மறவன்
http://uploads.tapatalk-cdn.com/2017...27883e33f3.jpg
Printable View
இளையதிலகத்தின் பட வரிசை.
99
உ
ழ
வ
ன்
13.11.93
http://uploads.tapatalk-cdn.com/2017...9a944ef139.jpg
இளையதிலகம் பிரபு
பானுப்ரியா. சுஜாதா, விக்னேஷ், ரம்பா, சின்னிஜெயந்த் ...
இசை :ஏஆர்.ரகுமான்
இயக்கம் :கதிர்.
இளையதிலகத்துடன் பானுப்ரியா ஜோடி சேர்ந்த முதல் படம்.
ரம்பா அறிமுகமான தமிழ் படம்.
பிரபு படத்திற்கு ரகுமான் இசையமைத்த. முதல் படம்.
தாய்க்கு மேலாக மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இப்பாரம்பர்ய மண்ணில் உண்டு.அப்படிப்பட்ட விவசாயியின் கதையை சொன்ன படம் தான் உழவன்.விவசாயிகளின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இது அமைந்திருக்கும்.
ஹீரோயிசம் துளியும் இன்றி எதார்த்தமான விவசாயி கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார் அவரின் நடிப்புத்திறமையை வேறு ஒரு கோணத்தில் நம்மை அறிய வைத்த படமும் கூட.சாதாரணமாக பேசினாலே பிரபுவின் குரலில் கம்பீரம் மிளிரும்.மென்மையான குரலில் இயல்பாக அவர் பேசி நடித்து அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உயர்த்தியிருப்பார்.பண்பட்ட, பக்குவப்பட்ட நடிப்பை இதில் காணலாம்.
நடிகர்திலகம் தான் நடித்த பழனி படத்தை பற்றி தன் கருத்தை கூறுகையில்,
"பழனிதான் இந்தியில் உப்கார் என்பது.அங்கு அது ஐம்பது வாரம்.நமக்கேன் மூன்று வாரம் "
என்று சொன்னார்.
தொலைந்து போன ரசிப்புத்தன்மைக்கு சவுக்கடி கொடுத்த சத்திய வார்த்தைகள் தான் அவை.அந்த கருத்து இப்படத்திற்கும் பொருந்தும்.உழவன் அனைத்து தரப்பினரையும் சென்றடையாதது நல்ல படைப்பாற்றலுக்கு கிடைத்த தோல்வி தான்.
அதே போல் பாடல்களையும் எடுத்துக் கொண்டால்,
கண்களில் இல்லை ஈரமே ,
என் ஆத்தா பொன்னாத்தா,
மாரி மழை பெய்யாதோ
போன்ற பாடல்களின் வரிகளில் நல்ல கவிநயமும் இருக்கும், அருமையான மெட்டும் அமைந்த பாடல்கள் தானே.ஆனால் அந்த கால கட்டத்தில் வந்த பல அர்த்தமற்ற பாடல்கள் அடைந்த வெற்றி கூட இவை அடையாமல் போனது வருத்தம்தான்.
இளையதிலகம் இதில் நடித்தமைக்காக ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
மணிவிழா நாயகனுக்கு பாரட்டு விழாhttp://uploads.tapatalk-cdn.com/2017...f003fcc06d.jpg
இளையதிலகத்தின் பட வரிசை.
100.ராஜகுமாரன்
14.01.94
http://uploads.tapatalk-cdn.com/2017...7859aa2c40.jpg
1988 ஆம் ஆண்டு மட்டும் 14 படங்கள்.46 வருட சாதனைகளை முறியடித்த படமாக சின்னத்தம்பி.ஒரே நாளில் வெளியாகிஇரண்டும் 100 நாட்களை கடந்த வெற்றிப் படங்களை அளித்தவர்.100படங்களில் 25 க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் .முண்ணனி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்த நடித்த ஒரே நடிகர்.தந்தை நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்தவை 20 படங்கள் என்று இவர் செய்த சாதனைகள் ஏராளம்.
நடிகர்திலகத்தின் பாதிப்பு இல்லாதநடிகர்கள்கிடையாது.அப்படியிருந்தும் சிவாஜியின் மகன் என்ற முத்திரையோடு அறிமுகமானாலும் தனக்கென ஒரு நடிப்பு பாணியை உருவாக்கி அதை வெற்றிப்பாதையாக்கி அதில் வீறுநடை போட்டவர் பிரபு.
எந்த வகை நடிப்பென்றாலும் தைரியமாக ஏற்று நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட அன்னை இல்லத்தில் இருந்து வந்தவர்.அதன் படியே எல்லாவித பாத்திரங்களையும் ஏன்று நடிக்க தயங்காதவர்.
அவரின் 100 வது படம்
"ராஜகுமாரன் ".
இப்படத்தில் பொய்பேசாதவராக, மக்களின் நலம் விரும்பியாக, மென்மை குணம் கொண்டவராக, இப்படத்தில் நடித்திருப்பார்.
பிரபுவுடன்
சுஜாதா, காகா ராதாகிருஷ்ணன், விஜயகுமார், நதியா, மீனா, நாசர், தியாகு, கேப்டன்ராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்தது.
இசை :இளையராஜா
சிறந்த பாடல்களலால் கேஸட் விற்பனையில் ரிக்கார்ட் செய்த படம்.
என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை,
சித்தகத்தி பூக்களே,
ஆடி வரட்டும் மயிலைக்காளை,
ராஜகுமாரா, ராஜகுமாரா (டைட்டில் சாங்)
பொட்டு வச்சதாரு,
சின்னசின்ன சொல்லெடுத்து,
காட்டுல கம்மங்காட்டுல
போன்ற பாடல்கள் என்றும் கேட்க இனியவைகளாய் அமைந்த பாடல்களாகும்.
இயக்கம்:R V.உதயகுமார்.
நாகர்கோவில் மினி சச்சரவர்த்தியில் 100 நாட்கள் ஓடியபடம்.நாகர்கோவில் ரசிகர்கூட்டத்தின்அன்புஅளப்பரியது.
அவர்களுக்கு பாராட்டுக்கள்.