Quote:
கல்வியில் இருவகை உண்டு. தெரிந்துகொள்வதற்கான கல்வி , சிந்திப்பதற்கான கல்வி. இந்தியாவில் உள்ளது முதல்வகை கல்வி. நீங்கள் சொல்வது இரண்டாம் வகைக் கல்வி. அதை அங்கே உருவாக்கியிருப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன். அங்கே சிறு குழந்தைகள் கூட நூல்களை வாசிக்கவும் சொந்தமாக புரிந்துகொண்டு கருத்துக்களை உருவாக்கவும் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் அமெரிக்கா என்னை கொஞ்சமும் கவராத நாடு. அமெரிக்க பயணத்திற்குப்பின் ஒரு பயணக்கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அந்த நிலம் என்னை இன்றும் பெரும் கனவாக நிறைத்திருக்கிறது. அங்கே சந்தித்த நண்பர்கள் இப்போதும் என் சுற்றமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கே இருக்கும் முதலாளித்துவ அமைப்பு மிக அசிங்கமானது. சொல்லப்போனால் நான் அமெரிக்கா செல்வது வரை முதலாளித்துவம் மேல் கொண்டிருந்த மதிப்பு சென்றதுமே இல்லாமலாகியது
அதே அமெரிக்காவில் என் நண்பர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மிகமிகக் குறைந்த ஊதியம் . பள்ளியிலேயே தங்கி சுயமாக சமைத்து உண்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தால் பணத்தை இந்தியா அனுப்பலாம். தொகை நாணயமதிப்பில் பெரிது. உள்ளூர்க்காரர்கள் அந்த சம்பளத்தில் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதனால் இவர்களுக்கு வாய்ப்பு
அந்தப்பள்ளியில் ஒன்றுமுதல் எட்டாம் வகுப்பு வரையிலான எல்லா பிள்ளைகளையும் ஒரே வகுப்பாக அமரச்செய்து ஒரே ஒரு ஆசிரியர் அவருக்கு தெரிந்ததைச் சொல்லி கொடுக்கிறார்- அதாவது அமைதியாக கொஞ்ச நேரம் அமரச்செய்கிறார். மதியம் சாப்பாடு போட்டு அனுப்பிவிடுகிறார்கள். பத்தாம் வகுப்புவரை படித்தாலும் சொந்தமாம நான்குவரி எழுதவோ எழுத்துக்கூட்டிப் படிக்கவோ முடியாது. கறுப்பர்களும் ஸ்பானிஷ்காரர்களும் பயிலும் பள்ளிகள் அவை. சாப்பாட்டுக்காக மட்டுமே பிள்ளைகள் பள்ளிக்கு வருகின்றன. ஆரம்பப் பள்ளியிலேயே வன்முறை , பாலுறவு, போதைப்பழக்கம்.
அதையும் சேர்த்தே நான் அமெரிக்க பள்ளிகள் என்று சொல்வேன்
:clap: :clap: