1) கவிதைக்கரு 'லேசாக' இருக்க வேண்டும்
2)வாழ்வின் ஜீவாதார சிடுக்குகள், இருத்தலியல் பிரச்சனைகள் பற்றிய கவிதை முயற்சிகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா
3) 'ஏ சமுதாயமே' வகை கவிதைகள் இத்திரியின் பக்கம் வராமலிருப்பது அவற்றின் சிருஷ்டிகர்த்தாக்களுக்கு நல்லது
4) மேலே உள்ள விதிகள் மீறப்படலாம் - ஆனால் 'லேசான' தோற்றத்தை கவிமுயற்சியாளர் உண்டாக்க வேண்டும். சுயஎள்ளல் போன்ற உத்திகள் வரவேற்கப்படும்
5) சந்தம் இருந்தாகவேண்டும். குறைந்தபட்சம் ஒரு 'ரிதம்'. இல்லாதவர்கள் 'Stories/kathaigaL' section-இல் பதிவுகள் இடலாம்.
6) மத்தபடி மரபு/இன்மை எல்லாம் உங்க தேர்வு.
7) இத்திரியின் நோக்கம் கவிபுனைவை கொஞ்சம் அணுகத் தோதாய் தரையிறக்குவது.
8) அதேசமயம் உதாசீனத்துக்குறிய கோமாளிக் கவிதைகள் (உம். "பனமரத்துல வவ்வாலா") ஏற்றுக்கொள்ளப்படமாட்டா
9) மேற்சொன்ன விதியின்படி குற்றச்சாட்டு எழுந்தால், ஆசிரியர் கட்டுடைத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கிறார். Guilty until proven innocent என்ற கொள்கை கடைபிடிக்கப் படும்.
10) கவிமுயற்சிகளுக்கிடையில் பொருண்மை பொதிந்த விவாதங்களுக்கும் இடம் உண்டு.