நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.டி.செல்வராஜ், திரு.கே.கிருஷ்ணன், திருச்சி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i68.tinypic.com/m7xdtx.jpg
Printable View
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு திரு.டி.செல்வராஜ், திரு.கே.கிருஷ்ணன், திருச்சி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i68.tinypic.com/m7xdtx.jpg
திரு.ஆரூர்தாஸ் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பணியாற்றியபோது
தன் அனுபவங்களை, தொடர்புகளை நினைவு கூர்ந்தபோது .
http://i68.tinypic.com/2n08wv4.jpg
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜ் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்
http://i64.tinypic.com/e9zrq0.jpg
திரு.ஆரூர்தாஸ் அவர்களுடன் திரு.ஆர். லோகநாதன், திரு.மணி (மேற்கு மாம்பலம் )
http://i67.tinypic.com/t7d7q8.jpg
Mgr
ஒட்டு மொத்த
தமிழகத்தை
கட்டிபோட்ட
ஒற்றை மந்திரம்
அறிந்ததும்! அறியாததும்!! – 86
படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்¬பிக்¬கையை விதைப்பதாக அமையும்
.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்க¬ளாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
நன்றி : தினமலர்
தொடரும் …
https://s31.postimg.cc/6rf64uj3f/IMG_8614.jpg[url=https://postimages.org/]
நேற்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
நவரத்தினம்
புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்...👍 👌💐
வசூல் சக்ரவர்த்தி நம் மக்கள் திலகம் வழங்கும் "அடிமைப்பெண்" சென்னை - மகாலக்ஸ்மி அரங்கில் 3 தினங்களில் ரூபாய் எண்பதாயிரம் தாண்டிய அட்டகாசமான வசூலை கடந்திருக்கிறது எனும் இனிய செய்தியை சற்று முன் கூறினர் தோழர்கள்...
மக்கள் திலகம் தயாரித்த முத்தான, முதன்மையான படைப்புகளில் ஒன்றான "அடிமைப்பெண்" நேற்று மாலை காட்சி ரூபாய் 32000.00 வசூல் பெற்று, 3 தினங்களில் மட்டுமே 100000.00 ரூபாயை அறுவடை செய்திருக்கிறார் வேங்கைமலை சிங்கம்... Information by frends...