-
நேற்று வந்த (05-08-2019) whatsapp message: சென்னை அகஸ்தியா(2,வது முறை வெளியீடு ) 28/07/19 ஞாயிறு மாலை காட்சி - டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தவர்கள் 530 பேர் .
கோவை டிலைட் (கோவையில் 7வது முறை வெளியீடு )04/08/19 ,ஞாயிறு மாலை காட்சி
டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன் பார்த்தவர்கள் 290 பேர்கள்
மதுரை சென்ட்ரல் 28/07/19 ஞாயிறு மாலை காட்சி -என் அண்ணன்- பார்த்தவர்கள் 550 பேர்கள்
கோவை சண்முகாவில் டிஜிட்டல் கர்ணன் (கோவையில் 2வது முறை வெளியீடு )ஞாயிறு மாலை காட்சி 04/08/19
பார்த்தவர்கள்190 நபர்கள் .சண்முகாவில் படம் இன்றே கடைசி.
நாளை முதல் கரகாட்டக்காரன்
வெள்ளி முதல் 09/08/19
குடியிருந்த கோயில் (கோவையில் பலமுறை வெளியான படம் )தினசரி 4காட்சிகள்.......... Thanks...
-
-
-
அறுபடைவீடு பழனி நகரம் - சாமி தியேட்டர் DTS.,
மற்றும் திண்டுக்கல் என்.வி .ஜி.பி.தியேட்டர் களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம் கடந்த 02/08/2019 முதல் தினசரி 4காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ்.குமார்........... Thanks...
-
எம்.ஜி.ஆர்., படங்களின் தலைப்புகளும் கதைகளும் அவரைச் சுற்றித்தான் இருக்கும். ‘மதுரை வீரன்’ முதல் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை, ‘நாடோடி மன்னன்’ முதல் ‘மீனவ நண்பன்’ வரை எந்தத் திரைக்கதையின் வட்டமும் வட்டத்தின் மையப்புள்ளியும் எம்.ஜி.ஆராகத்தான் இருக்கமுடியும். சில சமயம் அவை மாறிவிட்டதுபோல் தோன்றலாம்– ‘அடிமைப்பெண்’, ‘கன்னித்தாய்’ என்பவை போல. ஆனால் அவையும் ‘காலத்தை வென்றவன் நீ’ என்ற செய்தியைத்தான் தரும், ‘என்றும் பதினாறு’ என்றுதான் ஒலிக்கும்.
ஆனால் ஐம்பதுகளின் சில படங்களில், தன்னை எப்படி வெளிக்காட்ட வேண்டும், எத்தகைய படச்சூழலில் தான் இடம்பெறவேண்டும் என்பதில் அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டன.
‘ராணி லலிதாங்கி’ (1957) என்ற படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு சில காட்சிகளில் நடித்தபின், லலிதாங்கி வலிதாங்கி ஆனதால் அவர் அதில் நடிப்பது பலிதாங்கி ஆகிவிட்டது! அதாவது அவர் படத்திலிருந்து விலக நேர்ந்தது. பிறகு, தலைமை வேடத்தில் சிவாஜி நடிக்க, படம் வெளிவந்தது.
‘சக்ரவர்த்தி திருமகள்’ (1957) படத்தில் அவ்வளவு பெரிய சேதாரம் இல்லை. அவருடைய வெற்றிப்படப் பட்டியலில் சேர்ந்த படமாகத்தான் அது அமைந்தது. ஆனால், அதன் பாத்திரப்படைப்புகளில் அவருக்குத்தோதாக இல்லாத சில அம்சங்களும் இருந்தன போலும். ‘வில்லி’யாகத் தோன்றிய எஸ்.வரலட்சுமியின் பாத்திரப்படைப்பு, சூழ்ச்சியில் பின்னப்பட்டாலும் இரண்டு பாடல்களுடன், திரைக்கதையையே நகர்த்திச்செல்லும் அச்சாணிப்பாத்திரமாக அமைந்தது.
‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி பாடிய பாடல் அருமையாக அமைந்தது. அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆரை நோக்கித்தான் அவர் அந்தப் பாடலைப் பாடவும் செய்தார். ஆனால், படம் முழுமை அடைந்ததும் அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., பாடலைக் கத்தரிக்கச்செய்துவிட்டார்! கதாநாயகி நடிகையாக இருந்து ‘வில்லி’ வேடத்திற்கு வந்திருந்த வரலட்சுமி, இந்த கத்தரிப்பைக் கண்டு துவண்டுபோய்விட்டார். நன்றாகப் பாடக்கூடியவரின் மிக நேர்த்தியான பாடலாக அது அமைந்திருந்தது. அது பலியாகிவிட்டதே என்ற வருத்தத்தில் என்.எஸ்.கிருஷ்ணனிடம், ‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று புலம்பினார் (வரலட்சுமியே என்னிடம் தெரிவித்த செய்தி இது). எம்.ஜி.ஆரிடம் முறையிட்ட கலைவாணர், பாடலை மீண்டும் படத்தில் இடம்பெறச்செய்தார்!
அது என்.எஸ்.கிருஷ்ணன் எம்.ஜி.ஆரிடம் செய்த கடைசி முறையீடாக அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், ‘சக்ரவர்த்தி திருமகள்’ திரைப்படம் ஜனவரி 1957ல் வந்தது என்றால், என்.எஸ்.கிருஷ்ணன் காலமான செய்தி ஆகஸ்ட் 30ம் நாள் வெளிவந்தது.✍.......... Thanks...
-
-
கடந்த வாரம் முன்னாள் சென்னை - அகஸ்தியா 70MM வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் கோடியில் ஒருவர் அளிக்கும்... " ஆயிரத்தில் ஒருவன்" வெளியாகி மகத்தான வெற்றி வசூல் அள்ளி குவித்த தொகை எவ்வளவு தெரியுமா?! ஏறத்தாழ ரூபாய் ஒரு லட்சத்து ஆறாயிரம்...106000.00......... Thanks...
-
"குமுதம்" இதழில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட கட்டுரையில் தகவல்கள் வழ வழ, கொல கொல வென்றுதான் எழுதியுள்ளார்... முக்கியமான... உண்மையில் நடந்த நிகழ்வுகளை முறையாக விவரித்திருந்தால் பாராட்டலாம்...
-
ஒரு குற்றம் இல்லாத மனிதன் கோவில் இல்லாத இறைவன் - எம்.ஜி.ஆர் ரசிகரின் பதிவு https://tamil.filmibeat.com/news/m-g...in-061882.html For more updates Download Oneindia App. For Android click http://bit.ly/1indianewsapp . For iOS click http://bit.ly/iosoneindia........ Thanks...
-
நாளை முதல் (09/08/19) கோவை சண்முகாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் தீரைக்கு வருகிறது
http://i67.tinypic.com/111mtdv.jpg