிதைக்கப்பட்டது தெரிந்ததும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறாள்? அடுத்துவரும் எபிசோடுகள் கஸ்தூரியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.
இந்த தொடரின் வெற்றி குறித்து பாலாஜி டெலிபிலிம்சின் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சந்திரமோகன் நாக் கூறியதாவது:-
``கஸ்தூரி தொடருக்கு வரவேற்பை நாங்கள் எதிர்பார்த்தது உண்மை, ஆனால் இந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை விழா எடுத்து விரைவில் கொண்டாட இருக்கிறோம்.
தொடர்ந்து புதிய சீரியல்கள், சினிமாக்கள் தயாரிப்பிலும் எங்கள் நிறுவனம் ஈடுபட இருக்கிறது. அதற்காக நடிப்பு ஆர்வம் கொண்ட புதியவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைக்கிற பட்சத்தில் புதுமுகங்கள் அதிகம் இடம் பெறும் தொடர்களும், சினிமாக்களும் உருவாகும்.''
where is the updateQuote:
Originally Posted by mokshani
still waiting
Quote:
கஸ்தூரியில் முன்னணி நடிகை
சன் டிவியில் கஸ்தூரி தொடர் 600 எபிசோடுகள் தாண்டியிருக்கிறது. சமீபத்தில் இந்த தொடருக்கான காட்சிகள் சிங்கப்பூரில் படம் பிடிக்கப்பட்டன. பகல் நேர தொடர்களில் முதன்முதலாக சிங்கப்பூரில் படமாக்கப் பட்ட தொடரும் இதுதான். வரும் வாரங்களில் இந்த சிங்கப்பூர் காட்சிகளை காணலாம்.
இந்த புதிய காட்சிகளில் இருந்து நடிகை நியா அறிமுகமாகிறார். தொடரில் சிமி என்ற கேரக்டரில் இவர் வருகிறார்.இவர் வருÛகையைத் தொடர்ந்து கதையின் போக்கிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மலையாளப் படஉலகில் முன்னணி நடிகையான நியா, தொடரில் நடிக்கவருவதும் இதுவே முதன்முறை.
தொடருக்கு திரைக்கதை வசனம்: குரு சம்பத்குமார். ஒளிப்பதிவு: சரவணன். இயக்கம்: தவ.கார்த்திக். கிரியேட்டிவ் ஹெட்: சந்திரமோகன் நாக்.
கஸ்தூரி தொடரை இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் கார்த்திக், ஆரம்பத்தில் அந்த தொடரின் இரண்டாவது எபிசோடு இயக்குனராக இருந்தவர்.
Quote:
கஸ்தூரி தொடரில் மீண்டும் `ஈஸ்வரி ராவ்'
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் கஸ்தூரி தொடர் 800-வது எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது. இதில் கஸ்தூரியாக நடித்த ஈஸ்வரிராவ், இடையில் சில காலம் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் கஸ்தூரியாக தன் நடிப்பைத் தொடர்கிறார்.
கதைப்படி கஸ்தூரியைக் கொல்ல திட்டமிடப்பட்ட சதியால் கஸ்தூரி தனது முகத்தை தொலைக்க நேர்ந்தது. முக மாற்றம் நேர்ந்த பிறகு கஸ்தூரி கேரக்டரில் ஈஸ்வரிராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க வேண்டியதாயிற்று.. இப்போது விதி கஸ்தூரி வாழ்வில் மீண்டும் விளையாட, இந்த விளையாட்டின் ஒரு நன்மையாக மருத்துவ வல்லுனர்களால் கஸ்தூரிக்கு அவளது முகமே மீண்டும் கிடைக்கிறது.
`திரும்பக் கிடைத்த தனது முகத்தோடு பழைய பிரச்சினைகள் மீண்டும் துரத்த, கஸ்தூரியின் போராட்டம் தொடர்கிறது. ஒரு பக்கம் திரும்பக் கிடைத்த பழைய முகம், மறுபுறம் தன்னை மன்னித்து ஏற்கும்படி உருகி நிற்கும் முன்னாள் கணவன், இன்னொரு புறத்தில் தொலைந்துபோன இந்நாள் கணவன் என போராட்டங்கள் கஸ்தூரியின் வாழ்வில் தொடர்கிறது.
"மீண்டும் ஈஸ்வரிராவே கஸ்தூரியாக வருவதால், உணர்வு ரீதியாக கஸ்தூரியுடன் தொடர்ந்து பயணப்பட்டு வரும் ரசிகர்கள் அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பில் உருகி நிற்கப்போவது உறுதி!'' என்கிறார், பாலாஜி டெலிபிலிம்ஸின் தென்னிந்திய கிரியேட்டிவ் ஹெட் சுபாவெங்கட்.
கதை: ஏக்தா கபூர், திரைக்கதை: குருசம்பத்,
வசனம்: தவமணி வசீகரன், இயக்கம்: கே. ஷிவா.
தயாரிப்பு: ஏக்தாகபூர், ஷோபாகபூர்.
நன்றி: தினமலர்
Quote:
புதிய கதைக்களத்தில் `கஸ்தூரி'
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `கஸ்தூரி'. நடிகை ஈஸ்வரிராவ் நடிக்கும் இந்த தொடரில்
இப்போது கதை முற்றிலும் புதிய திசையில் விறுவிறுப்பாக பயணிக்கிறது என்கிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் கமீலா நாசர்.
பிரபல குணச்சித்திர -வில்லன் நடிகர் நாசரின் திருமதியான இவர், ஏற்கனவே 4 திரைப்படங்கள் தயாரித்த அனுபவம் பெற்றவர்.
"தயாரிப்பு அனுபவம் தான் ஒரு சீரியலின் `கிரியேட்டிவ் ஹெட்' என்ற இடத்துக்கு உங்களை அழைத்து வந்ததா?''
கமீலா நாசரிடம் கேட்டால், "படத்தயாரிப்பில் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும் என்பது உண்மை தான். அதேநேரம் இந்த அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சீரியலுக்கு கிரியேட்டிவ் ஹெட் என்ற இடத்துக்கு வர நான் ஒருபோதும் எண்ணியதில்லை. சீரியல் பொறுப்பு என்பது சாதாரணமானதல்ல. இதற்குள் நுழைந்தால் இதிலேயே முழுநேரத்தையும் அர்ப்பணித்தாக வேண்டும்.
அதனால்தான் பாலாஜி டெலிபிலிம்சில் இருந்து திடுமென என்னை இந்த பொறுப்புக்காக கேட்டபோது தயங்கவே செய்தேன். படத்தயாரிப்பு நிர்வாகத்தில் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தை கருத்தில் கொண்டுதான் கேட்கிறோம் என்று அவர்கள் தரப்பில் கேட்டபோது ஒரு சவாலாக இதையும் எடுத்துக் கொண்டு செய்வோமே என்று களம் இறங்கி விட்டேன். பலதரப்பட்ட மக்களை சந்தித்த அனுபவமும் இதற்கு உறுதுணையாக இருக்கும்.''
"தொடரில் என்ன மாதிரியான மாற்றம் உத்தேசித்திருக்கிறீர்கள்?''
"முதலில் கிளைக்கதைகளை தனியாக பிரித்து எடுத்துக் கொண்டு அதற்கு உடனடி முடிவு கொடுத்திருக்கிறோம். இனி மெயின் கதை மட்டும்தான் கதைக்களமாக இருக்கும். தொடரை இப்போது இயக்கும் சதாசிவமும், கதைவசனகர்த்தா சேக்கிழாரும் தொடரின் முதல் எபிசோடில் இருந்து எடிட்டராக இருக்கும் யாசினும் இதில் என்னோடு கைகோர்த்து செயல்படுகிறார்கள். இதில் இன்னொரு சந்தோஷம், சேக்கிழாரும் சதாசிவமும், ஒரே ஊர்க்காரர்கள். இதனால் கதை ஏரியாவுக்கு அது இன்னும் வசதியாகி விட்டது.''
"தொடரில் அடுத்து எந்த மாதிரி கதை போகும்?''
"கஸ்தூரியின் கணவன் கெட்டவனாக இருந்தவன் இப்போது நல்லவனாக மாறிவிட்டான். அவனை கஸ்தூரி ஏற்பாளா? ஏற்கனவே மனைவியை ரெயிலில் ஏற்றி விட்டு கண் காணாமல் ஓடிப்போனவன். அவனை மறுபடி நல்லவனாகவே சந்தித்தாலும் அவள் மனம்அவனை எப்படி ஏற்கும்? இப்போது இந்த மாதிரியான மனப்போராட்டத்தைத்தான் கஸ்தூரி எதிர்கொள்கிறாள்.''
"புதிய கேரக்டர்கள்?''
"நிச்சயம் இடம் பெறும். புதிதாக வரும் டிராக்கில் புதிய கேரக்டர்களுடன் ஏற்கனவே உள்ள கேரக்டர்களும் இடம் பெறும். அதில் ரசிகர்கள் ரசிக்கிற மாதிரியான அம்சங்கள் நிச்சயம்.''
நன்றி: தினதந்தி
Kasturi - last episode
appaadaaaaaaaaaaaaaaaa.
http://www.youtube.com/watch?list=PL...layer_embedded