Glad that our NT thread has crossed 5 and entered 6th. Kudos to one and all of NT fans.
A very great job indeed!!
Printable View
Glad that our NT thread has crossed 5 and entered 6th. Kudos to one and all of NT fans.
A very great job indeed!!
தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் பழனி மாநகரின் ஓம் ஷண்முகா திரையரங்கில், கலையுலகின் சிகர சிகாமணி நமது நடிகர் திலகத்தின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், 3.2.2010 புதன்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. உள்ளூர் மக்களுடன், மதுரை மாநகர, மாவட்ட மக்களும் மற்றும் திருச்சியிலிருந்தும் மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இத்திரைக்காவியத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.
இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பரும், சிவாஜி மன்ற பேச்சாளருமான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மற்றும் பழனி நகர சிவாஜி மன்றத் தலைவர் திரு.முத்து விஜயன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Please click the following link for Delhi Sivaji Vizha Photos:
http://www.freewebs.com/pammalar/app...lbumid=8117827
Also please post your comments below the photos.
Happy Viewing,
Pammalar.
http://passionforcinema.com/andha-naal-thamizh-1954/
my take on andha naal sometime back..
நன்றி ஜோ. நான் பார்த்தவரை எதுவும் விடுபட்டதாக தோன்றவில்லை. அப்படி இருந்தால் சொல்கிறேன்.Quote:
Originally Posted by joe
சுவாமி, விழா புகைப்படங்களுக்கு நன்றி.
Thanks Jai. Though it was repeat reading for me, still enjoyed it.
அன்புடன்
இன்றைய தேதிக்கு [பிப்ரவரி 6] ஒரு சிறப்பு உண்டு. பண்டிகை அல்லது விழா நாட்கள் அல்லது தேசிய தினங்கள் தவிர்த்து இந்த தேதியில் மட்டுமே எனக்கு தெரிந்து நான்கு நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்ல அவை அனைத்துமே வெற்றியும் பெற்றிருக்கின்றன.
விளையாட்டுப் பிள்ளை - 06.02.1970 - 84 நாட்கள் மதுரை நியூசினிமாவில் ஓடிய பிறகு ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது.
தர்த்தி - இந்தி சிவந்த மண் - 06.02.1970.
தமிழில் முத்துராமன் ஏற்றிருந்த வேடத்தை இந்தியில் நடிகர் திலகம் செய்திருந்தார். சிவந்த மண் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின் தர்த்தி வெளியானது. பாம்பே நகரத்தில் 30 வாரங்களுக்கு மேல் ஓடிய படம் இது.
தங்கைக்காக - 06.02.1971 - சென்னை சாந்தியில் 83 நாட்கள். இரு துருவம், அருணோதயம், குலமா குணமா என்று சுற்றிலும் சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்திலும் இந்த படம் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது.
வா கண்ணா வா - 06.02.1982 - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி மூன்று திரையரங்குகளிலும் 100 நாட்களை கடந்தது இந்த படம். படம் முழுக்க வயதான தோற்றத்தில் நடிகர் திலகம் நடித்த இந்த படம் கமர்ஷியல் படங்களுக்கு இணையாக சென்னையில் 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்றது.
பிப்ரவரி 6ந் வெளியாகாமல் ஒரு நாள் தள்ளி பிப் 7ந் தேதி வெளியான நடிகர் திலகத்தின் உத்தம புத்திரனும் இந்த வெற்றி வகையை சேர்ந்ததுதான். 07.02.1958 அன்று வெளியான உத்தம புத்திரன் 21 வாரங்கள் [147 நாட்கள்] ஓடியது.
நடிகர் திலகத்தின் இந்த சாதனை நாளை இன்று நினைவு கூர்வோம்.
அன்புடன்
//watched Sivaji productions "Asal " yesterday in a suburban chennai theater........when NT's photo appeared during start of the movie for shivaji production slide, there was a huge applause and roar in theater.......a similar applause was evoked when the "dushyantha" song containing "paartha nyabagam illayo" tune remixed for a couple of lines was displayed........
there were claps and whistles for prabhu's entry too :clap: //
திரு. தனுசு அவர்களுக்கு நன்றி!
அந்த நாள் பற்றி இந்த நாளில் படித்தாலும் இனிக்கிறது. எந்த நாளிலும் அது அப்படித்தான். நன்றி ஜெய்கணேஷ்!
அசல் திரைப்படத்தைக் கண்டு களித்த போது ஏற்பட்ட தியேட்டர் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட அசல் ரசிகர் மேடி அவர்களுக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
தலைநகர் டெல்லியில் நடந்த சிறப்பான விழாவில் கலந்துகொண்டதோடு, அவ்விழாவை உங்கள் அழகான தொகுப்புரை மூலமாகவும், கண்கவர் வண்ணப்படங்கள் மூலமாகவும் தந்து, நாங்களும் அவ்விழாவில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
விழாத்தொகுப்பு, வண்ணப்பட வரிசை அனைத்துமே அருமை.
நன்றிகள் பல.
முதல்வர் கருணாநிதி க்கு சென்னையில் நடந்த பாராட்டுவிழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "இந்த விழாவில், மீண்டும் நான் அடக்கத்தை கற்றேன். நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது, நான் எல்லாம் எங்கே? என்று நினைத்தேன்.
அதைப் பார்த்து என் கண்கள் பனித்தன. திரும்பி பார்த்தால், ஒரு குழந்தை (கருணாநிதி) தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தது. பதவியை எல்லாம் பார்க்காமல், நட்புக்காக அவர் கண்ணீர் விட்டது என்னை உருக்கியது”