Originally Posted by
kaliaperumal vinayagam
எங்கள் தெய்வத்திற்கு எத்தனை புத்தகங்கள் வெளியிடபட்டிருக்கிறது..இன்றளவிற்கும் எத்தனை மாத இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன..புதிய தலைமுறை நடிகர்களின் புத்தகங்களையும் மிஞ்சும் அளவிற்கு..ஒரு வருடத்திற்கு எத்தனை அமைப்புகள் மக்கள் திலகத்தின் நினைவு மற்றும் பிறந்த நாளின் விழாக்களை நடத்துகின்றன.அவரின் பெயரில் எத்தனை பொது நல அமைப்புகள் இயங்குகின்றன..அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் மற்றும் சிறு ஏடுகள் எத்தனை.அதற்கும் மேலாக உலக அளவில் மலேசியா சிங்கப்பூர், பிரான்ஸ், பினாங் இன்னும் பல நாடுகளில் தலைவரின் பெயரில் உள்ள பொது நல அமைப்புகள் எத்தனை..அவர்கள் வருடம் முழுவதும் நடத்தும் விழாக்கள் எத்தனை..அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் புத்தகங்கள் எத்தனை..சாதி, மதம், மொழி, மாநிலம், கடல் கடந்து அனைவரும் மக்கள் திலகத்தை போற்றுகின்றார்கள்..ஏன் நேற்றைய, இன்றைய தலைமுறை ரசிகர்கள் கூட எம்ஜிஆரை போற்றுகின்றார்கள்..அதற்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டும் விதி விலக்கல்ல...ஒரே ஒரு உதாரணத்தை சொல்லி முடிக்கிறேன்..ஒரு முறை நடிகர் திலகத்தின் படப்பிடிப்பை காண அவருடைய ரசிகர்கள் நின்றிருந்தார்கள்..மக்கள் திலகம் அந்த வழியே காரில் போகிறார்..பார்க்கிறார்..காலையில்..மதியம்..மற் றும் மாலை திரும்பும்போதும் அதே ரசிகர்கள் அங்கே..நின்று விசாரிக்கிறார்..அவர்கள் சிவாஜியை காண வந்தவர்கள் என்று அறிகிறார்...அவர்களால் நடிகர் திலகத்தை காண முடியவில்லை..அதனால் மாலை வரை அங்கே நிற்கிறார்கள் என அறிகிறார்..உடனே.காரை நிறுத்த சொல்லி .அவர்களை நடிகர் திலகத்திடம் அழைத்துக்கொண்டு சென்று பார்க்க வைத்து பின்பு அனுப்புகிறார்..அப்போது நடிகர் திலகம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா..அண்ணன் செய்வது சரியில்லை..இந்நேரம் இதில் பாதி ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகராக மாறி விட்டிருப்பார்கள் என்று அங்கிருந்தவர்களிடம் அன்பாகவும் பெருமையாக சொன்னாராம்..அதே போல எம்ஜிஆர் அவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் திலகத்தை பற்றி யாராவது சொன்னால் அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டுவதோடு அவர்களை கடிந்து கொள்வாராம்..அவருடைய நடிப்பை வெளிப்படையாக பல இடங்களில் புகழ்ந்து பேசியது அனைவரும் அறிந்ததே..அப்படிப்பட்ட அண்ணன் தம்பி உறவு கொண்ட நடிகர் திலகத்தையும் மக்கள் திலகத்தையும் அவரவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்..ஆனால்..தாக்கி பேசாமல் இருப்பது அனைவருக்கும் நலம்தானே...