அவள் ஒரு குதிரைக்குட்டி போன்ற அழகிய சீன நங்கை. மாயவனைக் கும்பிடச் சொல்லலாமா என்றுதான் யோசிக்கிறேன்....
Printable View
சின்னக்கண் ணன்தரும் சீர்மிகு நற்கவிதை
கன்னத்தில் கைவைத்தேன் காண் !!
ஹையாங்க்...
படித்த புலவர்உம் பாமலர்கள் முன்னே
அடியவன் சின்ன அரும்பு
என் மூன்றாவது மாடி ஃப்ளாட்டிலிருந்து பார்த்தால் ஒரு மலை தெரியும்..மஸ்கட் மலையும் மலை சார்ந்த இடமும் எனத் தெரியும் தானே.
சில மாதங்களாக மலையுச்சிக்கு ஒரு/இரு இயந்திரம் எடுத்துச் சென்று காலைமுதல் மதியம் வரை வேலை பார்க்கிறார்கள்..காலை ஐந்தரை மணிக்கே
டக்டக் டக் என ஒலி கேட்கும்..இப்போது பார்த்தால் மலையின் ஒரு பகுதி நீளவாக்கில் வெட்டப் பட்டது..இன்னும் இரண்டுமூன்று மாதத்தில்
மலையும் காணாமல் போய்விடும்!
தள்ளும் இயந்திரத்தால் தக்கபடி இவ்விடத்தில்
மெல்லக் கரையும் மலை
நாணியே நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்தாலும்
வானில் மிதக்கின்றேன் நான்..
ஏங்க ரொம்ப வெட்கமாய் இருக்கு..( நான் கொஞ்சம் குண்டுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!)
பாவம் மலை..இப்போது கொஞ்சம் புலம்புவது போல பிரமையாய் இருக்கிறது..
க.க.துவில் சின்ன முயற்சி..
நிறைவாய்ப் பலகாலம் நீண்டுயர்ந்தே நின்றவன்மேல் கண்கள்
வரைந்தவர்யார் நானறியேன் வாட்டமாய் வெட்டியே இங்கே
கரைக்கின்றார் கல்லுக்கும் நெஞ்சுண்டு என்றே தெரியாமல்
தரையாக்கி விட்டாலே என்செய்வேன் தாண்டவக் கோனே
உங்களுக்கு திரு சுந்தரராஜ் அவர்கள்தான் ஆறுதல் சொல்ல, போதிய வயது உள்ளவர். அவரை அழைப்போம்.
அவர்தம் பாடல்கள் இனியவை.
சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.
சொல்லாட்டு - சொல்விளையாட்டு.
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.
Humour -- wherever it appears, do not take things seriously. Just be happy.
கலிவிருத்தம்:
கல்லையே கடவுளெனக் கைகூப்பி நிற்கின்றார்
கல்லையே கடைந்துபல கைவண்ணம் காண்கின்றார்
கல்லையே கோவிலா கமைக்கின்றார்; சிலரிங்கே
கல்லையே (தற்)கொலைசெய் களமாக்கு கின்றாரே!